பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் - இலங்கை ராணுவம் அறிவிப்பு

பா.நடேசன், புலித்தேவன் உடல் கண்டெடுப்பு...

Sri Lankan Special Forces soldiers have found bodies of three key LTTE leaders identified as Nadeshan, Pulidevan and Ramesh during the mop operations in the last LTTE foothold this morning( May 18). According to the latest information, the remaining LTTE cadres are now boxed into a 100m x 100m area, North of Vellamullivaikkal.

Nadeshan who was a former police constable of Sri Lanka police and known to be the political head of the outfit. Pulidevan was known to the head of "LTTE peace secretariat" while Ramesh was one of the most senior special military leader of the outfit.

பிரபாகரன் மகன் கொல்லப்பட்டார்...

தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் திரு।வேலுபிள்ளை பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோனியின் உடல் இலங்கை ராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசினை மேற்கோள் காட்டி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன।

http://www.defence.lk/new.asp?fname=20090518_03

விடுதலைப் புலிகள் சரண்? ராணுவ முகாமில் பிரபாகரன் உடல்?

கொழும்பு: இலங்கை ராணுவத்தின் இறுதிக் கட்டத் தாக்குதல் கடுமையாக இருப்பதால், புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மக்களைக் காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. மேலும் உயரி் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இலங்கை அரசிடம் சரண் அடையவும் புலிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கிடையில் புலிகள் தலைவர் பிரபாகரனின் உடல் ராணுவ முகாமில் இருப்பதாக உறதி செய்யப்படாத தகவல் கூறுகிறது.

விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து விட்டதாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே அறிவித்துள்ளார். ஜோர்டான் நாட்டில் ஜி-11 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது உரையாற்றிய ராஜபக்ஷே, விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் தோற்கடித்து விட்டதாக கூறினார். . இலங்கையில் பல ஆண்டு காலத்துக்கு பிறகு பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புலி தலைவர் பிரபாகரன் குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை . ராஜபக்ஷே ஜோர்டான் பயணத்தை பாதியில் முடித்துக்கு கொண்டு இலங்கை திரும்பினார். ராணுவ வெற்றியை தொடர்ந்து இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க அரசியல் தீர்வு காணப்படும் எனவும் ‌தெரிவித்தார். இலங்கைக்கு திரும்பிய அதிபர் ராஜபக்ஷே , தாய் மண்ணுக்கு தலை வணங்கி, இலங்கையை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்து விட்டேன் என கூறினார். விமான நிலையத்தில் ராஜபக்ஷேவை வரவேற்க சர்வ சமய தலைவர்களும் வந்திருந்தனர்.ராணுவ அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் பால் சாதம் ஊட்டி மகிழ்ந்தனர். இலங்கை மக்கள் பட்டாசு வெடித்து விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை கொண்டாடினர்.

முல்லை தீவில் 150 உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா? அவரது நிலை என்ன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கைப்பற்றப்பட்ட உடல்களை அடையாளம் காணுப்பட்ட பிறகு தான் பிரபாகரன் இறந்துவிட்டது குறித்து உறுதி செய்யப்படும் என ராணுவ தரப்பு கூறுகிறது.

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிளித்த தகவல் துறை அமைச்சர் அணுரா பிரியதர்சன் கூறியதாவது : இலங்கையில் விடுதலைப்புலிகள் மிக குறுகிய பரப்பளவில் உள்ள இடத்துக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் பிரபாகரன் நிலை என்பது குறித்து ராணுவ கேம்பில் இருந்து அதிகாரபூர்வ செய்தி வந்தவுடன் தான் உறுதி செய்ய முடியும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- தினமலர்

பிரபாகரன் வீரமரமடைந்தாரா ?




தமிழீழ விடுதலை புலிகளின் நிறுவனரும், தலைவருமான திருவேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசினை மேற்கோள் காட்டி சிஎன்என்பிஎன் தொலைகாட்சி செய்தி வெளியிடுட்டு வருகிறது

அவரின் உடல் ராணுவ முகாமொன்றில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த தொலைகாட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டு வருகிறது

இந்த செய்தி பிற ஊடகங்களினால் உறுதி செய்யப்படவில்லை.....செய்திகள் மேம்படுத்தப்படும்....

------

என்டிடிவி இந்த செய்தி உறுதிசெய்யப் படவில்லை என செய்தி வெளியிடுகிறது சண்டை தொடர்வதாகவும் தமிழீழ விடுதலைபுலிகள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரசாயன ஆயுதங்களை கொண்டு போரிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன।

http://ibnlive.in.com/news/lankan-army-claims-prabhakaran-dead/92805-2.html

வாக்கு எண்ணிக்கை துவங்கியது....வைகோ பின் தங்குகிறார்.

நாடு முழுவதும் இன்று காலை எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதுவரையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.

தேர்தல் திருவிழா - வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.....

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை, காலை எட்டு மணிக்கு துவங்குகிறது. அடுத்த சில மணி நேரங்களில் பெரும்பாலான முடிவுகள் வெளியாகத்துவங்குமென தெரிகிறது.

T20உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

M S Dhoni (c), Virender Sehwag (v-c), Gautam Gambhir, Suresh Raina , Yuvraj Singh , Yusuf Pathan , Rohit Sharma, Harbhajan Singh, Zaheer Khan, Ishant Sharma , Praveen Kumar, RP Singh, Ravindra Jadeja, Pragyan Ojha and Irfan Pathan .

கலைஞர் மருத்துவமனையில் அனுமதி !

தமிழக முதல்வர் டாக்டர்.கருணாநிதி உடல்நலக்குறைவினால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.

கடுமையான முதுகுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பழம்பெரும் நடிகர் பாலாஜி காலமானார்






சென்னை, மே 2- பழம்பெரும் நடிகர் பாலாஜி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் டயாலிஸிஸ் சிசிச்சை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.

இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

இவர் எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக இவர் திரைப்படங்களையும் தயாரித்து வந்தார். வசந்த மாளிகை, படித்தால் மட்டும் போதுமா, எங்க மாமா உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தினமணி

சென்னை அருகே ரயில்கள் மோதல் : தீவிரவாதிகள் சதியா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் வியாசர்பாடி- ஜீவா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் ரயில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. மேலும் பெட்டிகள் தீப்பிடித்துக் கொண்டது. இதில் 3 பெட்டிகள் தீக்கிரையாயின.

டேங்கர் ரயில் காலியாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ரயில்வே பொதுமேலாளர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், பயணிகள் ரயிலை ஓட்டிச் சென்றவர் ரயில்வே ஊழியர் அல்ல என்றார். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற நிலையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் பயணிகள் ரயில் காலை 05.15 மணிக்கு புறப்படவேண்டிய ரயில் வழக்கத்திற்கு மாறாக அதிகாலை 04.50 புறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை 6 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

விபத்து குறித்து உடனடி தகவல்களைப் பெற உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். அதற்கான தொலைபேசி இலக்கங்களை அவர் வெளியிட்டுள்ளார். அவையாவன : 044-25357386, 044--25357398.

via- Dinamalar

'Combat operations reach conclusion, priority to rescue hostages' - SL Government

Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.

More information will follow.

இலங்கையில் போர் நிறுத்தம் - கலக்கிய கலைஞர்

க்லைஞரின் காலவரையற்ற உண்ணாநிலையின் எதிரொலியாக இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இலங்கை அரசு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக இலங்கை ராணுவம் வலுதாக்குதல்களை நிறுத்திக் கொண்டு புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுமென தெரிகிறது.

Find some other place for Eelam: Lanka to Jaya

Sri Lanka on Sunday took strong objection to AIADMK chief J Jayalalithaa's remarks that Tamil Eelam was the only solution for the ethnic conflict, saying she should "find some other place to give Eelam" but not on the island.

"I don't know what these people are talking about. I think she must find some other place to give Eelam but not in Sri Lanka," said Defence Secretary Gotabhaya Rajapaksa.

He also took objection to Jayalalithaa's allegation that the video footage provided by spiritual guru Sri Sri Ravishankar, who recently visited the IDP centre in Wavuniya in eastern Sri Lanka, showed that the Tamils were being treated badly by the government.

The AIADMK chief made these comments at a public meeting in Tamil Nadu on Saturday.

"When Ravishankar met President (Mahinda Rajapaksa) after visiting the IDP camps he said it was one of the best camps he has ever seen in the world," the powerful official, who is the brother of the President, said.

Rajapaksa said he could understand the concern for the fate of civilians expressed by the international community and else where.


via- NDTV

குடியுரிமையை ரத்து செய்து வைகோவை நாடு கடத்த வேண்டும் - நடிகர் கார்த்திக் ஆவேசம்

வைகோவின் குடியுரிமை ரத்து செய்து அவரை நாடு கடத்த வேண்டும் என தேனியில் நடந்த கூட்டத்தில் நடிகர் கார்த்திக் பேசினார்.

தேனியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் பேசியதாவது:

தேனி தொகுதி வேட்பாளராக மாவட்ட செயலாளர் ரமேஷை நிறுத்துகிறேன். நான் போட்டியிடும் தொகுதி குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடுவேன். இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும். நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை.

புதிய கட்சி தொடங்கியவர் தலைவர்களையும், முதல்வரையும் தரக்குறைவாக பேசி வருகிறார். ஒரு கட்சி கிழட்டு கட்சி என்று தேசிய கட்சியை விமர்சனம் செய்கிறது. அதற்கு மறுநாள் அக்கட்சியை சேர்ந்தவர் நான் கிழவியல்ல... குமரி தான் என விளக்கம் தருகிறார். ஒருவர் கிழவியா..குமரியா? என்பதா இப்போதுள்ள நாட்டின் பிரச்னை. அதனால் நாட்டின் எதிர்காலம்தான் பாதிக்கப்படுகிறது. அரசியல்வாதிகளின் சொத்தில் 3 ல் ஒரு பங்கை எடுத்தால் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

முக்குலத்தோர் ஓட்டுவங்கியை பெறும் அரசியல் கட்சி, அந்த இனத்திற்கு எவ்வித நன்மையும் செய்தது கிடையாது. இப்போதுள்ள அரசியல்வாதிகளில் என்னை தவிர யாரும் உண்மை பேசுவதில்லை. அதனால் என்னை கூட்டணியில் சேர்க்க கட்சிகள் அஞ்சுகின்றன. பொய்களை மாறி, மாறி அறிக்கையாக கட்சிகள் வெளியிட்டு கொண்டிருக்கின்றன. நான் பதவிக்காக ஆசைப்படவில்லை. வரும் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வரும் 17ம் தேதிக்கு பிறகு நான் பேசப்போகும் உண்மைகளால் மற்ற அரசியல் கட்சிகள் கதிகலங்க போகின்றன.

இவ்வாறு கார்த்திக் பேசினார்.

தரவு - தினகரன்


Jade dies on Mother's Day

Jade Goody, the reality television star who was suffering from cervical cancer has died.

Jade Goody has died in her sleep aged 27 from cervical cancer
Jade Goody has died in her sleep aged 27 from cervical cancer Photo: MATRIX PHOTOS

Goody died in her sleep in the early hours of this morning, her publicist Max Clifford said.

She died at her home in Upshire, Essex, at 3.14am on Mother's Day.

Goody's mother Jackiey Budden said: "My beautiful daughter is at peace."

Mr Clifford said Goody's mother Jackiey and husband Jack Tweed were at her side. A family friend, Kevin Adams, was also there.

"I think she's going to be remembered as a young girl who has, and who will, save an awful lot of lives," he said, referring to how her public battle with cancer has raised awareness of the disease.

"She was a very, very brave girl," he said.

"And she faced her death in the way she faced her whole life - full on, with a lot of courage."

He said it was "ironic" that the 27-year-old - who had two young sons Bobby, five, and Freddie, four - had died on Mother's Day.

Mr Clifford said he hoped Goody's family would be left in peace to grieve.

News that Jade Goody was suffering from cervical cancer led thousands more women than usual to seek information about the disease.

On the day the reality TV star was diagnosed in August 2008, Cancer Research UK witnessed 10 times the usual number of hits to its website.

Before Jade was diagnosed, the cervical cancer section of the website received around 2,000 to 3,000 hits each day.

On the day of her diagnosis, this jumped to 32,000 and visitor numbers have been two to three times higher than usual ever since.

அண்மை செய்தி :சகஜ நிலைக்கு திரும்பியது!

கொழும்பு சகஜநிலைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இலங்கை வான்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், வான் படை தலைமையமே விடுதலை புலிகளின் தாக்குதல் இலக்காயிருந்திருக்க வேண்டுமென்றும்,ஆனால் அருகிலிருந்த வருவாய்துறை அலுவலகம் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார். உயிர் மட்டும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்க்கிடையில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களும், விமானியின் உடலும் தங்கள் வசம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புலிகளின் விமானம் கொழும்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது!

இன்று இரவு 9.10 மணியளவில் விடுதலைபுலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பு நகருக்குள் ஊடுறுவியதாக தெரிகிறது. இலங்கை அரசின் ராணுவ தலைமையகம், கொழும்பு துறைமுகம் ஆகிய நிலைகளின் மீது தாக்குதல் நடந்ததாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கொழும்பு நகரம் முழுவதும் மின் தடைசெய்யப்பட்டு இருளில் மூழ்கியதாக தெரிகிறது, தொலை தொடர்பு வசதிகளும் செயலிழந்தன.

இந்த நிலையில் புலிகளின் விமானமொன்று கொழும்பு சர்வதேச விமான வளாகத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிசெய்யப் படாத தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.