சென்னை அருகே ரயில்கள் மோதல் : தீவிரவாதிகள் சதியா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் வியாசர்பாடி- ஜீவா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் பெட்டிகள் தீப்பிடித்துக் கொண்டது. இதில் 3 பெட்டிகள் தீக்கிரையாயின.

டேங்கர் ரயில் காலியாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ரயில்வே பொதுமேலாளர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், பயணிகள் ரயிலை ஓட்டிச் சென்றவர் ரயில்வே ஊழியர் அல்ல என்றார். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற நிலையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் பயணிகள் ரயில் காலை 05.15 மணிக்கு புறப்படவேண்டிய ரயில் வழக்கத்திற்கு மாறாக அதிகாலை 04.50 புறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை 6 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விபத்து குறித்து உடனடி தகவல்களைப் பெற உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். அதற்கான தொலைபேசி இலக்கங்களை அவர் வெளியிட்டுள்ளார். அவையாவன : 044-25357386, 044--25357398.

via- Dinamalar

'Combat operations reach conclusion, priority to rescue hostages' - SL Government

Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.

More information will follow.

இலங்கையில் போர் நிறுத்தம் - கலக்கிய கலைஞர்

க்லைஞரின் காலவரையற்ற உண்ணாநிலையின் எதிரொலியாக இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இலங்கை ராணுவம் வலுதாக்குதல்களை நிறுத்திக் கொண்டு புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுமென தெரிகிறது.

Find some other place for Eelam: Lanka to Jaya

Sri Lanka on Sunday took strong objection to AIADMK chief J Jayalalithaa's remarks that Tamil Eelam was the only solution for the ethnic conflict, saying she should "find some other place to give Eelam" but not on the island.

"I don't know what these people are talking about. I think she must find some other place to give Eelam but not in Sri Lanka," said Defence Secretary Gotabhaya Rajapaksa.

He also took objection to Jayalalithaa's allegation that the video footage provided by spiritual guru Sri Sri Ravishankar, who recently visited the IDP centre in Wavuniya in eastern Sri Lanka, showed that the Tamils were being treated badly by the government.

The AIADMK chief made these comments at a public meeting in Tamil Nadu on Saturday.

"When Ravishankar met President (Mahinda Rajapaksa) after visiting the IDP camps he said it was one of the best camps he has ever seen in the world," the powerful official, who is the brother of the President, said.

Rajapaksa said he could understand the concern for the fate of civilians expressed by the international community and else where.


via- NDTV

குடியுரிமையை ரத்து செய்து வைகோவை நாடு கடத்த வேண்டும் - நடிகர் கார்த்திக் ஆவேசம்

வைகோவின் குடியுரிமை ரத்து செய்து அவரை நாடு கடத்த வேண்டும் என தேனியில் நடந்த கூட்டத்தில் நடிகர் கார்த்திக் பேசினார்.

தேனியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் பேசியதாவது:

தேனி தொகுதி வேட்பாளராக மாவட்ட செயலாளர் ரமேஷை நிறுத்துகிறேன். நான் போட்டியிடும் தொகுதி குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடுவேன். இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும். நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை.

புதிய கட்சி தொடங்கியவர் தலைவர்களையும், முதல்வரையும் தரக்குறைவாக பேசி வருகிறார். ஒரு கட்சி கிழட்டு கட்சி என்று தேசிய கட்சியை விமர்சனம் செய்கிறது. அதற்கு மறுநாள் அக்கட்சியை சேர்ந்தவர் நான் கிழவியல்ல... குமரி தான் என விளக்கம் தருகிறார். ஒருவர் கிழவியா..குமரியா? என்பதா இப்போதுள்ள நாட்டின் பிரச்னை. அதனால் நாட்டின் எதிர்காலம்தான் பாதிக்கப்படுகிறது. அரசியல்வாதிகளின் சொத்தில் 3 ல் ஒரு பங்கை எடுத்தால் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

முக்குலத்தோர் ஓட்டுவங்கியை பெறும் அரசியல் கட்சி, அந்த இனத்திற்கு எவ்வித நன்மையும் செய்தது கிடையாது. இப்போதுள்ள அரசியல்வாதிகளில் என்னை தவிர யாரும் உண்மை பேசுவதில்லை. அதனால் என்னை கூட்டணியில் சேர்க்க கட்சிகள் அஞ்சுகின்றன. பொய்களை மாறி, மாறி அறிக்கையாக கட்சிகள் வெளியிட்டு கொண்டிருக்கின்றன. நான் பதவிக்காக ஆசைப்படவில்லை. வரும் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வரும் 17ம் தேதிக்கு பிறகு நான் பேசப்போகும் உண்மைகளால் மற்ற அரசியல் கட்சிகள் கதிகலங்க போகின்றன.

இவ்வாறு கார்த்திக் பேசினார்.

தரவு - தினகரன்