Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

ரத்த அழுத்தம் சீராக சாக்லெட் சாப்பிடுங்க!

சாக்லெட்களை சிறிதளவு தினந்தோறும் சாப்பிட்டால் உடலின் ரத்த அழுத்தம் குறைகிறது என ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

கோகோ அதிகம் உள்ள கறுமை நிற சாக்லெட்களை சாப்பிட்டால் இதயத்துக்கு நல்லது என முந்தைய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆனால், அதில் இருக்கும் கூடுதல் சர்க்கரை, கொழுப்புச்சத்து மற்றும் கலோரி ஆகியவற்றால் கோகோவால் ஏற்படும் நன்மை கெட்டுவிடுகிறது என்றும் மற்றொரு ஆய்வு அறிக்கை தெரிவித்தது.

ஆனால், சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், அதாவது தினந்தோறும் 7 கிராம் அளவுக்கு சாக்லெட் சாப்பிட்டால், எந்த வித பாதிப்பும் இல்லாமல் ரத்த அழுத்தத்தின் அளவு குறைகிறது என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் டாக்டர் டிரிக் டாபர்ட்.

சாக்லெட்டில் உள்ள பாலிபீனல்கள் எனும் ரசாயனப் பொருள்தான் நம் உடலுக்கு நன்மையைத் தருகிறது. இந்த ஆய்வுக்கு 56 வயது முதல் 73 வயது வரை உள்ள 44 பேரை தேர்வு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்டர் டிரிக் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் ஒரு பிரிவினருக்கு 30 கலோரி அளவுக்கு 30 கிராம் பாலிபீனல் இருக்கக்கூடிய கறுப்பு சாக்லெட்களும், மற்றொரு பிரிவினருக்கு பாலிபீனல் இல்லாத வெள்ளை சாக்லெட்களும் கொடுக்கப்பட்டது. 18 வாரம் கழித்து இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கோகோ அதிகம் நிறைந்த கறுப்பு சாக்லெட் சாப்பிட்ட பிரிவினருக்கு ரத்த அழுத்தம் குறைந்துள்ளது.

ஆனால் இவர்களில் எடை, கொழுப்புச்சத்து மற்றும் சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. "ஒவ்வொருவருக்கும் இவ்வாறு ரத்த அழுத்தம் குறைந்தால் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்பு 5 சதவீதம் குறையும்" என்கிறார் டாக்டர் டிரிக்.

எட்டாம் நூற்றாண்டில் சர்ஜரி - 'சுஜாதா'

நம் பழைய நூல்களில் மருத்துவக் குறிப்புகள் பல இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாம் நூற்றாண்டில் சுஸ்ருதர் எழுதிய நூல்களில் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அறுவை சிகிச்சைகள் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். தமிழிலக்கியத்தில் எனக்குத் தெரிந்தவரை முதல் அறுவை சிகிச்சையை பற்றிக் குறிப்பிட்டவர் குலசேகர ஆழ்வார்.

இவர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேரமன்னர். இன்றைய கொல்லம் நகரம் அன்று கொல்லி என்று அழைக்கப்பட்டது. அதைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர் திடவிரதனின் மகன் குலசேகரர் பட்டத்துக்கு வந்து, மெள்ள மெள்ள அரசியல் நாட்டம் குறைந்து திருமாலின்பால் ஈர்க்கப்பட்டார் குலசேகரர். அதற்குச் சாட்சியாக −இருப்பது இவரது ‘பெருமாள் திருமொழி’யின் 105 பாடல்களே.

இவற்றில் ஒன்றில்தான் இந்த சர்ஜரிக் குறிப்பு உள்ளது.

‘வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல், மாயத்தால்
மீளாத் துயர் தா¢னும் வித்துவக்கோட்டு அம்மா! நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே’
(மாயத்தால் - விளையாட்டாக, ஆளா- அடிமை செய்வதற்கு)

‘ஒரு மருத்துவன் கத்தியால் அறுத்துச் சூடு போட்டாலும் அவன் அதை நோயாளியின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் செய்வதால் மருத்துவன் மேல் நீங்காத அன்பு ஏற்படுகிறது. அதுபோல் விளையாட்டு போல் நீ எனக்கு விடாத துன்பம் தந்தாலும் உனக்கு அடிமை செய்ய உன் அருளையே எதிர்பார்த்துக் காத்திருப்பேன்’ என்று வித்துவக்கோட்டில் உள்ள பெருமானிடம் சொல்கிறார்.

வித்துவக்கோடு கேரளத்தில் பட்டாம்பியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் இருக்கும் உய்யவந்த பெருமாள் கோயில் என்று சொல்கிறார்கள். இதை இன்று தேடிச் சென்று கண்டுபிடிக்க முடிந்தால் குலசேகரன் என்ற மன்னனையும் இந்த அருமையான பாடலையும் நினைத்துக் கொள்ளலாம்.

வாளால் அறுத்துச் சூடுபோட்டு! அனஸ்தீஸியா வரும்வரை ஜனங்கள் பெருமாளை நினைத்துக்கொண்டுதான் வலியைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..

தமிழகத்தில் குழந்தையின்மை - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 10 சதவிகித தம்பதிகளுக்கு குழந்தை இல்லை: சுகாதார செயலாளர் தகவல்.



தமிழகத்தில் புகை பிடித்தல் உள்பட பல் வேறு காரணங்களால் 10 சதவிகித தம்பதியினருக்கு குழந்தையின்மை பிரச்சினை உள்ளது என சுகாதாரத் துறைச் செயலாளர் வி.கே. சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை - வடபழநியில் உள்ள ஆகாஷ் குழந்தை யின்மை சிறப்பு சிகிச்சை மையம் ஏற்பாடு செய்திருந்த தேசிய குழந்தையின்மை சிகிச்சை மாநாட்டை ஜூன் 24 அன்று தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

உலக சுகாதார நிறுவனத் தின் அறிக்கையின்படி 13 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களில் 15 சதவிகித சிறுவர்களுக்கும், 7 சதவிகித சிறுமிகளுக்கும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் நாள்தோறும் ஒரு லட்சம் பேர் புதிதாக புகை பிடிக்க ஆரம்பிக்கின்றனர். ஆண்மைக் குறைவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

புகை பிடித்தல், சுற்றுச் சூழல் மாசு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் 10 சதவிகித தம்பதியினருக்கு குழந்தையின்மைப் பிரச்சினை உள்ளது. குறிப்பாக கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது. இதற்கான காரணம் தெரிய வில்லை.

குழந்தையின்மைப் பிரச்சினையைப் பொறுத்தவரை மூடநம்பிக்கைகள் அதிக அளவுக்கு உள்ளன. இதுபோன்ற மருத்துவ மாநாடுகளை தமிழகம் முழுவதும் நடத்தி பொது மக்களிடையே குழந்தையின் மைப் பிரச்சினைக்கான காரணம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

சிறுவன் செய்த சிசேரியன் - பெற்றோர் கைது

மாணவர் சிசேரியன் செய்த விவகாரம் ,டாக்டர்களான தாய், தந்தை கைது.






மணப்பாறை மாணவன் சிசேரியன் செய்த வழக்கில் டாக்டர் தம்பதிகளை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் போலீஸ் ஸ்டேஷனில் தீவிர விசாரணை நடக்கிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் டாக்டர் முருகேசன். இவரது மனைவி டாக்டர் காந்திமதி. இவர்களது மகன் திலீபன்ராஜ். கடந்த மே மாதம் மணப்பாறையில் நடந்த இந்திய மருத்துவர் கழக கூட்டத்தில் பேசிய டாக்டர் முருகேசன், தனது 14 வயது மகன் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் செய்ததாகவும், ஒரு சாதனை முயற்சிக்காக இது செய்யப் பட்டதாகவும் கூறினார். அப்போது அதுபற்றிய ஒரு சிடியையும் போட்டுக் காண்பித்தார். இதை பார்த்த மற்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். டாக்டர் முருகேசனின் இந்த செயலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்த புகார் எழுந்ததை தொடர்ந்து திருச்சி கலெக்டர் ஆசிஷ் வச்சானி உத்தரவின்பேரில் ஆர்டிஓ ரமணிதரன் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு டாக்டர்கள் முருகேசன், காந்திமதி, இவர்களது மகன் திலீபன்ராஜ், ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது தாங்கள் ஆபரேஷன் செய்தபோது, திலீபன்ராஜ் உடன் இருந்து கவனித்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆனால் சிடியை பார்த்த டாக்டர்கள், ஆபரேஷனை திலீபன்ராஜ் செய்தது உண்மை என எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்தனர்.

பின்னர் ஆஸ்பத்திரியிலிருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுபற்றிய விசாரணை அறிக்கையை கலெக்டர் ஆசிஷ்வச்சானியிடம் ஆர்டிஓ ரமணிதரன் நேற்று மாலை வழங்கினார்.


இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் டாக்டர் முருகேசனின் வீட்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், கோபிநாத் பாண்டியன் மற்றும் போலீசார் டாக்டர் வீட்டுக்கு சென்று முருகேசன், காந்திமதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 20 நிமிட விசாரணைக்கு பின்னர் தம்பதிகள் இருவரையும் அவர்களது காரில் ஏற்றிய போலீசார் இருவரையும் மணப்பாறை அருகே உள்ள வளநாடு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், டாக்டர் தம்பதிகளிடம் ஆர்டிஒ தலைமையிலான அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டாலும், முக்கிய ஆதாரமாக கருதப்படும் சிடி கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் போலீசாரின் உதவியை கேட்டுள்ளனர். எனவே தான் போலீசார் அவர்களை அழைத்து சென்றுள்ளனர் என்றார்.

விசாரணை அறிக்கையில் டாக்டர் தம்பதிகளை கைது செய்வதற்கான அனைத்து ஆதாரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை பகுதியில் வைத்து அவர்களை கைது செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று கருதிய போலீசார் அவர்களை வளநாடு அழைத்து சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

டாக்டர் தம்பதிகள் இருவரும் அழைத்து செல்லப்பட்டதை கேள்விப்பட்ட நிருபர்களும், போட்டோகிராபர்களும் காரை பின்தொடர ஆரம்பித்தனர். கார் வளநாடு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி செல்வதை கேள்விப்பட்ட அவர்கள் அங்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் வழிமறித்து தடுத்தனர். இது தொடர்பாக டிஐஜி அசோக்குமார் தாசிடம் புகார் செய்யப்பட்டது. அவர் தலையிட்ட பின்னர் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதிரும் ஆணுறை - இந்தியாவில்



மத்திய அரசு நிறுவனமான Hindustan Latex Ltd, புதிய ஆணுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பற்றி நிறுவனம் வெளியுட்டுள்ள விளக்கமாவது...

"CREZENDO VIBRATING RING FOR ULTIMATE PLEASURE --- The pack has a vibrating ring and three premium condoms. With Crezendo Vibrating Ring you can take your lovemaking to places it hasn't been before. Crezendo Vibrating ring is designed to take you for a 20 minute joyride through the realms of vibrating pleasure. It provides the ultimate stimulation for you and your partner. It is safe , reliable and comes with an instruction leaflet. It is truly your passport to "The Republic of Pleasure"


இந்த ஆணுறை வேண்டுவோர் இந்த தளத்தில் வாங்கலாம்.

நீரழிவுநோய் மருந்து மாரடைப்பை ஏற்படுத்துமா?

மாரடைப்பை ஏற்படுத்தும் சர்க்கரை நோய் மருந்துகள்...தடை விதிக்க இந்தியா பரிசீலனை



சர்க்கரை நோய்க்குப் பயன்படுத்தும் இரண்டு மருந்துகள் மாரடைப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதையடுத்து, அந்த மருந்துகளுக்குத் தடை விதிப்பது பற்றி இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சர்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடு இந்தியா; இந்நோயாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டியுள்ளது. அவற்றில் இரண்டு மருந்துகள் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை 43 சதவிகிதம் அதிகரிப்பதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘அவண்டியா’, ‘ஆக்டோஸ்’ ஆகிய மருந்துகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

இதையடுத்து ‘வின்டியா’, ‘பிளோக்ளார்’ என்ற பெயர்களில் இந்தியாவில் விற்கப்படும் அம் மருந்துகளுக்குத் தடை விதிப்பது பற்றி இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் எம்.வெங்கடேசன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது:
‘வின்டியா’, ‘பிளோக்ளார்’ மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். டில்லி, மும்பை உள்ளிட்ட 5 நகரங்களில் இந்த ஆய்வுகள் நடக்கின்றன. முதல் கட்ட முடிவுகள் இன்னும் 6 மாதத்தில் வெளியாகும். அதில், இந்த மருந்துகளால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது மெய்ப்பிக்கப்பட்டால், இந்த மருந்துகளை இந்தியாவில் விற்கத் தடை விதிக்கப்படும் என அவர் கூறினார்.