ஏறிவிட்டீர் எம் இதயங்களில்! - கலைஞர் கவிதை

அண்ணலே அய்ந்தாண்டுக்கு முன்னர், நீவீர்

அன்னைத் திருநாட்டின் குடியரசுத் தலைவராகப்

பொறுப்பேற்கப் போகும் செய்தி கேட்டு; பூரிப்பு தாங்காமல்

"பொன் மனம் கொண்ட மண்ணின் புதல்வருக்கு

பொருத்தமான மகுடம்தான் இது" என்று

புகழ் மலர்கள் தொடுத்துக் கவிதை மாலையொன்று

கட்டி யுமது தோளுக்கு அணிவித்தபோது - இராமேசுரம்

கடல் அலைகள் களிப்பு மிகுதியால் கையொலித்து

ககனத்து முகடு வரை துள்ளிக் குதிக்கின்றன என நான் எழுதினேன்!

கன்யாகுமரி முதல் இமயம் வரை என்றல்ல;

காசினியில் அனைத்து நாடும் புகழ்ந்தேத்த - இந்த

அன்னை நாடும் பிரியா விடை தந்து பிரியமுடன் வாழ்த்த

நினைவுகள் ஆயிரத்தை எம் நெஞ்சில் நட்டு -

இன்று இறங்கிவிட்டீர் பதவியை விட்டு!

இல்லை; ஏறிவிட்டீர், எம் இதயங்களில்!

இனிது வாழ்க; என்றும் வாழ்க! வாழ்க!!

அன்புள்ள,

மு.க.

0 comments: