கன்னடர்- தமிழர் ஒற்றுமை - தேவகவுடா பேச்சு

மொழியில் வேறுபாட்டாலும், கலாசாரத்தால் ஒன்றுப்பட்டுள்ளோம் கன்னடர்-தமிழர் சகோதர மனப்பான்மையுடன் வாழ வேண்டும், தமிழ்ச்சங்க முப்பெரும் விழாவில் தேவேகவுடா பேச்சு



பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் கர்நாடக பொன்விழா, சிவகுமார சாமிகளின் நூற்றாண்டு விழா, காமராஜர் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமாரசாமிக்கு பதிலாக இளைய மடாதிபதி சித்தலிங்க சுவாமிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் தேவேகவுடாவுக்கும், சித்தலிங்க சுவாமிக்கும் மாலை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு கொடுக்கப்பட்டது.விழாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசியதாவது:-

பெங்களூர் தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொண்டதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். பெஙகளூரை ஒரு மினி இந்தியா என்று அழைத்தால் தவறாகாது. காரணம், பெங்களூரில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட நாட்டில் உள்ள அனைத்தும் மொழியினரும் உள்ளனர். அதேபோல அனைத்து மதத்தினரும் வாழ்கின்றனர்.

இவ்வாறு மொழி, மதத்தில் வேறுபட்ட மக்கள் பல்வேறு கலாசாரத்துடன் அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார்கள். மினி இந்தியா என்றழைக்கப்படும் பெங்களூர் நகரின் கவுரவத்திற்கு பாதிப்பு வராமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்.

கர்நாடகத்தில் தமிழர்கள் எவ்வளவு பேர் வாழ்கிறார்களோ, அதே அளவு தமிழகத்தில் கன்னடர்கள் வாழ்கிறார்கள். கன்னடம், தமிழர்கள் தாங்கள் பேசும் மொழியில் வேறுபட்டு இருந்தாலும், அவர்களின் வாழ்க்கை-கலாசாரத்தில் ஒற்றுமை உள்ளது. இதனால் கன்னடர்-தமிழர்கள் ஒற்றுமையாக அமைதியான முறையில் வாழ வேண்டும். சகோதர மனப்பான்மையுடன் வாழ கற்று கொள்ள வேண்டும். 2 மொழியினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை தூண்டும் விதத்தில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது. எந்த சந்தர்ப்பத்திலும் பிரிவினைக்கு வித்திடக்கூடாது.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்கள் ஞானோதயம் தரும் விதத்தில் உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் அவரவர் மாநில மொழிகள் தான் பெரிதாக கருதப்படும். இதர மொழிகளுக்கும் உரிய மரியாதை கொடுக்கப்படும்.

ஆதிசங்கரர், ராமகிருஷ்ணபரம்பஹம்சர், விவேகானந்தர் போன்றோர் மனித குலத்திற்கே வழிகாட்டியாக திகழ்ந்தனர்.

இவ்வாறு முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேசினார்.

1 comments:

July 16, 2007 at 7:47 AM TBCD said...

ithai mudinthal kannadar sanga kootathiley solli parkalam...Naan bengulurula irunthavan yengindra murayiley...bangalore Thamilargal nilamai parithabagaramanatha..Taminatiley vazhum kannadargal tamilargalin atharavinal nandragavey valgindranar..