மருத்துவமனையில் அஜீத்!

கடந்த ஒரு மாதமாக மலேசியாவில் நடந்து வரும் பில்லா படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் அஜீத். படத்தை குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதற்காக தன்னை வருத்திக் கொண்டு நடித்து வருகிறார் அவர். இரவு பகல் பாராமல் படப்பிடிப்பு நடந்து வருவதால், சற்றும் ஓய்வு கிடைக்காமல் இருந்தார். இதற்கிடையில் மனைவி ஷாலினி கர்பமுற்றிருப்பதால் கிடைக்கிற ஓய்வுநாளில் சென்னைக்கு வந்துவிட வேண்டிய நிர்பந்தமும் இருந்தது அவருக்கு.

இதனால் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. இடைவிடாத காய்ச்சலை அடுத்து அவருக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு டைபாய்டு காய்ச்சலும், மஞ்சள் காமாலை நோயும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டிப்பாக ஒரு மாதமாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார் அஜீத். அவர் மீண்டும் உடல் நலம் பெறுகிற வரை படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார் பில்லா படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

சோர்வுடன் காணப்படும் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறார் மனைவி ஷாலினி. ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஜீத்தின் உடல்நலத்தை விசாரித்து வருகிறார்கள்.

3 comments:

July 20, 2007 at 8:48 PM காட்டாறு said...

நம்மை நாம் மதிப்பதில்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

July 21, 2007 at 6:50 AM பங்காளி... said...

புரியலையே....நம்ம மரமணடைக்கு வெளங்கற மாதிரி சொன்னா புண்ணியமாப் போகும்...

July 21, 2007 at 7:46 AM முரளிகண்ணன் said...

இந்த பதிவெல்லாம் நமக்கு தேவையா