தேடி தேடி அனுபவத்தை சம்பாதித்துக் கொள்கிற ஒருவன், தன்னை தேடி ஒரு காதல் அனுபவம் வரும்போது என்ன செய்கிறான்? இதுதான் நெஞ்சத்தை கிள்ளாதே. நினைத்தால், அந்த ஸ்டார் ஹோட்டலையே விலைக்கு வாங்கிவிடலாம். ஆனால், அங்கு வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் ஜெயிலுக்கு போகிறார் விக்ராந்த். பதினைந்தாயிரம் கொடுத்து விலைமாதுவை அழைத்துச் சென்று அவளை நிம்மதியாக உறங்க வைத்து அனுப்புகிறார். இப்படியெல்லாம் செய்யும் ஒரு பணக்காரனை பார்த்தால் என்ன வரும்? காதல் வருகிறது பாரதிக்கு. இவர் உருகி உருகி காதலை சொல்ல, அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் விக்ராந்த்.
அதன்பின் நிஜமாகவே பாரதி மேல் காதல் வருகிறது விக்ராந்துக்கு. இது பாரதியின் முறை. விக்ராந்த் செய்த அத்தனை அவமானங்களையும் இவரும் செய்ய, சேர்வார்களா? மாட்டார்களா? என்ற கேள்வியோடு நகர்கிறது படம். இடையில் பாரதிக்கும் விக்ரமாதித்யாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. தாலி கட்டுகிற கடைசி வினாடி வரைக்கும் தனக்கு வாய்ப்பிருக்கும் என்று நம்புகிற விக்ராந்த் மணமேடைக்கு எதிரிலேயே நிற்கிறார். கடைசியில் அதுவும் கிட்டாமல் இரண்டு சொட்டு கண்ணீர் சிந்த, 'உணர்வும் ஆக்கமும் அகத்தியன்!' நல்லவேளையாக தமிழ்சினிமா சம்பிரதாயங்களை உடைத்து, இந்த படத்திலாவது இடையில் வந்த மாப்பிள்ளையோடு ஹீரோயினை அனுப்ப சம்மதித்தார்களே!
விக்ராந்த் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, நகர விடாமல் நங்கூரம் பாய்ச்சுகிறது விதி! நக்கல், நையாண்டி, காதல், சோகம் என்று நாலாபுறமும் கவனிக்க வைக்கிற நடிப்பு இருக்கிறது அவரிடம். ஒவ்வொரு முறையும் பாரதி அவமானப்படுத்தும் போதெல்லாம், கவலையும் புன்சிரிப்புமாக அவர் ஏற்றுக் கொள்வது பரிதாபம்.
சில காட்சிகளில் ஆச்சர்யப்படுத்துகிறது அகத்தியன் பிராண்ட்! தன்னுடைய அப்பாவிற்கு இன்னொரு மனைவி இருப்பது தெரியவர, அதை டீசண்டாக அணுகுவது... தங்கையின் காதலனை வரவழைத்து பேசுவது... ஒரே ரூமில் ஒரே பெட்டில் கண்ணியமாக இருப்பது சாத்தியமா? இப்படி நிறைய! விபசாரத்திற்கு சப்போர்ட் பண்ணுகிற வசனங்களிலும் முற்போக்கு சிந்தனை!
அம்முவில் பார்த்த பாரதியா இது? சில கோணங்களில் அழகு. பல கோணங்களில் பகீர். நடிப்பை பற்றி கவலைப்படுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அவருக்கு தேவை, அவசரமாக ஒரு ஜிம்!
கேரளாவின் படகு வீடும், அதையட்டிய காட்சிகளும், அழகாக இருந்தாலும் நீளமாக தொடர்வது ஆயாசம்...
பின்னணி இசையில் படுத்தியிருக்கிறார் யுகேந்திரன். ஒரே ரீரெக்கார்டிங் ஒலியை வைத்துக் கொண்டு எல்லா ரீல்களையும் ஒப்பேற்றுவதை எதில் சேர்ப்பது? நல்லவேளையாக நேரே வரட்டுமா என்ற பாடல் இனிமை.
வலிக்கிற மாதிரி கிள்ளியிருக்கிறார்கள்!
Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Monday, February 18, 2008
1
Saturday, February 2, 2008
0
இந்திரலோகத்தில் நா அழகப்பன். - திரைவிமர்சனம்
எல்லாரையும் கொல்லும் எமனையே கொன்றுவிட்டால்? ஒரு நரனின் ஆசையை படமாக்கியிருக்கிறார்கள். பூவுலகில் நாடகம் போட்டு பிழைப்பு நடத்தும் அழகப்பன், பரிகாரம் செய்வதாக நினைத்துக் கொண்டு ஒரு சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அந்த சிலையோ தேவலோகத்து ரம்பை! வம்பை விலை கொடுத்து வாங்கியது மாதிரி ஆகிவிடுகிறது வாழ்க்கை. மாலை நேரமானால் அலேக்காக தேவலோகத்துக்கு தூக்கிச் செல்லப்படும் அழகப்பன், மறுநாள் பூவுலத்தில் இறக்கிவிடப்படுகிறார். இப்படி மாறி மாறி சவாரி அடிக்கும் அழகப்பன் நம்ப வடிவேலுவேதான்! தேவலோகத்திலும் இந்திரன், எமன் இவர்தான். நல்லவேளை... நீ என்னை மாதிரியே இருக்கியே என்ற வழக்கமான டயலாக் விடாமல் ஆகவேண்டியதை பார்த்திருக்கிறார்கள்.
தோற்றம் - மறைவு என்றுதானே போட்டோவுக்கு கீழே குறிப்பு எழுதுவார்கள்? இங்கே தோற்றம் - ஓட்டம் என்று எழுதி, வடிவேலுவின் தாத்தாக்களின் 'எஸ்கேப்பிசத்தை' பற்றி விவரிக்க, ஆரம்பமே அதிரடி! சதைபோட வேண்டும் என்று நினைப்பவன் மொத்த டானிக்கையும் ஒரே மூச்சில் குடித்த மாதிரி, ஆசைப்பட்ட கெட்டப்பையெல்லாம் போட்டிருக்கிறார் வடிவேலு. இந்த சிரிப்பு ராஜா போட்டிருக்கும் 90 வயது தாத்தா வேடம், நகைச்சுவைக்கு பதிலாக சோகத்தை வரவழைப்பதால், அழகப்பன் பல நேரங்களில் அழுகையப்பனாகவும் ஆகியிருப்பது சற்றே ஆயாசத்தை வரவழைக்கிறது... எமன் கெட்டப்பில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறார் வடிவேலு. அவரின் தூய தமிழ் வசனங்களும், அடிவயிற்று பிளிறல்களும் புதிய வடிவேலுவை காட்டியிருக்கிறது. எந்நேரமும் பெண்களிடம் கடலை போடும் இந்திரனாகவும் அவரே.
தன்னிடம் அன்பை பொழியும் சிறுமி ஒருத்தியின் மரணத்திற்கு பின் எமனை கொல்லும் உத்தேசத்தோடு இந்திரலோகம் போகும் வடிவேலு, கூடவே சாராய பேரலையும் கொண்டு செல்வது சுவாரஸ்யம். அதில் கொஞ்சத்தை எமனுக்கே ஊற்றிக் கொடுக்கிற கற்பனையும் பலே. ஆனால், அங்கே பொங்கி வழிய வேண்டிய கலகலப்பு, வெறும் சலசலப்பாகவே முடிந்து விடுவதுதான் சப்!
ரம்பா, மேனகா, ஊர்வசி ஆகியோருக்கு போட்டியாக இந்திரலோகத்தில் ஆடவிட யோசித்தார்களோ என்னவோ? 'கோடங்கி பிடாரி ஆத்தா' என்ற பெயரோடு இறக்கிவிடப்பட்டிருக்கிறார் ஸ்ரேயா! ஆத்தா...இதுக்கா இத்தனை பில்டப்பு?
திரும்பிய பக்கமெல்லாம் தன் அசுர கரங்களாலும், கற்பனைகளாலும் பிரமிப்பூட்டியிருக்கிறார் கலை இயக்குனர் தோட்டா தரணி. கண் முன் விரியும் இந்த அதிசயங்களை அதே அழகோடு திரையில் வார்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.
கதைகேற்ற பழைய வாசனையோடு உருவாக்கப்பட்டிருக்கும் பாடல்களும், பின்னணி இசையும் நம்மை அந்த உலகத்திற்கே இட்டுச் செல்கின்றன. இசை சபேஷ் - முரளியா? சபாஷ் - முரளியா?
இந்திரலோகத்தில் ஒரு 'இம்சை' அரசன்!
தரவு - தமிழ்சினிமா.காம்
தோற்றம் - மறைவு என்றுதானே போட்டோவுக்கு கீழே குறிப்பு எழுதுவார்கள்? இங்கே தோற்றம் - ஓட்டம் என்று எழுதி, வடிவேலுவின் தாத்தாக்களின் 'எஸ்கேப்பிசத்தை' பற்றி விவரிக்க, ஆரம்பமே அதிரடி! சதைபோட வேண்டும் என்று நினைப்பவன் மொத்த டானிக்கையும் ஒரே மூச்சில் குடித்த மாதிரி, ஆசைப்பட்ட கெட்டப்பையெல்லாம் போட்டிருக்கிறார் வடிவேலு. இந்த சிரிப்பு ராஜா போட்டிருக்கும் 90 வயது தாத்தா வேடம், நகைச்சுவைக்கு பதிலாக சோகத்தை வரவழைப்பதால், அழகப்பன் பல நேரங்களில் அழுகையப்பனாகவும் ஆகியிருப்பது சற்றே ஆயாசத்தை வரவழைக்கிறது... எமன் கெட்டப்பில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறார் வடிவேலு. அவரின் தூய தமிழ் வசனங்களும், அடிவயிற்று பிளிறல்களும் புதிய வடிவேலுவை காட்டியிருக்கிறது. எந்நேரமும் பெண்களிடம் கடலை போடும் இந்திரனாகவும் அவரே.
தன்னிடம் அன்பை பொழியும் சிறுமி ஒருத்தியின் மரணத்திற்கு பின் எமனை கொல்லும் உத்தேசத்தோடு இந்திரலோகம் போகும் வடிவேலு, கூடவே சாராய பேரலையும் கொண்டு செல்வது சுவாரஸ்யம். அதில் கொஞ்சத்தை எமனுக்கே ஊற்றிக் கொடுக்கிற கற்பனையும் பலே. ஆனால், அங்கே பொங்கி வழிய வேண்டிய கலகலப்பு, வெறும் சலசலப்பாகவே முடிந்து விடுவதுதான் சப்!
ரம்பா, மேனகா, ஊர்வசி ஆகியோருக்கு போட்டியாக இந்திரலோகத்தில் ஆடவிட யோசித்தார்களோ என்னவோ? 'கோடங்கி பிடாரி ஆத்தா' என்ற பெயரோடு இறக்கிவிடப்பட்டிருக்கிறார் ஸ்ரேயா! ஆத்தா...இதுக்கா இத்தனை பில்டப்பு?
திரும்பிய பக்கமெல்லாம் தன் அசுர கரங்களாலும், கற்பனைகளாலும் பிரமிப்பூட்டியிருக்கிறார் கலை இயக்குனர் தோட்டா தரணி. கண் முன் விரியும் இந்த அதிசயங்களை அதே அழகோடு திரையில் வார்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.
கதைகேற்ற பழைய வாசனையோடு உருவாக்கப்பட்டிருக்கும் பாடல்களும், பின்னணி இசையும் நம்மை அந்த உலகத்திற்கே இட்டுச் செல்கின்றன. இசை சபேஷ் - முரளியா? சபாஷ் - முரளியா?
இந்திரலோகத்தில் ஒரு 'இம்சை' அரசன்!
தரவு - தமிழ்சினிமா.காம்
Labels:
திரை விமர்சனம்
Thursday, January 17, 2008
2
பிரிவோம் சந்திப்போம் - திரை விமர்சனம்
மார்கழி மாசத்து கோலமும், மத்தியில் வைக்கப்பட்ட பூசணிப்பூவும் போன்றவை கரு.பழனியப்பனின் படங்கள். இரைச்சல்களையே விளைச்சல்களாக நினைக்கிற கோடம்பாக்கத்தில், பழனியப்பனின் படங்கள் இதமான தாலாட்டு.
குத்துப்பாட்டு, குத்தீட்டி சண்டை, இரட்டை கூட அல்ல... ஒற்றை அர்த்தமாகவே ஆகிவிட்ட டயலாக்குகள்.. இவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்துவிட முடியுமா? அதெப்படி? என்பவர்கள் பிரிவோம் சந்திப்போம் படத்தை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு உள்ளே நுழையலாம்.
விட்டால், ரங்கநாதன் தெருவை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு உறவுகள் நிறைந்த குடும்பத்தில் சேரன். அதற்கு நேர் எதிராக ஒரே பெண்ணாக பிறந்துவிட்ட சினேகா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். தியான மண்டபத்து அமைதியை, திருவிழா கூட்டம் அசத்துகிறது. இந்த உறவுகளும், அவர்கள் தரும் அன்பும் நிரந்தரம் என்று மகிழும் சினேகாவின் ஆசையில் திடீரென்று விழுகிறது டிரான்ஸ்பர். சேரனே விரும்பி ஏற்கும் இந்த டிரான்ஸ்பர் அட்டக்கட்டி மலைப்பிரதேசத்துக்கு தனிக்குடித்தனமாக இடம் பெயர்கிறது. அங்கே...? தமிழ்சினிமாவே பார்த்திராத வில்லன் ஒருவன்! வேறு யாருமல்ல, தனிமை! சேரன் வேலைக்கு போய்விட தனிமையில் இருக்கும் சினேகா படுகிற வேதனையை அப்படியே தியேட்டருக்குள் 'பாஸ்' பண்ணுகிறார் இயக்குனர். இருவரும் மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பிவிட மாட்டார்களா என்று ஏங்குகிற நேரத்தில் ஒரு திடுக் திருப்பம். சற்றே தவிக்க வைத்து வணக்கம் போடுகிறார் இயக்குனர்.
எதிரே நிற்பவரின் நடிப்பையும் சேர்த்து பறிக்கும் வாலியின் வலிமை கொண்டவர் சினேகா. விடுவாரா, இப்படி ஒரு கேரக்டர் கிடைத்தால்? தெரியாத மொழிகளிலும் டப்பிங் பேசுகிற ஆற்றல் அவர் கண்களுக்கு உண்டு. மகிழ்ச்சி, ஏமாற்றம், விரக்தி, வெறுமை எல்லாவற்றையும் நொடி பொழுதில் புரிய வைக்கின்றன அந்த கண்கள். 'நமக்கு எல்லாம் தருகிற அந்த கடவுளுக்கு நன்றி சொல்லணும்' என்றபடி, ஒவ்வொரு முறையும் உண்டியலை நிரப்புவது அழகு. பேச ஆளில்லாமல் தன்னை சுற்றி ஒலிக்கிற சப்தங்களை பதிவு செய்து அவற்றோடு பழக ஆரம்பிப்பது பரிதாபம். நல்லவேளையாக அவரை முழு மனநோயாளியாக்காமல் கரை சேர்க்கிறார்கள்.
சேரன்- சினேகா காதலில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை. திருமணத்திற்கு முன்பு சினேகாவை தனிமையில் சந்திக்க விரும்பி, அவர் செய்யும் முயற்சிகளும், அது பலிக்காமல் போய் தவிப்பதும் கலகலப்பு.
ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல், அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகவே வலம் வரும் ஜெயராம் சட்டென்று சினேகாவின் மன ஓட்டத்தை புரிந்து கொள்வது ஆறுதல். தானாக மருந்து எடுத்துக் கொள்ளும் பலருக்கு ஜெயராமின் அட்வைஸ் ரொம்ப அவசியமான விஷயம்.
எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமணன் டயலாக்குகள் கரு.பழனியப்பன் ஒரு பொறுப்பான பத்திரிகையாளர் என்பதையும் பறைசாற்றுகிறது. 'ஃபாதர் ஆஃப் நேஷனை, ஃபாதர் ஆஃப் ஸ்டேட் ஆக்கிட்டீங்களே' என்று கவலைப்படுவதை சொல்லலாமா? காந்தியும் மதுக்கடைகளும் குறித்த அவரது கேள்வியில் இருக்கிற நியாயம், நெருப்பு! இரட்டை புலவர்கள் கதையையெல்லாம் சினிமாவில் சொல்கிற அளவுக்கு தைரியத்தை பெற்ற விஷயத்தில் பழனியப்பன், படவுலக ராமதாஸ் ஆகியிருக்கிறார்.
'லைட் புரோன்' என்று தன் கலருக்கு விளக்கம் கொடுக்கும் கஞ்சா கருப்புவின் காமெடி தனி ஆவர்த்தனம்.
கதை மனிதர்களில் ஒருவராக நம்மையும் கடத்திச் செல்கிறது எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மனசை வருடும் மயிலிறகு!
இரண்டாம் பாதியின் துவக்கத்திலிருந்தே சண்டிக்குதிரையாகி அடம் பிடிக்கிறது திரைக்கதை. நேரம்போகாமல் தவிக்கிறார் சினேகா என்ற ஒரு விஷயம் திரும்ப திரும்ப ரிப்பீட் ஆகி, ரசிகர்களை நெளிய வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
பரிசுத்தமான பனித்துளிதான்... தாகம் தணிக்குமா?
குத்துப்பாட்டு, குத்தீட்டி சண்டை, இரட்டை கூட அல்ல... ஒற்றை அர்த்தமாகவே ஆகிவிட்ட டயலாக்குகள்.. இவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்துவிட முடியுமா? அதெப்படி? என்பவர்கள் பிரிவோம் சந்திப்போம் படத்தை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு உள்ளே நுழையலாம்.
விட்டால், ரங்கநாதன் தெருவை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு உறவுகள் நிறைந்த குடும்பத்தில் சேரன். அதற்கு நேர் எதிராக ஒரே பெண்ணாக பிறந்துவிட்ட சினேகா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். தியான மண்டபத்து அமைதியை, திருவிழா கூட்டம் அசத்துகிறது. இந்த உறவுகளும், அவர்கள் தரும் அன்பும் நிரந்தரம் என்று மகிழும் சினேகாவின் ஆசையில் திடீரென்று விழுகிறது டிரான்ஸ்பர். சேரனே விரும்பி ஏற்கும் இந்த டிரான்ஸ்பர் அட்டக்கட்டி மலைப்பிரதேசத்துக்கு தனிக்குடித்தனமாக இடம் பெயர்கிறது. அங்கே...? தமிழ்சினிமாவே பார்த்திராத வில்லன் ஒருவன்! வேறு யாருமல்ல, தனிமை! சேரன் வேலைக்கு போய்விட தனிமையில் இருக்கும் சினேகா படுகிற வேதனையை அப்படியே தியேட்டருக்குள் 'பாஸ்' பண்ணுகிறார் இயக்குனர். இருவரும் மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பிவிட மாட்டார்களா என்று ஏங்குகிற நேரத்தில் ஒரு திடுக் திருப்பம். சற்றே தவிக்க வைத்து வணக்கம் போடுகிறார் இயக்குனர்.
எதிரே நிற்பவரின் நடிப்பையும் சேர்த்து பறிக்கும் வாலியின் வலிமை கொண்டவர் சினேகா. விடுவாரா, இப்படி ஒரு கேரக்டர் கிடைத்தால்? தெரியாத மொழிகளிலும் டப்பிங் பேசுகிற ஆற்றல் அவர் கண்களுக்கு உண்டு. மகிழ்ச்சி, ஏமாற்றம், விரக்தி, வெறுமை எல்லாவற்றையும் நொடி பொழுதில் புரிய வைக்கின்றன அந்த கண்கள். 'நமக்கு எல்லாம் தருகிற அந்த கடவுளுக்கு நன்றி சொல்லணும்' என்றபடி, ஒவ்வொரு முறையும் உண்டியலை நிரப்புவது அழகு. பேச ஆளில்லாமல் தன்னை சுற்றி ஒலிக்கிற சப்தங்களை பதிவு செய்து அவற்றோடு பழக ஆரம்பிப்பது பரிதாபம். நல்லவேளையாக அவரை முழு மனநோயாளியாக்காமல் கரை சேர்க்கிறார்கள்.
சேரன்- சினேகா காதலில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை. திருமணத்திற்கு முன்பு சினேகாவை தனிமையில் சந்திக்க விரும்பி, அவர் செய்யும் முயற்சிகளும், அது பலிக்காமல் போய் தவிப்பதும் கலகலப்பு.
ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல், அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகவே வலம் வரும் ஜெயராம் சட்டென்று சினேகாவின் மன ஓட்டத்தை புரிந்து கொள்வது ஆறுதல். தானாக மருந்து எடுத்துக் கொள்ளும் பலருக்கு ஜெயராமின் அட்வைஸ் ரொம்ப அவசியமான விஷயம்.
எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமணன் டயலாக்குகள் கரு.பழனியப்பன் ஒரு பொறுப்பான பத்திரிகையாளர் என்பதையும் பறைசாற்றுகிறது. 'ஃபாதர் ஆஃப் நேஷனை, ஃபாதர் ஆஃப் ஸ்டேட் ஆக்கிட்டீங்களே' என்று கவலைப்படுவதை சொல்லலாமா? காந்தியும் மதுக்கடைகளும் குறித்த அவரது கேள்வியில் இருக்கிற நியாயம், நெருப்பு! இரட்டை புலவர்கள் கதையையெல்லாம் சினிமாவில் சொல்கிற அளவுக்கு தைரியத்தை பெற்ற விஷயத்தில் பழனியப்பன், படவுலக ராமதாஸ் ஆகியிருக்கிறார்.
'லைட் புரோன்' என்று தன் கலருக்கு விளக்கம் கொடுக்கும் கஞ்சா கருப்புவின் காமெடி தனி ஆவர்த்தனம்.
கதை மனிதர்களில் ஒருவராக நம்மையும் கடத்திச் செல்கிறது எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மனசை வருடும் மயிலிறகு!
இரண்டாம் பாதியின் துவக்கத்திலிருந்தே சண்டிக்குதிரையாகி அடம் பிடிக்கிறது திரைக்கதை. நேரம்போகாமல் தவிக்கிறார் சினேகா என்ற ஒரு விஷயம் திரும்ப திரும்ப ரிப்பீட் ஆகி, ரசிகர்களை நெளிய வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
பரிசுத்தமான பனித்துளிதான்... தாகம் தணிக்குமா?
Labels:
திரை விமர்சனம்
Tuesday, January 8, 2008
0
காதல் கடிதம் - திரை விமர்சனம்

குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பார்த்து எங்களுக்கு பழகிப்போச்சு' என்கிற அந்த அப்பாவின் குரல், அடி வயிற்றை பிசைந்து கொண்டேயிருக்கிறது. காதலின் வலியையும், வாழ்க்கையின் உத்தரவாதமின்மையையும் இதை விட அழுத்தமாக யாரால் சொல்லிவிட முடியும்?
இலங்கையிலிருந்து சென்னைக்கு இசை கற்றுக் கொள்ள வரும் அனிஷா, இங்கே ஸ்ரீபாலாஜியை சந்திக்கிறார். முதலில் பிணக்கமும், இரண்டு மூன்று ரீல்களுக்குள்ளாகவே இணக்கமும் ஏற்படுகிறது இருவருக்கும். காதல் என்ற வார்த்தைக்கு இருவருமே கொண்டிருக்கும் ஒரே அர்த்தம் 'நம்பிக்கையில்லை' என்பதுதான். ஆனால், மனசு 'ஒன்வே'யில் பயணிக்க ஆசைப்படுகிற சாத்தான் ஆயிற்றே? கொஞ்சம் கொஞ்சமாக அனிஷாவின் மேல் காதல் கொள்ளும் பாலாஜி, அதை வெளிப்படுத்துகிற நாளில் இலங்கைக்கு பறந்து விடுகிறார் அனிஷா. 'யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஊருக்கு போய் கடிதம் எழுதுகிறேன' இதுதான் அனிஷா பாலாஜியிடம் பேசிய கடைசி வார்த்தை! ஊருக்கு போன அனிஷா காதல் கடிதம் எழுதினாரா? அது பாலாஜியின் கைகளுக்கு வந்து சேர்ந்ததா? இதுதான் முடிவு.
ஹீரோ, ஹீரோயின் இருவருமே புதுமுகங்கள். நடிப்பும் அத்தனை கச்சிதம். வழக்கமாக ஹீரோயின் அறிமுகங்கள் தமிழ்சினிமாவில் எப்படியிருக்கும்? இதில் வேறு மாதிரி. இவரை சிக்னலில் சந்திக்கும் ஹீரோவும் கண்டவுடன் காதல் கொள்ளாமல் மரபை உடைத்திருப்பது ஆறுதல். சங்கீத குருவே சந்தேக குருவான பின்பு, மேற்கொண்டு படிப்பை எப்படி தொடர்வது? தவிக்கும் அனிஷாவுக்கு அற்புதமான ஒரு ஐடியாவின் மூலம் அவரை மீட்கும் ஸ்ரீபாலாஜி பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். காதலில் விழுந்தபின் இவரிடம் தொற்றிக் கொள்ளும் தயக்கத்தையும் அநாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எஸ்.எம்.எஸ் மூலம் பாடல் கேட்கும் அனிஷாவுக்கு, வேறொரு நேயரின் விருப்பமாக அதே பாடலை ஒலிக்க செய்வது அழகு.
ஸ்ரீபாலாஜி இலங்கைக்கு போய் இறங்கியதும், மொத்த தியேட்டரும் அமைதியாகிவிடுகிறது. என்னவோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு மட்டும் மனசை பிசைய ஆரம்பித்துவிடுகிறது. படத்தில் இந்த இலங்கை பகுதி முழுவதும் நமக்கு என்னென்னவோ உணர்வுகளை கொடுக்கிற நேரத்தில், அதை மேலும் கனமாக்குகிறது இலங்கை அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் நடிப்பு.
ஆரம்ப கூச்சல்களுக்கு (உபயம் காதல் சுகுமார்) நெளிகிற நம்மை, காதல் என்ற மெல்லிய இழையால் கட்டிப் போட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். அதன்பின் இலங்கைக்கு பயணிக்கிற கதையை தன் வசம் இழுத்துக் கொள்கிறது கேமிராவும், இசையும், வசனங்களும்! யாழ்தேவி என்ற இரயிலையும், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இலங்கையின் உள்ளடங்கிய தமிழர் பகுதிகளையும் பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறது. அதுவும் யாழ்தேவியில் என்ற பாடலும், அந்த மெட்டும், அந்த தாளமும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல் வரிசையில் அமையும்! இசையமைப்பாளர் உதயா எதிர்கால தமிழ்சினிமாவின் நம்பிக்கை வரவு. ஒளிப்பதிவாளர் பி.ஆர்.ராஜனையும் அந்த வரிசையில் வைக்கலாம். பெயருக்கேற்றார் போல் வசீகர வரிகளை தந்திருக்கிறார் பாடலாசிரியர் வசீகரன்.
சென்சாரின் கத்தரிக்கு சின்ன வேலைகூட தராமல், ஈழத்தின் வேதனையை எடுத்து சொல்லிவிட முடியுமா? ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் முகேஷ்! மனசுக்குள் விதையாக விழுந்து, மரமாக முளைத்து நிற்கும் ஒரு சில பதிவுகளுக்கு மத்தியில், காதல் கடிதமும் ஒரு முக்கியமான பதிவு. சந்தேகமேயில்லை!
தரவு - தமிழ்சினிமா
Labels:
திரை விமர்சனம்
Tuesday, December 18, 2007
1
மிருகம் - விமர்சனம்
வானத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து நிற்கிறார் சாமி. சாய்ந்து கொண்டிருக்கிற தமிழ்சினிமாவை, தான் வளர்த்த மிருகத்தின் கொம்புகளால் முட்டுக் கொடுத்திருக்கிறார். எண்பதுகளின் இறுதியில் வாழ்ந்த ஒரு மிருகத்தின் வாழ்க்கை, நரகத்திற்கு போன கதை இது. டாகுமென்டரி அபாயங்கள் இருந்தும், இந்த கதையை எடுக்க துணிந்ததற்காகவே, ஐயா... சாமி அள்ளிக் கொள்ளுங்கள் பாராட்டுகளை!
எண்ணிப்பார்த்தால் எண்பது குடிசைகள் தேறும் அந்த கிராமத்தில். அங்கே பொலிகாளையை தொழிலுக்கு அழைத்து போகும் இளைஞன் அய்யனார், அந்த காளைக்கே உரிய குணங்களோடு வளர்ந்து நிற்கிறான். ஆசைப்படுகிற பெண்களையெல்லாம் அள்ளி திணிப்பதே மற்றொரு வேலை இவனுக்கு. இந்த காளையை அடக்க எவளாவது வரமாட்டாளா என்று ஏங்கித்தவிக்கும் வயதான தாய். ஊரே அஞ்சி நிற்கும் இவனையும் திருமணம் செய்து கொள்கிறாள் ஒருத்தி. முதலிரவே கற்பழிப்பாக முடிந்து போக, யார் இவன்? இவனுக்குள் இந்த மிருகம் வந்து உட்கார்ந்து கொண்டது எப்படி? கேள்வி எழுகிறது. பிளாஷ்பேக்! இரண்டாம் பாதியில் இவன் புரண்டு படுத்த புழுதிகளே வியாதியாக வந்து நிற்க, அப்போதும் குறையாத வேகத்தோடு திரிகிறான் அவன். ஒருகட்டத்தில், வைரம் பாய்ஞ்ச கட்டைடா இது என்று மார்தட்டிய இவன், கரையான் அரித்த விறகாக உருக்குலைந்து போக, அச்சச்சோ என்று முணுமுணுக்க வைக்கிற க்ளைமாக்சோடு முடிகிறது படம்.
அய்யனராக ஆதி. இந்த கதைக்கென்றே பிறந்தவர் மாதிரி அத்தனை பொருத்தம். சுட்ட கருங்கல் மாதிரி நெட்ட நெடுந்தோற்றம். கண்களில் பீறிடும் ஆவேசம். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கையில் அந்த எருது காளையையே மிரள வைக்கிறது தோற்றம். இந்த இளைஞர் தமிழ் சினிமாவின் கம்பீரமான வரவு. ஊரே சேர்ந்து தண்ணீர் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருக்க, எனக்கென்ன என்று அலட்சியமாக போகும் அய்யனார், இறுதியில் அந்த ஊர் தண்ணீர் பஞ்சத்தை போக்க நிலம் தருவதும், ஊர் மக்கள் அந்த தண்ணீரை குடிக்கிறார்களா என்று ஆவல் பொங்க கேட்பதும் கண்களை குளமாக்கும் காட்சி. அந்த க்ளைமாக்ஸ் எதிர்பாராத வலி.
பனைமரம் ஏறுவாள். ஆடுகளுக்கு காயடிப்பாள். எவன் மறுத்தால் என்ன? என் கணவனின் பிணத்தை நான் ஒருத்தியே சுமப்பேன் என்று பொங்கி எழுவாள்... பத்மபிரியாவின் கேரக்டரை எரிமலையும், பனிமலையும் கலந்து செய்த சிற்பம் போல் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. மருத்துவமனையில் தான் பெற்ற பிள்ளையை தூக்கி எறிய முயலும் அய்யானரை ஓங்கி உதைக்கிறாரே... மெய் சிலிர்த்து போகிறது. சொந்தக்குரலில் பேசியிருந்தால் அவார்டு நிச்சயம்! ஐயோ பாவம்!
கருப்பா... என்று வானத்தை நோக்கி குரல் எழுப்பும் கஞ்சா கருப்பும் ரசிக்க வைத்திருக்கிறார். ஊரே தீண்ட மறுத்த அய்யனாரை வாஞ்சையோடு தன் திருமணத்திற்கு அழைக்கும் போது குணச்சித்திர நடிகராகவும் பிரமோஷன் ஆகிறார். அய்யனாரின் அம்மாவாக நடித்திருக்கும் அந்த மூதாட்டியின் நடிப்பும் அருமை.
பின்னணி இசையிலும், மனசை சுண்டும் பாடல்களிலும் மற்றொரு முறையும் தங்களை நிருபித்திருக்கிறார்கள் சபேஷ்-முரளி சகோதரர்கள். அதிகம் பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி.
எண்பதுகளில் விபச்சாரம் அங்கீகரிப்பட்ட தொழிலா? சோனாவின் வீடும், சுற்றி வரும் பைங்கிளிகளும், போலீஸ் பார்வையில் படாமலே போய்விட்டார்களா என்ன? அதேபோல், கற்பை உயிர் போல நேசிக்கும் கிராமத்து பெண்களா அய்யனாரின் ஒரு கண்ணசைவில் அத்தனையையும் பறி கொடுக்கிறார்கள்?
வேலி தாண்டி பயிரை மேய்ந்திருந்தாலும், மிருகம் என்பதால் மன்னிப்போம். மற்றபடி படையலே போடலாம் இந்த சாமிக்கு!
தரவு - தமிழ்சினிமா.காம்
எண்ணிப்பார்த்தால் எண்பது குடிசைகள் தேறும் அந்த கிராமத்தில். அங்கே பொலிகாளையை தொழிலுக்கு அழைத்து போகும் இளைஞன் அய்யனார், அந்த காளைக்கே உரிய குணங்களோடு வளர்ந்து நிற்கிறான். ஆசைப்படுகிற பெண்களையெல்லாம் அள்ளி திணிப்பதே மற்றொரு வேலை இவனுக்கு. இந்த காளையை அடக்க எவளாவது வரமாட்டாளா என்று ஏங்கித்தவிக்கும் வயதான தாய். ஊரே அஞ்சி நிற்கும் இவனையும் திருமணம் செய்து கொள்கிறாள் ஒருத்தி. முதலிரவே கற்பழிப்பாக முடிந்து போக, யார் இவன்? இவனுக்குள் இந்த மிருகம் வந்து உட்கார்ந்து கொண்டது எப்படி? கேள்வி எழுகிறது. பிளாஷ்பேக்! இரண்டாம் பாதியில் இவன் புரண்டு படுத்த புழுதிகளே வியாதியாக வந்து நிற்க, அப்போதும் குறையாத வேகத்தோடு திரிகிறான் அவன். ஒருகட்டத்தில், வைரம் பாய்ஞ்ச கட்டைடா இது என்று மார்தட்டிய இவன், கரையான் அரித்த விறகாக உருக்குலைந்து போக, அச்சச்சோ என்று முணுமுணுக்க வைக்கிற க்ளைமாக்சோடு முடிகிறது படம்.
அய்யனராக ஆதி. இந்த கதைக்கென்றே பிறந்தவர் மாதிரி அத்தனை பொருத்தம். சுட்ட கருங்கல் மாதிரி நெட்ட நெடுந்தோற்றம். கண்களில் பீறிடும் ஆவேசம். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கையில் அந்த எருது காளையையே மிரள வைக்கிறது தோற்றம். இந்த இளைஞர் தமிழ் சினிமாவின் கம்பீரமான வரவு. ஊரே சேர்ந்து தண்ணீர் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருக்க, எனக்கென்ன என்று அலட்சியமாக போகும் அய்யனார், இறுதியில் அந்த ஊர் தண்ணீர் பஞ்சத்தை போக்க நிலம் தருவதும், ஊர் மக்கள் அந்த தண்ணீரை குடிக்கிறார்களா என்று ஆவல் பொங்க கேட்பதும் கண்களை குளமாக்கும் காட்சி. அந்த க்ளைமாக்ஸ் எதிர்பாராத வலி.
பனைமரம் ஏறுவாள். ஆடுகளுக்கு காயடிப்பாள். எவன் மறுத்தால் என்ன? என் கணவனின் பிணத்தை நான் ஒருத்தியே சுமப்பேன் என்று பொங்கி எழுவாள்... பத்மபிரியாவின் கேரக்டரை எரிமலையும், பனிமலையும் கலந்து செய்த சிற்பம் போல் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. மருத்துவமனையில் தான் பெற்ற பிள்ளையை தூக்கி எறிய முயலும் அய்யானரை ஓங்கி உதைக்கிறாரே... மெய் சிலிர்த்து போகிறது. சொந்தக்குரலில் பேசியிருந்தால் அவார்டு நிச்சயம்! ஐயோ பாவம்!
கருப்பா... என்று வானத்தை நோக்கி குரல் எழுப்பும் கஞ்சா கருப்பும் ரசிக்க வைத்திருக்கிறார். ஊரே தீண்ட மறுத்த அய்யனாரை வாஞ்சையோடு தன் திருமணத்திற்கு அழைக்கும் போது குணச்சித்திர நடிகராகவும் பிரமோஷன் ஆகிறார். அய்யனாரின் அம்மாவாக நடித்திருக்கும் அந்த மூதாட்டியின் நடிப்பும் அருமை.
பின்னணி இசையிலும், மனசை சுண்டும் பாடல்களிலும் மற்றொரு முறையும் தங்களை நிருபித்திருக்கிறார்கள் சபேஷ்-முரளி சகோதரர்கள். அதிகம் பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி.
எண்பதுகளில் விபச்சாரம் அங்கீகரிப்பட்ட தொழிலா? சோனாவின் வீடும், சுற்றி வரும் பைங்கிளிகளும், போலீஸ் பார்வையில் படாமலே போய்விட்டார்களா என்ன? அதேபோல், கற்பை உயிர் போல நேசிக்கும் கிராமத்து பெண்களா அய்யனாரின் ஒரு கண்ணசைவில் அத்தனையையும் பறி கொடுக்கிறார்கள்?
வேலி தாண்டி பயிரை மேய்ந்திருந்தாலும், மிருகம் என்பதால் மன்னிப்போம். மற்றபடி படையலே போடலாம் இந்த சாமிக்கு!
தரவு - தமிழ்சினிமா.காம்
Labels:
திரை விமர்சனம்
Saturday, December 8, 2007
0
எவனோ ஒருவன் - திரை விமர்சனம்
பிளாட்பார கடைகளை விடவும் மலிவான சரக்குகள் விற்கப்படும் கோலிவுட்டில், எப்போதாவது ஐ.எஸ்.ஐ சரக்குகளும் எட்டிப்பார்க்கும். இந்த படம் அந்த வரிசையில் சேர்த்தி. முதல் காட்சியே இயக்குனர் நிஷிகாந்தின் கௌரவத்தை சொல்லும் அசத்தலான தோரணவாயில்! வேலைக்கு கிளம்பும் மாதவன், மகளுக்கு முத்தம் கொடுக்கிற நேரத்தில் பின்னணியில் ஒலிக்கும் ரயிலின் சப்தமும், திரும்ப திரும்ப வரும் ஒரே காட்சியில் ஒரே மாதிரியான வாழ்க்கை சுழற்சியால் சலிப்புக்குள்ளாகி கிடக்கும் ஹீரோவின் மனசையும் அழகாக வெளிப்படுத்தி விடுகிறார். அந்த மனசுக்குள் இராணுவ கம்பீரத்தோடு ஒரு அகிம்சை அரசன் புகுந்துவிட, நடக்கிற களேபரங்கள்தான் கதை.
வங்கியில் வேலை பார்க்கும் மாதவனுக்கு ரயிலில் ஜன்னலோர சீட்டை பிடித்து அலுவலகத்திற்கு போய் சேருவதே பெரிய சவால். தன்னை சுற்றி நடக்கிற சின்ன சின்ன அநியாயங்களை தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு சூழ்நிலை சோகங்கள். தண்ணீர் லாரிக்காரனை கூட கண்டிக்க முடியாத அளவுக்கு வேகத்தடை வாழ்க்கை. நல்ல ஸ்கூலில் பிள்ளையை சேர்க்க வேண்டும் என்றால், டொனேஷன் நிர்பந்தங்கள். மனைவி சங்கீதாவின் ஒருசொல் மாதவனுக்கு மதம் பிடிக்க வைக்கிறது. பிறகென்ன, வெண்கலக்கடைக்குள் புகுந்து துவம்சம் செய்வது மாதிரி செய்கிறார் சுற்றி நடக்கிற அவலங்களை. கணவனுக்கு மனநோய். கலங்கிப் போகிற மனைவியால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில், தீவிரவாதியாக கருதப்படும் அவனை என்ன செய்கிறது போலீஸ்? பல இடங்களில் பின்னணி இசையே மௌனமாகி போகிற அளவுக்கு, மனசை பிசைந்து வணக்கம் போடுகிறார்கள்.
இரண்டு ரூபாய் அதிகம் வாங்கும் கூல் டிரிங்ஸ் கடைக்காரனையும், அவன் கடையையும் துவம்சமாக்கும் மாதவனின் ஆக்ரோஷம், மெல்ல மெல்ல துப்பாக்கி லெவலுக்கு உயர்வது எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. சிறிய பிரச்சனைதான் என்றாலும் தண்ணீர் லாரிக்காரனின் அலட்சியத்திற்கு அவர் கொடுக்கிற தண்டனை நரம்பை முறுக்கேற்றுகிறது. மருத்துவமனையில் அவர் கேட்கிற கேள்விகளில் இருக்கிற நியாயம் சாமானிய மக்களின் அன்றாட அறிக்கை! கையில் கிரிக்கெட் பேட் ஒன்றை எடுத்துக் கொண்டு அவர் நடக்கிற ராஜநடை பயங்கரம்.
பட்டுப்புடவையின் சரிகை மாதிரி மாதவனின் கேரக்டர் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கு சண்டை போடுகிற கஞ்சன் அல்ல என்பதை, பிளாட்பார சிறுவனிடம் அவர் காட்டுகிற தாராளம் உணர்த்துகிறது. நட்ட நடுநிசியில், அதுவும் நடுரோட்டில் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்தபடி, இறைவனுக்கு கடிதம் எழுதும் மாதவனின் நடிப்பிற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அவரே எழுதியிருக்கும் வசனங்கள். மகளின் புகைப்படத்தை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு வருகிறாரே மாதவன், அங்கேதான் க்ளைமாக்சில் நடக்கும் விபரீதத்தை இன்னும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்கள்.
மனைவியாக உயிர் சங்கீதா. இந்த பத்து வருடத்தில் என்ன சுகத்தை கண்டேன்? என்று புலம்பும் லட்சத்து ஓராவது மனைவி. அவரை தடுத்து நிறுத்தியிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது என்று அழுது புலம்பி பரிதாபத்தை சேர்த்துக் கொள்கிறார்.
காவல் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கம்பீரமாக உணர்த்தியிருக்கிறார் சீமான். பெண்களிடம் போலீஸ் விசாரணை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவர் சங்கீதாவிடம் நடத்தும் விசாரணை உதாரணம். பேசாம என்னுடைய காக்கி சட்டையை கழற்றி அவனை போட்டுக்க சொல்லலாம்னு தோணுது என்கிறபோது கைத்தட்டல்களில் அதிர்கிறது தியேட்டர். தன்னுடைய தமிழ் பற்றை தூய தமிழ் வசனங்களாலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பல காட்சிகளில் மௌனத்தையே இசையாக்கி அழகு சேர்த்திருக்கிறார் பி.சமீர். பின்னணி இசையோடு ஒளிப்பதிவும் கைகோர்த்து கொள்ள... நடுநிசியும், அரையிருட்டும் சொல்கிற சங்கதிகள் அநேகம். ஒளிப்பதிவாளர் சஞ்சய் யாதவ் பிரமிக்க வைத்திருக்கிறார். ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார் ஜி.பி.பிரகாஷ். பெரிதாக ஒன்றுமில்லை.
மீடியாவின் அவசியங்களை சொல்கிற அதே நேரத்தில், அவைகளின் அவசரங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒரே நேரத்தில் பல சேனல்காரர்களின் அறிவிப்புகள் மக்களுக்கு தலைச்சுற்றலையே ஏற்படுத்தும் என்பதையும் ஒரே பிரேமில் வெளிப்படுத்துகிறார். இப்படி சின்ன சின்ன நகாசு வேலைகள் இயக்குனரின் புத்திகூர்மைக்கு வெளிச்சம் போடுகிறது.
தமிழ்சினிமாவை தூர்வார, 'எவனோ வருவான்' என்று நம்பியிருந்தோமல்லவா?அவன்,
வந்துட்டான்...!
-ஆர்.எஸ்,அந்தணன்
வங்கியில் வேலை பார்க்கும் மாதவனுக்கு ரயிலில் ஜன்னலோர சீட்டை பிடித்து அலுவலகத்திற்கு போய் சேருவதே பெரிய சவால். தன்னை சுற்றி நடக்கிற சின்ன சின்ன அநியாயங்களை தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு சூழ்நிலை சோகங்கள். தண்ணீர் லாரிக்காரனை கூட கண்டிக்க முடியாத அளவுக்கு வேகத்தடை வாழ்க்கை. நல்ல ஸ்கூலில் பிள்ளையை சேர்க்க வேண்டும் என்றால், டொனேஷன் நிர்பந்தங்கள். மனைவி சங்கீதாவின் ஒருசொல் மாதவனுக்கு மதம் பிடிக்க வைக்கிறது. பிறகென்ன, வெண்கலக்கடைக்குள் புகுந்து துவம்சம் செய்வது மாதிரி செய்கிறார் சுற்றி நடக்கிற அவலங்களை. கணவனுக்கு மனநோய். கலங்கிப் போகிற மனைவியால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில், தீவிரவாதியாக கருதப்படும் அவனை என்ன செய்கிறது போலீஸ்? பல இடங்களில் பின்னணி இசையே மௌனமாகி போகிற அளவுக்கு, மனசை பிசைந்து வணக்கம் போடுகிறார்கள்.
இரண்டு ரூபாய் அதிகம் வாங்கும் கூல் டிரிங்ஸ் கடைக்காரனையும், அவன் கடையையும் துவம்சமாக்கும் மாதவனின் ஆக்ரோஷம், மெல்ல மெல்ல துப்பாக்கி லெவலுக்கு உயர்வது எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. சிறிய பிரச்சனைதான் என்றாலும் தண்ணீர் லாரிக்காரனின் அலட்சியத்திற்கு அவர் கொடுக்கிற தண்டனை நரம்பை முறுக்கேற்றுகிறது. மருத்துவமனையில் அவர் கேட்கிற கேள்விகளில் இருக்கிற நியாயம் சாமானிய மக்களின் அன்றாட அறிக்கை! கையில் கிரிக்கெட் பேட் ஒன்றை எடுத்துக் கொண்டு அவர் நடக்கிற ராஜநடை பயங்கரம்.
பட்டுப்புடவையின் சரிகை மாதிரி மாதவனின் கேரக்டர் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கு சண்டை போடுகிற கஞ்சன் அல்ல என்பதை, பிளாட்பார சிறுவனிடம் அவர் காட்டுகிற தாராளம் உணர்த்துகிறது. நட்ட நடுநிசியில், அதுவும் நடுரோட்டில் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்தபடி, இறைவனுக்கு கடிதம் எழுதும் மாதவனின் நடிப்பிற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அவரே எழுதியிருக்கும் வசனங்கள். மகளின் புகைப்படத்தை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு வருகிறாரே மாதவன், அங்கேதான் க்ளைமாக்சில் நடக்கும் விபரீதத்தை இன்னும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்கள்.
மனைவியாக உயிர் சங்கீதா. இந்த பத்து வருடத்தில் என்ன சுகத்தை கண்டேன்? என்று புலம்பும் லட்சத்து ஓராவது மனைவி. அவரை தடுத்து நிறுத்தியிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது என்று அழுது புலம்பி பரிதாபத்தை சேர்த்துக் கொள்கிறார்.
காவல் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கம்பீரமாக உணர்த்தியிருக்கிறார் சீமான். பெண்களிடம் போலீஸ் விசாரணை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவர் சங்கீதாவிடம் நடத்தும் விசாரணை உதாரணம். பேசாம என்னுடைய காக்கி சட்டையை கழற்றி அவனை போட்டுக்க சொல்லலாம்னு தோணுது என்கிறபோது கைத்தட்டல்களில் அதிர்கிறது தியேட்டர். தன்னுடைய தமிழ் பற்றை தூய தமிழ் வசனங்களாலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பல காட்சிகளில் மௌனத்தையே இசையாக்கி அழகு சேர்த்திருக்கிறார் பி.சமீர். பின்னணி இசையோடு ஒளிப்பதிவும் கைகோர்த்து கொள்ள... நடுநிசியும், அரையிருட்டும் சொல்கிற சங்கதிகள் அநேகம். ஒளிப்பதிவாளர் சஞ்சய் யாதவ் பிரமிக்க வைத்திருக்கிறார். ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார் ஜி.பி.பிரகாஷ். பெரிதாக ஒன்றுமில்லை.
மீடியாவின் அவசியங்களை சொல்கிற அதே நேரத்தில், அவைகளின் அவசரங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒரே நேரத்தில் பல சேனல்காரர்களின் அறிவிப்புகள் மக்களுக்கு தலைச்சுற்றலையே ஏற்படுத்தும் என்பதையும் ஒரே பிரேமில் வெளிப்படுத்துகிறார். இப்படி சின்ன சின்ன நகாசு வேலைகள் இயக்குனரின் புத்திகூர்மைக்கு வெளிச்சம் போடுகிறது.
தமிழ்சினிமாவை தூர்வார, 'எவனோ வருவான்' என்று நம்பியிருந்தோமல்லவா?அவன்,
வந்துட்டான்...!
-ஆர்.எஸ்,அந்தணன்
Labels:
திரை விமர்சனம்
Saturday, December 1, 2007
0
"ராமேஸ்வரம்" - விமர்சனம்

ராமேஸ்வரத்துக்கு வரும் இலங்கை அகதிகளுக்கு இடம் தந்து உதவுகிறார் உள்ளூர் பெரும்புள்ளி லால். சொந்த நாட்டுக்கு திரும்பும் முயற்சியில் இருக்கும் அகதி ஜீவாவை, காதலிக்கிறார் அவர் மகள் பாவனா. இதை லாலும் பாவனாவின் முறைமாமன் போஸ் வெங்கட்டும் எதிர்க்கிறார்கள். முடிவில் காதல் ஜெயித்ததா என்பது க்ளைமாக்ஸ்.
வழக்கமான காதல் எதிர்ப்புதான் கதை. இலங்கை அகதியின் பின்னணியில் அதை சொல்லியிருப்பதும், அவர்களின் வலிகளை இன்னொரு பரிமாணத்தில் காட்டியிருப்பதும் புதிது.
அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு கூட்டம் வரும்போது, இலங்கை பிரச்னையை இயக்குனர் தொடப்போகிறார் என நினைத்தால் புஸ். அடுத்தடுத்து வரும் காட்சிகள் காதலை மட்டுமே மையப்படுத்தி செல்கிறது. ஜீவாவை கண்டதுமே காதல் வயப்படும் பாவனா, துரத்தி துரத்தி காதலிக்கிறார்.
"இலங்கைக்கு போனால் ஒரு நாள்கூட உன்னால வாழ முடியாது" என ஜீவா கூற, "சாகவும் தயார்" என்கிறார் பாவ்ஸ். அந்த அளவுக்கு பாவனாவின் காதல் வலுவானது எனக்கூறும் இயக்குனர் அதை காட்சிகளில் விளக்கத் தவறியிருக்கிறார். கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொள்ளும் ஜீவாவா இது? ஒரே காட்சியில் இலங்கை தமிழையும் லோக்கல் தமிழையும் கலந்து பேசுகிறார். ஒரு காட்சியில் பாவனா காதலை ஏற்றுக்கொள்வதும் இன்னொரு காட்சியில் அவரிடமிருந்து ஒதுங்கிப்போவதும் கிளைமாக்சில் "காதலுக்காக வரல. உன் உயிரை காப்பாத்ததான் வந்தேன்" எனச்சொல்லும்போதும் ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் அவர் தவிப்பது அழகான கவிதை.
படம் முழுவதும் வந்தாலும் பாவனாவின் நடிப்பை தேட வேண்டியிருக்கிறது. சொந்த மண்ணில் சொந்தங்களை இழந்த மணிவண்ணன், ‘மிஞ்சியிருப்பது பேரன் ஜீவாதான்; அவனை இலங்கைக்கு அனுப்ப மாட்டேன்’ என உருகும் போது மனதில் ஆணியடிக்கிறார். "தீபாவளி"யில் பார்த்த அதே வேடத்தில் லால். பாவனாவின் முறைமாமன் வெங்கட்டின் வில்லத்தனம் ரசிக்கலாம். ஜீவாவை வெங்கட் கைது செய்யும்போது, "நீங்க சொல்லும் நேரத்துல ஜீவா என்கூடத்தான் படுத்திருந்தார்" என பாவனா சொல்வது காட்சிக்கு கனம்.
வெங்கட்- ஜீவா மோதும் அந்த சண்டைக் காட்சி, மினி த்ரில். குருதேவ், வெற்றியின் ஒளிப்பதிவு கச்சிதம். நிருவின் இசையில் கபிலன் எழுதிய "எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வருமா" பாடலில் ஆழம். பின்னணி இசையில் இளையராஜாவின் பழைய படங்களை ஞாபகப்படுத்துகிறார். பாவனாவின் போட்டோவுக்கு பின்னால் கல்யாண தேதியை எழுதியிருக்க, அதை பார்க்கும் போலீசார் அன்றைய தினம் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என கணிக்கிறார்கள். இந்த மாதிரி படத்த¤ல் வரும் பல சீரியஸ் காட்சிகள் காமெடியாக தெரிகிறது.
தரவு - தமிழ்முரசு
Labels:
திரை விமர்சனம்
Friday, November 23, 2007
0
கமல் மகள் கதாநாயகியாகிறார்....

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி, மாதவன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
நடிகர் கமல்ஹாசன், சரிகாவுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரு மகள்கள் உள்ளனர். கமலிடம் விவாகரத்து பெற்று சரிகா பிரிந்து வாழ்கிறார். இதனால் இரு மகள்களும் சென்னையில் கமலுடன் வசித்து வருகின்றனர். மூத்த மகள் ஸ்ருதிக்கு இசையில் ஆர்வம் அதிகம். சினிமாவில் பாட ஆசைப்பட்ட அவர், கமல் நடித்த "தசாவதாரம்" படத்தில் மல்லிகா ஷெராவத் ஆட்டத்துக்கு பாடியுள்ளார். இதையடுத்து தனி இசை ஆல்பம் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
ஸ்ருதியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. நிறைய அழைப்புகள் வந்தும் அவர் நிராகரித்து விட்டார். வெங்கட் பிரபு இயக்கும் ‘ஏழு’ படத்தில் அவரை நடிக்க கேட்டபோது, மறுத்துவிட்டார்.
இந்நிலையில், மாதவன் ஜோடியாக தமிழ்ப் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சேரன், சினேகா ஜோடி சேரும் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தை தயாரிக்கும் ஞானம் பிலிம்ஸ், அடுத்து மாதவன் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை மும்பையைச் சேர்ந்த நிஷிகாந்த் காமத் டைரக்ட் செய்கிறார்.
தற்போது அவர் இயக்கிய ‘எவனோ ஒருவன்’ படத்தில் மாதவன், சங்கீதா நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது.
இதைத் தொடர்ந்து ஜனவரியில் மாதவன், ஸ்ருதி நடிக்கும் படம் தொடங்குகிறது. படத்துக்கு பெயர் சூட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தரவு - தமிழ்முரசு
Labels:
சூடான செய்திகள்,
திரை விமர்சனம்
Wednesday, November 7, 2007
0
ஆக்ரா - விமர்சனம்
தீபாவளி திரைப்படங்களின் விமர்சனங்கள்...சுடச்சுட உங்களின் பார்வைக்கு
'பொளேர்' என்று கன்னத்தில் அறைகிற வசனங்கள், அங்கங்கே எட்டிப்பார்க்கும் 'பார்த்திப' கிறுக்குகள், காதலர்கள் இருவர் ஒதுங்குகிற நேரம் க்ளோஸ்-ஷாட்டில் 'ஆட்கள் வேலை செய்கிறார்கள்' என்ற போர்டு! இப்படி முதல் பாதி ஆக்ரா, முழுக்க முழுக்க வயாக்ரா! இரண்டாம் பாதி நிஜமாலுமே ஆக்ராவுக்கு பயணமாகி காதலில் கரைகிறது. தண்ணீருக்காக பல மைல் தூரம் பானை சுமக்கிற ஹீரோயினுக்கு, தண்ணீருக்கு நடுவிலேயே வீடு கட்டி வாழ வேண்டும் என்ற ஆசை! இதுபோல் படம் முழுக்க மனசை கொள்ளையடிப்பதற்கென்றே நிறைய விஷயங்கள்.
காதலை பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்காக அமெரிக்காவிலிருந்து ஆலப்புழாவுக்கு வருகிறார் எமிமோகன். அங்கே அப்பாவின் நண்பர் நாசர், நாற்பது வருடங்களாக ஒரு கடிதத்திற்காக காத்திருக்கிறார். அது...? பிளாஷ்பேக் விரிகிறது. வயலின் கலைஞரான கண்ணன் ஆக்ராவில் சந்திக்கிறார் பொம்மை விற்கும் அஞ்சலியை! பார்த்தவுடனே பற்றிக் கொள்கிறது காதல். காதலுக்கு எதிரியான அந்த பூமி, அக்கினியாய் மாறி ஆக்ஷன் எடுப்பதற்கு முன்பே கண்ணனை தமிழ்நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறாள் அஞ்சலி. வருகிறபோது தன் முகவரியிட்ட கடிதம் ஒன்றை கொடுக்கிறான் கண்ணன். எப்போது நான் வந்து அழைக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்போது இதை அனுப்பு. வருகிறேன். இதுதான் கடிதத்திற்கான பின்னணி. நாற்பது வருடங்கள் கழித்து கடிதம் வர, மகிழ்ச்சியோடு ஆக்ரா செல்லும் காதலனுக்கு அங்கு கிடைத்தது என்ன? க்ளைமாக்ஸ்!
நாசரின் பார்வையில் பார்க்கிற எல்லாமே பிளாக் அண் ஒயிட்டாக தெரிவதையும், அதை வசனங்களால் கூட குறிப்பிடாமல், கடைசியில் விளக்குவதும் இயக்குனரின் சாமர்த்தியம். ஆபரேஷனுக்கு பிறகு கண்களை அவிழ்த்து, இமைகளை படபடத்து நீட்டி முழக்காமல், நாசரின் கண்ணுக்கு தபால்காரரையே கலர்புல்லாக காட்டி காட்சியை சுருக்கியிருக்கிறார் எடிட்டர். பலே! புதுமுகம் அஞ்சலியும், விகாஷ§ம் ஒன்றி நடித்திருக்கிறார்கள். ஆங்கில படமே தோற்றுப்போகிற அளவுக்கு லிப் டு லிப் காட்சிகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.
பீச்சில் சுண்டல் விற்கிற பையன், 'பேசாம சுண்டல் விக்கறதுக்கு பதிலா நிரோத் வித்திருக்கலாம் சார்' என்று போகிற போக்கில் காதல் பற்றி, கமெண்ட் அடிக்கிற போது பகீர் என்கிறது. அடிக்கடி காதல் பற்றி விவாதித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால், காதல்ங்கிறது... என்று ஆரம்பித்து குட்டியாக லெக்சர் கொடுப்பதுதான் போர்ர்ர்ர்! போதும் போதாதற்கு காயத்ரி என்ற பெண்ணை உருட்டி விளையாடியிருக்கிறார்கள். 'பிட்' படமோ என்ற அச்சமே வந்துவிடுகிறது.
டி.ராஜேந்தர் போல் உருவத்தோற்றமுள்ள அந்த புதுமுகம் கவனத்தை ஈர்க்கிறார்.
ஆக்ராவின் அழகையும், அவலத்தையும் ஒரேநேரத்தில் உள்வாங்கியிருக்கிறது பி.செல்வகுமாரின் கேமிரா. மதுரா, சிரபுஞ்சி, ஆலப்புழா என்று பசுமையை பந்தி வைத்திருக்கிற கேமிராமேனுக்கு முதல் சபாஷ்! நான் மட்டும் சளைத்தவனா என்கிறார் புதுமுக இசையமைப்பாளர் சி.எஸ்.பாலு. பின்னணி இசை மனசை அள்ளிக் கொண்டு போகிறது.
விருந்தா? விஷமா? சின்ன குழப்பத்தோடுதான் வெளியேற வேண்டியிருக்கிறது!
-ஆர்.எஸ்.அந்தணன்
தரவு - தமிழ்சினிமா.காம்
Labels:
திரை விமர்சனம்
கண்ணாமூச்சி ஏனடா - விமர்சனம்
தீபாவளி படங்களின் விமர்சனம் சுடச்சுட...உங்களின் பார்வைக்கு
மலேசியாவில் துவங்கி, சென்னைக்கு நகர்ந்து, பிறகு அங்கிருந்து ஊட்டிக்கு நகர்ந்து, அதே வேகத்தில் மறுபடியும் சென்னைக்கு நகரும் படம்! (கதை நகரவே மாட்டேங்குது என்று யாரும் குறை சொல்ல முடியாதல்லவா?)
மலேசியாவில் சந்தியாவை பார்க்கும் ப்ருத்திவிராஜ், கண்டவுடன் காதல் கொள்கிறார். தன் குண்டு மூக்கின் மேல் கோபத்தை வரவழைத்துக் கொள்ளும் சந்தியாவும், முதலில் முரண்டு பிடித்து, பிறகு பிருத்திவிராஜ் மேல் காதல் கொள்ள, இந்தியாவுக்கு வருகிறார்கள் இருவரும். சென்னையில் போலீஸ் கமிஷனராக இருக்கும் சத்யராஜ், தன் மகள் சந்தியாவின் காதலனை சந்தேகத்தோடு பார்க்க, அம்மா ராதிகாவுக்கு வருங்கால மருமகன் மேல் நம்பிக்கை! விசில் வரும் நேரத்தில் குக்கர் வெடித்த கதையாக சத்யராஜும், ராதிகாவுமே பிரிய நேர்கிறது. வீட்டை விட்டு வெளியேறிய ராதிகாவை மறுபடியும் சத்யராஜுடன் இணைத்து வைக்க போராடுகிறார் பிருத்திவிராஜ். இதற்கிடையில் மாப்பிள்ளை நல்லவர்தான் என்று மாமனாரும் உணர, இறுதியில், சின்ன சூயிங்க இழுவலோடு சுபம்!
சைக்காலஜி படிப்பதற்காக மலேசியா வந்த சந்தியாவின் நடிப்பு தூள்! சைக்காலஜி பாடத்தை ரோட்டிலேயே மனப்பாடம் செய்து கொண்டே நடக்கிற அழகும், ஏய்...ஏய் என்று கண்களும், உதடுகளும், அவருக்கே ஸ்பெஷலான அந்த மூக்கும் துடிக்க, கோபப்படுவதும் அழகோ அழகு.
சென்னைக்கு வரும் பிருத்திவிராஜை போலீஸ் கமிஷனர் சத்யராஜ் வரவேற்பது அமர்க்களம்! வயர்லெசில் கைதியின் விசாரணை லைவ்வாக வந்து கொண்டேயிருக்க, அதையும் காதில் வாங்கிக் கொண்டே பிருத்திவி பதில் சொல்லி சமாளிக்கிறாரே...சூப்பர். பிருத்திவி அறையிலேயே சத்யராஜ் தங்கி அவரை அவஸ்தைப்படுத்துவது இன்னொரு பகீர் சிரிப்பு. அவரது ஓயாத குறட்டையையும், கட்டில் ஆக்ரமிப்பையும் சின்ன புன்னகையோடு சகித்துக் கொள்ளும் பிருத்திவிராஜின் பொறுமை அலாதி நகைச்சுவை. மெல்ல, மெல்ல, சத்யராஜ் பாணியிலேயே போய் அவரை கலவரப்படுத்துவதும் சுவாரஸ்யம்.
பல படங்களுக்கு பிறகு தனக்கேயுரிய ஸ்பெஷல் ஐட்டங்களுடன் ரகளை கட்டியிருக்கிறார் சத்யராஜ். மனைவி ராதிகாவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க தயங்கி, பின்பு உடைந்து நொறுங்குகிறபோது சென்ட்டிமென்ட் சிகரமாகிறார். 'நீ இல்லாம என்னால சாகக்கூட தெரியாது' என்று அவர் கதறுகிற போது, சிவக்குமாரின் வசனங்களுக்கும் கிரீடம் முளைக்கிறது.
ஓடிப்போன அக்கா(வா?)வாக ஸ்ரீபிரியா. வனத்துறை அதிகாரியாம். அறிமுகமே அசத்தல். இந்த பொறியிடம் சத்யராஜ் என்ற சிங்கமே மாட்டிக் கொண்டு அல்லல் பட்டிருக்கிறது. பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்கிற இந்த இரட்டையர்கள், அந்த நெகிழ்வான நிகழ்ச்சியையும் காமெடியாக்கிவிடுவதுதான் உறுத்தல்!
மலேசியா, ஊட்டி என்று அகோரப் பசியோடு மேய்ந்திருக்கிறது ப்ரிதாவின் கேமிரா! யுவன்சங்கர்ராஜா இசையில் பாடல்கள் பரவசம். குறிப்பாக மேகம் மேகம்... பாடல்! அன்று வந்ததும் அதே நிலா ரீமிக்சில் யுவனின் இசையும், சத்யராஜ்-ராதிகா ஜோடியும் ஆட்டமும் போட்டி போட்டிருக்கிறது.
கலகலப்பான கண்ணாமூச்சி ஆட்டம்தான்!
-ஆர்.எஸ்.அந்தணன்
தரவு - தமிழ்மணம்.காம்
செய்திகளை முந்தித்தருவது மிளகாய்....
Labels:
திரை விமர்சனம்
Saturday, September 29, 2007
0
மலைக்கோட்டை - விமர்சனம்
சண்டக்கோழியில் ஆரம்பித்த துரத்தல், இன்னும் முடிந்தபாடில்லை. ஒவ்வொரு முறையும் வெளியூருக்கு போகிற விஷாலுக்கு லக்கேஜ் மாதிரி கூடவே ஒட்டிக்கொண்டு வருகிறது பிரச்சனை. இந்த முறை பட்டுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு போகிற விஷாலுக்கு அந்த ஊரில் தேவராஜ் ரூபத்தில் வருகிறது சண்டை. திருச்சியையே ஆட்டி வைக்கிற தேவராஜின் தம்பியை மூக்கு வேறு, காது வேறாக பிய்த்துப்போடுகிறார் விஷால். பழிவாங்க அண்ணன் துடிக்க, முரட்டு புஜத்தை விஷால் உயர்த்த, கிடுகிடுத்து போகிறது திருச்சியும், நாம் படம் பார்த்துக் கொண்டிருக்கிற தியேட்டரும்! தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கெல்லாம் எனிமா கொடுத்து தொடர் வெற்றி அடைந்திருக்கிறார் விஷால்!
கண்டிஷன் பைலில் கையெழுத்து போட திருச்சிக்கு பஸ்ஸில் வரும் விஷால், மொட்டை மாடியில் காக்காய்க்கு சோறு வைக்கும் ப்ரியாமணியை பார்க்கிறார். கா... கா... என்று காகத்தை அழைத்து அவற்றையும் தன் சொந்தங்களில் ஒருவராக பார்க்கும் அவரின் “புளுகிராஸ்” மனசு விஷாலை கவர, காதல்! கூடவே மணிசர்மா ஆர்மோனியத்திற்கும் அரிப்பு வர, சுட சுட இரண்டு டூயட். விரட்டி விரட்டி வரும் விஷாலை தவிர்ப்பதற்காக யாரோ ஒரு ரவுடியை காட்டி அவனை காதலிப்பதாக சொல்கிறார் ப்ரியாமணி. போதாதா? காதல் வழிய வீட்டுக்கே வருகிறான் ரவுடி. முதலில் ஒதுங்கிக் கொள்ளும் விஷால், அதெல்லாம் ச்சும்மா என்று தெரிய வர, கனல் கண்ணனின் கைங்கர்யம் ஆரம்பமாகிறது. இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சண்டைக்காட்சி இரண்டாம் புருஸ்லீயாக புரமோஷன் கொடுக்கிறது விஷாலுக்கு. சண்டைக்காட்சியில் அவருடைய கடுமையான உழைப்புக்கு முறுக்கேறி நிற்கிற ரசிகர்களே சாட்சி. இன்டர்வெல் பிளாக்கில் டிரான்ஸ்பார்மரை வெடிக்க வைத்து, அதிலிருந்து விழும் ஒயரிலிருந்து பொறி பறக்க சிகரெட் பற்ற வைக்கிறார் விஷால். (உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ?)
முதன்முறையாக காமெடியையும் ஊறுகாயாக தொட்டுக் கொண்டிருக்கிறார் விஷால். ஃபுல் போதையில் கிளிக்கூண்டில் காக்காவை அடைத்துவந்து சித்தப்பா ஆசிஷ்வித்யாத்தியிடம் அசடு வழிவதும், ஊருக்கு போன் பண்ணி தன் நண்பர்கள் எல்லோரிடமும் காக்காவுக்கு சோறு வைங்கடா என்று உத்தரவிடுவதுமாக அமர்க்களம் பண்ணியிருக்கிறார். போதாதற்கு மயில்சாமி கூட்டணி வேறு. ரணகளமாகிறது தியேட்டர்.
இன்னொருபக்கம் ஊர்வசிவித்யார்த்தி பிளாஷ்பேக். அப்படி ஒரு முரட்டு வில்லனை இப்படி சிரிக்க சிரிக்க காட்டுவதற்கே ஒரு தைரியம் வேண்டும். தன் இயல்பான காமெடியை படம் நெடுகிலும் வழிய விட்டிருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். நாய் சேகரின் முடிவையும், மாட்டு சேகரின் ஆரம்பத்தையும் நினைத்து நினைத்து சிரிக்கலாம்.
ப்ரியாமணிக்கு அவரின் நிஜக்குரலையே பயன்படுத்தியிருக்கலாம். டப்பிங் குரல் டம்மி குரலாகிவிட்டது. மாடர்ன் மணியை விட, தாவணி மணிதான் அழகு. அடுத்த படத்தில் திருத்திக் கொள்வாராக.
கன்னட இறக்குமதி தேவராஜின் வில்லத்தனம் பார்த்து பார்த்து சலித்ததுதான். டாடா சுமோக்களின் உதவியுடன் டயர் தேய பறப்பதும் அதே ரகம்.
மேன் ஆஃப் த மேட்ச் கனல் கண்ணனுக்குதான்.
ஏ..ஆத்தா ஆத்தோரமா வாரியா ரீமிக்ஸ் பாடலும், கந்தா கடம்பா என்ற குத்துப்பாட்டும் கொஞ்ச நாட்களுக்கு டீக்கடைகளின் பூபாளமாக ஒலிக்கும்.
உச்சி நரம்பை பற்றி இழுத்திருக்கிறது மலைக்கோட்டையின் வேகம்.
தரவு - தமிழ்சினிமா.காம்
கண்டிஷன் பைலில் கையெழுத்து போட திருச்சிக்கு பஸ்ஸில் வரும் விஷால், மொட்டை மாடியில் காக்காய்க்கு சோறு வைக்கும் ப்ரியாமணியை பார்க்கிறார். கா... கா... என்று காகத்தை அழைத்து அவற்றையும் தன் சொந்தங்களில் ஒருவராக பார்க்கும் அவரின் “புளுகிராஸ்” மனசு விஷாலை கவர, காதல்! கூடவே மணிசர்மா ஆர்மோனியத்திற்கும் அரிப்பு வர, சுட சுட இரண்டு டூயட். விரட்டி விரட்டி வரும் விஷாலை தவிர்ப்பதற்காக யாரோ ஒரு ரவுடியை காட்டி அவனை காதலிப்பதாக சொல்கிறார் ப்ரியாமணி. போதாதா? காதல் வழிய வீட்டுக்கே வருகிறான் ரவுடி. முதலில் ஒதுங்கிக் கொள்ளும் விஷால், அதெல்லாம் ச்சும்மா என்று தெரிய வர, கனல் கண்ணனின் கைங்கர்யம் ஆரம்பமாகிறது. இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சண்டைக்காட்சி இரண்டாம் புருஸ்லீயாக புரமோஷன் கொடுக்கிறது விஷாலுக்கு. சண்டைக்காட்சியில் அவருடைய கடுமையான உழைப்புக்கு முறுக்கேறி நிற்கிற ரசிகர்களே சாட்சி. இன்டர்வெல் பிளாக்கில் டிரான்ஸ்பார்மரை வெடிக்க வைத்து, அதிலிருந்து விழும் ஒயரிலிருந்து பொறி பறக்க சிகரெட் பற்ற வைக்கிறார் விஷால். (உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ?)
முதன்முறையாக காமெடியையும் ஊறுகாயாக தொட்டுக் கொண்டிருக்கிறார் விஷால். ஃபுல் போதையில் கிளிக்கூண்டில் காக்காவை அடைத்துவந்து சித்தப்பா ஆசிஷ்வித்யாத்தியிடம் அசடு வழிவதும், ஊருக்கு போன் பண்ணி தன் நண்பர்கள் எல்லோரிடமும் காக்காவுக்கு சோறு வைங்கடா என்று உத்தரவிடுவதுமாக அமர்க்களம் பண்ணியிருக்கிறார். போதாதற்கு மயில்சாமி கூட்டணி வேறு. ரணகளமாகிறது தியேட்டர்.
இன்னொருபக்கம் ஊர்வசிவித்யார்த்தி பிளாஷ்பேக். அப்படி ஒரு முரட்டு வில்லனை இப்படி சிரிக்க சிரிக்க காட்டுவதற்கே ஒரு தைரியம் வேண்டும். தன் இயல்பான காமெடியை படம் நெடுகிலும் வழிய விட்டிருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். நாய் சேகரின் முடிவையும், மாட்டு சேகரின் ஆரம்பத்தையும் நினைத்து நினைத்து சிரிக்கலாம்.
ப்ரியாமணிக்கு அவரின் நிஜக்குரலையே பயன்படுத்தியிருக்கலாம். டப்பிங் குரல் டம்மி குரலாகிவிட்டது. மாடர்ன் மணியை விட, தாவணி மணிதான் அழகு. அடுத்த படத்தில் திருத்திக் கொள்வாராக.
கன்னட இறக்குமதி தேவராஜின் வில்லத்தனம் பார்த்து பார்த்து சலித்ததுதான். டாடா சுமோக்களின் உதவியுடன் டயர் தேய பறப்பதும் அதே ரகம்.
மேன் ஆஃப் த மேட்ச் கனல் கண்ணனுக்குதான்.
ஏ..ஆத்தா ஆத்தோரமா வாரியா ரீமிக்ஸ் பாடலும், கந்தா கடம்பா என்ற குத்துப்பாட்டும் கொஞ்ச நாட்களுக்கு டீக்கடைகளின் பூபாளமாக ஒலிக்கும்.
உச்சி நரம்பை பற்றி இழுத்திருக்கிறது மலைக்கோட்டையின் வேகம்.
தரவு - தமிழ்சினிமா.காம்
Labels:
திரை விமர்சனம்
Tuesday, September 18, 2007
2
'சத்தம் போடாதே' - திரை விமர்சனம்

வேலை நிமித்தமாக தன் புது மனைவியுடன் கேரளாவுக்கு செல்லும் பிருத்விராஜுக்கு ரெயில் சிநேகிதனாக அறிமுகமாகிறார் நிதின் சத்யா. அவன், தன் மனைவியின் முதல் கணவன். குடிபழக்கத்தால் ஆண்மை இழந்தவன், ஒரு வகையான சைக்கோ என்பது அவருக்குத் தெரியாது. ஆனால் தன்னை ஆண்மையற்றவன் என்று அவமானப்படுத்தி விவாகரத்து பெற்ற தன் மனைவியின் கணவன்தான்தான் பிருத்வி என்பதை நிதின் தெரிந்து கொள்கிறார்.
கேரளாவில் கணவனும், மனைவியும் நெருக்கமாக இருக்கும் தருணங்களைப் பார்த்து பார்த்து நிதின் சத்யாவின் தாழ்வு மனப்பான்மை நெருப்பாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் கேஸ் வெடித்து பத்மபிரியா இறந்தது போல செட்டப் செய்துவிட்டு, அவரை கடத்தும் நிதின் பழைய பங்களாவில் அடைத்து வைத்து மன ரீதியான சித்ரவதை செய்கிறார். பிருத்வி பத்மபிரியாவை எப்படி கண்டு பிடிக்கிறார்? நிதின் முடிவு என்ன? என்பதை சொல்கிறது படம். நாயகியின் காதலுக்காக ஏங்கும் கேரக்டரை இந்த படத்திலும் தொடர்கிறார் பிருத்விராஜ், அவரின் அழகான முகமும், மலையாள வாசனை வீசும் தமிழும் ரசிக்க வைக்கிறது.
போனில் கெட்டவனாகவும், நேரில் நல்லவனாகவும் அவர் நடத்தும் காதல் நாடகம் ரவுசு. மனைவி இறக்கும் போதும் அவர் திரும்ப கிடைக்கும் போதும் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்து உருக உருக வசனம் பேசாமல் முக வாட்டத்திலேயே உணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பது பிருத்வி ஸ்பெஷல். கணவன் தாம்பத்தியத்துக்கு தகுதியில்லாதவன் என்பது தெரிந்தும் “எனக்கு அப்படி ஒரு குறையிருந்தா..?’’ என்று அவருடன் வாழத் தயாராவது... நிதினின் சுயரூபம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவர அதிர்ச்சியாவது... என அசத்துகிறார் பத்மபிரியா.
இருவரையும் தனி ஆளாக ஓவர்டேக் பண்ணுகிறார் நிதின் சத்யா. முகத்தில் பாலையும் நெஞ்சில் நஞ்சையும் வைத்துக் கொண்டு அவர் வரும்போதெல்லாம் சீட்டிலிருந்து எழுந்து போய் நாலு அறை விட வேண்டும்போல இருக்கிறது. பின்னணி இசையில் யுவன் தெரிகிறார். நெருங்கிய நண்பரின் தங்கை திருமணத்துக்கு பிருத்வி போகாதது, ஆண்மை பறிபோகும் அளவிற்கு குடிக்கிற நிதின் அழகாகவும், ஆரோக்யமாகவும் இருப்பது, ஒரே அறைக்குள் மாதக் கணக்கில் அடைபட்டுக்கிடக்கும் பத்மபிரியாவிடம் உடல் ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படாமல் இருப்பது, தன்னந்தனி ஆளாக சவுண்ட் புரூப் அறை கட்டுவது என்று ஆங்காங்கே லாஜிக் மிஸ்சிங் என்றாலும் ‘சத்தம் போடாதே’ வித்தியாசமான படம்.
Labels:
திரை விமர்சனம்
Friday, September 7, 2007
0
'மருதமலை' - விமர்சனம்

தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட நாச்சியார்புரத்தில் 16 ஆண்டாக தேர்தல் நடத்தவிடாமல் தடுக்கிறார் ரவுடி லால். மீறி யாராவது மனு தாக்கல் செய்தால் அவர்களைக் கொல்கிறார். அந்த ஊர் போலீஸ் நிலையத்துக்கு கான்ஸ்டபிளாக வருகிறார் அர்ஜுன்.
இதற்கிடையில் தேர்தலை நடத்தியே தீருவேன் என்று உயர் அதிகாரி ரகுவரன் கூறுகிறார். திட்டமிட்டபடி தேர்தல் நடக்கிறது. அங்கு வரும் வாக்காளர்களை அடித்து நொறுக்குகிறார் லால். அதை அர்ஜுன் தந்தை நாசர் தட்டிக் கேட்கிறார். கோபம் அடைந்த லால், அவரையும் தாக்க, பொங்கி எழும் அர்ஜுன், லாலை நொறுக்கி சிறையில் தள்ளுகிறார்.
தன்னை அவமானப்படுத்தி சிறையில் தள்ளிய, அர்ஜுனை பழிவாங்க லால் போடும் திட்டம் என்னவாகிறது என்பது கிளைமாக்ஸ்.
வெறுமனே பழிவாங்கும் கதை என்ற அரைச்ச மாவை அரைக்காமல், தேர்தலையும் மையப்படுத்தி இருப்பது வலுவாக இருக்கிறது. ராணுவ அதிகாரி, போலீஸ் கமிஷனர் என உயர் அதிகாரி பொறுப்பிலேயே வந்த அர்ஜுன், முதன்முறையாக போலீஸ் கான்ஸ்டபிளாக! வடிவேலுடன் சேர்ந்து காமெடியிலும், லாலை எதிர்த்து ஆக்ஷனிலும் வெளுத்திருக்கிறார்.
பார்த்திபன்-வடிவேலுவின் வெற்றி ஜோடிபோல் அர்ஜுன்-வடிவேலு ஜோடியும் காமெடியில் பின்னி எடுக்கிறது. "உங்கள பாத்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு" என்று வடிவேலுவை அர்ஜுன் வார, "என்னது சிரிப்பு போலீசா? நான் என்கவுண்ட்டர் ஏகாம்பரம்" என்று நெஞ்சை நிமிர்த்தும் வடிவேலு விலா நோக வைக்கிறார்.
தன்னை அடித்து ரவுடிகள் பிரபலம் ஆனதை பெருமை பொங்க கூறும் வடிவேலு, "மகாநதி" சங்கரையும் பிரபல ரவுடியாக்குவதற்காக தன்னை மூக்கின் மீது தாக்க அனுமதிப்பதும், அங்கு வரும் அர்ஜுன் பேச்சுவாக்கில் வடிவேலுவின் மூக்கை உடைப்பதும் வெடித்து கிளப்புகிறது சிரிப்பை. மார்க்கெட்டில் வசூல் வேட்டைக்கு போகும் வடிவேலு பிச்சைக்காரனுடன் போட்டிபோடுவது, கைதியின் அம்மா சென்டிமென்ட்டை நம்பி அவரை கோட்டைவிட்டு அர்ஜுனிடம் வாங்கிக்கட்டிக்கொள்வது, ரெயில் தண்டவாளம் அருகே பிணத்தை காவல் காக்கும்போது வரும் பேயை கண்டு பீதியில் நடுங்குவது என காமெடி ராஜாங்கமே நடத்தி இருக்கிறார்.
முதல்பாதியில் வடிவேலுவுடன் விளையாட்டு பிள்ளையாக ஜோடி போடும் அர்ஜுன், தந்தை நாசரை லால் கொலை செய்தபிறகு அடிபட்ட வேங்கையாகி அழிப்பது வேகம்.
கறார் தேர்தல் அதிகாரி ரகுவரன் உறைக்கு ஏற்ற வாள். லாலின் மிரட்டலுக்கு பணியாமல் சவால்விட்டு தேர்தலை நடத்தும்போது பிரகாசிக்கிறார்.
மூன்று முறை அர்ஜுன் மீது விழுந்து கிஸ் கொடுப்பது, 2 முறை பாட்டுக்கு ஆட்டம்போடுவது தவிர நிலாவுக்கு அதிக வேலை இல்லை. ஒரு பாட்டுக்கு டப்பாங்குத்து குத்துகிறார் முமைத்கான்.
போஸ் வெங்கட், காதல் தண்டபாணி, சண்முகராஜன் உறுமல் வில்லன்கள். திடீரென்று வரும் அர்ஜுன் முறைப்பொண்ணு கிளைக் கதை தேவையற்ற ஆறாவது விரல். சண்டை காட்சிகளில் புதுவேகம் காட்டி இருக்கிறார் அர்ஜுன். டி.இமான் இசை இதம். ஆக்ஷனுக்கும், காமெடிக்கும் பாதி பாதி முக்கியத்துவம் தந்து ரசிகர்களை உட்கார வைக்கிறார் இயக்குனர் சுராஜ்.
தரவு - தினகரன்
Labels:
திரை விமர்சனம்
Saturday, September 1, 2007
0
அம்முவாகிய நான்..........
கதாசிரியார்களின் கதையே பெரும் கதையாக இருக்கும் பல இடங்களில். அதே கதைதான் இங்கும். இரண்டு முறை விருதுகளை நழுவவிட்ட எழுத்தாளர் பார்த்திபன், இந்த முறையாவது அந்த விருதை பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார். முந்தானை நழுவுகிற இடத்திலிருந்து ஒரு கதையை தேர்ந்தெடுத்தால் என்ன என்கிறது மூளை. அதற்காக அவர் போகிற இடம் சிவப்பு விளக்கு பகுதி. அங்கே அம்முவை பார்த்து காதலாகி கசிந்துருக, அம்முவுக்கோ இவர் கஸ்டமரில் ஒருவர்.
டவலை கட்டிக் கொண்டு வரும் அம்முவிடம், போய் டிரஸ் பண்ணிட்டு வா என்கிற பார்த்திபனை வேடிக்கையாக பார்க்கிறார் அம்மு. உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் அவரை இன்னும் வேடிக்கையாக பார்க்கிறார். அம்மு மட்டுமா? படம் பார்க்கிற நாமும்தான். தன் வீட்டு பத்திரத்தையே கொடுத்து பத்திரமாக கூட்டி வருகிறார் அம்முவை. வீட்டுக்கு வருகிற அம்மு, கணவர்... குடும்பம் என்கிற உறவுகளின் அற்புதத்தை உணர்கிறார்.
இதற்குள் அம்முவாகிய நான் என்ற கதையும் வளர்கிறது. தேர்வுக்கமிட்டியில் கையெழுத்து போட்டு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய அந்தஸ்தில் இருக்கிற மகாதேவன், விருதுக்கு விலையாக அம்முவையே கேட்கிறார், அதுவும் பார்த்திபனுக்கு தெரியாமல் அம்முவிடமே.
தனக்கு வேறொரு உலகத்தை காட்டிய கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டிய அம்மு என்ன செய்தாள்? க்ளைமாக்ஸ்...
அம்முவாக நடித்திருக்கிறார் புதுமுகம் பாரதி. டைட்டிலுக்கு வேண்டுமானால் புதுமுகமாக இருக்கலாம். நடிப்பில் டிக்ஷனரியே போடுவார் போல... இன்னொரு தகுதி, இழைத்து வைத்த தேக்குமரம் போல் உடற்கட்டு. அதை வஞ்சகமில்லாமல் பந்தி வைக்கிறார் மெனக்கட்டு. எழுத்தாளனின் மனைவி என்றதும், போலீஸ் அதிகாரியே வணக்கம் வைப்பதை பார்த்து கலங்கும்போதும், உன்னை விட்டா நான் வேறெங்கே போவேன் என்ற பார்த்திபனை கட்டிக் கொண்டு குமுறும்போதும், முதல் படத்தோடு வீட்டுக்கு போகிற நடிகை இவர் இல்லை என்ற நம்பிக்கை வருகிறது.
புதுமைப்பித்தன் என்பதை மற்றொரு முறையும் நிரூபித்திருக்கிறார் பார்த்திபன். இமேஜ் பார்க்கிற ஹீரோக்கள் மத்தியில் விபச்சார விடுதியில் மனைவி தேடும் மகாபுருஷனாக நடிக்க தைரியம் வேண்டும்.
படத்தின் சில காட்சிகள் அள்ளி தெளித்த அழகான பனித்துளிகள். புதுக்கல்யாணம் செய்து கொண்ட தம்பதிகள் பார்த்திபனும், பாரதியும் அவர்களுக்கு அவர்களே மாற்றி மாற்றி ஆரத்தி எடுத்துக் கொள்வது அழகிலும் அழகு. சின்னஞ்சிறுமி என்ன நடக்கிறது என்பதே அறியாமல் என்னை ஏம்மா யாருமே ஆட்டத்தில் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க என்று ஆதங்கப்படுவது பரிதாபம்.
tharavu - tamilcinema.com
டவலை கட்டிக் கொண்டு வரும் அம்முவிடம், போய் டிரஸ் பண்ணிட்டு வா என்கிற பார்த்திபனை வேடிக்கையாக பார்க்கிறார் அம்மு. உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லும் அவரை இன்னும் வேடிக்கையாக பார்க்கிறார். அம்மு மட்டுமா? படம் பார்க்கிற நாமும்தான். தன் வீட்டு பத்திரத்தையே கொடுத்து பத்திரமாக கூட்டி வருகிறார் அம்முவை. வீட்டுக்கு வருகிற அம்மு, கணவர்... குடும்பம் என்கிற உறவுகளின் அற்புதத்தை உணர்கிறார்.
இதற்குள் அம்முவாகிய நான் என்ற கதையும் வளர்கிறது. தேர்வுக்கமிட்டியில் கையெழுத்து போட்டு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய அந்தஸ்தில் இருக்கிற மகாதேவன், விருதுக்கு விலையாக அம்முவையே கேட்கிறார், அதுவும் பார்த்திபனுக்கு தெரியாமல் அம்முவிடமே.
தனக்கு வேறொரு உலகத்தை காட்டிய கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டிய அம்மு என்ன செய்தாள்? க்ளைமாக்ஸ்...
அம்முவாக நடித்திருக்கிறார் புதுமுகம் பாரதி. டைட்டிலுக்கு வேண்டுமானால் புதுமுகமாக இருக்கலாம். நடிப்பில் டிக்ஷனரியே போடுவார் போல... இன்னொரு தகுதி, இழைத்து வைத்த தேக்குமரம் போல் உடற்கட்டு. அதை வஞ்சகமில்லாமல் பந்தி வைக்கிறார் மெனக்கட்டு. எழுத்தாளனின் மனைவி என்றதும், போலீஸ் அதிகாரியே வணக்கம் வைப்பதை பார்த்து கலங்கும்போதும், உன்னை விட்டா நான் வேறெங்கே போவேன் என்ற பார்த்திபனை கட்டிக் கொண்டு குமுறும்போதும், முதல் படத்தோடு வீட்டுக்கு போகிற நடிகை இவர் இல்லை என்ற நம்பிக்கை வருகிறது.
புதுமைப்பித்தன் என்பதை மற்றொரு முறையும் நிரூபித்திருக்கிறார் பார்த்திபன். இமேஜ் பார்க்கிற ஹீரோக்கள் மத்தியில் விபச்சார விடுதியில் மனைவி தேடும் மகாபுருஷனாக நடிக்க தைரியம் வேண்டும்.
படத்தின் சில காட்சிகள் அள்ளி தெளித்த அழகான பனித்துளிகள். புதுக்கல்யாணம் செய்து கொண்ட தம்பதிகள் பார்த்திபனும், பாரதியும் அவர்களுக்கு அவர்களே மாற்றி மாற்றி ஆரத்தி எடுத்துக் கொள்வது அழகிலும் அழகு. சின்னஞ்சிறுமி என்ன நடக்கிறது என்பதே அறியாமல் என்னை ஏம்மா யாருமே ஆட்டத்தில் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க என்று ஆதங்கப்படுவது பரிதாபம்.
tharavu - tamilcinema.com
Labels:
திரை விமர்சனம்
Sunday, August 26, 2007
0
'என் உயிரினும் மேலான..'.- விமர்சனம்
கண்டதும் காதல். காதலர்களுக்குள் மோதல். பிறகு எப்படி சேர்தல்? இதுதான் என் உயிரினும் மேலான...
அறிமுகமான புதிதில் மாதவன் எப்படி இருந்தாரோ அப்படி இருக்கிறார் புதுமுகம் அஜீத் சந்தர். காதல் காட்சிகளில் குறும்பு. கனவுப்பாடல்களில் அரும்பு. காதலால் இளைக்கையில் துரும்பு என்று பல்வேறு பரிமாணங்கள். நம்பிக்கைக்குரிய இந்த புதியவார்ப்பு வரும் படங்களில் இன்னும் அழுத்தமாக முத்திரை பதிக்கலாம். பணக்காரரான இவர் ஊட்டிக்கு போகும்போது ராதிகாமேனனை சந்திக்கிறார். அவரிடம் ஒரு Ôபளார்Õ வாங்குகிறார். பிறகு தன் தவறை எண்ணி தவிக்கும் ராதிகாவை விட்டு விட்டு சென்னைக்கு வந்து அவர் நினைவாகவே இருக்கிறார்.
இதற்கிடையில் சென்னைக்கு மாற்றலாகி வரும் ராதிகாமேனனின் குடும்பம் எதிர் எதிர் வீட்டில் வசிக்க நேர்கிறது. காதல் வளர்க்கிறார்கள். ஆனால், முறைமாமன் ரூபத்தில் வில்லன் வர, என்னாச்சு என்பது மீதி.
பக்கத்து வீட்டு பெண் மாதிரி இருக்கிறார் ராதிகாமேனன். அடிக்கடி மழையில் நனைகிறார். நமக்கு பிடிக்கிறது ஜலதோஷம். இவருடைய அப்பா தொழிலதிபர் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பெரிய போலீஸ் அதிகாரி என்று பிளேட்டை திருப்பி போடுகிறார்கள். அவரும் தப்பியோடும் காதலர்களை பிடிக்க செக்போஸ்ட் சோதனையெல்லாம் செய்கிறார். அதையும் மீறி தப்பியோடும் காதலர்களிடம் ஒரு படபடப்பு வேண்டாமா? ஏதோ தேனிலவுக்கு போவது போல் போகிறார்கள். ராதிகாமேனனின் தம்பியாக நடித்திருக்கும் அந்த அதிக பிரசங்கி பிஞ்சிலே முற்றல் கேஸ்.
திடீர் மாப்பிள்ளையாக 12 வது ரீலில் அறிமுகமாகும் ரஞ்சித், நரிச்சிரிப்பு சிரிக்கிறார். கிளியை வளர்த்து கில்லாடியிடம் கொடுக்கிறார்களே என்ற தவிப்பை ஏற்படுத்துகிறார். நல்லவேளையாக தாய்மார்களின் சாபத்தை வாங்காமல் Ôபல்டிÕ அடித்து கைத்தட்டல்களையும் வாங்கிக் கொள்கிறார்.
இதுவரைக்கும் வடிவேலுவுடன் வந்து வயிற்றை பதம் பார்த்த சிங்கமுத்து இந்த படத்தில் ஸோலோவாக வந்து ட்ரை பண்ணியிருக்கிறார். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இருந்தாலும், சில காட்சிகள் பலே. அதிலும் காதல் ஜோடி ஒன்று இவர் சைக்கிளை இரவல் கேட்டு Ôஎஸ்கேப்Õ ஆவதும் அதற்காக இவர் தர்ம அடி வாங்குவதும் வெடிச்சிரிப்பு.
மற்றொரு காமெடி நடிகராக கருணாஸ். பல காட்சிகள் பாதியிலேயே கட் செய்யப்பட்டது போல் இருக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை கருÔலாஸ்Õ.
இசை தேவா. மினிமம் கியாரண்டிக்காரர் ஆயிற்றே. ஐந்துக்கு மூன்று பழுதில்லை.
வசனங்கள் பாலகுமாரனாம். வயதில் பெரியவரானாலும் எழுத்தில் இளையவர். ஆனால்...?
உயிரினும் மேலானது காதல்தான். உயிரை கொடுத்து மெனக்கெட்டிருந்தால், வெற்றிகரமாக பிரசண்ட் செய்திருக்கலாமோ?
தரவு - தமிழ்சினிமா.காம்
அறிமுகமான புதிதில் மாதவன் எப்படி இருந்தாரோ அப்படி இருக்கிறார் புதுமுகம் அஜீத் சந்தர். காதல் காட்சிகளில் குறும்பு. கனவுப்பாடல்களில் அரும்பு. காதலால் இளைக்கையில் துரும்பு என்று பல்வேறு பரிமாணங்கள். நம்பிக்கைக்குரிய இந்த புதியவார்ப்பு வரும் படங்களில் இன்னும் அழுத்தமாக முத்திரை பதிக்கலாம். பணக்காரரான இவர் ஊட்டிக்கு போகும்போது ராதிகாமேனனை சந்திக்கிறார். அவரிடம் ஒரு Ôபளார்Õ வாங்குகிறார். பிறகு தன் தவறை எண்ணி தவிக்கும் ராதிகாவை விட்டு விட்டு சென்னைக்கு வந்து அவர் நினைவாகவே இருக்கிறார்.
இதற்கிடையில் சென்னைக்கு மாற்றலாகி வரும் ராதிகாமேனனின் குடும்பம் எதிர் எதிர் வீட்டில் வசிக்க நேர்கிறது. காதல் வளர்க்கிறார்கள். ஆனால், முறைமாமன் ரூபத்தில் வில்லன் வர, என்னாச்சு என்பது மீதி.
பக்கத்து வீட்டு பெண் மாதிரி இருக்கிறார் ராதிகாமேனன். அடிக்கடி மழையில் நனைகிறார். நமக்கு பிடிக்கிறது ஜலதோஷம். இவருடைய அப்பா தொழிலதிபர் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பெரிய போலீஸ் அதிகாரி என்று பிளேட்டை திருப்பி போடுகிறார்கள். அவரும் தப்பியோடும் காதலர்களை பிடிக்க செக்போஸ்ட் சோதனையெல்லாம் செய்கிறார். அதையும் மீறி தப்பியோடும் காதலர்களிடம் ஒரு படபடப்பு வேண்டாமா? ஏதோ தேனிலவுக்கு போவது போல் போகிறார்கள். ராதிகாமேனனின் தம்பியாக நடித்திருக்கும் அந்த அதிக பிரசங்கி பிஞ்சிலே முற்றல் கேஸ்.
திடீர் மாப்பிள்ளையாக 12 வது ரீலில் அறிமுகமாகும் ரஞ்சித், நரிச்சிரிப்பு சிரிக்கிறார். கிளியை வளர்த்து கில்லாடியிடம் கொடுக்கிறார்களே என்ற தவிப்பை ஏற்படுத்துகிறார். நல்லவேளையாக தாய்மார்களின் சாபத்தை வாங்காமல் Ôபல்டிÕ அடித்து கைத்தட்டல்களையும் வாங்கிக் கொள்கிறார்.
இதுவரைக்கும் வடிவேலுவுடன் வந்து வயிற்றை பதம் பார்த்த சிங்கமுத்து இந்த படத்தில் ஸோலோவாக வந்து ட்ரை பண்ணியிருக்கிறார். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இருந்தாலும், சில காட்சிகள் பலே. அதிலும் காதல் ஜோடி ஒன்று இவர் சைக்கிளை இரவல் கேட்டு Ôஎஸ்கேப்Õ ஆவதும் அதற்காக இவர் தர்ம அடி வாங்குவதும் வெடிச்சிரிப்பு.
மற்றொரு காமெடி நடிகராக கருணாஸ். பல காட்சிகள் பாதியிலேயே கட் செய்யப்பட்டது போல் இருக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை கருÔலாஸ்Õ.
இசை தேவா. மினிமம் கியாரண்டிக்காரர் ஆயிற்றே. ஐந்துக்கு மூன்று பழுதில்லை.
வசனங்கள் பாலகுமாரனாம். வயதில் பெரியவரானாலும் எழுத்தில் இளையவர். ஆனால்...?
உயிரினும் மேலானது காதல்தான். உயிரை கொடுத்து மெனக்கெட்டிருந்தால், வெற்றிகரமாக பிரசண்ட் செய்திருக்கலாமோ?
தரவு - தமிழ்சினிமா.காம்
Labels:
திரை விமர்சனம்
'ஒரு பொண்ணு ஒரு பையன்' - விமர்சனம்
இளசுகளுக்குள் காதல். யார் முதலில் சொல்வது என்பதில் வீம்பு. இழுக்க இழுக்க எலாஸ்டிக் முறுக்கேறுகிறது. ஒருகட்டத்தில் திரண்டு நிற்கும் மேகங்கள் ஜில்லென்று நீர்தெளிக்க குளிர குளிர க்ளைமாக்ஸ். ஆர்பாட்டமான நட்சத்திரங்கள் இல்லை. அசரவைக்கும் திருப்பங்கள் இல்லை. ஆனாலும், மார்கழி மாதத்து சபாக்கள் மாதிரி மனசை கொள்ளையடித்திருக்கிறார்கள்.
காதல் திருமணம் செய்ததால் வீட்டை முறைத்துக் கொண்ட பானுப்பிரியா-சரத்பாபு தம்பதிகளுக்கு வாலிப வயதில் மகன். பானுப்பிரியாவின் அண்ணன் சரண்ராஜின் மகள் ரூபாவுக்கு தாவணி போடுகிற வயசு. பகையை மறந்து இருபது வருடம் கழித்து சொந்த ஊருக்கு திரும்பும் பானுப்பிரியாவின் மகனுக்கும், சரண்ராஜின் மகளுக்கும் மனசுக்குள் பூ பூக்கிறது. இளசுகளுக்கேயுரிய ஈகோ தலைதூக்க, சேவலும் கோழியுமாக திரிகிறார்கள். ஆனாலும் நாளரு கனவும், பொழுதொரு டூயட்டுமாக கழிகிறது பொழுது. சின்ன பிரிவுக்கு பின் மீண்டும் பார்த்துக் கொள்ளும் இருவரும், அப்போதும் தங்கள் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் முரண்டு பிடிக்க, இடையில் நுழைகிறது இன்னொரு சம்பந்தம். அடித்துப்பிடித்துக் கொண்டு காதலை சொல்ல ஓடினால், போய்யா நீயும் உன் காதலும் என்கிறார் நாயகி. சீட் நுனிக்கு நம்மை இழுத்து வைத்து சுபம் போடுகிறார்கள்.
புதுமுகம் சந்தீப்புக்கு நடிப்பை விட டான்சும், ஃபைட்டும் நன்றாக கைகொடுக்கிறது. ரூபாவை சீண்டுகிற காட்சிகளில் எல்லாம் இளசுகளின் ஏகோபித்த நாயகனாகிவிடுகிறார். காதலியை சைட் அடிக்கிற ரௌடிகளிடமே, போய் ஐ லவ் யூ சொல்லுங்க பிரதர் என்று லைட்டாக எடுத்துக் கொள்ளும் அலட்சியம் பகீர். ரூபாவின் டைரியை வெடுக்கென்று பிடுங்கி படிக்க துடிக்கும் ஆர்வமும், அதை தொடரும் கோப கொந்தளிப்பும் பளிச்சென்ற மத்தாப்பூ தருணங்கள்.
நம்ப வீட்டு மஹாலட்சுமி போலிருக்கிறார் ரூபா. அந்த கண்களும், அதிகம் அலட்டிக்கொள்ளாத உதடுகளும், தனியாக ஸ்கோர் செய்கிற சாம்பியன்கள். முகத்தில் அவ்வப்போது வந்து உட்கார்ந்து கொள்கிற கோபம் கூட அழகின் முத்திரை. இவர் அடக்க ஒடுக்க மஹாலட்சுமி என்றால், அவிழ்த்து போடும் ஜோதிலட்சுமியாக சுபாபுன்ஜா. ஆடை கால், ஆள் முக்காலாக இருக்கிறார். அமெரிக்க ரிட்டன் என்பது கூடுதல் சுதந்திரம்.
சுபாபுன்ஜாவிடம் சந்தீப் நெருக்கம் காட்டும்போதெல்லாம் உள்ளுக்குள் வெடிக்கும் ரூபா, அவர்களை அதிகம் நெருங்க விடாமல் போடும் தந்திரங்கள் சுமார் ரகம்தான்.
அந்த பல் போன பாட்டி பலே கெட்டி. புதுமுகமாம். நம்பதான் முடியவில்லை. சார்லியிடம் என்னை உன் தங்கச்சியா நினைச்சுக்கோ என்று வெடிகுண்டை வீசுகிறாரே, கலீர் சிரிப்பு தியேட்டர் முழுக்க. இவர் திருட்டுத்தனமாக ஸ்வீட்டுகளை விழுங்கிவைக்க, வேறு விஷயத்துக்காக முறையிடும் சார்லியிடம், இரண்டு மாத்திரையை தின்னா சரியா போயிட போவுது என்று சமாளிப்பதெல்லாம் வெடிச்சிரிப்பு.
கார்த்திக்ராஜாவின் இசையில் பின்னணி இசை அற்புதம். சில பாடல்கள் அபாரம். குறிப்பாக, கல்கோனா உதட்டுக்காரி.... நெஞ்சில் வாழ்கிற பாடலே, கொஞ்சம் பாடிட வா இரண்டையும் சொல்லலாம்.
ஆரம்ப ரீல்களிலேயே சென்ட்டிமென்ட்டை திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
இந்த ஒரு பொண்ணு, ஒரு பையன், பல பொண்ணுகள், பல பையன்களின் மனசில் என்னென்னவோ பண்ண போவது மட்டும் நிஜம்.
தரவு - தமிழ்சினிமா.காம்
காதல் திருமணம் செய்ததால் வீட்டை முறைத்துக் கொண்ட பானுப்பிரியா-சரத்பாபு தம்பதிகளுக்கு வாலிப வயதில் மகன். பானுப்பிரியாவின் அண்ணன் சரண்ராஜின் மகள் ரூபாவுக்கு தாவணி போடுகிற வயசு. பகையை மறந்து இருபது வருடம் கழித்து சொந்த ஊருக்கு திரும்பும் பானுப்பிரியாவின் மகனுக்கும், சரண்ராஜின் மகளுக்கும் மனசுக்குள் பூ பூக்கிறது. இளசுகளுக்கேயுரிய ஈகோ தலைதூக்க, சேவலும் கோழியுமாக திரிகிறார்கள். ஆனாலும் நாளரு கனவும், பொழுதொரு டூயட்டுமாக கழிகிறது பொழுது. சின்ன பிரிவுக்கு பின் மீண்டும் பார்த்துக் கொள்ளும் இருவரும், அப்போதும் தங்கள் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் முரண்டு பிடிக்க, இடையில் நுழைகிறது இன்னொரு சம்பந்தம். அடித்துப்பிடித்துக் கொண்டு காதலை சொல்ல ஓடினால், போய்யா நீயும் உன் காதலும் என்கிறார் நாயகி. சீட் நுனிக்கு நம்மை இழுத்து வைத்து சுபம் போடுகிறார்கள்.
புதுமுகம் சந்தீப்புக்கு நடிப்பை விட டான்சும், ஃபைட்டும் நன்றாக கைகொடுக்கிறது. ரூபாவை சீண்டுகிற காட்சிகளில் எல்லாம் இளசுகளின் ஏகோபித்த நாயகனாகிவிடுகிறார். காதலியை சைட் அடிக்கிற ரௌடிகளிடமே, போய் ஐ லவ் யூ சொல்லுங்க பிரதர் என்று லைட்டாக எடுத்துக் கொள்ளும் அலட்சியம் பகீர். ரூபாவின் டைரியை வெடுக்கென்று பிடுங்கி படிக்க துடிக்கும் ஆர்வமும், அதை தொடரும் கோப கொந்தளிப்பும் பளிச்சென்ற மத்தாப்பூ தருணங்கள்.
நம்ப வீட்டு மஹாலட்சுமி போலிருக்கிறார் ரூபா. அந்த கண்களும், அதிகம் அலட்டிக்கொள்ளாத உதடுகளும், தனியாக ஸ்கோர் செய்கிற சாம்பியன்கள். முகத்தில் அவ்வப்போது வந்து உட்கார்ந்து கொள்கிற கோபம் கூட அழகின் முத்திரை. இவர் அடக்க ஒடுக்க மஹாலட்சுமி என்றால், அவிழ்த்து போடும் ஜோதிலட்சுமியாக சுபாபுன்ஜா. ஆடை கால், ஆள் முக்காலாக இருக்கிறார். அமெரிக்க ரிட்டன் என்பது கூடுதல் சுதந்திரம்.
சுபாபுன்ஜாவிடம் சந்தீப் நெருக்கம் காட்டும்போதெல்லாம் உள்ளுக்குள் வெடிக்கும் ரூபா, அவர்களை அதிகம் நெருங்க விடாமல் போடும் தந்திரங்கள் சுமார் ரகம்தான்.
அந்த பல் போன பாட்டி பலே கெட்டி. புதுமுகமாம். நம்பதான் முடியவில்லை. சார்லியிடம் என்னை உன் தங்கச்சியா நினைச்சுக்கோ என்று வெடிகுண்டை வீசுகிறாரே, கலீர் சிரிப்பு தியேட்டர் முழுக்க. இவர் திருட்டுத்தனமாக ஸ்வீட்டுகளை விழுங்கிவைக்க, வேறு விஷயத்துக்காக முறையிடும் சார்லியிடம், இரண்டு மாத்திரையை தின்னா சரியா போயிட போவுது என்று சமாளிப்பதெல்லாம் வெடிச்சிரிப்பு.
கார்த்திக்ராஜாவின் இசையில் பின்னணி இசை அற்புதம். சில பாடல்கள் அபாரம். குறிப்பாக, கல்கோனா உதட்டுக்காரி.... நெஞ்சில் வாழ்கிற பாடலே, கொஞ்சம் பாடிட வா இரண்டையும் சொல்லலாம்.
ஆரம்ப ரீல்களிலேயே சென்ட்டிமென்ட்டை திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
இந்த ஒரு பொண்ணு, ஒரு பையன், பல பொண்ணுகள், பல பையன்களின் மனசில் என்னென்னவோ பண்ண போவது மட்டும் நிஜம்.
தரவு - தமிழ்சினிமா.காம்
Labels:
திரை விமர்சனம்
தொ(ல்)லைபேசி - விமர்சனம்
கழுத்துல டை, கையில பை, வாயில பொய் என்று திரியும் கம்ப்யூட்டர் ஆசாமி விக்ரமாதித்யா சபலிஸ்ட். இதனால் கால் டைவர்ட் ஆகிற மாதிரி வாழ்க்கையில் டைவர்ட் ஆகிறார். ஒரு பெண்ணை ‘அது’க்கென்றே வைத்துக் கொள்கிறார். ஒரு பெண்ணை அப்பாவுக்காக திருமணம் செய்கிறார். ஒரு பெண்ணை காதலிக்கிறார். இத்தனை திகிடுதத்தங்களிலும் மாட்டிக் கொள்ளாமல் அவர் தப்பித்துக் கொள்ள உதவுவது அவரது செல்போன். கடைசியில் உண்மை தெரிய வர, மனைவி விவாகரத்து கேட்கிறார். காதலி குட்பை சொல்கிறார். இன்னொருத்தி வெளிநாட்டுக்குப் பறக்கிறார்.
கடைசியில் மனைவிதான் பெரிதென்று அவரை தேடி ஓடுகிறார். இத்தனைக்கும் காரணமான செல்போனை நெருப்பில் வீசும் அவர், கடைசியில் தான் செய்த தவறுக்கு செல்போனை குற்றம் சொல்லக்கூடாது என்று மீண்டும் செல்போன் வாங்கி அதை முறையாக பயன்படுத்துங்கள் என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.
செகனென்ட் செல் வாங்கி புது கவர் போடுவது மாதிரி வழக்கமான மன்மதலீலை கதையில் செல்போனின் பயன்பாட்டை அதிகமாக காட்டி புதுச்சாயம் பூசியிருக்கிறார்கள். ரகசிய சிநேகிதி அனுப்பும் எஸ்.எம்.எஸ் போன்று செல்போனின் தவறான செயல்பாட்டை சிரிப்பாகவும், சீரியசாகவும் காட்டியிருப்பது சுவாரஸ்யம்.
ராங்கால் பண்ணிவிட்டு தலையில் அடித்துக் கொள்வது போல் விக்ரமாதித்யா தப்பு செய்து விட்டு அசடு வழிகிறார். மெகா சைஸ் கலர் போன் ரேன்ஞ்சுக்கு பிரியங்கா கண்களை உருட்டியே மிரட்டுகிறார். கருணாஸ் காமெடி படத்துக்கு புல் சார்ஜ் பேட்டரி. இரவு நேர ப்ரீகால் மாதிரி காட்சிகள் நீண்டு கொண்டே போவது சிக்னல் வீக்.
பாடல்களும், பின்னணி இசையும் ரிஜக்டான ரிங்டோன்கள், டி.சங்கரின் ஒளிப்பதிவு பளிச். செல்போன் பேசி டிரைவிங் செய்தவர் விபத்துகுள்ளான மாதிரி செல்போனை வைத்து புதுமையாக எதையோ சொல்ல வந்து காதல், கள்ள காதல், திருந்தல் என்ற அதே தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறார் இயக்குனர் கே.பன்னீர் செல்வம்.
தரவு - தமிழ்முரசு
கடைசியில் மனைவிதான் பெரிதென்று அவரை தேடி ஓடுகிறார். இத்தனைக்கும் காரணமான செல்போனை நெருப்பில் வீசும் அவர், கடைசியில் தான் செய்த தவறுக்கு செல்போனை குற்றம் சொல்லக்கூடாது என்று மீண்டும் செல்போன் வாங்கி அதை முறையாக பயன்படுத்துங்கள் என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.
செகனென்ட் செல் வாங்கி புது கவர் போடுவது மாதிரி வழக்கமான மன்மதலீலை கதையில் செல்போனின் பயன்பாட்டை அதிகமாக காட்டி புதுச்சாயம் பூசியிருக்கிறார்கள். ரகசிய சிநேகிதி அனுப்பும் எஸ்.எம்.எஸ் போன்று செல்போனின் தவறான செயல்பாட்டை சிரிப்பாகவும், சீரியசாகவும் காட்டியிருப்பது சுவாரஸ்யம்.
ராங்கால் பண்ணிவிட்டு தலையில் அடித்துக் கொள்வது போல் விக்ரமாதித்யா தப்பு செய்து விட்டு அசடு வழிகிறார். மெகா சைஸ் கலர் போன் ரேன்ஞ்சுக்கு பிரியங்கா கண்களை உருட்டியே மிரட்டுகிறார். கருணாஸ் காமெடி படத்துக்கு புல் சார்ஜ் பேட்டரி. இரவு நேர ப்ரீகால் மாதிரி காட்சிகள் நீண்டு கொண்டே போவது சிக்னல் வீக்.
பாடல்களும், பின்னணி இசையும் ரிஜக்டான ரிங்டோன்கள், டி.சங்கரின் ஒளிப்பதிவு பளிச். செல்போன் பேசி டிரைவிங் செய்தவர் விபத்துகுள்ளான மாதிரி செல்போனை வைத்து புதுமையாக எதையோ சொல்ல வந்து காதல், கள்ள காதல், திருந்தல் என்ற அதே தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறார் இயக்குனர் கே.பன்னீர் செல்வம்.
தரவு - தமிழ்முரசு
Labels:
திரை விமர்சனம்
Friday, August 17, 2007
0
'ஆர்யா'-விமர்சனம்
பூரணம் விஸ்வநாதன், அரிவாளை சுழற்றி ஆக்ஷன் ஹீரோவானால் எப்படியிருக்கும்? பாவனாவுக்கு அப்படியரு கேரக்டர். அந்த அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாத நமக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை தருகிறது ஆரியா. சிட்டியை கலக்கும் தாதாவான பிரகாஷ்ராஜின் செல்ல தங்கச்சி பாவனா. கல்லூரியில் சீட் கேட்டால் கல்லூரியையே வாங்கி தருகிற அளவுக்கு பாசம். ஆனால், பாவனா லவ் பண்ணும் மாதவனை வாங்கி தர அவர் எடுக்கிற முயற்சிகளும், அதை எப்படி எதிர்கொள்கிறார் மாதவன் என்பதும்தான் படம்.
டாக்டருக்கு படிக்கும் பாவனா ஒவ்வொரு நாளும் கல்லூரிக்கு வருவார். ஆனால் படிக்க அல்ல. அங்கிருக்கும் ஆசிரியர்களை அழ வைப்பதற்கும், நோ பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தி கலாட்டா செய்வதற்கும்தான். ஆனால், வெளியூரில் இருந்து மேற்படி கல்லூரிக்கு படிக்க வரும் மாதவன், இந்த நவீன நீலாம்பரியின் அட்டகாசத்திற்கு அடங்காமல் அவரை பரிதவிக்க விடுகிறார். தன் அண்ணனிடம் சொல்லி எப்படி எப்படியெல்லாமோ மாதவனை மடக்க நினைக்கிற பாவனாவுக்கு கடைசியில் கிடைப்பது தோல்விதான். ரவுடி வீட்டில் பெண்ணெடுப்பதா என்று ஒதுங்கி போகும் அவரையே ரவுடியாக்கிவிட்டால் என்ன என்று அண்ணன் பிரகாஷ்ராஜுக்கு யோசனை தருகிறார் பாவனா. மாதவனை சீண்டுகிறார்கள் முடி வளர்த்த புண்ணியவான்கள். (தமிழ்சினிமா ஸ்டண்ட் மேன்கள்தான்) இவர்கள் உபயத்தில் இரண்டு மூன்று சண்டைக்காட்சிகள் அரங்கேறுகிறதே தவிர, மாதவனின் மனசில் மாற்றம் மட்டும் ம்ஹ§ம்...
கடைசியில் எப்படி பாவனா-மாதவன் ஒன்றிணைந்தார்கள் என்பதோடு சுபம். பாவனாவின் அழகான பூ முகத்திற்கு பொருந்தாத கேரக்டர். எப்படியாவது சரி பண்ணிவிடலாம் என்று மூக்குத்தியெல்லாம் போட்டு சமன் செய்திருக்கிறார்கள். ஆனால், ஒரு டயலாக்கில் நான் அப்பா அம்மாவோடு இருந்திருந்தா இப்படி இருந்திருக்க மாட்டேன். என்னை தூக்கி வளர்த்தது ஒரு ரவுடி. என்னை ஸ்கூலுக்கு அழைச்சுட்டு போனது ஒரு ரவுடி, என்னை சுற்றி ரவுடிகள் மட்டுமே இருக்கும்போது நான் மட்டும் எப்படி நல்லவளா இருக்க முடியும்? என்ற அவர் கேட்கிறபோது, சரிதானே என்றுதான் தோன்றுகிறது.
பாவனாவின் வில்லத்தனங்களில் ஒன்றை மட்டும் ரசிக்க முடிகிறது. மாதவனின் தங்கச்சியை கடத்திக் கொண்டு போய் காலையில் இருந்து இரவு வரை அவருக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தே அழ வைப்பது....
மாப்பிளை ரவுடியாகிவிட்டார் என்று நினைத்து சந்தோஷப்படும் பிரகாஷ்ராஜ், எல்லாம் காட்சிகளிலும் அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டு போகிறார். என்னதான் ரவுடி என்றாலும், போலீஸ் கமிஷனரை போல ஜெயிலுக்கு போய் பூட்டை திறந்து ரவுடிகளை விடுவிப்பதெல்லாம் அநியாயம் சாமி.
முதல் படத்தில் பார்த்த மாதிரியே இன்னமும் ரகசிய சினேகிதனாகவே இருக்கிறார் மாதவன். குட்மார்னிங் சொல்ல சொன்ன பாவனாவுக்கு, அதிகாலை ஐந்து மணிக்கே அவர் வீட்டுக்கு போய் முகத்தில் பக்கெட் நிறைய தண்ணீரை கொட்டி குட்மார்னிங் சொல்லி கொட்டத்தை அடக்குகிறாரே, சுவாரஸ்யம். எந்த நேரம் கத்தியை எடுப்பாரோ என்று பதைபதைக்க விட்டிருக்கிறார்.
லைசென்ஸ் இல்லாத எம்.எஸ்.ஓக்களாக மாறி, நடக்கிற அத்தனையையும் ரகசியமாகவும், நேரடியாகவும், டி.வி யில் ஒளிபரப்பி உண்மையை ஊருக்கு சொல்லும் நூறாவது க்ளைமாக்ஸ். ஆனாலும் பொன்னம்பலத்தின் மீசை சென்ட்டிமென்ட்டை உள்ளே புகுத்தியது கம்பீரம்.
மாதவனின் தம்பி என்று சொல்லிக் கொண்டு இடைநுழைகிற கேரக்டர், ஒரு சுவாரஸ்யத்திற்கும் உதவவில்லை.
ஏரியா கவுன்சிலர்களின் ஏரியாவையே கலங்கடித்திருக்கிறார் வடிவேலு. அடிமேல் அடிவாங்குகிற வேடம்தான் இந்த படத்திலும். ஆனாலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கிற மாதிரியாகவா நடிக்கிறார். அடேயப்பா...!
மணிசர்மா இசையில் சில்லென்ற தீயே... இனிப்பு.
ஆர்யா, ஜோர்யா..!
விமர்சனம்
தரவு-தமிழ்சினிமா.காம்
டாக்டருக்கு படிக்கும் பாவனா ஒவ்வொரு நாளும் கல்லூரிக்கு வருவார். ஆனால் படிக்க அல்ல. அங்கிருக்கும் ஆசிரியர்களை அழ வைப்பதற்கும், நோ பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தி கலாட்டா செய்வதற்கும்தான். ஆனால், வெளியூரில் இருந்து மேற்படி கல்லூரிக்கு படிக்க வரும் மாதவன், இந்த நவீன நீலாம்பரியின் அட்டகாசத்திற்கு அடங்காமல் அவரை பரிதவிக்க விடுகிறார். தன் அண்ணனிடம் சொல்லி எப்படி எப்படியெல்லாமோ மாதவனை மடக்க நினைக்கிற பாவனாவுக்கு கடைசியில் கிடைப்பது தோல்விதான். ரவுடி வீட்டில் பெண்ணெடுப்பதா என்று ஒதுங்கி போகும் அவரையே ரவுடியாக்கிவிட்டால் என்ன என்று அண்ணன் பிரகாஷ்ராஜுக்கு யோசனை தருகிறார் பாவனா. மாதவனை சீண்டுகிறார்கள் முடி வளர்த்த புண்ணியவான்கள். (தமிழ்சினிமா ஸ்டண்ட் மேன்கள்தான்) இவர்கள் உபயத்தில் இரண்டு மூன்று சண்டைக்காட்சிகள் அரங்கேறுகிறதே தவிர, மாதவனின் மனசில் மாற்றம் மட்டும் ம்ஹ§ம்...
கடைசியில் எப்படி பாவனா-மாதவன் ஒன்றிணைந்தார்கள் என்பதோடு சுபம். பாவனாவின் அழகான பூ முகத்திற்கு பொருந்தாத கேரக்டர். எப்படியாவது சரி பண்ணிவிடலாம் என்று மூக்குத்தியெல்லாம் போட்டு சமன் செய்திருக்கிறார்கள். ஆனால், ஒரு டயலாக்கில் நான் அப்பா அம்மாவோடு இருந்திருந்தா இப்படி இருந்திருக்க மாட்டேன். என்னை தூக்கி வளர்த்தது ஒரு ரவுடி. என்னை ஸ்கூலுக்கு அழைச்சுட்டு போனது ஒரு ரவுடி, என்னை சுற்றி ரவுடிகள் மட்டுமே இருக்கும்போது நான் மட்டும் எப்படி நல்லவளா இருக்க முடியும்? என்ற அவர் கேட்கிறபோது, சரிதானே என்றுதான் தோன்றுகிறது.
பாவனாவின் வில்லத்தனங்களில் ஒன்றை மட்டும் ரசிக்க முடிகிறது. மாதவனின் தங்கச்சியை கடத்திக் கொண்டு போய் காலையில் இருந்து இரவு வரை அவருக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தே அழ வைப்பது....
மாப்பிளை ரவுடியாகிவிட்டார் என்று நினைத்து சந்தோஷப்படும் பிரகாஷ்ராஜ், எல்லாம் காட்சிகளிலும் அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டு போகிறார். என்னதான் ரவுடி என்றாலும், போலீஸ் கமிஷனரை போல ஜெயிலுக்கு போய் பூட்டை திறந்து ரவுடிகளை விடுவிப்பதெல்லாம் அநியாயம் சாமி.
முதல் படத்தில் பார்த்த மாதிரியே இன்னமும் ரகசிய சினேகிதனாகவே இருக்கிறார் மாதவன். குட்மார்னிங் சொல்ல சொன்ன பாவனாவுக்கு, அதிகாலை ஐந்து மணிக்கே அவர் வீட்டுக்கு போய் முகத்தில் பக்கெட் நிறைய தண்ணீரை கொட்டி குட்மார்னிங் சொல்லி கொட்டத்தை அடக்குகிறாரே, சுவாரஸ்யம். எந்த நேரம் கத்தியை எடுப்பாரோ என்று பதைபதைக்க விட்டிருக்கிறார்.
லைசென்ஸ் இல்லாத எம்.எஸ்.ஓக்களாக மாறி, நடக்கிற அத்தனையையும் ரகசியமாகவும், நேரடியாகவும், டி.வி யில் ஒளிபரப்பி உண்மையை ஊருக்கு சொல்லும் நூறாவது க்ளைமாக்ஸ். ஆனாலும் பொன்னம்பலத்தின் மீசை சென்ட்டிமென்ட்டை உள்ளே புகுத்தியது கம்பீரம்.
மாதவனின் தம்பி என்று சொல்லிக் கொண்டு இடைநுழைகிற கேரக்டர், ஒரு சுவாரஸ்யத்திற்கும் உதவவில்லை.
ஏரியா கவுன்சிலர்களின் ஏரியாவையே கலங்கடித்திருக்கிறார் வடிவேலு. அடிமேல் அடிவாங்குகிற வேடம்தான் இந்த படத்திலும். ஆனாலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கிற மாதிரியாகவா நடிக்கிறார். அடேயப்பா...!
மணிசர்மா இசையில் சில்லென்ற தீயே... இனிப்பு.
ஆர்யா, ஜோர்யா..!
விமர்சனம்
தரவு-தமிழ்சினிமா.காம்
Labels:
திரை விமர்சனம்
Friday, August 10, 2007
2
"பள்ளிக்கூடம்" - விமர்சனம்
சிலேட்டு பருவத்து கதையை சொல்லி மனசில் 'பச்சை' குத்தியிருக்கிறார் தங்கர் பச்சான். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் வெறும் கட்டிடங்கள் அல்ல. கலெக்டர்களையும், கலைஞர்களையும், கனவான்களையும் பதியம் போடும் தோட்டங்கள் என்கிறது படம். தங்கரின் இந்த சமூக பணிக்கு வந்தனம். அதே நேரத்தில் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் எல்லை மீறியிருப்பதற்கு கண்டனம்.
பல தலைமுறைகளாக படிப்பு தந்த பள்ளிக்கூடத்தை காலி செய்ய சொல்கிறார்கள் நில உரிமையாளர்கள். அதே பள்ளியில் படித்த பழைய மாணவர்களையும் திரட்டி பள்ளியை மீட்பதென்று முடிவு செய்கிறது நிர்வாகம். பள்ளிக்கூடத்தை காப்பாற்ற பழைய மாணவர் தங்கர்பச்சான், காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் மற்றொரு பழைய மாணவரான நரேனை பார்க்க போகிறார். இதே பள்ளியில் காதல் வளர்த்த நரேனின் இதயத்தை, அதே காதல் உடைத்து கண்ணாடி சில்லுகளாக பெயர்த்து வைத்திருக்க, அந்த கிராமத்து பக்கமே வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் நரேன். இவரின் பழைய காதலியும், அந்த பள்ளிக்கூடத்தின் இப்போதைய டீச்சருமான சினேகாவை மறுபடியும் அவர் சந்தித்தாரா? காதல் செடி மீண்டும் துளிர்விட்டதா? பள்ளிக்கூடம் மீட்கப்பட்டதா? அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடை சொல்கிறது கண்ணீர் சிந்த வைக்கும் அந்த க்ளைமாக்ஸ்.
இயக்கியிருப்பதோடு ஒரு கேரக்டரில் நடித்தும் இருக்கிறார் தங்கர். காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் சின்ன வயது தோழனை பார்க்க பை நிறைய பதார்த்தங்களோடு வரும் அவர், அதிகாரிகளால் தடுக்கப்படுவதும், வந்திருப்பது பால்ய நண்பன் என்று தெரிந்து கலெக்டரே தேடி ஓடி வருவதும், சிலிர்க்க வைக்கிறது. இது சினிமாதான் என்று புத்தி சொன்னாலும், அந்த செலுலாய்டு நண்பனுக்கு மரியாதை தெரிவிக்கிறது மனசு. நரேனின் பழைய சட்டையெல்லாம் எடுத்து பைக்குள் செருகிக் கொண்டு, "வெற்றி, இது போதுண்டா... தினம் ஒரு சட்டையா போட்டு ஊருக்காரனுகளை அசத்திபுட மாட்டேன்" என்று வெள்ளந்தியாக பெருமைப்படும் தங்கரை ரசிப்பதா? படிக்காத நண்பனின் நட்புக்கு முன்னே பணமும், பதவியும் பெரிய விஷயமல்ல என்று உருகும் நரேனை ரசிப்பதா? அற்புதம்!
திரைப்பட இயக்குனராகவே நடித்திருக்கிறார் சீமான். எம்.ஜி.ஆரின் புகழுக்கு இழுக்கு உண்டாக்கவே எடுக்கப்பட்ட பாடல் ஒன்றை இவர் இயக்குவது போல் காட்சி. பழி-தங்கருக்கு, பாவம்-சீமானுக்கு! (கானா உலகநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆருக்கு ஜெராக்ஸா? கடவுளே)
அந்த பள்ளியிலேயே படித்து, அந்த பள்ளிக்கே டீச்சராகி, அந்த பள்ளியையும் மீட்க போராடும் சினேகாவின் காதல் கதையில் யதார்த்தம் நிறைய. அந்த பள்ளிக்கூடம் மாதிரியே நிலைகுலைந்து போயிருக்கிறது சினேகாவின் அழகு. கிராமத்து ஏழை டீச்சர்களின் அச்சு அசலான பிம்பம். பழைய காதலனான நரேனை நேருக்கு நேர் பார்க்க கூட திராணியில்லாமல் ஓடி ஒளிந்து, அழுது மருகுவது, அதிர வைக்கிறது. கோகிலா டீச்சர் இல்லாத இந்த பள்ளிக்கூடத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை.
நன்றாக போய் கொண்டிருக்கும் கதையில் ஸ்ரேயாவின் கேரக்டரை உள்ளே நுழைத்ததெல்லாம் ஓ.கே. பிஞ்சு குழந்தைகளை பிஞ்சிலே பழுத்தவர்கள் போல் காண்பிப்பதுதான் கொடுமை. எல்லா மாணவர்களுக்கும் டீச்சரின் மேல் ஈர்ப்பு வரும். அதை வேறு மாதிரி காட்டி, கஸ்தூரிராஜாவாக மாறியிருக்க வேண்டுமா தங்கர்?
அறுபது வயது முதியவர், தான் படிக்கிற காலத்தில் கண்டெடுத்த கொலுசை பற்றியும் அதை தவற விட்ட பெண்ணை நேசித்த கதையையும் சொல்ல, அந்த பெண் நான்தான் என்று மேடைக்கு வரும் அந்த நடுத்தர வயது பெண்மணியும், அதை தொடரும் காட்சிகளும் ரசனைக்குரியது. இதே போல் மனதில் நிற்கக்கூடிய இன்னொரு பாத்திரம் மீனாள். (தங்கர்பச்சானின் மனைவி)
ஒரு சிதிலமடைந்த பள்ளிக்கூடத்தை பார்த்தவுடனேயே பரிதாபத்தை ஏற்படுத்த வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ஜே.கே. பரத்வாஜின் இசையில் இதுவரை இல்லாத பரிமாணம். அப்படியே கரைந்து போக வைக்கும் பின்னணி இசை ஒருபக்கம் என்றால், 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' என்று அவரே குரலெடுத்து பாடும்போது கண்ணீர் முட்டுகிறது நமக்கு. 'காடு பதுங்குறமோ...' என்ற பாடலில் ஜீவனை குழைத்திருக்கிறார் பாடலாசிரியர் விவேகா.
காலத்தின் பேரிரைச்சல் தாங்க முடியாமல் திசைக்கொருவராக தெறித்து, செவிடாகி போனவர்களை தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது இந்த பள்ளிக்கூடம். ஒரு முறையாவது அவரவர் பெஞ்சில் திரும்பவும் அமர வேண்டும் என்று நினைக்க வைத்த தங்கரின் பெயரில், ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம்.
பல தலைமுறைகளாக படிப்பு தந்த பள்ளிக்கூடத்தை காலி செய்ய சொல்கிறார்கள் நில உரிமையாளர்கள். அதே பள்ளியில் படித்த பழைய மாணவர்களையும் திரட்டி பள்ளியை மீட்பதென்று முடிவு செய்கிறது நிர்வாகம். பள்ளிக்கூடத்தை காப்பாற்ற பழைய மாணவர் தங்கர்பச்சான், காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் மற்றொரு பழைய மாணவரான நரேனை பார்க்க போகிறார். இதே பள்ளியில் காதல் வளர்த்த நரேனின் இதயத்தை, அதே காதல் உடைத்து கண்ணாடி சில்லுகளாக பெயர்த்து வைத்திருக்க, அந்த கிராமத்து பக்கமே வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் நரேன். இவரின் பழைய காதலியும், அந்த பள்ளிக்கூடத்தின் இப்போதைய டீச்சருமான சினேகாவை மறுபடியும் அவர் சந்தித்தாரா? காதல் செடி மீண்டும் துளிர்விட்டதா? பள்ளிக்கூடம் மீட்கப்பட்டதா? அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடை சொல்கிறது கண்ணீர் சிந்த வைக்கும் அந்த க்ளைமாக்ஸ்.
இயக்கியிருப்பதோடு ஒரு கேரக்டரில் நடித்தும் இருக்கிறார் தங்கர். காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் சின்ன வயது தோழனை பார்க்க பை நிறைய பதார்த்தங்களோடு வரும் அவர், அதிகாரிகளால் தடுக்கப்படுவதும், வந்திருப்பது பால்ய நண்பன் என்று தெரிந்து கலெக்டரே தேடி ஓடி வருவதும், சிலிர்க்க வைக்கிறது. இது சினிமாதான் என்று புத்தி சொன்னாலும், அந்த செலுலாய்டு நண்பனுக்கு மரியாதை தெரிவிக்கிறது மனசு. நரேனின் பழைய சட்டையெல்லாம் எடுத்து பைக்குள் செருகிக் கொண்டு, "வெற்றி, இது போதுண்டா... தினம் ஒரு சட்டையா போட்டு ஊருக்காரனுகளை அசத்திபுட மாட்டேன்" என்று வெள்ளந்தியாக பெருமைப்படும் தங்கரை ரசிப்பதா? படிக்காத நண்பனின் நட்புக்கு முன்னே பணமும், பதவியும் பெரிய விஷயமல்ல என்று உருகும் நரேனை ரசிப்பதா? அற்புதம்!
திரைப்பட இயக்குனராகவே நடித்திருக்கிறார் சீமான். எம்.ஜி.ஆரின் புகழுக்கு இழுக்கு உண்டாக்கவே எடுக்கப்பட்ட பாடல் ஒன்றை இவர் இயக்குவது போல் காட்சி. பழி-தங்கருக்கு, பாவம்-சீமானுக்கு! (கானா உலகநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆருக்கு ஜெராக்ஸா? கடவுளே)
அந்த பள்ளியிலேயே படித்து, அந்த பள்ளிக்கே டீச்சராகி, அந்த பள்ளியையும் மீட்க போராடும் சினேகாவின் காதல் கதையில் யதார்த்தம் நிறைய. அந்த பள்ளிக்கூடம் மாதிரியே நிலைகுலைந்து போயிருக்கிறது சினேகாவின் அழகு. கிராமத்து ஏழை டீச்சர்களின் அச்சு அசலான பிம்பம். பழைய காதலனான நரேனை நேருக்கு நேர் பார்க்க கூட திராணியில்லாமல் ஓடி ஒளிந்து, அழுது மருகுவது, அதிர வைக்கிறது. கோகிலா டீச்சர் இல்லாத இந்த பள்ளிக்கூடத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை.
நன்றாக போய் கொண்டிருக்கும் கதையில் ஸ்ரேயாவின் கேரக்டரை உள்ளே நுழைத்ததெல்லாம் ஓ.கே. பிஞ்சு குழந்தைகளை பிஞ்சிலே பழுத்தவர்கள் போல் காண்பிப்பதுதான் கொடுமை. எல்லா மாணவர்களுக்கும் டீச்சரின் மேல் ஈர்ப்பு வரும். அதை வேறு மாதிரி காட்டி, கஸ்தூரிராஜாவாக மாறியிருக்க வேண்டுமா தங்கர்?
அறுபது வயது முதியவர், தான் படிக்கிற காலத்தில் கண்டெடுத்த கொலுசை பற்றியும் அதை தவற விட்ட பெண்ணை நேசித்த கதையையும் சொல்ல, அந்த பெண் நான்தான் என்று மேடைக்கு வரும் அந்த நடுத்தர வயது பெண்மணியும், அதை தொடரும் காட்சிகளும் ரசனைக்குரியது. இதே போல் மனதில் நிற்கக்கூடிய இன்னொரு பாத்திரம் மீனாள். (தங்கர்பச்சானின் மனைவி)
ஒரு சிதிலமடைந்த பள்ளிக்கூடத்தை பார்த்தவுடனேயே பரிதாபத்தை ஏற்படுத்த வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ஜே.கே. பரத்வாஜின் இசையில் இதுவரை இல்லாத பரிமாணம். அப்படியே கரைந்து போக வைக்கும் பின்னணி இசை ஒருபக்கம் என்றால், 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' என்று அவரே குரலெடுத்து பாடும்போது கண்ணீர் முட்டுகிறது நமக்கு. 'காடு பதுங்குறமோ...' என்ற பாடலில் ஜீவனை குழைத்திருக்கிறார் பாடலாசிரியர் விவேகா.
காலத்தின் பேரிரைச்சல் தாங்க முடியாமல் திசைக்கொருவராக தெறித்து, செவிடாகி போனவர்களை தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது இந்த பள்ளிக்கூடம். ஒரு முறையாவது அவரவர் பெஞ்சில் திரும்பவும் அமர வேண்டும் என்று நினைக்க வைத்த தங்கரின் பெயரில், ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம்.
Labels:
திரை விமர்சனம்
Tuesday, August 7, 2007
0
'தொட்டால் பூ மலரும்' - விமர்சனம்
ஊரார் பிள்ளையையெல்லாம் ஊட்டி வளர்த்த பி.வாசு தன் பிள்ளைக்கு தானே கலக்கிய பூஸ்ட். ஆரம்பகால கார்த்திக்கை நினைவூட்டும் கேரக்டர். அதை அசால்ட்டாக கையாண்டு கோலிவுட் ரயிலில் முதல் வகுப்பு மரியாதையோடு பயணத்தை துவங்கியிருக்கிறார் புதுமுகம் ஷக்தி.
கல்லூரி காதலில் சவால்கள் சகஜம். பணக்கார காதலியை பதட்டமில்லாமல் லவ் பண்ணும் ஷக்தி, அவளின் பெயரை தெரிந்து கொள்வதிலிருந்து, போன் நம்பரை தெரிந்து கொள்வது வரை சுற்றி சுற்றி வருகிறார். சுவாரஸ்யத்தை தருகிறார்.
காதலுக்கு அப்ளிகேஷன் போடும் ஷக்தியின் யுக்தி இளசுகளுக்கு புது ஃபார்முலா. அடையாறு, டி.நகர் என்று புதிர் போடும் காதலியின் போன் நம்பரை தெரிந்து கொள்வதிலும், காதலியை தியேட்டருக்கு வரச்சொல்ல, பீச்சுக்கு வரச்சொல்ல, ரகசிய பாஷைகளை பயன்படுத்துவதிலும் டாக்டரேட் வாங்குகிற அளவுக்கு தேறியிருக்கிறார்.
அம்மா சுகன்யாவின் அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சமாட்டார் ஹீரோ என்பது தெரிகிறது. அடுத்தது என்ன என்று நகம் கடிக்கிற நேரத்தில் பொசுக்கென்று உள்ளே வருகிறார் ராஜ்கிரண். மும்பையின் தாதா வரதராஜ வாண்டையாராம். கொடுக்கிற பில்டப்புகள் புலி என்பதாக இருக்கிறது. ஆனால் ஷக்தியின் அப்பாவித் தனத்தை அப்படியே நம்பி வீட்டுக்குள் சேர்க்கிறாராம். (அட போங்க சார்) போங்கு ஆட்டம் என்றாலும் ரசிக்கவே முடிகிறது அதையும்.
அத்தனை பேர் முன்னிலையிலேயும் கட்டிப்பிடிக்கிறேன் என்று சவால்விட்டு கட்டிப்பிடிப்பதும், வெளியே இவரை தேடிக் கொண்டிருக்க காருக்குள் பதட்டமில்லாமல் ஹீரோயினை லவ்வடிப்பதும் சற்று ஆட்டிதான் வைக்கிறது மனசை.
புதுமுகம் கௌரி முன்ஜால், அழகு நிரம்பிய அட்சய பாத்திரம்.
மும்பையின் முரட்டு தாதாவாக ராஜ்கிரண் போடும் சண்டைக்காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. அதற்காக வேலு நாயக்கரின் போலி நாயக்கராக இருப்பதுதான் உறுத்தல். (இன்னமும் நாயகனை யாரும் மறக்கலைங்க)
மும்பை தாதா என்று உதார்விடும் வடிவேலு, அங்கங்கே சிக்கி பஞ்சர் ஆகிற காட்சிகள் வயிற்றை பதம் பார்க்கிறது. இதே ஸ்டைலை பல படங்களில் அவர் பயன்படுத்தினாலும் அலுக்க வேண்டுமே, ம்ஹ¨ம்.
யுவன்சங்கர்ராஜாவின் இசையில் "வளையல் கரங்களை" பாடல் வசீகரம்.
பூவாய் மலர்ந்திருக்கிறார் ஷக்தி. போக போகத்தான் புரியும் பூவின் வாசம்.
தரவு- தமிழ்சினிமா
கல்லூரி காதலில் சவால்கள் சகஜம். பணக்கார காதலியை பதட்டமில்லாமல் லவ் பண்ணும் ஷக்தி, அவளின் பெயரை தெரிந்து கொள்வதிலிருந்து, போன் நம்பரை தெரிந்து கொள்வது வரை சுற்றி சுற்றி வருகிறார். சுவாரஸ்யத்தை தருகிறார்.
காதலுக்கு அப்ளிகேஷன் போடும் ஷக்தியின் யுக்தி இளசுகளுக்கு புது ஃபார்முலா. அடையாறு, டி.நகர் என்று புதிர் போடும் காதலியின் போன் நம்பரை தெரிந்து கொள்வதிலும், காதலியை தியேட்டருக்கு வரச்சொல்ல, பீச்சுக்கு வரச்சொல்ல, ரகசிய பாஷைகளை பயன்படுத்துவதிலும் டாக்டரேட் வாங்குகிற அளவுக்கு தேறியிருக்கிறார்.
அம்மா சுகன்யாவின் அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சமாட்டார் ஹீரோ என்பது தெரிகிறது. அடுத்தது என்ன என்று நகம் கடிக்கிற நேரத்தில் பொசுக்கென்று உள்ளே வருகிறார் ராஜ்கிரண். மும்பையின் தாதா வரதராஜ வாண்டையாராம். கொடுக்கிற பில்டப்புகள் புலி என்பதாக இருக்கிறது. ஆனால் ஷக்தியின் அப்பாவித் தனத்தை அப்படியே நம்பி வீட்டுக்குள் சேர்க்கிறாராம். (அட போங்க சார்) போங்கு ஆட்டம் என்றாலும் ரசிக்கவே முடிகிறது அதையும்.
அத்தனை பேர் முன்னிலையிலேயும் கட்டிப்பிடிக்கிறேன் என்று சவால்விட்டு கட்டிப்பிடிப்பதும், வெளியே இவரை தேடிக் கொண்டிருக்க காருக்குள் பதட்டமில்லாமல் ஹீரோயினை லவ்வடிப்பதும் சற்று ஆட்டிதான் வைக்கிறது மனசை.
புதுமுகம் கௌரி முன்ஜால், அழகு நிரம்பிய அட்சய பாத்திரம்.
மும்பையின் முரட்டு தாதாவாக ராஜ்கிரண் போடும் சண்டைக்காட்சிகளில் ரத்தம் தெறிக்கிறது. அதற்காக வேலு நாயக்கரின் போலி நாயக்கராக இருப்பதுதான் உறுத்தல். (இன்னமும் நாயகனை யாரும் மறக்கலைங்க)
மும்பை தாதா என்று உதார்விடும் வடிவேலு, அங்கங்கே சிக்கி பஞ்சர் ஆகிற காட்சிகள் வயிற்றை பதம் பார்க்கிறது. இதே ஸ்டைலை பல படங்களில் அவர் பயன்படுத்தினாலும் அலுக்க வேண்டுமே, ம்ஹ¨ம்.
யுவன்சங்கர்ராஜாவின் இசையில் "வளையல் கரங்களை" பாடல் வசீகரம்.
பூவாய் மலர்ந்திருக்கிறார் ஷக்தி. போக போகத்தான் புரியும் பூவின் வாசம்.
தரவு- தமிழ்சினிமா
Labels:
திரை விமர்சனம்
