Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts
Monday, May 18, 2009
1
பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் - இலங்கை ராணுவம் அறிவிப்பு
Labels:
அரசியல்,
இலங்கை,
சூடான செய்திகள்
Sunday, November 25, 2007
0
புலிகளின் செயற்கைகோள் மையம் தகர்ப்பு: 3 பேர் பலி
இலங்கையில் புலிகளின் ரகசிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை போர் விமானங்கள் இன்று காலை குண்டுவீசி தகர்த்தன. இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாய மடைந்தனர்.
விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் புலிகள் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு முன் இலங்கை ராணுவம் நடத்திய விமான தாக்குதலில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட முக்கிய தலைவர்கள் பலர் பலியாயினர். இச்சம்பவம் புலிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அதன்பின் இலங்கை ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. "புலிகளின் ரகசிய இடங்கள் எல்லாம் குண்டுபிடிக்கப்பட்டு விட்டது. முக்கியத் தலைவர்களை ஒவ்வொருவராக கொல்வோம்" என இலங்கை விமானப்படை தளபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், "கிளிநொச்சி பகுதியில் உள்ள தர்மாபுரம் கிராமத்தில் ஒரு ரகசிய இடத்தில் அமைந்துள்ள புலிகளின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை போர் விமானங்கள் இன்று காலை குண்டு வீசி தகர்த்தன. இதனால் புலிகள் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது" என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் பற்றி புலிகள் தரப்பில், "இலங்கை விமானப்படை 8 குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் புலிகள் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு முன் இலங்கை ராணுவம் நடத்திய விமான தாக்குதலில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட முக்கிய தலைவர்கள் பலர் பலியாயினர். இச்சம்பவம் புலிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அதன்பின் இலங்கை ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. "புலிகளின் ரகசிய இடங்கள் எல்லாம் குண்டுபிடிக்கப்பட்டு விட்டது. முக்கியத் தலைவர்களை ஒவ்வொருவராக கொல்வோம்" என இலங்கை விமானப்படை தளபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், "கிளிநொச்சி பகுதியில் உள்ள தர்மாபுரம் கிராமத்தில் ஒரு ரகசிய இடத்தில் அமைந்துள்ள புலிகளின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை போர் விமானங்கள் இன்று காலை குண்டு வீசி தகர்த்தன. இதனால் புலிகள் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது" என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் பற்றி புலிகள் தரப்பில், "இலங்கை விமானப்படை 8 குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
Saturday, November 3, 2007
5
புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதை அடுத்து முதல்வர் கருணாநிதிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ரகசியத் தொடர்பு இருப்பது வெளிப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.
இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெüனம் சாதித்தார்.
அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.
1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார் ஜெயலலிதா.
தரவு - தினமணி
இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.
இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெüனம் சாதித்தார்.
அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.
1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார் ஜெயலலிதா.
தரவு - தினமணி
Labels:
அரசியல்,
அரசியல் விமர்சனம்,
இலங்கை
தம்பி தமிழ்ச்செல்வா: பாரதிராஜா கண்ணீர்

விடுதலைப்புலியின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு டைரக்டர் பாரதிராஜா கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
ஒரு விடிவெள்ளியை கொன்று புலர்ந்த இந்த வெள்ளி விடியாமலே இருந்தி ருக்கலாம்.
ஒரு அட்சய பாத்திரத்தை பிச்சைக்காரர்கள் தின்று தீர்த்த இந்த நாள் விழிக்காமலே இருந்திருக்கலாம்.
மரணத்தை கண்டு அஞ்சியதில்லை தம்பிகள்!
அதுதான் அவர்களுக்கு முகவரி.
வலிகளும் அவர்களுக்கு புதிதல்ல!
அவர்கள் ரணங்கள் சாதாரணம்!!
தழும்புகளை நெஞ்சில் சுமந்த வீர மறவர்கள் அவர்கள்.
என்றாலும் அவர்கள் கண்ணீரில் நனையும் போது இங்கே கரிக்கிறது.
அங்கே அவர்கள் காயப்படும் போது இங்கே குருதி கொதிக்கிறது.
வெடி அல்ல, இடி
வான் வழியே விழுந்தது வெடியல்ல!
எங்கள் நெஞ்சில் விழுந்த இடி!!
தம்பி தமிழ்ச்செல்வா! நீ மாபெரும் இயக்கத்தின் அரசியல் வழிகாட்டி மட்டுமல்ல.
தம்பி பிரபாகரனைக் காண வீரமண்ணிற்கு எமையழைத்துச் சென்று விருந்தோம்பி உபசரித்து மறத் தமிழ் மக்களின் மற்றோர் உலகை எனக்கு காட்டியவனும் நீதான்.
அதனால்தான் அன்றே என் அரசியல் காவியத்திற்கு உன் பெயரிட்டேனோ?
ஈழத்திற்கான அமைதிப் பேச்சு வார்த்தையை, சமாதானப்பாதை நோக்கிய பய ணத்தை உலகெங்கிலுமுள்ள அரசியல் அரங்கங்களில் ஓங்கி ஒலிக்கச் செய்த தம்பியே!
உமது இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலக உருண்டையில் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்தமிழர்கள் எல்லோருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் அந்தோ.
தங்கத்தை இழந்தோம் அன்று சிங்கத்தை இழந்தோம்
இன்று தங்கத்தை இழந்து விட்டோம்!!
அஹிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனை கொன்ற கைகள் தான் இன்று உன்னையும் தின்றது.
திலீபன் இறந்தபோது அவன் தாய் கூறினாள்.
"திலீபனை புதைக்க வில்லை. விதைத்திருக்கிறோம்''
தம்பி தமிழ்ச்செல்வா!
"உன்னை எரிக்கவில்லை...
ஏற்றியிருக்கிறோம்''
இவ்வாறு டைரக்டர் பாரதிராஜா கூறியுள்ளார்.
தரவு - தமிழ்சினிமா.காம்
புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக நடேசன் நியமனம்


தமிழ்ச்செல்வன் மறைவையடுத்து, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு புதிய தலைவராக நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிளிநொச்சி பகுதியில் இரனமேடு என்ற இடத்தில் உள்ள புலிகளின் ரகசியத் தளம் மீது விமானப்படை விமானங்கள் நேற்று குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
நார்வே குழுவினருடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தைகளில் தமிழ்ச் செல்வன் முக்கிய பங்காற்றினார்.
இவரின் மறைவையடுத்து, புலிகளின் போலீஸ் பிரிவு தலைவராக இருந்த நடேசன், அரசியல் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தரவு - தினகரன்
Monday, October 1, 2007
1
மன்னாரில் கடும் சண்டை : 17 விடுதலைப்புலி பலி
இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 17 புலிகள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை :
யாழ்ப்பாணம் மாவட்டம் நாகர்கோவிலில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் நேற்றிரவு விடுதலைப் புலிகள் அத்துமீறி நுழைய முயன்றனர். பீரங்கிகளால் ராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். ராணுவமும் திருப்பி தாக்கியது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடித்தது. இதில், 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவரும் இந்த சண்டையில் உயிரிழந்தார். மேலும், ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சண்டையில் ஏழு புலிகள் கொல்லப்பட்டனர். இதில், ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் 120 விடுதலைப் புலிகள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவு - தினமலர்
இது குறித்து இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை :
யாழ்ப்பாணம் மாவட்டம் நாகர்கோவிலில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் நேற்றிரவு விடுதலைப் புலிகள் அத்துமீறி நுழைய முயன்றனர். பீரங்கிகளால் ராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். ராணுவமும் திருப்பி தாக்கியது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடித்தது. இதில், 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவரும் இந்த சண்டையில் உயிரிழந்தார். மேலும், ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சண்டையில் ஏழு புலிகள் கொல்லப்பட்டனர். இதில், ராணுவ வீரர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் 120 விடுதலைப் புலிகள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரவு - தினமலர்
Labels:
இலங்கை
