52 வயது ஆண்டியுடன் கணவன் - மனைவி புகார்


52 வயது "ஆன்ட்டி"யுடன் கணவன் உல்லாசம் - தட்டிக் கேட்டதால் தனி அறையில் சித்ரவதை - போலீஸ் கமிஷனரிடம் பெண் இன்ஜினியர் புகார்


"என் கணவருக்கு 52 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது. என் கண் எதிரிலேயே அவர்கள் உல்லாசமாக இருந்தனர். இதை தட்டிக் கேட்டதால் கணவரும் அவரது குடும்பத்தினரும் என்னை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தனர்" என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் பெண் இன்ஜினியர் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டை லட்சுமிநகர் டாக்டர் சுந்தரம்மாள் தெருவில் வசிப்பவர் பாலசுந்தரம். இவரது மகள் உமாமகேஸ்வரி (22). இவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் லத்திகா சரணை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

நான் பி.இ. முடித்துவிட்டு இன்ஜினியராக இருக்கிறேன். எனக்கும் அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வத்துக்கும் (29) கடந்த ஜனவரி 28-ம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

கொரட்டூரில் வசிக்கும் கவுரி ராமச்சந்திரன் (52) என்ற பெண்தான் எங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார். செல்வம் எம்.சி.ஏ. படித்திருப்பதாகவும், அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் எங்களிடம் கவுரி கூறினார். திருமணத்தின்போது என் பெற்றோர் 60 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் என ரூ.7 லட்சத்துக்கு வரதட்சணை கொடுத்தனர்.

திருமணம் முடிந்ததும் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது திடீரென எங்கள் படுக்கை அறைக்கு வந்த கவுரி, செல்வத்தை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். வயதான பெண் என்பதால் பாசத்தோடு முத்தம் தருகிறார் என நினைத்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், கவுரி சென்ற பிறகு அவரது அழகை செல்வம் வர்ணித்தார்.
"பாத்தியா... 52 வயசிலேயும் ஆன்ட்டி எப்படி இருக்காங்க. அவங்க அழகுல பாதிகூட நீ இல்ல. இருந்தாலும் நீ வாங்குற சம்பளத்துக்காகத்தான் உன்னை கட்டிக்கிட்டேன். நமக்கு கல்யாணம் மட்டும்தான் ஆச்சு. மத்தபடி ஆன்ட்டியோடதான் வாழ்க்கை நடத்துவேன்" என்றார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர் திருந்திவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.

அதன்பிறகு, கவுரி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். "உங்க பர்ஸ்ட் நைட் எப்படி இருந்துச்சு. செல்வம் உங்கிட்ட எப்படி நடந்துக்கிறார். எந்தமாதிரியெல்லாம் உடலுறவு கொண்டார்" என்று என்னிடம் கவுரி கேட்பார்.

கொஞ்சம் நாளிலேயே செல்வத்தின் கொடுமை அதிகரித்துவிட்டது. வீட்டில் ஆபாச சி.டி.யை போட்டுக் காட்டி, அதில் வருவதுபோல நடக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். மறுத்தபோது அடித்து உதைத்தார். ஒரு நாள் நான் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினேன். அப்போது எங்கள் படுக்கை அறையில் செல்வமும் கவுரியும் நிர்வாண கோலத்தில் இருந்தனர். இதைப்பற்றி வெளியில் சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என்று இருவரும் மிரட்டினர்.

"ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்Õ என்று என் கணவனிடம் கேட்டேன். "உன்னுடன் வாழவேண்டும் என்றால் வீடு, கார் வேண்டும். போய் வாங்கிட்டு வா" என்றார். இதுகுறித்து என் மாமனார், மாமியாரிடம் கூறியபோது அவர்களும் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. "எங்கள் மகன் என்ன கேட்கிறானோ அதை உன் பெற்றோரிடம் சொல்லி வாங்கிக் கொடு" என்று அவர்களும் கட்டாயப்படுத்தினர். இதற்கு மறுத்ததால் என்னை தனி அறையில் பூட்டிவைத்து அடித்து சித்ரவதை செய்தனர்.

எனக்கு நடந்த கொடுமைகளை என் பெற்றோரிடம் சொல்லி அழுதேன். என் அப்பா வந்து சமரசம் பேசினார். "என் மகளை கொடுமைப்படுத்தாதீர்கள். அவளிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்" என்று செல்வத்தின் காலைப் பிடித்து கெஞ்சினார். அப்போது, அடியாட்களை வைத்து என்னையும் அப்பாவையும் அடித்து விரட்டினர். எனவே, என் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.

புகாரை பெற்றுக் கொண்ட கமிஷனர், இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அம்பத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, செல்வம், அவரது தந்தை ஆறுமுகம், தாய் நாகம்மாள், தம்பி பிரகாஷ் (26), சகோதரி மலர்விழி (22) மற்றும் கவுரி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

1 comments:

July 5, 2007 at 7:37 PM காட்டாறு said...

இது போல இப்போ சமீப காலத்தில் ஒரு செய்தி படித்ததாக நினைவு.