இன்று முதல் நடிகர், நடிகைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

நடிகர், நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் 21 புதுகட்டுப்பாடு விதித்துள்ளனர். அவை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

# 5 நட்சத்திர ஓட்டல் கிடையாது
# செல்போனில் பேசக்கூடாது
# கேரவன் இல்லை
# இரண்டு கட்டமாக சம்பளம்
# பி.ஆர்.ஓ., மேனேஜர்களுக்கு தடை



தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இணைந்து, தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்காக கடந்த மாதம் 26ம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தின. அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்த ஒப்பனை, சிகையலங்கார, உடையலங்கார கலைஞர்கள் தவிர தனியாக யாரையும் நடிகர்களோ நடிகைகளோ அமர்த்திக் கொண்டால், அவர்களுக்கான சம்பளம், பேட்டா ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளே தர வேண்டும். வெளியூர் படப்பிடிப்பின்போது, நடிகர், நடிகைகளுடன் வரும் பணியாளருக்கு உணவு, இருப்பிடம், போக்குவரத்து வசதி ஆகியவற்றை மட்டும் தயாரிப்பு நிறுவனம் வழங்கும்.

2.நடிகர், நடிகையர் தாங்கள் ஒப்புக்கொள்ளும் வரிசையில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும். ஒப்பந்த வரிசையில் முதலில் உள்ள தயாரிப்பாளர் எந்தக் காரணத்தினாலாவது படப்பிடிப்பு நடத்த முடியாவிட்டால் அடுத்து உள்ள தயாரிப்பாளருக்கு நடிகர், நடிகைகள் முன்னுரிமை தர வேண்டும். இதில் பிரச்னை ஏற்பட்டால், உயர்மட்ட குழு பேசி தீர்க்கும்.

3.நடிகர், நடிகைகள் குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் படப்பிடிப்பு நீடிக்குமானால், அது பற்றி ஒரு நாளைக்கு முன்னதாக கலைஞர்களுக்கு தயாரிப்பாளர்கள் தகவல் தர வேண்டும். இரவு 2 மணிக்கு மேல் படப்பிடிப்பு நீடித்தால், மறுநாள் காலையிலேயே மீண்டும் படப்பிடிப்புக்கு வரும்படி நடிகர், நடிகைகளைத் தயாரிப்பாளர்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.

4.படப்பிடிப்பில் செல்போன் பயன்படுத்துவதால் பணி பாதிக்கப்படுகிறது. எனவே, படத் தயாரிப்பின்போது நடிகர், நடிகைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் செல்போனைப் பயன்படுத்தக் கூடாது.

5.வெளியூர் படப்பிடிப்பின்போது, நடிகர், நடிகைகள் தங்குவதற்கு மூன்று நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டலில் மட்டுமே தங்கும் வசதி செய்யப்படும்.

6.உள்ளூர் படப்பிடிப்புக்கு சொந்த காரில் வரும் நடிகர், நடிகைகள், பெட்ரோல், டிரைவர் பேட்டா போன்றவற்றைக் கேட்கக் கூடாது. சொந்த வாகனத்தில் வராதவர்களுக்கு தயாரிப்பாளரே போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.

7.வெளிப்புற படப்பிடிப்புக்கு விமானத்தில் சென்றால் நாயகன், நாயகிக்கு மட்டுமே முதல் வகுப்பில் (பிசினஸ் கிளாஸ்) பயணம் ஏற்பாடு செய்யப்படும். தேவைப்படுமானால், நடிகைகளுக்கு மட்டும் அவரோடு வரும் ஒரு நபருக்கு முதல் வகுப்பு தரப்படும். மற்றவர்களுக்கு பொது வகுப்பு (எகானமி கிளாஸ்) மட்டும் தரப்படும்.

8.எந்த தொழில்நுட்பக் கலைஞரை பணியில் அமர்த்துவது என்பதை நாயகன், நாயகி முடிவு செய்யக்கூடாது. இயக்குனர், தயாரிப்பாளர்கள் மட்டுமே அதை முடிவு செய்வார்கள்.

9.வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ஒப்பனை, உடையலங்காரம், சிகை அலங்கார கலைஞர்கள் தவிர, கதாநாயகியுடன் மட்டும் ஒருவர் துணைக்கு வருவார். இது சக நடிகைகளுக்கும் பொருந்தும்.

10.நடிகர், நடிகைகளை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யும்போது, இருவரும் கண்டிப்பாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதில் கால்ஷீட் விவரம், ஊதியம், வழங்கப்படும் முறை போன்ற விவரங்கள் இடம்பெற வேண்டும். ஊதியத்தில் 70 சதவீதத்தை டப்பிங்குக்கு முன்னதாகவும் மீதி 30 சதவீதத்தை பட வெளியீட்டுக்கு முன்பாக அல்லது நடிகர், நடிகை தங்கள் பணி அனைத்தையும் முடித்து கொடுத்த 90 நாட்களுக்குள் முழுவதுமாக கொடுக்க வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுபவருக்கு மட்டுமே இது பொருந்தும். மேலும், ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்தில் முன்பணம் வழங்கும்போது, ஊதியத்தில் 5 சதவீதத்தைப் பிடித்தம் செய்து, நடிகர் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் வழங்க வேண்டும்.

11.தங்களது படப் பணிகள் முழுவதும் முடிந்ததும் அதுபற்றி நடிகர் சங்கத்துக்கு நடிகர், நடிகைகள் எழுத்து மூலம் தகவல் தர வேண்டும். அதுபோல் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் தகவல் தர வேண்டும்.

12.நடிகர், நடிகைகளுடன் தயாரிப்புக்கு முன்பாக தயாரிப்பாளர் கட்டாயமாக ஒப்பந்தம் போட வேண்டும். அதன் பிறகே நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டும். ஒப்பந்தம் போடாதவர்கள் பற்றிய புகாரை இரு சங்கங்களும் ஏற்காது. மேலும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள ஊதியத்துக்கு மட்டுமே பிரச்னை தீர்க்கப்படும்.

13.எந்தக் காரணம் கொண்டும், தயாரிப்பாளர் செலவில் கேரவன் வண்டி வைக்கக் கூடாது. அப்படி வைக்க விரும்பினால், அந்தந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் சொந்த செலவில் வைத்துக்கொள்ளலாம். வெளிப்புறப் படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் செலவில் கேரவன் வண்டி வைக்க வேண்டும்.

14.நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் எடுக்கக் கூடாது. தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள தயாரிப்பாளர் தயாரிக்கும் தமிழ் படங்களில் மட்டுமே நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒத்துழைப்பு தராத தயாரிப்பாளர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் இரு சங்கங்களும் ஒத்துழைப்பு தராது.

15.சம்பள பிரச்னை, கால்ஷீட் பிரச்னைகளை முறைப்படுத்த, தலா 9 உறுப்பினர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவே இறுதியானது.

16.முன்பணம் கொடுத்தபின், சம்பந்தப்பட்ட கலைஞர்களை வைத்து தயாரிப்பாளர் படம் தயாரிக்காத நிலை ஏற்பட்டால், படப்பிடிப்பு ரத்து குறித்து ஒரு மாதத்துக்கு முன்னதாக நடிகர், நடிகைகளுக்குத் தெரிவித்து, பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

17.ஒருநாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டால்கூட, நடிகர், நடிகைகள் முன்பணத்தைத் திருப்பித் தர வேண்டியதில்லை. பாதியில் நின்று, நீண்ட நாட்களுக்கு பின்னர் தொடரப்படும் படத்துக்கு புதிய சம்பளம் பேசி, ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

18.நடிகர் சங்க துணை நடிகர்களை 50 சதவீதம் பயன்படுத்து வேண்டும்; அதற்கான ஏ.ஆர்.ஓ. நியமனம் படம் ஆரம்பிக்கும்போதே நடிகர் சங்கத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு ஷெட்டியூல் படப்பிடிப்பு முடிந்தவுடன், அவர்கள் சம்பளத்தின் முழுத் தொகை நடிகர் சங்கத்துக்கு மொத்தமாகவோ, காசோலையாகவோ வழங்க வேண்டும். தமிழக எல்லைக்குள் நடக்கும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எந்த மொழி படப்பிடிப்பிலும் நடிகர் சங்கத்தின் மூலமாக துணை நடிகர்கள் 50 சதவீதம் பயன்படுத்த வேண்டும்.

19.படம் முடிந்து, முதல் பிரதி எடுக்கப்பட்ட 30 நாட்களுக்குப் பிறகும் படம் வெளியாகவில்லை என்றால், அப்படம் வெளிவரத் தடையாக உள்ள பிரச்னை, அதன் தன்மையை கூட்டுக்குழு ஆராயும். நியாயமான பிரச்னையாக இருந்தால், படம் வெளியாக உயர்மட்டக் குழு முழு ஒத்துழைப்பு தரும்.

20.நடிகர், நடிகைகள் கதை மற்றும் ஊதியம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தயாரிப்பாளர்களு டன் கலந்து பேசிக்கொள்ள வேண்டும். மேனேஜர்கள் மற்றும் பி.ஆர்.ஓ.க்கள் போன்றவர்களை அறவே தவிர்க்க வேண்டும்.

21.இருதரப்பிலும் ஏதேனும் பிரச்னை இருந்தால், அதை படம் வெளியாகும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பே இரு சங்கத்திலும் தெரிவிக்க வேண்டும். அந்தப் புகாரை மட்டுமே இருசங்கமும் விசாரணைக்கு ஏற்கும். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை உயர்மட்டக் குழு கூடிப் பேச வேண்டும்.

இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த தீர்மானங்கள் அனைத்தும் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும்.

இவ்வாறு ராம.நாராயணன் கூறினார்.

இதற்கான ஒப்பந்தத்தில், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர். பேட்டியின்போது துணை தலைவர்கள் அன்பாலயா பிரபாகரன், காஜாமைதீன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.எஸ்.சீனிவாசன், பொருளாளர் அழகன் தமிழ்மணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எடிட்டர் மோகன், கோவைதம்பி, சங்கிலிமுருகன், ஹேம்நாக் பாபு, மோகன்நடராஜன், பி.எல்.தேனப்பன், அமுதாதுரைராஜ், கே.பாலு, விஜயமுரளி, சேகர் மற்றும் எம்.பாஸ்கர், சவுந்தர் உடனிருந்தனர்.

tharavu - Dinakaran

ஜாக்கி சான் ஓய்வு பெறுகிறார்?


ஆசியாவின் நம்பர் ஒன் நடிகரான ஜாக்கி சான் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாகப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆக்ஷன் படங்களால் புகழ்ப்பெற்றவர் ஜாக்கிசான். தனது படங்களில் இடம்பெறும் அதிரடி சண்டைக் காட்சிகளை, தானே அமைத்து அதில் டூப் போடாமல் நடிப்பதுதான் இவரது தனித்திறன். இதனால் பலமுறை விபத்துகளில் சிக்கினார். மரணத்தை நெருங்கி பிழைத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இப்போது 53 வயதாகும் ஜாக்கி, "தி ஃபர்பிடன் கிங்டம்" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சண்டைக் காட்சியில் நடித்தபோது, ஜாக்கியின் முதுகில் அடிபட்டது. இப்போது நடக்க முடியாமல் அவதிப்படுகிறார் ஜாக்கி. இதனால் டாக்டர்களும் குடும்பத்தினரும் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுமாறு ஜாக்கியை வற்புறுத்தி வருகின்றனர். இதை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜாக்கிசான் கூறுகையில், "முதுகில் காயம்பட்டபோது வலி தெரியவில்லை. மறுநாள் படுக்கையிலிருந்து எழ முடியவில்லை. சித்ரவதை தரும் வலியாக இது உள்ளது. ஓரிரு ஸ்டெப்தான் நடக்கவே முடிகிறது" என்றார்.

"பல முறை ஜாக்கிக்கு அடிபட்டுள்ளது. இதைவிட மோசமான கட்டங்களையெல்லாம் தாண்டி வந்துள்ளார். அப்போது ஓய்வு பெறாதவர், இந்த சிறு காயத்துக்கா ஓய்வு பெறுவார்? அதனால் ரசிகர்கள் நிம்மதியாக இருக்கலாம்" என ஜாக்கியின் நண்பர் ஒருவர் கூறினார்.

தரவு - தினகரன்

சரத்குமாரின் கட்சி பெயர் மற்றும் கொடி வெளியிடப்பட்டது.


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமாரின் புதிய கட்சி உதயம்.



புதிய கட்சியை துவங்கினார் நடிகர் சரத்குமார். பல மாதங்களாக தனிக்கட்சி ஆரம்பிக்க போகிறார் என்று எழுந்த யூகத்திற்கு பதிலளிக்கும் விதமாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயருடன் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை சரியாக 6.03 மணிக்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் தன் கட்சியின் கொடியை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார் அவர். அண்ணியார் அவர்கள் குத்துவிளக்கேற்றுவார்கள் என்று மேடையிலே அறிவிக்கப்பட்டது. லேசான வெட்கத்தோடும், ஆர்ப்பரிக்கும் பெருமையோடும் குத்துவிளக்கேற்றினார் ராதிகா.

இது நாடார் கட்சி என்று தனிமைபடுத்த நினைக்கிறார்கள். இது அனைத்து சமுதாயத்தினருக்கான கட்சி. காமராஜர் எப்படி அனைத்து மக்களையும் அரவணைத்து சென்றாரோ, எனது தலைமையிலான இந்த கட்சியும்

அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்லும். மீண்டும் காமராஜர் ஆட்சி. இதுவே எங்கள் லட்சியம் என்று முழங்கினார் சரத்குமார்.

பிறகு தன் கட்சியின் நிர்வாகிகளை மேடையில் அறிமுகப்படுத்தினார். நான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக இந்த கட்சியை துவங்கவில்லை. உங்களில் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் என் லட்சியம் என்று சரத்குமார் சொல்ல, ரசிகர்களின் விசில் காற்றை கிழித்தது.

ஒருபக்கம் விஜயகாந்த், மறுபக்கம் சரத்குமார். அரசியல் அரங்கில் பரபரப்பான சினிமா ஆரம்பம்....

தரவு -தமிழ்சினிமா.காம்



செய்திகளை முந்தித் தருவது....மிளகாய்..

WE(A)eKEND



.'விடுதலை' தலையங்கம்

விட்டுக் கொடுக்கவில்லை என்றால் - பறிக்கவேண்டியதுதான்!




நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்கிற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கிறது. சமூகநீதி வரலாற்றின் பரிணாமத்தில் இந்தக் குரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் - காலத்தின் கட்டாயமும் ஆகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் (சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம்) மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடமைப்பட்டுள்ளவர்கள் ஆவார்கள். இந்த நிலையில், தங்களுக்கு அதிகாரம் இருக்கும் காரணத்தினால் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளாக இருக்கக் கூடியவர்கள், மக்கள் நலன் கருதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்களைக் கிழித்துக் குப்பைக் கூடையில் வீசி எறிகிறார்கள்.

குறிப்பாக இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் அவர்களின் கைகள் எல்லை கடந்து நீளுகின்றன. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தொடக்கமே சமூகநீதிக்கு உத்தரவாதம் தருகிறது. முதல் சட்டத் திருத்தத்திலேயே இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோல் சமூக ரீதி - கல்வி ரீதி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. சமூக ரீதி என்கிறபோது ஜாதிதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எத்தனை சதவிகிதம்தான் இட ஒதுக்கீடு என்றும் வரையறுக்கப்படவில்லை. இவ்வளவுத் தாராளமான இடம், இட ஒதுக்கீடுப் பிரச்சினைக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொடுத்திருக்கும்போது, அந்த அரசமைப்புச் சட்டத்திற்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதற்கு மாறாகப் பேசுவதும், தீர்ப்பு அளிப்பதும் எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்?
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்கச் சென்ற ஒரு நீதிபதி - அதற்குமுன் அந்த அறையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி இருந்தார் என்பதற்காக அறையைச் சுத்திகரிக்க வேண்டும் என்று சொன்னதும், அவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட பிறகே அந்த அறையில் நுழைந்தார் என்பதும் எவ்வளவுப் பெரிய அவமானம் - சட்ட விரோதம் - மனித சமத்துவ விரோதம்!

இத்தகு நிலையில் நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்று குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் இந்தக் குரல் மிகமிக முக்கியத்துவத்தைப் பெறும் என்பதில் அய்யமில்லை.

பார்ப்பனர்களின் மனோ நிலை என்ன? இந்த வார `துக்ளக் இதழில் (5.9.2007) ஒரு கேள்வி - பதில் வாயிலாக அது தெளிவாகிறது.

கேள்வி: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ரவீந்திரன் என்பவர், `ஆண்டாண்டு காலமாக இருபது அல்லது முப்பத்து சதவிகிதத்தினர் மட்டுமே அனுபவித்து வந்த சலுகைகளை, எழுபது, எண்பது சதவிகித மக்களையும் அனுபவிக்க விடுவதில் என்ன தவறு? என்று கூறியுள்ளாரே?

பதில்: ஆண்டாண்டு காலமாக இருபது அல்லது முப்பது சதவிகிதத்தினர் `சலுகையை அனுபவித்தார்கள் என்று நீதிபதி கூறியது தவறு. அவர்கள், தங்கள் தகுதியினால் பெற்றதை, இன்று இட ஒதுக்கீடு என்ற `சலுகையின் மூலமாக, எழுபது சத விகிதத்தினர் பெறுவதற்கு வழி செய்ய, அரசுகள் முனைகின்றன. இந்த வித்தியாசத்தை நீங்கள் குறிப்பிட்டுள்ள நீதிபதியின் கருத்து, கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.


இதுதான் `துக்ளக் பதில்.
ஆண்டாண்டு காலமாக இருபது அல்லது முப்பது சதவிகிதத்தினர் சலுகைகளை அனுபவித்தவர்கள் தங்கள் தகுதியினால் அவற்றைப் பெற்றார்களாம்.அவர்கள் கூறும் அந்தத் தகுதி - 20 அல்லது 30 சதவிகிதத்தினரைச் சுற்றியே தொடர்ந்து வந்து கொண்டிருந்த `மர்மம் என்ன? இதுபற்றி `துக்ளக் சோ ராமசாமி என்றைக்காவது சிந்திக்க முயற்சித்தது உண்டா?

ஆண்டாண்டுகாலமாக குறிப்பிட்ட அந்த ஆதிக்கக் கூட்டத்திற்கு மட்டுமேதானே கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அரசர்கள் காலத்தை எடுத்துக்கொண்டாலும், சமஸ்கிருதமும், அதன் வழி வேதங்களும், உபநிடதங்களும் தானே பார்ப்பனர்களுக்காக மட்டும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.
இந்தச் சமூக வரலாற்றினைப் புறந்தள்ள முடியுமா? வாய்ப்பு மறுக்கப்பட்டுக் கிடந்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதுதானே சமூகநீதி?

இந்த நிலையில் உயர் அதிகார மையமாகத் திகழக்கூடிய உயர்மட்ட நீதித்துறைகளில் இட ஒதுக்கீடு அவசியம் என்பது சொல்லாமல் விளங்கக் கூடியதாகும்.பார்ப்பனர்கள் என்றைக்குத் தங்கள் ஆதிக்கத்தை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள்? விட்டுக் கொடுக்கவில்லையென்றால், அதனைப் பறிக்கவேண்டியது இயற்கை நியதிதானே?

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் அதிரடி ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் அவரது உறவினர்களின் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், நயினார் நாகேந்திரன், தளவாய் சுந்தரம், பாண்டுரங்கன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட பலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஏற்கனவே சோதனை நடத்தி பல கோடி மதிப்புள்ள சொத்துக்கான ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி வசிக்கும் சென்னை கே.கே. நகர் முதல் செக்டர் 6வது தெருவில் உள்ள வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். வளசரவாக்கத்தில் உள்ள அவரின் தம்பி பொற்செழியன் வீட்டிலும் கேளம்பாக்கம் தாழம்பூரில் உள்ள வளர்மதியின் மாமனாருடைய பண்ணை வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இதுதவிர திருப்போரூர், மதுரையில் உள்ள வளர்மதியின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 12 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

ஐஜி உமா கணபதி சாஸ்திரி, எஸ்பி சமுத்திரபாண்டி ஆகியோர் தலைமையில் கூடுதல் எஸ்பி பாலச்சந்திரன், டிஎஸ்பிக்கள் குலோத்துங்கபாண்டியன், ஜெயபால், முரளி, நடராஜன், பொன்னுச்சாமி, வல்சராஜன், தாமஸ், இக்பால், ராஜேந்திரன், ஜோசப் தலைமையில் 12 குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகள், பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மாலை வரை சோதனை நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று ரெய்டு நடத்திய 12 இடங்களின் விவரம்:
1. கே.கே.நகர் முதல் செக்டர் 6வது தெருவில் உள்ள வளர்மதியின் வீடு.
2. இதே தெருவில் உள்ள அவரின் தம்பி பொற்செழியன் வீடு
3. கேளம்பாக்கம் தாழம்பூர் கிராமத்தில் உள்ள மாமனாருக்குச் சொந்தமான பண்ணை வீடு.
4. அம்மா வகை உறவினர் நடன காசிநாதன், மல்லீஸ்வரர் நகர், சேலையூர், சென்னை
5. கொழுந்தனார் குமார்ராஜன், புவனேஸ்வரி நகர், சேலையூர், சென்னை
6. உறவினர் நாச்சியப்பன், பாரதிதாசன் சாலை, கே.கே.நகர், சென்னை.
7. மைத்துனி மணிமொழி, சிதம்பரம்.
8. உறவினர் நாராயணன், ராமசாமி நகர், கே.கே.நகர், சென்னை.
9. சிதம்பரம், சவுத்ரி நகர், வளசரவாக்கம், சென்னை.
10. கணவருக்கு சொந்தமான ஆசிரியர் பயிற்சி பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை, புலிவாக்கம்.
11. பாண்டியன், ஐயப்பன நகர், மதுரை
12. சென்னை நாகல்கேணியில் உள்ள உறவினர் வீடு


இதற்கிடையில், திருச்சியைச் சேர்ந்த முக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் முறையான தகவல்கள் அரசுக்கு தெரிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களின் அலுவலகங்கள் உள்ள ஸ்ரீரங்கம், தில்லைநகர் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர்களின் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது ஒரே நேரத்தில் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 25 பிரிவுகளாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். திருச்சியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது"என்றார்.

தரவு - தமிழ்முரசு

'என் உயிரினும் மேலான..'.- விமர்சனம்

கண்டதும் காதல். காதலர்களுக்குள் மோதல். பிறகு எப்படி சேர்தல்? இதுதான் என் உயிரினும் மேலான...

அறிமுகமான புதிதில் மாதவன் எப்படி இருந்தாரோ அப்படி இருக்கிறார் புதுமுகம் அஜீத் சந்தர். காதல் காட்சிகளில் குறும்பு. கனவுப்பாடல்களில் அரும்பு. காதலால் இளைக்கையில் துரும்பு என்று பல்வேறு பரிமாணங்கள். நம்பிக்கைக்குரிய இந்த புதியவார்ப்பு வரும் படங்களில் இன்னும் அழுத்தமாக முத்திரை பதிக்கலாம். பணக்காரரான இவர் ஊட்டிக்கு போகும்போது ராதிகாமேனனை சந்திக்கிறார். அவரிடம் ஒரு Ôபளார்Õ வாங்குகிறார். பிறகு தன் தவறை எண்ணி தவிக்கும் ராதிகாவை விட்டு விட்டு சென்னைக்கு வந்து அவர் நினைவாகவே இருக்கிறார்.

இதற்கிடையில் சென்னைக்கு மாற்றலாகி வரும் ராதிகாமேனனின் குடும்பம் எதிர் எதிர் வீட்டில் வசிக்க நேர்கிறது. காதல் வளர்க்கிறார்கள். ஆனால், முறைமாமன் ரூபத்தில் வில்லன் வர, என்னாச்சு என்பது மீதி.

பக்கத்து வீட்டு பெண் மாதிரி இருக்கிறார் ராதிகாமேனன். அடிக்கடி மழையில் நனைகிறார். நமக்கு பிடிக்கிறது ஜலதோஷம். இவருடைய அப்பா தொழிலதிபர் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பெரிய போலீஸ் அதிகாரி என்று பிளேட்டை திருப்பி போடுகிறார்கள். அவரும் தப்பியோடும் காதலர்களை பிடிக்க செக்போஸ்ட் சோதனையெல்லாம் செய்கிறார். அதையும் மீறி தப்பியோடும் காதலர்களிடம் ஒரு படபடப்பு வேண்டாமா? ஏதோ தேனிலவுக்கு போவது போல் போகிறார்கள். ராதிகாமேனனின் தம்பியாக நடித்திருக்கும் அந்த அதிக பிரசங்கி பிஞ்சிலே முற்றல் கேஸ்.

திடீர் மாப்பிள்ளையாக 12 வது ரீலில் அறிமுகமாகும் ரஞ்சித், நரிச்சிரிப்பு சிரிக்கிறார். கிளியை வளர்த்து கில்லாடியிடம் கொடுக்கிறார்களே என்ற தவிப்பை ஏற்படுத்துகிறார். நல்லவேளையாக தாய்மார்களின் சாபத்தை வாங்காமல் Ôபல்டிÕ அடித்து கைத்தட்டல்களையும் வாங்கிக் கொள்கிறார்.

இதுவரைக்கும் வடிவேலுவுடன் வந்து வயிற்றை பதம் பார்த்த சிங்கமுத்து இந்த படத்தில் ஸோலோவாக வந்து ட்ரை பண்ணியிருக்கிறார். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இருந்தாலும், சில காட்சிகள் பலே. அதிலும் காதல் ஜோடி ஒன்று இவர் சைக்கிளை இரவல் கேட்டு Ôஎஸ்கேப்Õ ஆவதும் அதற்காக இவர் தர்ம அடி வாங்குவதும் வெடிச்சிரிப்பு.

மற்றொரு காமெடி நடிகராக கருணாஸ். பல காட்சிகள் பாதியிலேயே கட் செய்யப்பட்டது போல் இருக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை கருÔலாஸ்Õ.

இசை தேவா. மினிமம் கியாரண்டிக்காரர் ஆயிற்றே. ஐந்துக்கு மூன்று பழுதில்லை.

வசனங்கள் பாலகுமாரனாம். வயதில் பெரியவரானாலும் எழுத்தில் இளையவர். ஆனால்...?

உயிரினும் மேலானது காதல்தான். உயிரை கொடுத்து மெனக்கெட்டிருந்தால், வெற்றிகரமாக பிரசண்ட் செய்திருக்கலாமோ?

தரவு - தமிழ்சினிமா.காம்

'ஒரு பொண்ணு ஒரு பையன்' - விமர்சனம்

இளசுகளுக்குள் காதல். யார் முதலில் சொல்வது என்பதில் வீம்பு. இழுக்க இழுக்க எலாஸ்டிக் முறுக்கேறுகிறது. ஒருகட்டத்தில் திரண்டு நிற்கும் மேகங்கள் ஜில்லென்று நீர்தெளிக்க குளிர குளிர க்ளைமாக்ஸ். ஆர்பாட்டமான நட்சத்திரங்கள் இல்லை. அசரவைக்கும் திருப்பங்கள் இல்லை. ஆனாலும், மார்கழி மாதத்து சபாக்கள் மாதிரி மனசை கொள்ளையடித்திருக்கிறார்கள்.
காதல் திருமணம் செய்ததால் வீட்டை முறைத்துக் கொண்ட பானுப்பிரியா-சரத்பாபு தம்பதிகளுக்கு வாலிப வயதில் மகன். பானுப்பிரியாவின் அண்ணன் சரண்ராஜின் மகள் ரூபாவுக்கு தாவணி போடுகிற வயசு. பகையை மறந்து இருபது வருடம் கழித்து சொந்த ஊருக்கு திரும்பும் பானுப்பிரியாவின் மகனுக்கும், சரண்ராஜின் மகளுக்கும் மனசுக்குள் பூ பூக்கிறது. இளசுகளுக்கேயுரிய ஈகோ தலைதூக்க, சேவலும் கோழியுமாக திரிகிறார்கள். ஆனாலும் நாளரு கனவும், பொழுதொரு டூயட்டுமாக கழிகிறது பொழுது. சின்ன பிரிவுக்கு பின் மீண்டும் பார்த்துக் கொள்ளும் இருவரும், அப்போதும் தங்கள் ஈகோவை விட்டுக் கொடுக்காமல் முரண்டு பிடிக்க, இடையில் நுழைகிறது இன்னொரு சம்பந்தம். அடித்துப்பிடித்துக் கொண்டு காதலை சொல்ல ஓடினால், போய்யா நீயும் உன் காதலும் என்கிறார் நாயகி. சீட் நுனிக்கு நம்மை இழுத்து வைத்து சுபம் போடுகிறார்கள்.

புதுமுகம் சந்தீப்புக்கு நடிப்பை விட டான்சும், ஃபைட்டும் நன்றாக கைகொடுக்கிறது. ரூபாவை சீண்டுகிற காட்சிகளில் எல்லாம் இளசுகளின் ஏகோபித்த நாயகனாகிவிடுகிறார். காதலியை சைட் அடிக்கிற ரௌடிகளிடமே, போய் ஐ லவ் யூ சொல்லுங்க பிரதர் என்று லைட்டாக எடுத்துக் கொள்ளும் அலட்சியம் பகீர். ரூபாவின் டைரியை வெடுக்கென்று பிடுங்கி படிக்க துடிக்கும் ஆர்வமும், அதை தொடரும் கோப கொந்தளிப்பும் பளிச்சென்ற மத்தாப்பூ தருணங்கள்.

நம்ப வீட்டு மஹாலட்சுமி போலிருக்கிறார் ரூபா. அந்த கண்களும், அதிகம் அலட்டிக்கொள்ளாத உதடுகளும், தனியாக ஸ்கோர் செய்கிற சாம்பியன்கள். முகத்தில் அவ்வப்போது வந்து உட்கார்ந்து கொள்கிற கோபம் கூட அழகின் முத்திரை. இவர் அடக்க ஒடுக்க மஹாலட்சுமி என்றால், அவிழ்த்து போடும் ஜோதிலட்சுமியாக சுபாபுன்ஜா. ஆடை கால், ஆள் முக்காலாக இருக்கிறார். அமெரிக்க ரிட்டன் என்பது கூடுதல் சுதந்திரம்.

சுபாபுன்ஜாவிடம் சந்தீப் நெருக்கம் காட்டும்போதெல்லாம் உள்ளுக்குள் வெடிக்கும் ரூபா, அவர்களை அதிகம் நெருங்க விடாமல் போடும் தந்திரங்கள் சுமார் ரகம்தான்.

அந்த பல் போன பாட்டி பலே கெட்டி. புதுமுகமாம். நம்பதான் முடியவில்லை. சார்லியிடம் என்னை உன் தங்கச்சியா நினைச்சுக்கோ என்று வெடிகுண்டை வீசுகிறாரே, கலீர் சிரிப்பு தியேட்டர் முழுக்க. இவர் திருட்டுத்தனமாக ஸ்வீட்டுகளை விழுங்கிவைக்க, வேறு விஷயத்துக்காக முறையிடும் சார்லியிடம், இரண்டு மாத்திரையை தின்னா சரியா போயிட போவுது என்று சமாளிப்பதெல்லாம் வெடிச்சிரிப்பு.

கார்த்திக்ராஜாவின் இசையில் பின்னணி இசை அற்புதம். சில பாடல்கள் அபாரம். குறிப்பாக, கல்கோனா உதட்டுக்காரி.... நெஞ்சில் வாழ்கிற பாடலே, கொஞ்சம் பாடிட வா இரண்டையும் சொல்லலாம்.

ஆரம்ப ரீல்களிலேயே சென்ட்டிமென்ட்டை திணித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

இந்த ஒரு பொண்ணு, ஒரு பையன், பல பொண்ணுகள், பல பையன்களின் மனசில் என்னென்னவோ பண்ண போவது மட்டும் நிஜம்.


தரவு - தமிழ்சினிமா.காம்

தொ(ல்)லைபேசி - விமர்சனம்

கழுத்துல டை, கையில பை, வாயில பொய் என்று திரியும் கம்ப்யூட்டர் ஆசாமி விக்ரமாதித்யா சபலிஸ்ட். இதனால் கால் டைவர்ட் ஆகிற மாதிரி வாழ்க்கையில் டைவர்ட் ஆகிறார். ஒரு பெண்ணை ‘அது’க்கென்றே வைத்துக் கொள்கிறார். ஒரு பெண்ணை அப்பாவுக்காக திருமணம் செய்கிறார். ஒரு பெண்ணை காதலிக்கிறார். இத்தனை திகிடுதத்தங்களிலும் மாட்டிக் கொள்ளாமல் அவர் தப்பித்துக் கொள்ள உதவுவது அவரது செல்போன். கடைசியில் உண்மை தெரிய வர, மனைவி விவாகரத்து கேட்கிறார். காதலி குட்பை சொல்கிறார். இன்னொருத்தி வெளிநாட்டுக்குப் பறக்கிறார்.

கடைசியில் மனைவிதான் பெரிதென்று அவரை தேடி ஓடுகிறார். இத்தனைக்கும் காரணமான செல்போனை நெருப்பில் வீசும் அவர், கடைசியில் தான் செய்த தவறுக்கு செல்போனை குற்றம் சொல்லக்கூடாது என்று மீண்டும் செல்போன் வாங்கி அதை முறையாக பயன்படுத்துங்கள் என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.

செகனென்ட் செல் வாங்கி புது கவர் போடுவது மாதிரி வழக்கமான மன்மதலீலை கதையில் செல்போனின் பயன்பாட்டை அதிகமாக காட்டி புதுச்சாயம் பூசியிருக்கிறார்கள். ரகசிய சிநேகிதி அனுப்பும் எஸ்.எம்.எஸ் போன்று செல்போனின் தவறான செயல்பாட்டை சிரிப்பாகவும், சீரியசாகவும் காட்டியிருப்பது சுவாரஸ்யம்.

ராங்கால் பண்ணிவிட்டு தலையில் அடித்துக் கொள்வது போல் விக்ரமாதித்யா தப்பு செய்து விட்டு அசடு வழிகிறார். மெகா சைஸ் கலர் போன் ரேன்ஞ்சுக்கு பிரியங்கா கண்களை உருட்டியே மிரட்டுகிறார். கருணாஸ் காமெடி படத்துக்கு புல் சார்ஜ் பேட்டரி. இரவு நேர ப்ரீகால் மாதிரி காட்சிகள் நீண்டு கொண்டே போவது சிக்னல் வீக்.

பாடல்களும், பின்னணி இசையும் ரிஜக்டான ரிங்டோன்கள், டி.சங்கரின் ஒளிப்பதிவு பளிச். செல்போன் பேசி டிரைவிங் செய்தவர் விபத்துகுள்ளான மாதிரி செல்போனை வைத்து புதுமையாக எதையோ சொல்ல வந்து காதல், கள்ள காதல், திருந்தல் என்ற அதே தமிழ் சினிமா பள்ளத்தாக்கில் விழுந்திருக்கிறார் இயக்குனர் கே.பன்னீர் செல்வம்.


தரவு - தமிழ்முரசு

பழனியில் ரோப்கார் விபத்து....

பழனி அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோவிலில் மலையின் மேலே செல்ல ரோப் கார் இயக்கப்படுகிறது. இன்று மாலை சுமார் 4 மணி அளவில் ஏற்பட்ட கோர விபத்தில் ரோப்கார் அறுந்து விழுந்ததாக தெரிகிறது.

சாவு எண்ணிக்கை குறித்தான விவரங்கள் தெரியவில்லை....மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த தகவல் இந்த பதிவினை எழுதும் இந்த நிமிடத்தில், இதுவரை எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.




தினமலர் செய்தி...


பழநி கோவில் மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்த ரோப் காரின் ஒரு பெட்டி அறுந்து விழுந்ததில் நான்கு பேர் பலியாயினர். பழநி கோவிலில் பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக ரோப் கார்கள் இயக்கப்படுகின்றன. இன்று மாலை 5 மணியளவில் வழக்கம்போல் சென்று கொண்டிருந்த ரோப் காரின் 3ம் எண் பெட்டி திடீரென அறுந்து 9ம் நம்பர் பெட்டி மீது மோதியது. அறுந்துவிட்ட 3ம் நம்பர் பெட்டி கீழ்நோக்கி வேகமாக வந்து விழுந்தது. இதில் பயணம் செய்த ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணி (54) அவரது மகள் நித்யா (25), திண்டுக்கல் ஆவின் நிர்வாக இயக்குனர் உட்பட மூன்று பேர் பலியாயினர். 9ம் நம்பர் பெட்டியிலிருந்த சுப்பிரமணியத்தின் மனைவி அமுதா வும் (45) கீழே விழுந்து இறந்தார். இதனால் பழநி மலை பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

WE(A)eKEND




நான் தமிழ் தேசியம் பேசுவது ஏன்? - பழ. நெடுமாறன்

தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு பழ. நெடுமாறன் அளித்த பேட்டியின் சென்ற வாரத் தொடர்ச்சி...


எல்லோரும் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். இதில் யார் காமராஜ் ஆட்சி அமைப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

காமராஜர் ஆட்சி என்றால் முதலமைச்சர் பதவியில் அமர்வது மட்டுமல்ல. தொலைநோக்குப் பார்வையுடனும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற உணர்வுடனும் செயல்படுவதற்குத்தான் காமராஜர் ஆட்சி என்று பெயரே தவிர, எப்படியாவது பதவியைப் பிடிப்பதற்குப் பெயர் காமராஜர் ஆட்சி அல்ல. காமராஜரைப் புரிந்து கொள்ளாமலே இவர்கள் காமராஜர் ஆட்சியைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு தேசியத் தலைவராக இருந்து, இப்போது தமிழ் தேசியம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் அடைந்து விட்டீர்களே, அதற்கு என்ன காரணம்?

இந்திய தேசியம் பேசியவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான் என்னைத் தமிழ் தேசியம் பேச வைத்திருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்வதுதான் இந்திய தேசியமா? முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு கடந்துவிட்ட பிறகும் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை, இந்திய அரசாவது தலையிட்டு நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றி வைப்பதுதானே நியாயம்? இந்திய தேசியம் பேசும் அவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைந்துவிட்டார்களா, இல்லை நான் குறுகிப் போய்விட்டேனா என்று நீங்களே சொல்லுங்கள். காவிரியில் தண்ணீரே வர வேண்டாம். ஆனால், கர்நாடக அரசு செய்வது தவறு, நீதிமன்றத் தீர்ப்பையும், நடுவர் மன்றத் தீர்ப்பையும் மதிக்க வேண்டும் என்று இந்திய தேசியம் பேசும் அகில இந்தியத் தலைவர் யாராவது ஒருவர் கண்டித்திருந்தாலோ, குரல் கொடுத்திருந்தாலோ, சற்று ஆறுதலாகவாவது இருந்திருக்கும். எல்லோரும் சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும்போது, இந்திய தேசியம் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் அர்த்தமே கிடையாது.

மாநிலக் கட்சிகள் மத்திய அரசில் பங்குபெறும் இன்றைய நிலையில், உங்கள் குற்றச்சாட்டில் நியாயம் இருக்கிறதா?

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மாநில மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கவும்தான் மாநிலக் கட்சிகள் தோன்றின. ஆனால், இந்த மாநிலக் கட்சிகள் ஏதாவது ஓர் அகில இந்தியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொள்கிறார்கள். மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள் எந்த நோக்கத்துக்காகக் கட்சி தொடங்கினார்களோ அந்தக் கோரிக்கைகள் எதையும் வலியுறுத்துவதும் இல்லை. மாநில சுயாட்சிக்கு சட்டப் பேரவையிலேயே கோரிக்கை போட்ட அதே கட்சி, மத்திய அரசில் அங்கம் வகிக்கத் தொடங்கியபின், அந்த மாநில சுயாட்சிக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான ஏதாவது நடவடிக்கையை எடுத்தார்களா என்றால் கிடையாது.

ஆட்சியிலேயே அங்கம் வகிக்கும்போது, மாநில சுயாட்சி என்கிற கோரிக்கை நிறைவேறிவிட்டது என்றுதானே அர்த்தம்?

அப்படிச் சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் கருத்துக்கூற விரும்பவில்லை. ரயில் நிலையங்களில் இருந்த பெயர்ப் பலகைகளில் இந்தி இருக்கக்கூடாது என்று இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி அறிவித்தார்கள். இப்போது, அந்தக் கட்சியின் பிரதிநிதி ஒருவர் மத்திய அரசில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிறார். அத்தனை நெடுஞ்சாலை மைல் கற்களிலும் இந்தி வந்திருக்கிறதே, அது அவருக்குத் தெரியாமலா நடந்தது? பதவிக்குப் போனபிறகு இந்த மாநிலக் கட்சியினர் கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டனர். நீர்த்துப்போய் விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த மாநிலக் கட்சிகள் எப்படிச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இவர்களது ஆதரவுக்கு விலையாக அமைச்சர் பதவிகளைக் கேட்டு வாங்குகிறார்களே தவிர மாநிலங்களுக்கான உரிமைகளைக் கேட்டு வாங்கியிருக்க வேண்டும். தேசியக் கட்சிகள் தலைமையில் ஆட்சி அமைப்பதற்குப் பதிலாக, இந்த மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பைத் தேசியக் கட்சிகள் ஆதரிக்கும் நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தத் துணிவு இவர்களுக்கு ஏன் வரவில்லை? இவர்களுக்கு மாநிலங்களில் ஆட்சி வேண்டும். அதைத் தக்க வைத்துக் கொள்ள தில்லியில் செல்வாக்கு வேண்டும், அவ்வளவுதான்.

வீரப்பன் விஷயத்தில் நீங்கள் தலையிட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்ததா?

நடிகர் ராஜ்குமார் பணயக் கைதியாகி மூன்று மாதத்துக்கு மேலான பிறகு ஒருநாள் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி என்னைக் கூப்பிட்டனுப்பி, என்னைத் தூதுவராக அனுப்பும்படி வீரப்பனிடமிருந்து செய்தி வந்திருப்பதாகச் சொன்னார். எனக்கும் வீரப்பனுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும்போது, நான் எப்படிப் போவது என்று மறுத்தேன். கர்நாடகத் தமிழ்ச் சங்கங்களின் வற்புறுத்தலும், அன்றைய கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் தொடர்ந்த வேண்டுகோளும்தான் எனது முடிவை மாற்றிக் கொள்ள செய்தன. ஒரு மனிதநேய முயற்சியாக, ராஜ்குமாரைக் காப்பாற்றுவதன் மூலம் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையில் இனமோதல் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியாகத்தான் எனது பயணம் அமைந்தது.

ராஜ்குமார் விடுதலையில் மிகப்பெரிய பணப் பரிவர்த்தனை நடந்ததாகச் சொல்லப்படுகிறதே, அது எந்த அளவுக்கு உண்மை?

பண பேரம் நடந்தது என்று தெரிந்திருந்தால் நான் அந்த விஷயத்தில் தலையிட்டிருக்க மாட்டேன்.

உங்களது கணிப்பில் வீரப்பன் எப்படிப்பட்டவனாகத் தெரிந்தான்?

எனக்கு அவன் ஒரு கொடியவனாகத் தெரியவில்லை. அவன் நாகரிகமற்றவனாக இருந்தாலும்கூட, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவனாக இருந்தான் என்பதுதான் நான் பார்த்த உண்மை. நாங்கள் காட்டுக்குள்ளே போனோமே, எங்களையும் பிடித்து வைத்திருந்தால் யார் என்ன செய்துவிட முடியும்? இந்த அரசாங்கம் எங்களைக் காப்பாற்றி இருக்காது என்பதும் எனக்குத் தெரியும். எங்களது பேச்சுவார்த்தையின்போது அவன் சில நிபந்தனைகளை முன்வைத்தான். அதிரடிப்படையின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்டவர்களில் வீரப்பனின் குடும்பத்தினர் எவருடைய பெயரும் இல்லை. "அவர்கள் பெயரை நான் குறிப்பிட்டால் நான் சொன்னது அனைத்தும் எனது குடும்பத்தினருக்காகத்தான் என்கிற கெட்ட பெயர் வந்துவிடும். அதனால்தான் அவர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை' என்று வீரப்பன் விளக்கியபோதுதான் அவனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

நீங்கள் அவனைச் சரணடையச் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கவில்லையா?

எங்களது பேச்சுவார்த்தைகள் முடிந்து ராஜ்குமாரை விடுதலை செய்வது என்று முடிவெடுத்த பிறகு, வீரப்பனைத் தனியாக அழைத்துப் பேசினேன். சரணடைந்து விடுங்கள் என்று அறிவுரை கூறினேன். ஒரு மாதம் கழித்து வீரப்பனிடமிருந்து சரணடைய விரும்புவதாகத் தகவல் வந்தது. அதை இரண்டு முதல்வர்களுக்கும் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் அதில் அக்கறை காட்டவில்லை. அதற்குக் காரணம், வீரப்பனை உயிரோடு பிடிப்பதில் நமது அதிகாரிகளுக்குச் சம்மதம் கிடையாது என்று கேள்விப்பட்டேன். மூன்று மாதம் கழித்துத் திடீரென்று தமிழக முதல்வரிடமிருந்து, வீரப்பனைச் சரணடையச் சொல்லலாம் என்று தகவல் வந்தது. அப்போது தேர்தல் வர இருந்த நேரம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் வீரப்பனின் கதி என்னவாகும் என்று எப்படிச் சொல்ல முடியும்? தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் செய்தது. வீரப்பனைச் சரணடையச் செய்து, தேர்தலில் அதைப் பிரச்சாரமாக்க நினைத்தார் கலைஞர் கருணாநிதி. அதற்கு நான் உடன்பட்டிருந்தால், வீரப்பன் என் மீது வைத்திருந்த மரியாதையை நான் இழந்திருப்பேன். அதனால்தான் அதற்கு நான் உடன்படவில்லை.

ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இந்தியா தவிர வேறு யாரும் தலையிட நாம் அனுமதிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அப்படி அனுமதிப்பது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்றும் நான் நினைக்கிறேன். இதை இந்திரா அம்மையார் புரிந்துகொண்டிருந்தார். இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

இந்திரா காந்தியின் அணுகுமுறை இந்த விஷயத்தில் எப்படி இருந்தது?

1983 ஆம் ஆண்டு கொழும்பில் இனக்கலவரம் நடைபெற்று சுமார் 3,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது பிரதமராக இருந்த இந்திரா அம்மையார் அன்றைய வெளியுறவு ஆலோசகர் ஜி. பார்த்தசாரதியையும் வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சிறிய நாடு, அங்கு நடக்கும் சிறிய பிரச்னைதானே என்று கருதாமல் இரண்டு சீனியர்களை அனுப்பி வைத்து, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்பினார். அதாவது, "இந்தியா இந்த விஷயத்தை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளாது, ஜாக்கிரதை' என்பதைத்தான் வெளியுறவுத் துறை அமைச்சரையும் அமைச்சர் அந்தஸ்திலுள்ள மூத்த வெளியுறவுத் துறை ஆலோசகரையும் அனுப்புவதன் மூலம் உணர்த்தினார் இந்திரா அம்மையார். உலக நாடுகளுக்கும் இந்த விஷயத்தில் யாரும் தலையிடுவதை இந்தியா விரும்பாது என்று மறைமுகமாக எச்சரிக்கும் செய்கை அது. இவ்வளவு செய்தும், ஜெயவர்த்தனா தனது வாக்குறுதியைக் காப்பாற்றாமல் மழுப்புகிறார் என்று தெரிந்ததும், போராளிக் குழுக்களை அழைத்து வந்து, நமது ராணுவத்தின் மூலம் அவர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஒருவேளை, இந்திரா அம்மையார் உயிரோடு இருந்திருந்தால், இலங்கைப் பிரச்னை எப்போதோ சுமுகமான ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதுதான் எனது கருத்து.

தமிழ் ஈழத்தை இந்திரா காந்தி ஆதரித்திருப்பார் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

நான் அப்படிச் சொல்லவில்லை. ஆரம்பம் முதலே இந்திரா அம்மையார் தமிழ் ஈழத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், ஈழத் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் அதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பதிலும் இந்திரா அம்மையார் தீர்மானமாக இருந்தார்.

ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட என்ன காரணம்?

ராஜீவ் காந்தி வந்தவுடன், இலங்கைப் பிரச்னையைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.பி. வெங்கடேஸ்வரனை ராஜிநாமா செய்யச் சொன்னதுதான், ஈழப் பிரச்னைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு. ஜி. பார்த்தசாரதியும் நரசிம்மராவும் கையாண்ட ஈழப் பிரச்னையை, ரமேஷ் பண்டாரியை அனுப்பிப் பேசச் சொன்னபோது, ராஜீவ் அரசு இந்தப் பிரச்னையை முக்கியமாகக் கருதவில்லை என்கிற தோற்றத்தை இலங்கைக்கும் உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தி விட்டார். அப்போது வெளியுறவுக் கொள்கையில் இலங்கைப் பிரச்னைக்கு ஏற்பட்ட பின்னடைவுதான் இன்றைய நிலைமைக்குக் காரணம்.

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்வது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல என்று கூறினீர்கள். அது ஏன்?

இந்தியாவின் வடபகுதிதான் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் தாக்குதலுக்கு உட்படும் பகுதியாக இருக்கிறதே தவிர, இந்தியாவின் தென்பகுதி அபாயம் இல்லாத பகுதியாக இருந்து வந்திருக்கிறது. இலங்கையைத் தவிர இங்கே வேறு அண்டை நாடு எதுவும் நமக்குக் கிடையாது. நமக்கு ஆபத்தே இல்லாமல் இருந்த தென்பகுதியில் இப்போது பாகிஸ்தான், இஸ்ரேல் என்று பல அந்நிய சக்திகள் காலூன்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவுக்குத் தலைவலி கொடுக்க இலங்கையைத் தளமாக்க நினைக்கின்றன நமக்கு விரோதமான சக்திகள்.

இந்திரா காந்தியின் காலத்தில் அந்நியத் தலையீடு இலங்கையில் இல்லவே இல்லை என்கிறீர்களா?

நிச்சயமாக இருக்கவில்லை. ஜெயவர்த்தனே அமெரிக்காவுடன் ராணுவத் தளம் அமைப்பது பற்றிப் பேச இருக்கிறார் என்பது தெரிந்ததும், இந்திரா அம்மையார் நாடாளுமன்றத்தில் ஓர் எச்சரிக்கை விடுத்தார். இந்து மகா சமுத்திரத்தில் எந்த அந்நிய சக்தி நுழைய முயற்சித்தாலும் அது எங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாகத்தான் இந்தியா கருதும் என்று அவர் சொன்னதுதான் தாமதம், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது, இலங்கை ராணுவத்தின் விமானங்களையும் பாகிஸ்தானியர்கள்தான் ஓட்டுகிறார்கள். நாம் பயந்துபோய், சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் இலங்கை ஆயுதம் வாங்கிவிடக்கூடாது என்பதற்காக இந்தியா ஆயுதம் கொடுக்கிறது என்று நமது பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறுகிறார். இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தை, தில்லியிலிருக்கும் நமது அரசு உணரவே இல்லை.

இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு நேரடி ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தா?

நேரடி ஆதரவு தர வேண்டும் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. எங்கேயோ இருக்கும் நார்வே இந்தப் பிரச்னையில் பஞ்சாயத்து செய்யும்படி விட்டது இந்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு. இப்போது இந்தப் பிரச்னை தீர்ந்தாலும்கூட அதில் இந்தியாவின் பங்கு இல்லை என்றாகிவிடுகிறதே, அதுதான் தவறு என்கிறேன்.

அப்படியொரு நிலைப்பாடு எடுத்து நாம் அமைதிப்படையை அனுப்பி அவமானப்பட்டது போதாதா? இன்னொரு முறை இந்தியா இந்தப் பிரச்னையில் தலையிட்டு தலைகுனிந்து நிற்க வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா?

தப்பான நிலைப்பாட்டை அப்போது எடுத்ததால்தானே அப்படியொரு நிலைமை ஏற்பட்டது. அமைதிப்படை ஆயுதம் தாங்க வேண்டிய அவசியம் என்ன? "நமது வீரர்கள் வாலிபால் விளையாடுகிறார்கள். இந்திய வீரர்கள்தான் செத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று ஜெயவர்த்தனே சந்தோஷமாகச் சொன்னார். அந்த மோதலுக்குக் காரணம் விடுதலைப்புலிகள் அல்ல என்று இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிய திபேந்தர் சிங் தான் எழுதிய புத்தகத்தில் தெளிவாகச் சொல்கிறார். மோதலுக்குக் காரணம் "ரா' உளவுத்துறை செய்த தவறு. இந்த மோதல் ஏற்பட வேண்டும் என்று ஜெயவர்த்தனே விரும்பினார். அது நடந்தது.

ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது மிகப்பெரிய தவறில்லையா? அதற்குப் பிறகும் நாம் எப்படி விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

யார் யாரைக் கொலை செய்தாலும் அது தவறு என்று சொல்பவன் நான். அதுமட்டுமல்ல, நேரு குடும்பத்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகியவன். ஏழாயிரம் ஈழத்தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்ததே என்று அவர்களும், ராஜீவ் காந்தியை விடுதலைப்புலிகள் கொன்று விட்டனர் என்று நாமும் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன லாபம்? நமது நாட்டிற்குள் நுழைந்து நமது முன்னாள் பிரதமரை அவர்கள் கொன்றுவிட்டனர் என்கிறோம் நாம். எங்கள் நாட்டிற்குள் நுழைந்து எங்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது உங்கள் ராணுவம் என்கிறார்கள் அவர்கள். இது விடுதலைப் புலிகளின் பிரச்னையோ, ஈழத் தமிழர் பிரச்னையோ அல்ல. இந்தியாவுக்கே ஆபத்தை விளைவிக்கும் பிரச்னையாக மாறிவிட்டிருக்கும் நிலையில், நாம் மௌனம் சாதிப்பது விசித்திரமாக இருக்கிறது.

இந்தப் பிரச்னையில் திமுக மற்றும் அதிமுகவின் நிலைப்பாடு எப்படி இருப்பதாகக் கருதுகிறீர்கள்?

அந்த இரண்டு கட்சிகளுமே, சாப்பாட்டிற்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதுபோலத்தான் ஈழத் தமிழர் பிரச்னையை அணுகுகிறார்கள். நியாயமாக இந்தப் பிரச்னையில், மத்திய அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்று சொல்ல வேண்டிய பொறுப்பு இங்கே தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியிடம் தானே இருக்கிறது? ஆனால், முதல்வர் கருணாநிதி திரும்பத் திரும்ப "மத்திய அரசின் முடிவுதான் எங்கள் முடிவு' என்றல்லவா சொல்கிறார். மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணைப் பிரச்னை வந்தபோது, அன்றைய முதல்வர் ஜோதிபாசு வங்காளதேச அதிபருடன் பேசி எடுத்த முடிவைத் தானே மத்திய அரசு அங்கீகரித்து ஒப்பந்தம் போட்டது. ஜோதிபாசுவுக்கு இருந்த துணிவும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த உணர்வும் முதல்வர் கருணாநிதிக்கு இல்லையே ஏன்?

தமிழ் ஈழம் அமையுமேயானால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக இருக்காதா? நாளைக்கே தமிழகம் பிரிந்து போக அது வழிகோலாதா?

அது தவறான கண்ணோட்டம். கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானதற்கு இந்தியா துணைபுரிந்தது. ஒருகாலத்தில் ஒன்றாகத்தான் வங்காளம் இருந்தது. இரண்டு பகுதிகளுமே

வங்காள மொழி பேசும் பகுதிகள்தான். மேற்கு வங்கம் பிரிவினை கேட்கிறதா என்ன? தமிழ்நாடும், யாழ்ப்பாணமும் ஒரு காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை. வங்காளி மீது ஏற்படாத சந்தேகம் தமிழன் மீது மட்டும் ஏன் வருகிறது என்பதுதான் எனது கேள்வி. ஆகவே, இந்த வாதத்திற்கு அர்த்தமில்லை.

நிறைவாக, ஒரு கேள்வி. தமிழகத்தின் இன்றைய அரசியல் நிலைமை பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஆட்சியும் அதிகாரமும் சுயநலத்துக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். சரியான மாற்றுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அந்த மாற்றம் ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

படம் : ஏ.எஸ்.கணேஷ்

தரவு - தினமணி

இந்தியா, பாக்., இந்தோனேசியாவில் 5 நாளில் பூகம்பம்?

இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் 5 நாட்களுக்குள் பூகம்பம் வர வாய்ப்புள்ளதாக தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக பேராசிரியர் வேங்கடநாதன் தெரிவித்தார்.

இதுபற்றி தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழக இயற்பியல் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பேராசிரியர் டாக்டர்.என்.வேங்கடநாதன் கூறியதாவது:
புவி வானியல் அமைப்பு மற்றும் வெப்ப மாற்றம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, 33.06 டிகிரி வடக்கு அட்சரேகை, 74.05 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் வரும் ஆசியா கண்ட பகுதிகளில் 5 முதல் 7 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் வர 60 சதவீத வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் கார்நிகோபார் பகுதியில் 5.5 ரிக்டர் முதல் 6 ரிக்டர், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 5.5 முதல் 6 ரிக்டர், இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 7 ரிக்டர், ஜப்பானின் ஹோன்சு பகுதியில் 6.5 ரிக்டர், ஈரானில் 6.2 ரிக்டர் என்ற அளவில் பூகம்பம் வரலாம். வரும் 22-ம் தேதி முதல் 28-ம் தேதிக்குள் பூகம்பம் வருவதற்கு 60 சதவீத வாய்ப்பு உள்ளது.

காஷ்மீரில் 15-ம் தேதிக்கு பிறகு பூகம்பம் வரும் என்று ஒரு வாரம் முன்பே கூறினேன். அங்கு 12-ம் தேதி பூகம்ப அறிகுறி தென்பட்டது.

இவ்வாறு வேங்கடநாதன் கூறினார்.

தரவு - தமிழ்முரசு

'விடுதலை' தலையங்கம்

எது குறுகிய வாதம்`கல்கியாரே?




கேள்வி: தமிழகத்தில் இன்னும் பகுத்தறிவுப் பக்குவம் ஏற்படாமல் மக்கள் காசி, ராமேசுவரம் என்று போவதும், நெற்றி யில் விபூதி, குங்குமம் பூசுவதும் தமிழக முதல்வருக்கு வேதனையாக இருக்கிறதாமே?

பதில்: `பகுத்தறிவு என்பது, சமய நிராகரிப்பு, கடவுள் மறுப்பு என்ற குறுகிய நோக்கைவிட்டு வெளியே வருவது முதல்வருக்கு நல்லது. கோயிலுக்குப் போவதும், திருநீறு குங்குமம் பூசுவதும் மூட நம்பிக்கை வட்டத்துக்குள் வராது. பகுத்தறிவு வாதமே இன்றைய விண்வெளி யுகத்தில் எல்லாம் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது.

இது `கல்கி வார இதழில் இந்த வாரம் (26.8.2007, பக்கம் 66) இடம்பெற்றிருக்கும் பகுதியாகும்.

(1) கடவுளுக்கு உருவம் கிடையாது, தூணிலும், துரும்பிலும் இருப்பான் என்று ஒரு பக்கத்தில் கூறிவிட்டு இன்னொரு பக்கத்தில் கோயில் கட்டி கடவுளுக்கு ஆயிரக்கணக்கான உருவங்கள் வடித்து, கடவுளுக்குப் பெண்டாட்டிகள் வைப்பாட்டிகள், பிள்ளைகள் என்று புராணங்கள் எழுதி வைத்து, ஆண்டு முழுமையும் விழா கொண்டாடிக் கொண்டு இருப்பது - அவர்கள் கூறும் ஆன்மீகத்துக்கே எதிரானதா இல்லையா?

(2) சர்வ சக்தி வாய்ந்தவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் பேசிவிட்டு, இன்னொரு பக்கத்தில் பக்தர்கள் தங்கள் குறைகளைச் சொல்லவேண்டும் என்றும், கண்ணீர் விட்டுக் கதறவேண்டும் என்றும், கடவுளுக்கு நேர்த்திக் கடன்கள் செய்யவேண்டும் என்பதும், முரண்பாடா இல்லையா?

(3) கோயிலுக்குச் சென்று வணங்கினால், கோயில் குளத்தில் குளித்தால், புண்ணிய நதிகளில் நீராடினால் பஞ்சமா பாதகங்கள் தொலைந்து போகும் என்ற பிராயச்சித்தங்களை மதத்தில் ஏற்பாடு செய்து வைத்திருந்தால், நாட்டில் ஒழுக்கம் வளருமா என்கிற கேள்விக்கு என்ன பதில்?

(4) கோயிலுக்குச் செல்லும் பக்தர்களிடத்தில் தட்சணை வாங்குவதும், தரிசனம் காண்பதற்குப் பல வகையான கட்டணங் களை வைத்திருப்பதும் (சுயவந) அதிகக் கட்டணம் கொடுத்தால் சீக்கிரத்தில் கடவுள் சிலையைத் தரிசிக்கலாம் என்கிற ஏற்பாடு மூலம் - கோயில் என்பது ஒரு வியாபார நிறுவனம் என்று ஆகிறதா இல்லையா?

(5) திருநீறு பூசினால் எல்லா பாவங்களும் போகும் என்பதும், செத்துப் போன பிணத்துக்குத் திருநீறு பூசினால்கூட அவனுக்கு மோட்சம் கிடைக்கும் என்பதும், `கல்கி சொல்லும் பகுத்தறிவு வட்டத்துக்குள் வருகிறதா?

(6) லிங்கம், நாமம் போன்றவற்றிற்குக் கூறப்படும். விளக்கங் களும், தத்துவங்களும் ஆபாசமாக உள்ளனவே - (நாமத்தின் இரு கோடுகளும் விஷ்ணுவின் தொடை என்பதும், நடுவில் இருக்கும் சிகப்புக் கோடு என்பது விஷ்ணுவின் `குறி என்று கூறப்படுகிறதே!). இதனை அருவருப்பாக `கல்கி கூட்டம் கருத வில்லையா? நெற்றியில் படம் வரைந்துதான் மதத்தையும், பக்தியையும் பறைசாற்ற வேண்டுமா?

(7) பக்தி என்பது இப்போது பேஷனாகப் போய்விட்டது. வர்த்தக மனப்பான்மையாகிவிட்டது என்று சங்கராச்சாரியார் 1976 மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த அகில இந்திய இந்து மாநாட்டில் பேசியதற்கு என்ன பதில்?

`என் அனுபவத்தில் சொல்லுகிறேன், பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று திருமுக கிருபானந்த வாரியாரே `ஆனந்தவிகடன் பேட்டியில் (22.12.1991) கூறினாரே - இதற்கு மேலும் யார் வக்காலத்துப் போட்டுப் பேசவேண்டும்?

(8) கோயில்களில் என்னென்ன அசிங்கங்கள் நடக்கின்றன - அர்ச்சகர்களின் களியாட்டங்கள் எத்தகையவை என்பதை யெல்லாம் சர்.சி. ராமசாமி அய்யரின் கமிஷன் அறிக்கையே வெள்ளையாக, பச்சையாக எடுத்துக் கூறியதே - குஜராத் மாநிலம் சுவாமி நாராயண் கோயில் அர்ச்சகர்கள், கோயிலையே அந்தப் புரமாக்கி நடத்திய லீலைகள் வண்டி வண்டியாக ஊடகங்களில் உலா வந்ததே - இதற்கெல்லாம் என்னதான் பொருளாம்?

(9) இன்றைய விண்வெளி யுகத்தில் எல்லாம் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது என்று மங்களம் பாடுகிறதே கல்கி.

உண்மை நிலை என்ன? அமெரிக்காவின் நேச்சர் என்ற விஞ்ஞான இதழின் கணிப்பு என்ன?

1914 ஆம் ஆண்டில் கடவுள் நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் 72 சதவிகிதம். 1999 இல் 90 சதவிகிதம் என்று கூறியிருக்கிறதே `கல்கி கூற்றில் ஏதாவது உண்மை இருக்கிறதா?

மனித சமூகத்தின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களுக்குப் பகுத்தறிவைப்பற்றி கவலையிருக்கிறது - மூட நம்பிக்கை ஒழிக்கப்படவேண்டும் என்ற அக்கறையிருக்கிறது.
மூட நம்பிக்கை வளர்ந்தால்தான், பக்தி கொழித்தால்தான் தங்களின் உயர்ஜாதி ஆதிக்கம் நிலைக்கும் என்ற எண்ணத்தில் உள்ள `கல்கிகளுக்கோ, பகுத்தறிவுவாதம் குறுகிய கண்ணோட்டமாகப்படுகிறது.

எந்தவிதத்திலும் கலைஞரைக் குறைகூற வேண்டும் என்பதில் அக்கறையாக உள்ளவர்கள் என்னதான் எழுதமாட்டார்கள்.

மூடத்தனம் விரிந்ததாம் - பகுத்தறிவுவாதம் குறுகியதாம் - இதுதான் `கல்கி கூறவிரும்புவது - புரிந்துகொள்ளுங்கள்!

தரவு - விடுதலை

வடபழனி முருகன் கோவிலில் 30ந்தேதி கும்பாபிஷேகம்

சென்னை வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் 30ந்தேதி (வியாழக் கிழமை) நடைபெறுகிறது. கும்பாபிஷேத்தையொட்டி யாக சாலை பூஜைகள் 27ந்தேதி திங்கட் கிழமை துவங்க உள்ளதாக கோவிலின் அறங் காவலர் குழுத் தலைவர் சீர்காழி சிவ.சிதம்பரம் மற்றும் கோவிலின் துணை ஆணையரும், நிர்வாக அதிகாரியு மான பரஞ்சோதி ஆகியோர் தெரிவித்தனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 24ந்தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் துவங்குகின்றன. 27ந்தேதி திங்கட்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.

யாகசாலையில் 108 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 350 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் மேற்கொள்வார்கள். தமிழகத்தின் தலைசிறந்த 12 ஓதுவார்கள் கும்பாபிஷேக பூஜைகளில் பங்கேற்கிறார் கள். வரும் 30ந்தேரி வியாழக்கிழமை காலை 830 மணி முதல் 9 மணிக்குள்ளாக மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டு அவர்கள் அனைவரும் எவ்வித சிரமுமின்றி மனநிறை வோடு முருகனை தரிசிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

லேசர் ஒளிவிளக்கு அலங்காரம்

கும்பாபிஷேகத்தையொட்டி கலை நிகழ்ச்சிகளும், லேசர் ஒளிவிளக்கு அலங்காரமும், 29,30 தேதிகளில் பல வண்ண வான வேடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே மொபைல் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.

காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன. கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படவுள்ளன. ஆங்காங்கே தொண்டு நிறுவனங்கள் சார்பிலும், கோவிலின் சார்பிலும் குடிநீர், மோர், அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் மராமத்து பணி மற்றும் பஞ்சவர்ணம் தீட்டும் பணி, ஓவியங்களை வரைதல், புதிதாக விமானத்துடன் கூடிய சண்முகர் சன்னதி, நான்கு ராஜகோபுரங் களையும் புதிதாக மாற்றி அமைத்தல். கிழக்கு மற்றும் தெற்கு ராஜகோபுரங்களில் தங்க கலசங்களை பொருத்துதல், தங்கக் கொடி மரம் அமைத்தல், பொன் ஊஞ்சல், வெள்ளி கதவுகள் பொருத்துதல், புதிய தேர் வடிவமைத்தல் உள்ளிட்ட 66 பணிகள் 32க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் சுமார் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் சீர்காழி சிவ. சிதம்பரம், துணை ஆணையர் பரஞ்சோதி தலைமையில் அறங்காவலர்கள் செ. கண்ணப்பன், எம். பழனி, கண்மணி சீனிவாசன், ஆ. மணிமாறன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் பலரும் சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:

கலியுக வரதனாகிய கந்தபெருமான் உலகம் உய்யும் பொருட்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்துக் கொண்டும் அருள்பாலித்துக் கொண்டும் அருள்மிகு வடபழனி ஆண்டவராக இக்கோவிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலானது சென்னை மாநகரின் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கிழக்கு மேற்காக ஆற்காடு சாலையையும், தென்புறமுள்ள 100 அடி சாலை ஆலந்தூரையும், வடபுறமுள்ள சாலை செங்குன்றத்தையும் இணைக்கிறது.

கனவில் தோன்றிய முருகன்...
கி.பி. 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொண்டை நாட்டின் புலியூர் கோட்டம் என்னும் இந்த திவ்ய திருத்தலத்தில் அண்ணாசாமி நாயகர் எனும் பெரியவர் முருகப்பெருமான் மீது மாசற்ற பக்தி கொண்டு தனக்கு உற்ற நோய் நீங்கப் பெற்று தென் பழனியில் இருந்து பழனி ஆண்டவரின் திருவுருவப் படம் பெற்று அப்படத்தினை தரிசித்து வந்தார். திருத்தணி மற்றும் திருப்போரூர் போன்ற முருகன் குடி கொண்ட தலங்களுக்கு அடிக்கடி சென்று தரிசித்து வரும் அவரது கனவில் ஒரு நாள் "முருகன்' தோன்றி தாங்கள் வசிக்கும் இடத்திலேயே நாம் குடி கொண்டுள்ளோம் என கூறக் கேட்ட பின்னர் தாம் இருக்கும் இல்லத்தையே கோவிலாக அமைத்து பழனி ஆண்டவரின் படத்தை வைத்து பூஜை செய்து வந்துள்ளார்.

பக்தர்கள் துயர் துடைக்க அடிக்கடி குறி சொல்லியும், தனது நாக்கினை அறுத்து இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தி பின்னர் நாக்கு நன்கு வளர்ந்த பின்னர் இவர் கூறும் குறி பலிக்கும் வகையில் பெருந்திரளாக மக்களை ஈர்க்கும்படி இருந்துள்ளது.

தலைமுடி காணிக்கை
இத்தலம் மூலவர் அருள்மிகு வடபழனி ஆண்டவரின் மூலம் சிறப்பு பெற்றுள்ள தாகும். நினைத்தது நடக்க வடபழனி ஆண்டவரை வழிபடும் பக்தர்களின் வேண்டுதலை விரைந்து தீர்த்து வைக்கின்ற காரணத்தினால், பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்கள், காணிக்கையாக தலைமுடி செலுத்துதலும், வேல், ரொக்கம் போன்றவை உண்டியலில் செலுத்துதலும் பால் காவடி, புஷ்ப காவடி எடுத்தலும் தனி சிறப்பானதாகும்.

இவ்வாறு சிறப்புகள் பல பெற்ற இக்கோவிலில் பக்தர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அவர்களின் நன்கொடையினைக் கொண்டே தெற்கு ராஜகோபுரம் 72 அடி உயரத்தில் கட்டி முடித்து 1972ல் முதல்முறையாக மகா கும்பாபிஷேம் சிறப்புடன் நடந்தேறியது.

4வது முறை கும்பாபிஷேகம் 1984ல் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு 2வது முறையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. 1984ல் புதிதாக தங்க ரதம் ஒன்று அமைத்து பக்தர்களின் பிரார்த்தனைக்காக பயன் பாட்டில் உள்ளது. உட்புறம் அனைத்து இடங்களிலும் கருங்கல் தளவரிசை பளிங்கு கற்கள் பிரகாரங்களில் பதித்து கடப்பை கற்கள் பதித்து 3வது முறையாக 1996ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வரும் 30ந்தேதி கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தரவு - மக்கள் குரல்

தீபாவளிக்கு ஹிந்தி சிவாஜி

சிவாஜி ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் தீபாவளிக்கு ரிலிஸ் ஆகிறது. ஹிந்தி மார்க்கெட்டு ஏற்றார் போல் படத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது. சிறப்புத் தோற்றத்தில் ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் தோன்றுவார் என தெரிகிறது.

மேலும் விவரங்களுக்கு CNN IBN ன் செய்தித் தொகுப்பினை பார்க்கவும்

சஞ்சய் தத்துக்கு ஜாமீன் கிடைத்தது

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட்டிருந்த பிரபல ஹிந்தி நடிகர் சஞ்சர் தத்துக்கு இன்று சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது.

சூர்யா, கார்த்தி மீது ரூ. 80 லட்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார் டைரக்டர் அமீர்

'பருத்தி வீரன்' படத்தை தயாரித்ததற்காக தனக்கு 80 லட்சம் ரூபாயை வட்டியுடன் தர வேண்டும் என்று கேட்டு நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் மீது இயக்குனர் அமீர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் டைரக்டர் அமீர் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:
நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தியிடம் 2005-ம் ஆண்டு 'பருத்திவீரன்' கதையை கூறினேன். அவர்களுக்கு கதை பிடித்திருந்ததால், ஞானவேல் ராஜா என்பவரை அறிமுகப்படுத்தி இவர்தான் தயாரிக்கிறார் என்றார்கள். 2006-ம் ஆண்டுவரை பாதி படம் ஷ¨ட்டிங் நடந்தது. இதற்கிடையே ஞானவேல், நடிகர் சூர்யாவை நாயகனாக வைத்து 'சில்லுனு ஒரு காதல்' என்ற படத்தை தயாரித்தார். இதனால் 'பருத்தி வீரன்' படத்தை தயாரிக்க பணம் தராமல் நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், சூர்யா ரூ.47 லட்சம் பணத்தை கொடுத்து நீங்களே (அமீர்) 'பருத்தி வீரன்' படத்தை தயாரித்து வெளியிடுங்கள் என்றார். அதை ஏற்று டீம் ஒர்க் நிறுவனம் சார்பில் வெளியில் பணம் வாங்கி படம் தயாரித்தேன். என் பெயரில்தான் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது.

படத்தை சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஞானவேல் ஆகியோருக்கு போட்டுக் காட்டினேன். படம் நன்றாக இருந்ததால் அவர்கள் மனம் மாறி, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்தனர். தயாரிப்பாளர் சங்கத்தினர் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினர். ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் என்னுடைய டீம் ஒர்க் நிறுவனம் ஆகிய 2 பட நிறுவன பெயரையும் சேர்த்து படத்தில் போட வேண்டும், அதன் பிறகு இருதரப்பின் கணக்கு வழக்கும் பார்த்து தயாரிப்பாளர் சங்கம் இறுதி முடிவு எடுக்கும், இதற்கிடையில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் ரீமேக் ரைட்ஸ், டப்பிங் ரைட்ஸ், டி.வி. ரைட்ஸ் போன்றவற்றை விற்கக்கூடாது என அவர்கள் கூறினர்.

அதன்படியே, இரண்டு நிறுவனம் பெயரையும் போட்டு படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் எனக்கு தெரியாமல் இப்படத்தை வேறு மொழிக்கு விற்பதற்கான முயற்சியை ஞானவேல் செய்து வருகிறார். மேலும் விளம்பரங்களில் எனது பட நிறுவமான டீம் ஒர்க் பெயரை போடாமல் புறக்கணிக்கிறார். இது ஒப்பந்தத்தை மீறிய செயல். எனவே எனக்கு ஏற்பட்ட செலவான ரூ. 80 லட்சத்தை வட்டியுடன் தர உத்தரவிட வேண்டும். மேலும் மாற்று மொழி உரிமையையோ, டி.வி. ரைட்சையோ எனக்கு தெரியாமல் யாருக்கும் வழங்கக்கூடாது என உத்தர வேண்டும்.
இவ்வாறு அமீர் கூறி இருந்தார்.

நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம், பிரசாத் பிலிம் லேப் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் விசாரித்து, சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஞானவேல் ஆகியோர் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார். அமீர் சார்பில் வக்கீல்கள் என்.கண்ணன், எஸ்.நம்பி அரூரான் ஆகியோர் ஆஜராயினர்.

தரவு - தமிழ்முரசு

WE(A)eKEND



Namitha is 6 ft tall and weighs 70 kg
Namitha Kapoor is her full name.
A Taurian, Namitha is born on May 10,1981.
Namitha has got a degree in English literature.
In 1998 she won the Miss Surat title and 2001 she came third in the Miss India.
Before getting in to movies Namitha did a few TV commercials like Himani cream, Himani herbal soap, Nile herbal shampoo, Manikchand Ghutka, Arun Ice cream etc.

ஈழத்து 'ஆனிவேர்' இந்தியா வருமா?


எத்தனையோ படங்கள்.... எத்தனையோ நடிகர்கள்... தமிழ்சினிமாவின் ஆணிவேருக்கு அடர்த்தி அதிகம்தான். ஆனால் கடந்த வாரம் நம்மை உலுக்கிய ஆணிவேர், இதயத்தை துளைத்து குருதியில் குளித்ததை என்னவென்று சொல்வது?

ஈழமண்ணில் எடுக்கப்பட்ட படம் இது. நாமறிந்த முகங்கள் அதிகம் இல்லை. நந்தா, மதுமிதா, நீலீமா இவர்கள்தான். மற்றவர்கள் எல்லாம் ஈழ மண்ணில் நடக்கும் கோரத்தாண்டவத்தில் எதையெல்லாமோ இழந்தவர்கள். "தமிழனா பொறந்ததுதான் நாங்க செய்த பாவமா?" என்று கடவுளை கேட்கிறான் இளைஞன். கன்னத்தில் அறைந்துவிட்டு போவது மாதிரி இருக்கிறது. கடவுளின் கன்னம் வலிக்கும் நாளிலாவது விடிவு கிடைக்கிறதா பார்ப்போம்.

நிஜமா? படமா? என்ற திக்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ஜான். போர்க்களத்தில் பூ பூக்கும் என்பதையும் சொல்லி, காதலை இழையோட விட்டிருக்கிறார் ஆங்காங்கே! கவர் ஸ்டோரிக்காக இலங்கையின் யுத்த பகுதிக்கு வந்திறங்கும் நிருபர் மதுமிதா, கவர் ஸ்டோரிக்கு ஏற்றமாதிரி புகைப்படங்கள் கேட்க, "எங்களின் வேதனை உங்களுக்கு கவர் ஸ்டோரியா மட்டும்தான் தெரியுது இல்ல...? வா, இதை வந்து எடுத்துக்கோ" என்று டாக்டர் நந்தா காட்டும் கொடூரங்கள் ஒவ்வொன்றும் நரகத்தின் நகல்கள். "கேவலம் 2500 ரூபாய் பணத்துக்காக எங்களை போட்டோ எடுக்க வந்திட்டே" என்று வெடிக்கும்போது, இதையும் வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் சிலரை எண்ணி வேதனைதான் மிஞ்சுகிறது. தன் மக்களுக்காக, போர்களத்தில் டாக்டராக சேவையாற்றி வரும் நந்தா கடைசி காட்சி வரைக்கும், நடிகனாக வெளிப்படாமல் ஈழ பிரஜையாகவே மாறியிருப்பது வேதனைக்கிடையில் கிடைக்கும் மகிழ்ச்சி.

ஒவ்வொரு காட்சிகள் விரிவதற்கு முன்பும், இது இங்கே நடந்த சம்பவம் என்று எழுத்துக்கள் பதிவு செய்யப்பட, அதை தொடர்ந்து வரும் சம்பவங்கள், வெறும் சம்பவங்கள் அல்ல.... பயங்கரங்கள்! அதிலும், சிங்கள ராணுவ டாங்கிகள் உயிரோடு நசுக்கிய தமிழர்களின் உடல்களை காட்டும் போது, கண்களில் ரத்தமே வந்துவிடுகிறது. ஐந்து லட்சம் பேர் ஈழத்தை விட்டு வெளியேறும் அந்த காட்சியும் பதைபதைக்க வைக்கிறது. நீலிமா கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும், நிருபர் என்றும் பார்க்காமல் மதுமிதா மேல் கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் சிங்கள ராணுவத்தின் முன்பு மனிதாபிமானத்தின் மரியாதை என்ன என்பதையே காட்டுகிறது.

இவை எல்லாவற்றையும் எப்படி படமாக்கினார்கள் என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது. ஏனென்றால் யுத்த பூமியில் ஆர்ப்பாட்டமாக உபகரணங்களை பயன்படுத்த முடியாத சூழ்நிலையே நிலவுமல்லவா? ஒளிப்பதிவாளர் சஞ்சய் மிக,மிக பாராட்டுக்குரியவர். பாராட்டுகளை அள்ளிச் செல்லும் மற்றொருவர் கலை இயக்குனர்.

படத்தை இயக்கிய ஜான் மகேந்திரன், தமிழின் அற்புதமான இயக்குனர்களில் முன்னோடியான மகேந்திரனின் புதல்வர். இந்தியாவில் எப்படியாவது இந்த படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்று நம்புகிறார். "வன்னி பகுதியில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களை தவிர பிற இடங்களில் புலி என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. அது போல யாரையும் ஆதரித்து இந்த படத்தில் கருத்துகள் கூறப்படவில்லை. என்ன நடந்தது என்பதை மட்டுமே சொல்லியிருக்கிறோம். படத்தை இந்தியாவில் திரையிட அனுமதி கிடைக்கும்Õ" என்று நம்புவதாக கூறுகிறார்.

அந்நிய தேசங்களில் சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகளில் படத்தை திரையிட்டிருக்கிறார்கள். சுமார் 30 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது ஆணிவேர்.

வெறும் சுண்ணாம்பு கட்டிகளையே வைரங்களாக காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிற தமிழ்சினிமாவில், இதுபோன்ற படங்கள் என்னவாக வைக்கப்படும் என்பதெல்லாம் பிறகு இருக்கட்டும்... முதலில் காட்சிப்படுத்தும் பாக்கியமாவது வாய்க்குமா?

தரவு - தமிழ்சினிமா.காம்

'ஆர்யா'-விமர்சனம்

பூரணம் விஸ்வநாதன், அரிவாளை சுழற்றி ஆக்ஷன் ஹீரோவானால் எப்படியிருக்கும்? பாவனாவுக்கு அப்படியரு கேரக்டர். அந்த அதிர்ச்சியிலிருந்தே மீள முடியாத நமக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை தருகிறது ஆரியா. சிட்டியை கலக்கும் தாதாவான பிரகாஷ்ராஜின் செல்ல தங்கச்சி பாவனா. கல்லூரியில் சீட் கேட்டால் கல்லூரியையே வாங்கி தருகிற அளவுக்கு பாசம். ஆனால், பாவனா லவ் பண்ணும் மாதவனை வாங்கி தர அவர் எடுக்கிற முயற்சிகளும், அதை எப்படி எதிர்கொள்கிறார் மாதவன் என்பதும்தான் படம்.

டாக்டருக்கு படிக்கும் பாவனா ஒவ்வொரு நாளும் கல்லூரிக்கு வருவார். ஆனால் படிக்க அல்ல. அங்கிருக்கும் ஆசிரியர்களை அழ வைப்பதற்கும், நோ பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தி கலாட்டா செய்வதற்கும்தான். ஆனால், வெளியூரில் இருந்து மேற்படி கல்லூரிக்கு படிக்க வரும் மாதவன், இந்த நவீன நீலாம்பரியின் அட்டகாசத்திற்கு அடங்காமல் அவரை பரிதவிக்க விடுகிறார். தன் அண்ணனிடம் சொல்லி எப்படி எப்படியெல்லாமோ மாதவனை மடக்க நினைக்கிற பாவனாவுக்கு கடைசியில் கிடைப்பது தோல்விதான். ரவுடி வீட்டில் பெண்ணெடுப்பதா என்று ஒதுங்கி போகும் அவரையே ரவுடியாக்கிவிட்டால் என்ன என்று அண்ணன் பிரகாஷ்ராஜுக்கு யோசனை தருகிறார் பாவனா. மாதவனை சீண்டுகிறார்கள் முடி வளர்த்த புண்ணியவான்கள். (தமிழ்சினிமா ஸ்டண்ட் மேன்கள்தான்) இவர்கள் உபயத்தில் இரண்டு மூன்று சண்டைக்காட்சிகள் அரங்கேறுகிறதே தவிர, மாதவனின் மனசில் மாற்றம் மட்டும் ம்ஹ§ம்...

கடைசியில் எப்படி பாவனா-மாதவன் ஒன்றிணைந்தார்கள் என்பதோடு சுபம். பாவனாவின் அழகான பூ முகத்திற்கு பொருந்தாத கேரக்டர். எப்படியாவது சரி பண்ணிவிடலாம் என்று மூக்குத்தியெல்லாம் போட்டு சமன் செய்திருக்கிறார்கள். ஆனால், ஒரு டயலாக்கில் நான் அப்பா அம்மாவோடு இருந்திருந்தா இப்படி இருந்திருக்க மாட்டேன். என்னை தூக்கி வளர்த்தது ஒரு ரவுடி. என்னை ஸ்கூலுக்கு அழைச்சுட்டு போனது ஒரு ரவுடி, என்னை சுற்றி ரவுடிகள் மட்டுமே இருக்கும்போது நான் மட்டும் எப்படி நல்லவளா இருக்க முடியும்? என்ற அவர் கேட்கிறபோது, சரிதானே என்றுதான் தோன்றுகிறது.

பாவனாவின் வில்லத்தனங்களில் ஒன்றை மட்டும் ரசிக்க முடிகிறது. மாதவனின் தங்கச்சியை கடத்திக் கொண்டு போய் காலையில் இருந்து இரவு வரை அவருக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தே அழ வைப்பது....

மாப்பிளை ரவுடியாகிவிட்டார் என்று நினைத்து சந்தோஷப்படும் பிரகாஷ்ராஜ், எல்லாம் காட்சிகளிலும் அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டு போகிறார். என்னதான் ரவுடி என்றாலும், போலீஸ் கமிஷனரை போல ஜெயிலுக்கு போய் பூட்டை திறந்து ரவுடிகளை விடுவிப்பதெல்லாம் அநியாயம் சாமி.

முதல் படத்தில் பார்த்த மாதிரியே இன்னமும் ரகசிய சினேகிதனாகவே இருக்கிறார் மாதவன். குட்மார்னிங் சொல்ல சொன்ன பாவனாவுக்கு, அதிகாலை ஐந்து மணிக்கே அவர் வீட்டுக்கு போய் முகத்தில் பக்கெட் நிறைய தண்ணீரை கொட்டி குட்மார்னிங் சொல்லி கொட்டத்தை அடக்குகிறாரே, சுவாரஸ்யம். எந்த நேரம் கத்தியை எடுப்பாரோ என்று பதைபதைக்க விட்டிருக்கிறார்.

லைசென்ஸ் இல்லாத எம்.எஸ்.ஓக்களாக மாறி, நடக்கிற அத்தனையையும் ரகசியமாகவும், நேரடியாகவும், டி.வி யில் ஒளிபரப்பி உண்மையை ஊருக்கு சொல்லும் நூறாவது க்ளைமாக்ஸ். ஆனாலும் பொன்னம்பலத்தின் மீசை சென்ட்டிமென்ட்டை உள்ளே புகுத்தியது கம்பீரம்.

மாதவனின் தம்பி என்று சொல்லிக் கொண்டு இடைநுழைகிற கேரக்டர், ஒரு சுவாரஸ்யத்திற்கும் உதவவில்லை.

ஏரியா கவுன்சிலர்களின் ஏரியாவையே கலங்கடித்திருக்கிறார் வடிவேலு. அடிமேல் அடிவாங்குகிற வேடம்தான் இந்த படத்திலும். ஆனாலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கிற மாதிரியாகவா நடிக்கிறார். அடேயப்பா...!

மணிசர்மா இசையில் சில்லென்ற தீயே... இனிப்பு.

ஆர்யா, ஜோர்யா..!


விமர்சனம்

தரவு-தமிழ்சினிமா.காம்

4 நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்'' - நடிகர் ஸ்ரீகாந்த்

"ஒரு பெண்ணை ஏமாற்றும் எண்ணம் எனக்கு கிடையாது. வந்தனா பிரச்சினையில், வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடக்கிறது. 4 நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்" என்று நடிகர் ஸ்ரீகாந்த் கூறினார்.

'ரோஜாக்கூட்டம்,' `ஏப்ரல் மாதத்தில்,' `பார்த்திபன் கனவு,' `ஜுட்,' `பம்பரக்கண்ணாலே,' `கனா கண்டேன்' உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீகாந்த், வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்யப்போவதாக 2 மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து வந்தனா குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் காரணமாக, ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் நடைபெற இருந்த திருமணத்தை ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் ரத்து செய்தார்கள்.

இந்த சூழ்நிலையில், வந்தனா திடீரென்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஸ்ரீகாந்த் வீட்டில் குடியேறினார். தனக்கும், ஸ்ரீகாந்துக்கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டதாக அறிவித்தார். "ஸ்ரீகாந்த் எனக்கு முறைப்படி தாலி கட்டியிருக்கிறார். இனிமேல் இந்த வீட்டில்தான் இருப்பேன்" என்று அவர் கூறினார்.

வந்தனா அந்த வீட்டை விட்டு வெளியேற மறுத்ததால், ஸ்ரீகாந்தும், அவருடைய பெற்றோர்களும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினார்கள். சொந்த வீடு இருந்தும் ஸ்ரீகாந்தும், அவருடைய பெற்றோர்களும் கடந்த 2 மாதங்களாக ஓட்டல்களிலும், உறவினர் வீடுகளிலும் மாறி மாறி தங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில், பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஸ்ரீகாந்த், வந்தனாவை ஊர் அறிய திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்ற தகவல் பரவியது.

இதுபற்றி நடிகர் ஸ்ரீகாந்திடம், `தினத்தந்தி' நிருபர் விசாரித்தபோது, அவர் கூறியதாவது:-

"ஒரு பெண்ணை ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, என் வாழ்க்கையிலும் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. நான் நடிகர் என்பதால், என் பிரச்சினை பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது.

மன்னிப்பது, மனித சுபாவம். நல்ல விஷயம். எங்கள் பிரச்சினை பற்றி நாங்கள் வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதில், நல்ல முடிவு ஏற்படும். அதை, 4 நாட்களில் தெரிவிக்கிறேன்."

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

- தினத்தந்தி

பெருவில் கடும் நிலநடுக்கம் : 17 பேர் பலி



லிமா : பெரு நாட்டில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருவில் கடற்கரை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் பலியானார்கள். ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் பெரு மற்றும் அண்டை நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தரவு - தினமலர்

WE(A)eKEND



படத்தை பெரிதாக்க நமீதாவை கிளிக்கவும் :-))

தரவு- தமிழ்முரசு

செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் !

நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்தேசியக்கொடி ஏற்றினார்.

நமது நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி இன்று சுதந்திர தின வைரவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அவர் பேசுகையில், விவசாயத்துறையில் வளர்ச்சி தேவை என்று வற்புறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், விவசாயத் துறைக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காக அதிக அளவில் செலவிடப்படும் என்றும் கூறினார். நாட்டில் 8 புதிய ஐஐடிகள், 7 புதிய ஐஐஎம்கள், 5 அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி இந்திய இன்ஸ்டிடியூட்கள், 20 தகவல் தொழில் நுட்ப இந்திய இன்ஸ்டிடியூட்கள் ஆகியவை அமைக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி டில்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 10 ஆயிரத்துக்கு அதிகமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். செங்கோட்டைக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதேப்போல மற்ற மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் தேசியக்கொடியேற்றி சுதந்திரத்தை போற்றினார்கள். தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி தேசியக் கொடி ஏற்றினார். காலை 8.30 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்வர் கருணாநிதி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் சாதனையாளர்களுக்கு தமிழக அரசின் விருதை வழங்கி பேசினார். அப்போது தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பேசிய அவர், இந்தியாவின் இதர மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டியாக இருக்கிறது என்று அண்மையில் சோனியா பாராட்டியதை நினைவு கூர்ந்தார். மேலும் நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும்.இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலுல் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்ததந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இந்திய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடந்த விழாவில் ஆஸ்திரேலியாவுக்கான் இந்திய தூதர் சுக்லா தேசியக்கொடியேற்றினார்.

சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அனைத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தரவு - தினமலர்

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்....

தென்மாவட்ட திசை நோக்கி வேண்டுகிறேன்! - கலைஞர் கவிதை



அய்யா கலைஞரே; அமர்த்தியா சென்

ஆய்ந்தறிந்து வெளியிட்ட ஆழமான கருத்தை;

அன்றாடம் எழுதும் மடலில் குறிப்பிட்டு

உழவுத் தொழிலும் தொழிற்சாலைப் பெருக்கமும்,

ஒன்றுக்கொன்று முரணானதேயில்லை யென்று

ஒன்றையொன்று தழுவி வளர்வதே உயர்வான பொருளாதாரம் என்று;

ஒப்பற்றதோர் கருத்தை உரைத்துள்ளார் - மிக நன்று!

ஒரு பகுதியில் நிலத்தையெடுத்தங்கே ஆலை அமைக்கும்போது,

வருங்காலத்தில் அவ்வாலை தர இருக்கும் வருமானத்தையும்

ஒரு கணக்கிட்டு அந்நில விலைக்கு ஈடாகவோ;

அல்லால் சில மடங்கு மிகையாகவோ வழங்குவது தான்

அந்நிலமுடையார் அகமகிழச் செய்யும் செயலாகும் - அதனால்

அமர்த்தியா சென் அறிவித்துள்ள கருத்தை ஏற்கின்றேன், என –

அருங் கவிஞர் வைரமுத்து சொன்ன போது,

கண்ணீர் கலந்த மகிழ்வுடனே அவர் படைத்த

"கள்ளிக்காட்டு இதிகாசம்" நூலின் பெயரை நினைவூட்டினேன்.

அவரோ; தண்ணீரில் பல கிராமங்கள்,

அடியோடு மூழ்கிப் போக அன்றொரு நாள்

வைகை அணை கட்டுதற்காக

வகைப்படுத்திய ஏற்பாட்டில்

வெள்ளக்காட்டில் மிதந்தனவே கிராமங்கள் என ஏங்கி

உள்ளம் நோக முடித்திருந்தார் நூலை எனினும் ஒரு வகையில் ஆறுதல் எமக்கு!

வைகையினால் வளம் பெருகும், செழிக்கும் சிற்றூர் பேரூர்கள்;

வயல்களிலே பயிர் குலுங்கும்!

பாதிப்பு சிலருக்கே எனினும்

பல்வேறு நன்மை கிட்டுமே பலருக்கு என்று

கள்ளிக்காட்டு இதிகாசமென எழுதிய நூலில்

வடுகப்பட்டிக் கவிஞர்

வார்த்தைகளால் அல்ல;

வடித்துள்ளார் கண்ணீரால் -

ஆயினும் அணையினால் அந்தப் பகுதி வளம்

வாய்ந்து வாலைக் குமரி போல்

இயற்கை அழகு கூட்டி

ஏழ்மை போக்குவது கண்டு

இருவரும் ஆறுதல் பெற்றோம்

அங்கு வாழ் மக்கள் எல்லோரும் தான்!

இது போல;

சாத்தான்குளம் பகுதியும்

வளமிகு வாழ்வு - நலமிகு வாழ்வு பெற்றிட

வேலை வாய்ப்பு இளைஞர்க்குக் கிட்டிட

பாலைவனத்தைப் பசுஞ்சோலையாக்கிட

தொழில் வளம் தொடங்கலாமெனத்

தோன்றிய எண்ணம் தொடர்ந்திட இயலாமல்

தொல்லைகள் பல்லுருவில் படையெடுப்பது காண

எல்லையிலாத் துயரம் எமை வாட்டுவதாலே

இந்தியப் பெரு நாட்டில்

இந்த ஒரு பிரச்சினைக்காக

எத்தனை கட்சிகள் கொடி பிடித்துப் பயணங்கள்

எத்துணை எத்துணை பேட்டிகள் -

இடைத் தேர்தல் போல் நடைபெறும்

இடையறாப் பிரச்சாரங்கள் -

இந்தத் தொல்லைதனை இப்போது எண்ணிப் பார்த்து

இரு பிரிவாய் கருத்து மோதல் தவிர்த்து

எப்போதும் போல் இருக்கட்டும்

இனிய சாத்தான்குளம் என்று

திட்டத்தை ஒத்தி வைத்தால் அது

திருட்டுக் கனிமம் எடுப்போர்க்கு

தித்திப்புச் செய்தியாகும் - அதனாலே

திட்டமிட்டவாறு அமைச்சர் குழு ;

திங்களன்று ஆய்வுக்கு வரும்போது

தெரிவித்திடுக தெளிவான கருத்தையென்று

தென் மாவட்ட மக்கள் வாழும்

திசைநோக்கி வேண்டுகின்றேன்!

ராமதாஸுக்கு கலைஞரின் பன்ச்!

இன்றைக்கு சாத்தான்குளம் பகுதியில் டாட்டாவின் டைட் டானியம் தொழிற்சாலை என்ற தும், ஏ அப்பா! எத்தனை கட்சிகளின் குழுக்கள் - எத்தனை நெடிய பயணங்கள் - எத்தனை கொடிய விமர்சனங்கள் - எத்தனை எத்தனை மாற்று யோசனைகள் - மக்கள் கண்ணீரில் மாளிகை அமைக்காதீர் என்று எவ்வளவு அருமையான மாணிக்க வாசகங்கள் - எங்களூர் திருக்குவளைக்கு மிக அருகிலுள்ள எட்டுகுடி முருகன் ஆலயத்துக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான காவடிகள் வருகிற மகத்தான திருவிழா நடைபெறுவது கண்டு சிறுவனாக இருந்த நான் ரசித்திருக்கிறேன்.

எட்டுகுடியைச் சுற்றியுள்ள எல்லா கிராமங்கள், நகரங்களி லிருந்து ``வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்கள் காவடிகள் எடுத்துவரும் காட்சி, கண்கொள் ளாக் காட்சியாக இருக்கும். சிறப்புக் காவடிகள் என்ற பெயரால் திருக்குவளையிலிருந்து சில கல் தொலைவிலுள்ள திருப்பூண்டி பகுதியிலிருந்து ஆண்டுதோறும் ஒரு காவடிக் குழு வரும். அந்தக் குழுவுக்கு முன் பகுதியில் சிலபேர் கோலாட்டம் அடித்துப் பாடி கொண்டு வருவர்! காவடி வருவதோ கோயிலுக்கு; முருகன் சன்னதிக்கு! ஆனால், கோலாட்டம் அடித்துக் கொண்டு வருபவர்கள் பாடுகிற பாட்டோ பெரியாரைப்பற்றி யதாக இருக்கும்.

"ஈரேழுலகம் புகழுகின்ற எட்டுகுடி முருகா! என்ற பக்தி வரிகளை பாடியவாறு கோலாட்டம் அடித்து ஆடுவார்கள். காரப் பிடாகை பக்கிரிசாமி என்பவர் தலைமையில் வரும் அந்தக் காவடிக் கோஷ்டியினர் - கடவுள் பற்றியும் பாடிக் கொண்டு, ``ஈரோடு தந்த வள்ளல் ஈ.வெ.ரா வாழ்க! வாழ்க!! என்று பின்னர் கோலாட் டம் அடித்து முழக்கும்போது அந்தக் கிராமத்து இளைஞர் களாகிய எங்களை அந்த ஆட்ட மும் பாட்டமும் கிறுகிறுக்க வைத்துவிடும்.

இப்படிப் பல ஊர்களில் இருந்து காவடிகள் வந்து, திருக் குவளை குளத்தில் நீராடிவிட்டு இறுதியாக எட்டுக்குடி செல்லும். காலைமுதல் பல ஊர்க் காவடிகள் வந்து போனாலும், இன்னும் நாகையிலிருந்து``வேணு காவடி வரவில்லையே என்று நாங்கள் வழிமேல் விழி வைத்துக் காத் திருப்போம். கடைசியாக மாலை 6 மணிக்கு அந்த வேணு காவடி வரும். அப்போதிருந்த நாகை ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் வேணு நாயக்கர் எடுத்துவரும் காவடிதான் வேணுக்காவடி எனப்படுவதாகும்.

இப்படிக் காவடி கோஷ்டிகள் ஒவ்வொன்றாக வருவதைப் பார்த்து பார்த்து ரசித்த அதே உணர்வுடன் இன்றைக்கு சாத் தான்குளத்து மக்கள் தி.மு.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அவர்களைச் சந்திக்கச் சாத்தான் குளத்துக்கு வந்து வந்து போவதைப் பார்த்து; `ஓ! இது இன்னைக்கு புதுக் காவடியா? இது என்ன சொல்லப் போவுது என்று காவடியைக் கண்கொட்டாமல் பார்த்து காதுகளை வளைத்துக் கொண்டு கவனிக்கிறார்கள்.

ஆனால், அந்தப் பகுதி மக் களுக்கு ஒரு சந்தேகம்; இதே டைடானியம் தொழிற் சாலையை, இதே பகுதியில் அமைத்திட - ஜெயலலிதா ஆட்சியில் இதே ``டாட்டாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதே, அப்போது எந்தக் கட்சியும் இங்கே வந்து இதுமாதிரி முகாம் அடித்து, முழக்கம் செய்ய வில்லையே - இப்போது மட்டும் தி.மு.க. ஆட்சி என்றதும் இத்தனை கட்சிகள் இங்கே வந்து போர் முழக்கம் செய்கின்றனவே என்ன காரணம் என்று புரியாமல் சில கட்சிகள் மட்டுமல்ல, சாத்தான் குளம் பகுதி மக்களும் விழிக் கிறார்கள்.

இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால், டாட்டாவுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்டு அந்தத் தொழிற்சாலை வருவதற்கான ஏற்பாடுகளையெல் லாம் செய்தவர்களே கூட இப் போது அங்கே அந்தத் தொழிற் சாலை வருவது பற்றி அங்கே சென்று கருத்துக் கேட்பு நடத்து வோம் என்று சென்றிருக் கிறார்கள். வன்முறையைத் தூண்டிவிடும் பேச்சுகள் - ``வரட்டும் பார்க்கலாம் என்று தோளைத் தட்டும் போர் முழக்கங்கள் - தி.மு.க. ஒரு திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்த முனைந்தாலே - இப்படிச் சில கட்சிகள் (தோழமைக் கட்சிகள் உட்பட) அறைகூவல் விடுத்து அரசை மிரட்டத் தொடங்குகின்றன.

16 ஆண்டுகளுக்கு முன்பு சென் னையை அடுத்த சோளிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியம் எடுத்துள்ள நிலத்தை இப்போது திருப்பிக் கொடுக்கச் சொல்லும் ஒரு போராட்டத்தை அறிவித்து, அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தை வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டவர்களே மீண்டும் அந்த இடத்தைத் தங்களிடம் கொடுக்க வேண்டுமென்று கேட்டு கோரிக்கை, அதற்கு ஆதரவாகப் போராட்டம் என்று கூறி, ``சாவியை பிடுங்குங்கள் - பூட்டை உடையுங்கள் என்று ஒரு தலைவர் பகிரங்கமாகச் சொல்லி அது பத்திரிகையிலும் வெளி வருகிறது என்றால், என்ன செய்வது - தமிழகத்தின் அமைதி கருதி தலை குனிந்து கொண்டுதான் இருக்க வேண்டியுள்ளது.

சில அரசியல் கட்சிகள் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டத்தையும் நடத்தலாம் என்று நிலைமை வளர்ந்து விட்டச் சூழலில்,
வன்முறையற்ற - அமைதி - நட்புறவு - தோழமை ஆகிய உணர் வுகளுக்கு நாம் மதிப்பு கொடுப் பதாலேயே; நாட்டைக் காடாக்கும் நாகரிகமற்ற முறைகளுக்குக் கைலாகு கொடுப்பவர்கள் என்ற குற்றத்திற்கு நாமும் ஆளாகி விடுவதா?

இதனை யோசித்து முடிவெடுக்கும் காலம் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறது.

'விடுதலை' தலையங்கம்

`சிவ சிவாவும்`ஓம் சக்தியும்!




பெண்களுக்கான விடுதலை மாநாடுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் ஒரு முக்கியமானது தீப்பொறி போன்ற மனச்சான்றைச் சுடும் பிரச்சினையாகும்.மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுறும் பிரச்சினைதான் அது. உலகம் பூராவும் இந்தப் பிரச்சினை இருக்கிறது என்று சமாதானம் சொல்லுவதைவிட, இந்நாட்டில் நிலவும் இந்தச் சூழ்நிலை கவனமுடன் - கவலையுடன் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.

1901 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின்படி ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண் குழந்தைகள் இந்தியாவில் இருந்தன. 2001 ஆம் ஆண்டில் அது 939 ஆகக் குறைந்துள்ளது. அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 800 பெண் குழந்தைகளே என்று கணக்குக் கூறப்படுகிறது. இதன் காரணமாக உத்தரப்பிரதேசம், பிகார் மாநிலங்களிலிருந்து ஏழைப் பெண்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டு, இந்த மாநிலங்களுக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு குடும்பத்தில் பல ஆண்களுக்கு திரவுபதையாக ஆக்கப்படுகின்றனராம். தங்கள் காம இச்சைக்கான கழிப்பிடமாகப் பெண்களைக் கருதும் கேவலம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.

கருவில் இருக்கும்போதே, அது ஆணா, பெண்ணா என்று அறிவியல் ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, பெண் சிசு என்றால் கருவிலேயே அழித்துவிடுவது என்ற கொடுமை நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் ஒரு கோடி பெண் சிசுக்கள் இவ்வாறாக அழிக்கப்பட்டுள்ளதாக நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
இவ்வார `கல்கி இதழில் இதுபற்றிய பல விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பலரிடமிருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமான சமூக அமைப்பே இதற்குக் காரணம். பெண்களுக்குப் பாதகமாக அமையும் தவறான மத நம்பிக் கைகளையும், மதச் சடங்குகளையும் கடைப்பிடித்து வாழ்ந்து வரும் பெரும்பான்மை மக்களின் மனநிலை மாற்றங்களினால் மட்டுமே இவற்றுக்குத் தீர்வு காண இயலும்.
பெண்கள் எண்ணிக்கை குறைய குறைய ஆண்கள் பெண்களை வேட்டையாடும் கொடுமை ஏற்படக்கூடும். பெண் கடத்தல் அதிகமாகக் கூடும். ஒரு பெண் பல ஆண்களைத் திரு மணம் செய்துகொள்வது என்பது கட்டாயமாகக் கூட ஆகக்கூடும் என்பது போன்ற கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெண் சிசுக் கொலை என்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் கொலை என்ற பிரிவின்கீழ்தான் (302) கொண்டு வருகிறது. இதில் யார் குற்றவாளியாக ஆக்கப்படுகிறார் என்றால், குழந்தையின் தாய்தான்; இது ஒரு சரியான முடிவாக இருக்க முடியாது. சிசுக் கொலைக்கு ஒரு குடும்பமோ, சுற்றமோகூட காரணமாக இருக்கக்கூடும்.

சிசுக் கொலைக்காக இதுவரை தண்டிக்கப்பட்டவர்கள் யார்? ஏட்டுச் சுரைக்காயாகத்தான் சட்டம் இருக்கிறதே தவிர, நடைமுறையில் பூச்சியம் தான்.நான்கு இடங்களில் தண்டிக்கப்பட்டார்கள் என்கிற நிலை உருவாகும்போது, விளம்பரம் ஆகும்போது அவ்வளவு எளிதாக சிசுக் கொலையில் ஈடுபடமாட்டார்கள்; அச்சம் அவர்களை உலுக்கக் கூடும்.

சிசு ஆணா, பெண்ணா என்று மருத்துவ ரீதியாகச் சொல்லக்கூடாது என்று சட்டம் இருக்கத்தான் செய்கிறது - அதுவும் ஏட்டுச் சுரைக்காய்தான்.சில சொல்லாடல்களை அவர்கள் வைத்துக் கொண்டுள்ள னராம். `சிவ சிவா என்றால் ஆண் குழந்தையாகும்; `ஓம் சக்தி என்றால் பெண் குழந்தையாம். நம் நாட்டு மதம் எவ்வளவுக் கேவலமான காரியங்களுக்குப் பயன்படுகிறது என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆணுக்கு நிகராக பெண்களுக்கு எல்லா வாய்ப்புகளும், உரிமைகளும் (கல்வி, வேலை வாய்ப்பு, பொருளீட்டல்) கிடைக்க உத்தரவாதம் செய்யப்படுமேயானால், பெண்கள் சுமை என்ற எண்ணம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும் என்பது தந்தை பெரியாரின் முடிவு.
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வெளிச்சம்தான் இந்த இருளுக்குக் கிடைக்கும் விடையாக இருக்க முடியும்.

வெகுண்டெழுந்த மன்மோகன் - இடதுசாரிகளுக்கு எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் பின்வாங்க மாட்டோம்.ஆதரவை வாபஸ் பெற்றாலும் கவலை இல்லை -இடதுசாரிகளுக்கு பிரதமர் அதிரடி பதில்


அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் மறுபரிசீலனை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற விரும்பினால் அப்படியே செய்யட்டும் என்றும் பிரதமர் தெளிவுபட கூறிவிட்டார். இதனால், டெல்லி அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான 123 அணு சக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு பலவழிகளில் பாதிப்பு ஏற்படும் என எதிர்க்கட்சிகள் குறை கூறிவந்தன. இந்த ஒப்பந்தத்துக்கு ஐ.மு. கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பார்லிமென்டில் இந்தப் பிரச்னையை பெரிதாக எழுப்புவோம் என்றும் இடதுசாரிகள் கூறின.

இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பார்லிமென்டில் 14 மற்றும் 16-ம் தேதிகளில் விவாதம் நடக்க உள்ளது. விவாதத்தின்போது கையாள வேண்டிய உத்திகள் பற்றி இடதுசாரி முன்னணி தலைவர்கள் டெல்லியில் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர். அதன்பின், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் குருதாஸ் தாஸ் குப்தா, டி.ராஜா, மார்க்சிஸ்ட் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது, "எங்கள் எதிர்ப்பை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மாற்ற மாட்டோம் என பிரதமர் கூறியிருக்கிறார். எங்கள் கோரிக்கையை ஏற்று அணுசக்தி ஒப்பந்தத்தை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். அது என்னவென்று பிரதமருக்கும் எங்களுக்கும் தெரியும்" என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.

இடதுசாரி தலைவர்களின் இந்தப் பேட்டியால் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், பதவியை அவர் ராஜினாமா செய்யப் போவதாகவும் நேற்று வதந்தி பரவியது. ஆனால், இதை மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மறுத்துள்ளார்.
இதற்கிடையே, 'தி டெலிகிராப்' என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங், அணுசக்தி ஒப்பந்தத்தில் அரசு உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி மறுபேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பே இல்லை. இது ஒரு மதிப்புக்குரிய ஒப்பந்தம். இதில் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை சிறிதளவு கூட விட்டுக் கொடுக்கப்படவில்லை. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வளர்ச்சியை மேம்படுத்தும். அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதிலிருந்து பின்வாங்க முடியாது.

ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இடதுசாரிகள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும். அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெற விரும்பினால், அதன்படியே செய்யுங்கள் என அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்.

இந்த ஒப்பந்தத்தை இடது சாரிகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவுடன் அவர்களுக்கு ஏதோ பிரச்னை இருப்பதுபோல் தெரிகிறது. வியட்நாம், சீனா போன்ற நாடுகள் எல்லாம் எந்த அச்சமும் இல்லாமல் அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்கள் செய்கின்றன.
நான் கோபப்படவில்லை. கடுமையான வார்த்தைகளையும் உபயோகிக்க விரும்பவில்லை. இடதுசாரி தலைவர்கள் என்னுடன் பணியாற்றுபவர்கள். ஆனால், அவர்கள் எங்களுடன் சேர்ந்து செயல்படவும் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற விரும்பினால் வாங்கிக் கொள்ளட்டும் என பிரதமர் வெளிப்படையாக அறிவித்திருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



தரவு - தமிழ்முரசு

WE(A)eKEND...




"பள்ளிக்கூடம்" - விமர்சனம்

சிலேட்டு பருவத்து கதையை சொல்லி மனசில் 'பச்சை' குத்தியிருக்கிறார் தங்கர் பச்சான். ஒவ்வொரு பள்ளிக்கூடமும் வெறும் கட்டிடங்கள் அல்ல. கலெக்டர்களையும், கலைஞர்களையும், கனவான்களையும் பதியம் போடும் தோட்டங்கள் என்கிறது படம். தங்கரின் இந்த சமூக பணிக்கு வந்தனம். அதே நேரத்தில் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் எல்லை மீறியிருப்பதற்கு கண்டனம்.

பல தலைமுறைகளாக படிப்பு தந்த பள்ளிக்கூடத்தை காலி செய்ய சொல்கிறார்கள் நில உரிமையாளர்கள். அதே பள்ளியில் படித்த பழைய மாணவர்களையும் திரட்டி பள்ளியை மீட்பதென்று முடிவு செய்கிறது நிர்வாகம். பள்ளிக்கூடத்தை காப்பாற்ற பழைய மாணவர் தங்கர்பச்சான், காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் மற்றொரு பழைய மாணவரான நரேனை பார்க்க போகிறார். இதே பள்ளியில் காதல் வளர்த்த நரேனின் இதயத்தை, அதே காதல் உடைத்து கண்ணாடி சில்லுகளாக பெயர்த்து வைத்திருக்க, அந்த கிராமத்து பக்கமே வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் நரேன். இவரின் பழைய காதலியும், அந்த பள்ளிக்கூடத்தின் இப்போதைய டீச்சருமான சினேகாவை மறுபடியும் அவர் சந்தித்தாரா? காதல் செடி மீண்டும் துளிர்விட்டதா? பள்ளிக்கூடம் மீட்கப்பட்டதா? அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடை சொல்கிறது கண்ணீர் சிந்த வைக்கும் அந்த க்ளைமாக்ஸ்.

இயக்கியிருப்பதோடு ஒரு கேரக்டரில் நடித்தும் இருக்கிறார் தங்கர். காஞ்சிபுரத்தில் கலெக்டராக இருக்கும் சின்ன வயது தோழனை பார்க்க பை நிறைய பதார்த்தங்களோடு வரும் அவர், அதிகாரிகளால் தடுக்கப்படுவதும், வந்திருப்பது பால்ய நண்பன் என்று தெரிந்து கலெக்டரே தேடி ஓடி வருவதும், சிலிர்க்க வைக்கிறது. இது சினிமாதான் என்று புத்தி சொன்னாலும், அந்த செலுலாய்டு நண்பனுக்கு மரியாதை தெரிவிக்கிறது மனசு. நரேனின் பழைய சட்டையெல்லாம் எடுத்து பைக்குள் செருகிக் கொண்டு, "வெற்றி, இது போதுண்டா... தினம் ஒரு சட்டையா போட்டு ஊருக்காரனுகளை அசத்திபுட மாட்டேன்" என்று வெள்ளந்தியாக பெருமைப்படும் தங்கரை ரசிப்பதா? படிக்காத நண்பனின் நட்புக்கு முன்னே பணமும், பதவியும் பெரிய விஷயமல்ல என்று உருகும் நரேனை ரசிப்பதா? அற்புதம்!

திரைப்பட இயக்குனராகவே நடித்திருக்கிறார் சீமான். எம்.ஜி.ஆரின் புகழுக்கு இழுக்கு உண்டாக்கவே எடுக்கப்பட்ட பாடல் ஒன்றை இவர் இயக்குவது போல் காட்சி. பழி-தங்கருக்கு, பாவம்-சீமானுக்கு! (கானா உலகநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆருக்கு ஜெராக்ஸா? கடவுளே)

அந்த பள்ளியிலேயே படித்து, அந்த பள்ளிக்கே டீச்சராகி, அந்த பள்ளியையும் மீட்க போராடும் சினேகாவின் காதல் கதையில் யதார்த்தம் நிறைய. அந்த பள்ளிக்கூடம் மாதிரியே நிலைகுலைந்து போயிருக்கிறது சினேகாவின் அழகு. கிராமத்து ஏழை டீச்சர்களின் அச்சு அசலான பிம்பம். பழைய காதலனான நரேனை நேருக்கு நேர் பார்க்க கூட திராணியில்லாமல் ஓடி ஒளிந்து, அழுது மருகுவது, அதிர வைக்கிறது. கோகிலா டீச்சர் இல்லாத இந்த பள்ளிக்கூடத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை.

நன்றாக போய் கொண்டிருக்கும் கதையில் ஸ்ரேயாவின் கேரக்டரை உள்ளே நுழைத்ததெல்லாம் ஓ.கே. பிஞ்சு குழந்தைகளை பிஞ்சிலே பழுத்தவர்கள் போல் காண்பிப்பதுதான் கொடுமை. எல்லா மாணவர்களுக்கும் டீச்சரின் மேல் ஈர்ப்பு வரும். அதை வேறு மாதிரி காட்டி, கஸ்தூரிராஜாவாக மாறியிருக்க வேண்டுமா தங்கர்?

அறுபது வயது முதியவர், தான் படிக்கிற காலத்தில் கண்டெடுத்த கொலுசை பற்றியும் அதை தவற விட்ட பெண்ணை நேசித்த கதையையும் சொல்ல, அந்த பெண் நான்தான் என்று மேடைக்கு வரும் அந்த நடுத்தர வயது பெண்மணியும், அதை தொடரும் காட்சிகளும் ரசனைக்குரியது. இதே போல் மனதில் நிற்கக்கூடிய இன்னொரு பாத்திரம் மீனாள். (தங்கர்பச்சானின் மனைவி)

ஒரு சிதிலமடைந்த பள்ளிக்கூடத்தை பார்த்தவுடனேயே பரிதாபத்தை ஏற்படுத்த வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் ஜே.கே. பரத்வாஜின் இசையில் இதுவரை இல்லாத பரிமாணம். அப்படியே கரைந்து போக வைக்கும் பின்னணி இசை ஒருபக்கம் என்றால், 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' என்று அவரே குரலெடுத்து பாடும்போது கண்ணீர் முட்டுகிறது நமக்கு. 'காடு பதுங்குறமோ...' என்ற பாடலில் ஜீவனை குழைத்திருக்கிறார் பாடலாசிரியர் விவேகா.

காலத்தின் பேரிரைச்சல் தாங்க முடியாமல் திசைக்கொருவராக தெறித்து, செவிடாகி போனவர்களை தன் பக்கம் திரும்ப வைத்திருக்கிறது இந்த பள்ளிக்கூடம். ஒரு முறையாவது அவரவர் பெஞ்சில் திரும்பவும் அமர வேண்டும் என்று நினைக்க வைத்த தங்கரின் பெயரில், ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம்.

நடிகை ஜோதிகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

கடைசி செய்தி:

நடிகை ஜோதிகாவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 0925 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது.



குட்டி ஜோ..விற்கும், சூர்யா தம்பதியருக்கும் வாழ்த்துக்கள்....


செய்திகளை முந்தித்தருவது....மிளகாய்...மிளகாய்..மிளகாய்...

சற்றுமுன் நடநத செய்திகளை உடனுக்குடன் அறிய மிளகாய்...மிளகாய்...

யுவன்-சுஜயா விவாகரத்து ஏன்? - -அதிர்ச்சியூட்டும் பின்னணி!

தமிழ்த்திரையுலகின் மற்றொரு ஜோடியும் "டமார்" ஆகிவிட்டது. வழக்கமாக நடிகைகள்தான் "பொசுக்"கென்று அவிழ்த்து போடுவார்கள் (தாலியைதான்) ஆனால் இந்த வகையில் சேராத, யுவன்சங்கர்ராஜா-சுஜயா தம்பதியின் விவாகரத்து, கேட்பவர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.

2002-ல் இங்கிலாந்து சென்றபோது அங்கு சுஜயா என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்தார் யுவன். இருவரும் காதலித்தார்கள். 2003 செப்டம்பர் மாதம் 3-ந் தேதி இவர்களுக்கு லண்டனில் பதிவு திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் சென்னையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரிந்துவிடுவது என்று முடிவெடுத்த இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்து திருமண சட்டம் பிரிவு 13(பி) யின் கீழ் இருவரும் ஒரு மனதுடன் விவாகரத்து கேட்டிருப்பதால் சிக்கல் இல்லாமல் விவாகரத்து கிடைத்துவிடும் என்றே தெரிகிறது.

தம்பதிகள் பிரிந்தது ஏன்? இதுபற்றிய தகவல்களை அறிய கோலிவுட் ஆந்தைகள் சிலவற்றை பிடித்து அவர்களின் காதை கடித்தோம்.

பெயர் சொல்ல விரும்பாத அந்த ஆந்தைகள் கக்கிய செய்திகள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன.

கடந்த 9 மாதங்களாகவே இருவரும் பிரிந்திருக்கிறார்களாம். இளையராஜா குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் சுஜயாவை மிகவும் சிரமப்படுத்தியதாக தெரிகிறது. இதை பலமுறை யுவனிடம் எடுத்துச் சொல்லியும் அவர் காது கொடுத்து கேட்டதாக தெரியவில்லை என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல... திருமணம் ஆகிய சில மாதங்களுக்கு பிறகு நள்ளிரவில் வீடு திரும்புவதையும் சில நேரங்களில் அதுவும் இல்லாமல் வெளியில் தங்கிவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தாராம் யுவன். இதுவும் சுஜயாவை வருத்தமுற செய்திருக்கிறது. அடிக்கடி பாங்காங் பறந்துவிடும் யுவன், அங்குள்ள பாட்டயா, மற்றும் உல்லாச தீவுகளில் சுற்றி வேண்டாத சில பழக்கங்களை கற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில்தான் பிரிவது என்று முடிவெடுத்தாராம் சுஜயா. பரஸ்பரம் பிரிந்துவிடுவது என்ற முடிவை இருவரும் எடுத்தாலும், சுஜயாவுக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை எழுதி தர சம்மதித்திருக்கிறாராம் யுவன்சங்கராஜா.

ஆக, விவாகரத்துக்கு பின் சுஜயா, சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லப்போவதில்லை. இங்குதான் இருக்க போகிறார் என்பது மட்டும் இப்போதைக்கு தெரிகிறது. சங்கீதத்தை நேசிக்கிற யுவனுக்கு சம்சாரம் என்பதும் ஒரு சங்கீதம் என்பது இந்த வயசில் புரியாதோ?


தரவு - தமிழ்சினிமா

மனம் திறக்கிறார் கனிமொழி கருணாநிதி !

தினசரிகளில் இப்போதெல்லாம் ‘கனிமொழி கருணாநிதி’ என்றே குறிப்பிடுகிறார்கள். தமது சுய அடையாளம் குறித்து பெருமைபட்டுக் கொள்ளும் இயல்புடைய கனிமொழி, இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்?

“பள்ளி, கல்லூரியில் என் அதிகாரபூர்வமான பெயர் கனிமொழி கருணாநிதி தான். இத்தனை காலமாக இது போன்று குறிப்பிடாத பத்திரிகைகள், இப்போது குறிப்பிடுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கவிதை என்பது ஆத்மார்த்தமான ஒரு விஷயம் என்பதால் ‘கவிஞர்’ என்றுகூட அடைமொழி கொடுக்க வேண்டாம் என்றுதான் நான் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் .

அவருடனான சந்திப்பிலிருந்து...

தினமும் நாளிதழ்களில் உங்களைப் பார்க்க முடிகிறது... மீடியா உங்களை ஓவராக வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக நினைக்கிறீர்களா?

“மீடியா என்னைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகச் சொல்லப்படுவதுகூட, நான் சமீப காலங்களில் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் காரணமாகத்தான் என்றே
நினைக்கிறேன். நான் என்றைக்கும் மீடியாவை அணுகியது கிடையாது.”

உங்கள் களம், இலக்கியம். முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு துறைக்கு (அரசியல்) வந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

“நிச்சயமாக இல்லை. அரசியல் சூழல், போராட்டங்கள் என்பது நான் நினைவு தெரிந்த நாளிலிருந்தே பார்த்து வளர்ந்த விஷயம். திராவிட இயக்கச் சிந்தனைகள், சமூக நீதி ஆகியவை பற்றிய புரிதலை குடும்பச் சூழலே சொல்லிக் கொடுத்தது. சுருக்கமாகச் சொன்னால் என்னைச் சுற்றி அரசியல் இருந்தது; அதில் நானும் இருந்தேன்.”

நீங்கள் அரசியலுக்கு வந்ததே திணிக்கப்பட்ட நிகழ்வுதான் என்று சொல்லப்படும் கருத்து பற்றி...

“எதுவும் என் மேல் திணிக்கப்படவில்லை. சில விஷயங்கள் என்னிடம் எதிர்பார்க்கப்பட்டபோது, அதற்கு நான் தயாராக இருந்தேன் என்பதே நிஜம்.”

தயாநிதி மாறன் பிரச்னைக்குப் பிறகு நீங்கள் ஏன் களமிறக்கப்பட வேண்டும்? முன்னரே உங்கள் அரசியல் பிரவேசம் நிகழ்ந்திருக்கலாமே?

“தயாநிதி அவர்கள் தொடர்ந்து அதே நிலையில் நீடித்திருந்தால்கூட நான் அரசியலுக்கு வந்திருக்கலாம். தயாநிதி பிரச்னை வருவதற்கு முன்பேயேகூட ‘நான் அரசியலுக்கு வருவேன்’ என்று ஊடகங்கள் ஆரூடங்கள் கூறி வந்தனவே.”

தயாநிதிக்கு நீங்கள் மாற்று என்பதை திட்டவட்டமாக மறுக்கிறீர்களா?

"இரண்டு பேருக்கும் அரசியல் குடும்பப் பின்னணி என்பதுதான் ஒரே ஒற்றுமை. மீடியா, வர்த்தக உலகப் பின்னணியில் வந்தவர் தயாநிதி. அவருடைய அரசியல் நம்பிக்கை, அனுபவங்கள் என்பவை வேறு. கலை, இலக்கியம் பின்னணியுடன் வந்த என்னை அவரோடு ஒப்பிடக் கூடாது. தி.மு.க. போன்ற மாபெரும் இயக்கத்தில் குறிப்பிட்ட ஒருவருக்கு மாற்றாக, தலைவர் குடும்பத்திலிருந்து தான் வர வேண்டும் என்பது கிடையாது. தகுதியுள்ளவர்கள் இங்கே நிறையவே இருக்கிறார்கள்."

ஒரு ராஜ்ய சபை உறுப்பினரின் கடமையாக எதைக் கருதுகிறீர்கள்?

“இதுவரை அதிகம் பேசப்படாத, மக்களுக்குத் தேவையான விஷயங்களை விவாதத்துக்குக் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடுக்கு என் குரல் ஓங்கி ஒலிக்கும். மற்றபடி தி.மு.க. முன் வைக்க விரும்பும் விஷயங்களை என் குரலும் எதிரொலிக்கும்.”

தமிழக மக்களுக்கு உங்களின் பங்களிப்பு என்ன வாக இருக்கும்?

“‘இருக்கும் கட்டமைப்புக்குள் என்ன மாற்றங்களைக் கொண்டு வர முடியுமோ, அதைச் செய்ய முயற்சி செய்வேன். என் வேர்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றன. நான் சார்ந்திருக்கும் இயக்கக் கொள்கைகள் வழிகாட்ட, என்னால் முடிந்ததை தமிழக மக்களுக்குச் செய்ய, தமிழகத்தின் பிரதிநிதியாய் டெல்லி செல்கிறேன்.”

உங்களைப் பற்றிய தமிழக மக்களின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்யப் போகிறீர்கள்?

“என்னால் முடிந்த அளவு உண்மையாகவும், நியாயமாகவும், எதிர்பார்ப்பு ஏதுமின்றியும், மனப்பூர்வமாகவும் மக்களுக்குத் தொண்டாற்றுவேன்.”

அரசியல் பணியால் உங்கள் இலக்கியப் பணிகள் பாதிக்க வில்லையா?

“பாதிக்கவிட்டால்தானே பாதிக்கும். தனிநபர் சரியான திட்டமிடுதல் மூலம் பலவகையான பணிகளைச் செய்துகொள்ள முடியும். இதற்குச் சரியான உதாரணம் என் தந்தை. அவரது இலக்கியப் பணிகள் அரசியலால் பாதிக்கப்படுவதேயில்லை.”

ஒரு தந்தையாக - அரசியல்வாதியாக உங்களுக்கான கலைஞரின் அறிவுரைகள் என்ன?

“முக்கியமாக என் தந்தை எனக்குச் சொன்னது ‘எப்போதும் எதிர் கருத்துக்கள் என்னவென்பதை தெரிந்துகொள்’ என்பதுதான்.”

அமைச்சராவதற்கு முதல்கட்டமாகத்தான் எம்.பி. பதவி தரப்பட்டதா?

“எத்தனையோ எம்.பிக்கள், எம்.பிக்களாகவே இருந்து விடுகிறார்கள். சிலருக்கு நேரடியாக அமைச்சர் ஆகும் வாய்ப்பே கிடைக்கிறது. எனவே முதற்கட்டம், இரண்டாவது கட்டம் என்றெல்லாம் ஏதுமில்லை. எல்லாம் அவசியத்தைப் பொறுத்தது. எனக்குத் தெரிந்து அதுபோன்ற யோசனை எதுவும் பரிசீலனையில் இல்லை.”

முரசொலி மாறன், தயாநிதி மாறன் என்று கலைஞர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்தான் டெல்லிப் பிரதிநிதியாக இருந்தார்கள். அந்த வரிசைக்குத்தான் தாங்கள் தயாராவதாகப் பேச்சிருக்கிறதே!

“டெல்லிப் பிரதிநிதியாக இருக்கப் பல தகுதி வாய்ந்த ஸீனியர் தலைவர்கள் தி.மு.க.வில் இருக் கிறார்கள். எனக்கு அந்த பொறுப்பு வகிக்க அனுபவமும் இல்லை; அது இருக்கிறது என்று நினைத்துக் கொள்வதற்கு நான் முட்டாளும் இல்லை!”

ஜனாதிபதி தேர்தலில் தங்கள் கட்சியினர் வோட்டளித்தது தமக்குத் தெரியாது என்று ஜெ. கூறியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

“இந்த ஜனாதிபதி தேர்தலை ஒரு நகைச் சுவை என்று வர்ணிக்கத் தொடங்கி, பிறகு தாமே அதில் ஓர் உச்சகட்ட நகைச்சுவைக் காட்சியை நடத்தி முடித்திருக்கிறார் ஜெயலலிதா...”

கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.வை விமர்சிக்கத் துவங்கி விட்டனவே!

“ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம் ஆட்சித் தேரை ஓட விடுங்கள். முட்டுக்கட்டை போடா தீர்கள் என்று முதல்வரே மிக அழகாகச் சொல்லி யிருக்கிறாரே!”

தேர்தலுக்குத் தேர்தல் முன்னேறி வரும் விஜயகாந்த் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

“இது ஜனநாயக நாடு; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். மக்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில் வாழ்த்துக்கள்.”

உங்கள் வளர்ச்சியில் உங்கள் அம்மாவின் பங்கு?

“தாயாக மட்டுமல்லாமல் பல விஷயங்களில் எல்லா விதங்களிலும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார். சரியாகச் சொல்வதென்றால் வார்த்தைகளில் அடக்கி விட முடியாத அளவுக்கு என் வளர்ச்சியில் அவரது பங்களிப்பு இருக்கிறது.”

சமீபகாலமாக பெண் சிசுக் கொலை பற்றிய செய்திகள் மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னையில் ஒரு பெண்ணியவாதியாக - சமூக ஆர்வலராக - அரசியல்வாதியாக என்ன செய்யப் போகிறீர்கள்?

“சட்டம் போட்டெல்லாம் இந்தக் கொடுமையை ஒழிக்க முடியாது. பிரச்னையின் ஆணிவேரை அறுக்க வேண்டும். பெண்களைப் பெற்றால் எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாகத் தடுமாற வேண்டும் என்ற நினைப்புதானே இதுபோன்ற கொடுமைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, கல்வி, விழிப்புணர்வின் மூலம் இது போன்ற கொடுமையை ஒழிக்க முடியும். ‘பெண் குழந்தையைக் காப்பாற்றுவோம்’ என்ற இயக்கத்தில் என் பங்கு சிறிய அளவில் இருக்கிறது. இன்னமும் அதிக கவனம் செலுத்துவேன்.”

- ப்ரியன்

தரவு - கல்கி