அவரு பெருந்தன்மை யாருக்கு வரும்?

அவரு பெருந்தன்மை யாருக்கு வரும்?-நெகிழ்கிறார் வடிவேலு



சூப்பர் ஸ்டாருன்னா சூப்பர் ஸ்டாருதான்...அவரு பெருந்தன்மை யாருக்கு வரும்? சிவாஜி பற்றி பேச்செடுத்தாலே வைகைப்புயல் இப்படிதான் புகழ்ந்து தள்ளுகிறார். விஷயம் இதுதான். சிவாஜி படத்தில் வடிவேலு நடிக்கவில்லையென்றாலும், இவர் பேசி புகழ்பெற்ற டயலாக்கான "என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே?" என்ற வசனத்தை அப்படியே பேசியிருப்பார் ரஜினி. உடனே வடிவேலு மாதிரியே அழுது காண்பிப்பார் விவேக்.

நான் அந்த படத்தில் நடிக்கலைன்னாலும் என்னை மாதிரியே ரெண்டு பேரும் நடிச்சிருப்பது எனக்கு பெருமையாக இருக்கு. அதுக்காக அவங்களுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் என்ற வடிவேலு, சொன்ன மாதிரியே இருவருக்கும் போன் செய்து தன் நன்றியை தெரிவித்துக் கொண்டாராம்.

இந்த படத்தில் மிஸ் பண்ணிட்டேன். ரஜினி சாரின் அடுத்த படத்தில் நான் கண்டிப்பா இருப்பேன் என்று இப்போதே உறுதி கூறுகிறார் வைகைப்புயல்!

-ஆர்.எஸ்.அந்தணன்

0 comments: