இசை ஆல்பமாகும் அப்துல்கலாம் கவிதைகள்

ஜனாதிபதி அப்துல் கலாமின் கவிதைகள், இசை ஆல்பமாக விரைவில் வெளியாக உள்ளன.


"சில்க் ரூட்' இசைக் குழு "கலாம்' என்ற பெயரிலேயே இந்த ஆல்பத்தை தயாரிக்கிறது. இந்தி பாப் இசைக்குழு இது.

ஏறினேன் மீண்டும் ஏறினேன்...எங்கிருக்கிறது சிகரம், என் இறைவா? மற்றும் எல்லை காக்கும் வீரர்களே...என் தாய்நாட்டின் மாபெரும் மைந்தர்கள் நீங்கள்...என்ற 2 பாடல்களையும் இசைக் குழுவின் முன்னணி பாடகரான மொகித் சௌகான் பாடியுள்ளார். இந்த இசைத் தொகுப்பில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. அனைத்தும் ஜனாதிபதி பதவிக் காலத்தில் கலாம் எழுதிய கவிதைகள்.

இந்த ஆல்பத்தின் முதல் கேசட் கலாமின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் எஸ்.எம்.கான் கூறியுள்ளார்."மிகுந்த ஆவலுடன் ஆல்பத்தைக் கேட்ட கலாம், முதல் பாடலிலேயே அசந்து விட்டார். மிகச்சிறந்த ஆக்கம் என அவர் பாராட்டியதாக' பிராண்ட் கம்யூனி கேஷனைச் சேர்ந்த ரவுல் சந்திரா கூறி யுள்ளார். சில்க் ரூட்டுடன் கூட்டாக ஆல்பத்தை தயாரிக்கும் நிறுவனம் இது.இந்த மாதத்திலேயே ஆல்பம் வெளியிடப் படும் எனவும், வெளியீட்டு விழாவுக்கு கலாம் அழைக்கப்பட்டுள்ளார் எனவும் ரவுல் சந்திரா கூறியுள்ளார்.

"எல்லைப் பாதுகாவலர்கள்' என்ற கலாமின் கவிதையின் அடிப்படையில் சுதந்திர தினத்துக்காக பாடல் அமைத்தது "சில்க் ரூட்' இசைக்குழு. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தப் பாடலைக் கேட்ட கலாம் பின்னர் அந்த இசைக்குழுவைச் சந்தித்தார். அப்போது கலாமின் கவிதைகளை இசை ஆல்பமாக்கும் ஆவலை வெளியிட்டது சில்க் ரூட். ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற பின் வேலையைத் தொடங்கி கடந்த மாதம்தான் ஆல்பம் முழுமையடைந்தது என்று கூறியுள்ளார் சந்திரா.

0 comments: