WE(A)eKEND




WE(A)eKEND





சானியா மிர்சா தோல்வி....


ஆஸ்த்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியிலிருந்து சானியா மிர்சா வெளியேறினார்.சற்று முன் முடிவடைந்த மூன்றாவது சுற்று ஆட்டமொன்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லிம்ஸிடம் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் போராடி தோற்றார்.















பொங்கல் போனஸ் பற்றிய அறிவிப்புகள்...
இலங்கை அழைப்பை இந்திய பிரதமர்
நிராகரித்தது...
ஆஸ்த்திரேலிய தொடரினை ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம்
எடுத்த முடிவுகள்...
ICC பணிந்த செய்தி...
டாட்டாவின் NANO CAR படம்
மற்றும் செய்தி...
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிய செய்தி..
இந்திய
கிரிக்கெட் அணியின் மகத்தான வெற்றி...
டென்னிஸ்ஸில் சானியா மிர்சாவின் தோல்வி....


என சூடான செய்திகளை உடனுக்குடன் தமிழ் வலைபதிவுகளில் செய்திகளை முந்தித்தருவது....



மிளகாய் மட்டுமே.....

இந்தியா வென்றது....


ஆஸ்த்ரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது.
India in Australia 3rd Test
Day 4: Session 3
India won by 72 runs
1st Innings
India 330
Australia 212
2nd Innings
India 294
Australia 340
Commentary/reports: Day 1 Day 2 Day 3 Detach Scoreboard





சற்றுமுன் நடந்த செய்திகளை முந்தித்தருவது....மிளகாய்...மட்டுமே

பிரிவோம் சந்திப்போம் - திரை விமர்சனம்

மார்கழி மாசத்து கோலமும், மத்தியில் வைக்கப்பட்ட பூசணிப்பூவும் போன்றவை கரு.பழனியப்பனின் படங்கள். இரைச்சல்களையே விளைச்சல்களாக நினைக்கிற கோடம்பாக்கத்தில், பழனியப்பனின் படங்கள் இதமான தாலாட்டு.

குத்துப்பாட்டு, குத்தீட்டி சண்டை, இரட்டை கூட அல்ல... ஒற்றை அர்த்தமாகவே ஆகிவிட்ட டயலாக்குகள்.. இவற்றையெல்லாம் தவிர்த்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்துவிட முடியுமா? அதெப்படி? என்பவர்கள் பிரிவோம் சந்திப்போம் படத்தை ஒரு சவாலாகவே எடுத்துக் கொண்டு உள்ளே நுழையலாம்.

விட்டால், ரங்கநாதன் தெருவை அடைத்துக் கொள்ளும் அளவுக்கு உறவுகள் நிறைந்த குடும்பத்தில் சேரன். அதற்கு நேர் எதிராக ஒரே பெண்ணாக பிறந்துவிட்ட சினேகா. இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். தியான மண்டபத்து அமைதியை, திருவிழா கூட்டம் அசத்துகிறது. இந்த உறவுகளும், அவர்கள் தரும் அன்பும் நிரந்தரம் என்று மகிழும் சினேகாவின் ஆசையில் திடீரென்று விழுகிறது டிரான்ஸ்பர். சேரனே விரும்பி ஏற்கும் இந்த டிரான்ஸ்பர் அட்டக்கட்டி மலைப்பிரதேசத்துக்கு தனிக்குடித்தனமாக இடம் பெயர்கிறது. அங்கே...? தமிழ்சினிமாவே பார்த்திராத வில்லன் ஒருவன்! வேறு யாருமல்ல, தனிமை! சேரன் வேலைக்கு போய்விட தனிமையில் இருக்கும் சினேகா படுகிற வேதனையை அப்படியே தியேட்டருக்குள் 'பாஸ்' பண்ணுகிறார் இயக்குனர். இருவரும் மறுபடியும் சொந்த ஊருக்கே திரும்பிவிட மாட்டார்களா என்று ஏங்குகிற நேரத்தில் ஒரு திடுக் திருப்பம். சற்றே தவிக்க வைத்து வணக்கம் போடுகிறார் இயக்குனர்.

எதிரே நிற்பவரின் நடிப்பையும் சேர்த்து பறிக்கும் வாலியின் வலிமை கொண்டவர் சினேகா. விடுவாரா, இப்படி ஒரு கேரக்டர் கிடைத்தால்? தெரியாத மொழிகளிலும் டப்பிங் பேசுகிற ஆற்றல் அவர் கண்களுக்கு உண்டு. மகிழ்ச்சி, ஏமாற்றம், விரக்தி, வெறுமை எல்லாவற்றையும் நொடி பொழுதில் புரிய வைக்கின்றன அந்த கண்கள். 'நமக்கு எல்லாம் தருகிற அந்த கடவுளுக்கு நன்றி சொல்லணும்' என்றபடி, ஒவ்வொரு முறையும் உண்டியலை நிரப்புவது அழகு. பேச ஆளில்லாமல் தன்னை சுற்றி ஒலிக்கிற சப்தங்களை பதிவு செய்து அவற்றோடு பழக ஆரம்பிப்பது பரிதாபம். நல்லவேளையாக அவரை முழு மனநோயாளியாக்காமல் கரை சேர்க்கிறார்கள்.

சேரன்- சினேகா காதலில் சுவாரஸ்யங்களுக்கும் பஞ்சமில்லை. திருமணத்திற்கு முன்பு சினேகாவை தனிமையில் சந்திக்க விரும்பி, அவர் செய்யும் முயற்சிகளும், அது பலிக்காமல் போய் தவிப்பதும் கலகலப்பு.

ஒரு மருத்துவராக மட்டுமல்லாமல், அந்த ஊரின் செல்லப்பிள்ளையாகவே வலம் வரும் ஜெயராம் சட்டென்று சினேகாவின் மன ஓட்டத்தை புரிந்து கொள்வது ஆறுதல். தானாக மருந்து எடுத்துக் கொள்ளும் பலருக்கு ஜெயராமின் அட்வைஸ் ரொம்ப அவசியமான விஷயம்.

எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமணன் டயலாக்குகள் கரு.பழனியப்பன் ஒரு பொறுப்பான பத்திரிகையாளர் என்பதையும் பறைசாற்றுகிறது. 'ஃபாதர் ஆஃப் நேஷனை, ஃபாதர் ஆஃப் ஸ்டேட் ஆக்கிட்டீங்களே' என்று கவலைப்படுவதை சொல்லலாமா? காந்தியும் மதுக்கடைகளும் குறித்த அவரது கேள்வியில் இருக்கிற நியாயம், நெருப்பு! இரட்டை புலவர்கள் கதையையெல்லாம் சினிமாவில் சொல்கிற அளவுக்கு தைரியத்தை பெற்ற விஷயத்தில் பழனியப்பன், படவுலக ராமதாஸ் ஆகியிருக்கிறார்.

'லைட் புரோன்' என்று தன் கலருக்கு விளக்கம் கொடுக்கும் கஞ்சா கருப்புவின் காமெடி தனி ஆவர்த்தனம்.

கதை மனிதர்களில் ஒருவராக நம்மையும் கடத்திச் செல்கிறது எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு. வித்யாசாகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் மனசை வருடும் மயிலிறகு!

இரண்டாம் பாதியின் துவக்கத்திலிருந்தே சண்டிக்குதிரையாகி அடம் பிடிக்கிறது திரைக்கதை. நேரம்போகாமல் தவிக்கிறார் சினேகா என்ற ஒரு விஷயம் திரும்ப திரும்ப ரிப்பீட் ஆகி, ரசிகர்களை நெளிய வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
பரிசுத்தமான பனித்துளிதான்... தாகம் தணிக்குமா?

ஜல்லிக்கட்டு தடை நீங்கியது....

ஜல்லிகட்டு மீதான தடையினை உச்சநீதி மன்றம் நிபந்தனைகளுடன் நீக்கியுள்ளது.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....

சாதனை படைக்குமா TATA வின் 'NANO'






















டாட்டாவின் 1 லட்சரூபாய் கார் NANO அறிமுகம்...


டாட்டாவின் ஒரு லட்ச ரூபாய் கார் அறிமுகம்...

சுடச்சுட படங்கள்.....

The car will have a three-cylinder 800-cc petrol engine with 33 bhp of power. It will also have a 30-litre fuel tank and four-speed manual gearshift. The car will come with air conditioning, but will have no power steering.


The car will have front disk and rear drum brakes. The company claims mileage of 22 kmpl in city and 26 kmpl on highway.


On Thursday, the $7.8-billion company will unveil its boldest initiative yet, a car that will sell for just Rs 1 lakh, less than half the cheapest car on the market.




செய்திகளை முந்தித்தருவது மிளகாய்...

காதல் கடிதம் - திரை விமர்சனம்



குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பார்த்து எங்களுக்கு பழகிப்போச்சு' என்கிற அந்த அப்பாவின் குரல், அடி வயிற்றை பிசைந்து கொண்டேயிருக்கிறது. காதலின் வலியையும், வாழ்க்கையின் உத்தரவாதமின்மையையும் இதை விட அழுத்தமாக யாரால் சொல்லிவிட முடியும்?

இலங்கையிலிருந்து சென்னைக்கு இசை கற்றுக் கொள்ள வரும் அனிஷா, இங்கே ஸ்ரீபாலாஜியை சந்திக்கிறார். முதலில் பிணக்கமும், இரண்டு மூன்று ரீல்களுக்குள்ளாகவே இணக்கமும் ஏற்படுகிறது இருவருக்கும். காதல் என்ற வார்த்தைக்கு இருவருமே கொண்டிருக்கும் ஒரே அர்த்தம் 'நம்பிக்கையில்லை' என்பதுதான். ஆனால், மனசு 'ஒன்வே'யில் பயணிக்க ஆசைப்படுகிற சாத்தான் ஆயிற்றே? கொஞ்சம் கொஞ்சமாக அனிஷாவின் மேல் காதல் கொள்ளும் பாலாஜி, அதை வெளிப்படுத்துகிற நாளில் இலங்கைக்கு பறந்து விடுகிறார் அனிஷா. 'யோசிக்க கொஞ்சம் அவகாசம் வேண்டும். ஊருக்கு போய் கடிதம் எழுதுகிறேன' இதுதான் அனிஷா பாலாஜியிடம் பேசிய கடைசி வார்த்தை! ஊருக்கு போன அனிஷா காதல் கடிதம் எழுதினாரா? அது பாலாஜியின் கைகளுக்கு வந்து சேர்ந்ததா? இதுதான் முடிவு.

ஹீரோ, ஹீரோயின் இருவருமே புதுமுகங்கள். நடிப்பும் அத்தனை கச்சிதம். வழக்கமாக ஹீரோயின் அறிமுகங்கள் தமிழ்சினிமாவில் எப்படியிருக்கும்? இதில் வேறு மாதிரி. இவரை சிக்னலில் சந்திக்கும் ஹீரோவும் கண்டவுடன் காதல் கொள்ளாமல் மரபை உடைத்திருப்பது ஆறுதல். சங்கீத குருவே சந்தேக குருவான பின்பு, மேற்கொண்டு படிப்பை எப்படி தொடர்வது? தவிக்கும் அனிஷாவுக்கு அற்புதமான ஒரு ஐடியாவின் மூலம் அவரை மீட்கும் ஸ்ரீபாலாஜி பல இடங்களில் ரசிக்க வைக்கிறார். காதலில் விழுந்தபின் இவரிடம் தொற்றிக் கொள்ளும் தயக்கத்தையும் அநாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எஸ்.எம்.எஸ் மூலம் பாடல் கேட்கும் அனிஷாவுக்கு, வேறொரு நேயரின் விருப்பமாக அதே பாடலை ஒலிக்க செய்வது அழகு.

ஸ்ரீபாலாஜி இலங்கைக்கு போய் இறங்கியதும், மொத்த தியேட்டரும் அமைதியாகிவிடுகிறது. என்னவோ நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு மட்டும் மனசை பிசைய ஆரம்பித்துவிடுகிறது. படத்தில் இந்த இலங்கை பகுதி முழுவதும் நமக்கு என்னென்னவோ உணர்வுகளை கொடுக்கிற நேரத்தில், அதை மேலும் கனமாக்குகிறது இலங்கை அறிவிப்பாளர் நடராஜசிவத்தின் நடிப்பு.

ஆரம்ப கூச்சல்களுக்கு (உபயம் காதல் சுகுமார்) நெளிகிற நம்மை, காதல் என்ற மெல்லிய இழையால் கட்டிப் போட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். அதன்பின் இலங்கைக்கு பயணிக்கிற கதையை தன் வசம் இழுத்துக் கொள்கிறது கேமிராவும், இசையும், வசனங்களும்! யாழ்தேவி என்ற இரயிலையும், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத இலங்கையின் உள்ளடங்கிய தமிழர் பகுதிகளையும் பார்க்கும்போது மெய் சிலிர்த்துப் போகிறது. அதுவும் யாழ்தேவியில் என்ற பாடலும், அந்த மெட்டும், அந்த தாளமும் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடல் வரிசையில் அமையும்! இசையமைப்பாளர் உதயா எதிர்கால தமிழ்சினிமாவின் நம்பிக்கை வரவு. ஒளிப்பதிவாளர் பி.ஆர்.ராஜனையும் அந்த வரிசையில் வைக்கலாம். பெயருக்கேற்றார் போல் வசீகர வரிகளை தந்திருக்கிறார் பாடலாசிரியர் வசீகரன்.

சென்சாரின் கத்தரிக்கு சின்ன வேலைகூட தராமல், ஈழத்தின் வேதனையை எடுத்து சொல்லிவிட முடியுமா? ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார் புதுமுக இயக்குனர் முகேஷ்! மனசுக்குள் விதையாக விழுந்து, மரமாக முளைத்து நிற்கும் ஒரு சில பதிவுகளுக்கு மத்தியில், காதல் கடிதமும் ஒரு முக்கியமான பதிவு. சந்தேகமேயில்லை!

தரவு - தமிழ்சினிமா

ICC பணிந்தது....

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கோரிக்கையின் மீதான தனது முடிவினை ICC அறிவித்துள்ளது...

இதன் படி...

நடுவர் ஸ்டீவ் பக்னருக்கு பதிலாக நியிசிலாந்து நடுவர் பில்லி பௌதன் நியமிக்கப்படுகிறார் எனவும்,இந்த முடிவு யாருடைய நிர்பந்தமுமின்றி தொடரின் நலன் கருதி எடுக்கப்பட்டிருப்பதாக ICC தலைவர் கூறியுள்ளார்.

மேலும், ஹர்பஜன் சிங்கின் மேல்முறையீட்டு மனுவின் மீது முடிவு அறிவிக்கும் வரை அவர் தொடர்ந்து விளையாடலாமெனவும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்த்ரேலிய தொடர் ரத்து...?

இந்திய சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீது விதிக்கப்பட்ட தடையின் மீதான மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவினை ICC அறிவிக்கும் வரை,இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயனத்தை இடைநிறுத்தி வைத்திருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இதனிடையே இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணியின் தலைவர்கள் சந்தித்து சமாதான தீர்வு ஒன்றினை எட்டுமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட்வாரியத்தின் தலைவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....

இலங்கை அரசின் அழைப்பை நிராகரித்தார் பிரதமர்...

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இலங்கை அரசின் சுதந்திர தின விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள இலங்கை அரசு விடுத்திருந்த அழைப்பினை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்து விட்டதாக அவரது அலுவலகம் அறிவித்திருக்கிறது.

அந்த நாளில் பிரதமருக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் பிரதமர் கலந்து கொள்ள இயலாது என இலங்கை அரசிறகு கடிதம் அனுப்ப பட்டிருப்பதாக தெரிகிறது.

பொங்கல் போனஸ் முதல்வர் அறிவிப்பு!

சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 30 நாள் சம்பளம்
ஏ, பி பிரிவு அலுவலருக்கு சிறப்பு போனஸ் ரூ.1000
பென்ஷன்தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.300



தமிழக அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியம் போனஸாகவும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்களுக்கு சிறப்பு போனஸாக ரூ. 1000 மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 300 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் பணியாளர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் ஆகியோருக்கு 1999-2000ம் ஆண்டிற்கான 30 நாட்கள் பொங்கல் போனஸும், சிறப்பு போனஸாக ரூ.825ம், 2000-2001-ல் வழங்கப்பட்டது. 2000-2001-ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட இந்த சலுகையினை இந்த அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் 2005-06-ம் ஆண்டுக்கான பொங்கல் போனஸும், சிறப்பு போனஸ§மாக 2007-ம் ஆண்டு பொங்கலையட்டி வழங்கியது.

2006-07ம் ஆண்டிற்கும் இந்த சலுகையினை தொடர்ந்து வழங்குவது என அரசு முடிவெடுத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக போனஸ் வழங்கிடவும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிறப்பு போனஸ் ரூ.825 என நிர்ணயித்து பத்து ஆண்டுகளாகி விட்டதாலும், விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டும் சிறப்பு போனஸை ரூ.1000 என உயர்த்தி வழங்கிடவும், அதே போல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பொங்கல் பரிசான ரூ.150-ஐ உயர்த்தி ரூ.300 என வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.

‘சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் மாதச் சம்பளம் ரூ. 2500 என்ற அளவிலேயே கணக்கிட்டு போனஸ் வழங்கப்படும்.

உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் சத்துணவுத் திட்டப்பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள், வரையறுக்கப்படாத ஊதிய விகிதத்தில் உள்ள சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உட்பட ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு மிகை ஊதியமாக ரூ.1000 வழங்கப்படும்.

இந்த ஆணையின் மூலம் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.267.08 கோடி செலவாகும். இதனால் சுமார் 12.68 லட்சம் அரசு அலுவலர்களுக்கும், 5.38 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.

நடிகை மீரா வாசுதேவன் கண்ணீர் பேட்டி

நடிகை மீரா வாசுதேவன் தனது கணவர் விஷாலிடமிருந்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.

கணவன் செய்த கொடுமைகள் குறித்து மீராவாசுதேவன் கண்ணீர்மல்க கூறியதாவது:
சிறந்த ஒளிப்பதிவாளரான அசோக்குமாரின் குடும்பம் என்பதால்தான் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் 23 வயதிலேயே விஷாலை திருமணம் செய்து கொண்டேன். என்னை படங்களில் நடிக்க வைத்து அந்த பணத்தையெல்லாம் தாங்களே இஷ்டத்துக்கு செலவு செய்தார்கள். என்னிடம் இப்போது ஆயிரம் ரூபாய்கூட இல்லை. எல்லாவற்றையும் அவர்களே எடுத்துக் கொண்டார்கள். எனது பாலிசி, நகை எல்லாவற்றையும் பறித்துக் கொண்டார்கள். எனது பெயரை பயன்படுத்தி நிறைய கடன் வாங்கியிருக்கிறார்கள்.

என் கணவர் விஷால் தினமும் குடித்து விட்டுவந்து அடித்து உதைப்பார். சம்பாதித்த பணத்துக்கு கணக்கு கேட்டால் எல்லோரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தினார்கள். ஏதேதோ மருந்துகளை வலுக்கட்டாயமாக கொடுத்து என்னை மனநோயாளியாக சித்தரித்தார்கள். நான் ஒரு பெண் என்பதால் எனக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களை வெளிப்படையாக காட்ட முடியாது. எனது தாயாருடன் கடந்த 2 வருடமாக பேச விடாமல் செய்தார்கள்.

படப்பிடிப்பிலிருந்து தாமதமாக வந்தால் யாருடன் படுத்துவிட்டு வருகிறாய் என்று கேட்டு அவமானப்படுத்தினார்கள். இரவில் அறையில் படுத்திருந்தால்கூட அருகில் யாராவது படுத்திருக்கிறார்களா என்று என் கணவர் காலால் உதைத்து சோதனை செய்வார். கணவரின் தம்பியும் அம்மாவும் சேர்ந்து என்னை விபசாரத்தில் தள்ள முயற்சித்தார்கள். அதனால் வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு வழக்கு போட்டுள்ளேன்.

பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தின் பெயரை கெடுக்க வேண்டாம் என்று இத்தனை நாள் மவுனமாக எல்லாவற்றையும் தாங்கி கொண்டேன். இப்போது வேறு வழியில்லாமல்தான் எல்லாவற்றையும் பேச வேண்டியுள்ளது. இனி அவருடன் சேர்ந்த வாழும் வாய்ப்பே இல்லை. மாதம் 5 ஆயிரம் ரூபாய்கூட சம்பாதித்து ஒரு மனைவியை காப்பாற்ற அவருக்கு தெரியவில்லை. என் சம்பாத்தியத்தில் வாழ நினைப்பவரோடு எப்படி வாழ முடியும்.
இவ்வாறு மீராவாசுதேவன் கூறினார்.



இது குறித்து மீரா வாசுதேவனின் கணவர் விஷால் கூறியதாவது:

என் அப்பா இயக்க இருந்த ஒரு தெலுங்கு படத்தில் வாய்ப்பு கேட்டு வந்தவர் மீரா. அப்போது அந்த படம் தள்ளிப்போனதால் Ôஎங்கள் குடும்பம் நிறைய கஷ்டத்தில் உள்ளது. எனக்கு சென்னையில் யாரையும் தெரியாது, நீங்கள் எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுங்கள்Õ என்றார். எங்கள் வீட்டிலேயே மூன்று மாதம் தங்கியிருந்து வாய்ப்பு தேடினார். அவருக்காக நாங்களும் வாய்ப்பு தேடினோம். இந்நிலையில் மீராவின் அம்மா, என் மகளை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்டார். நானும் மனிதாபிமான அடிப்படையில் அவரைத் திருமணம் செய்து கொண்டேன்.

எனது வாழ்க்கையையும் வளர்ச்சியையும் ஒதுக்கி வைத்து விட்டு அவருக்காக உழைத்தேன். அவருக்கு மனேஜராக, உதவியாளராக, அவருடைய செல்ல பிராணியை கவனித்துக் கொள்பவராக என்னை மாற்றிக் கொண்டு உழைத்தேன். அப்பாவின் செல்வாக்கு, எனது தொடர்பை பயன்படுத்தி அவருக்கு சினிமா வாய்ப்புகள் வாங்கி கொடுத்தேன். வரவுக்கு மீறி அவர் செலவு செய்தார். நான் எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. நான் சம்பாதிக்கிறேன் செலவு செய்கிறேன் என்பார். மீறி தடுத்தால் கத்தியை எடுத்துக் கொண்டு ”என்னை காயப்படுத்திக் கொண்டு உங்கள் மீது பழிபோடுவேன்” என்று மிரட்டுவார். பின்னர் விசாரித்ததில்தான் அவர் ஒரு மனநோயாளி என்றும் மும்பையில் அதற்காக சிகிச்சை பெற்றதும் தெரிய வந்தது.

பணம் இல்லாமல் சென்னையில் அவர் வந்து கஷ்டப்பட்டபோது அவரது அம்மா உள்பட யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இப்போது அவர் ஒரு நிலைக்கு வந்ததும் அவரோடு ஒட்டிக்கொண்டுள்ள அவரது அம்மாதான் அவரை தூண்டிவிட்டு இப்படியெல்லாம் பேசவும், நடக்கவும் வைக்கிறார். அவர் சொல்லும் எதுவும் உண்மையில்லை என்று மீராவின் மனசாட்சிக்கு தெரியும். இப்போதும் நான் அவரை காதலிக்கிறேன். அவராக எதையும் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன். அதையும் மீறி நடப்பதை நானும் சட்டப்படி சந்திப்பேன்.
இவ்வாறு விஷால் கூறினார்.

தரவு -தமிழ்முரசு

சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்கும் !

விலையை குறைக்காவிட்டால் சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்கும் -தமிழக அரசு எச்சரிக்கை

சிமென்ட் விலையை குறைக்காத தனியார் சிமென்ட் ஆலைகளை அரசே ஏற்கும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இப்போது தனியார் ஆலைகள் உற்பத்தி செய்யும் சிமென்ட் ஒரு மூட்டை ரூ.245க்கு விற்கப்படுகிறது. சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் விலையை குறைக்க அரசு பல முறை எச்சரித்தும், தனியார் ஆலைகள் அசைந்து கொடுக்கவில்லை. பல்வேறு எதிர்க்கட்சிகளும் சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து சிமென்ட் இறக்குமதி செய்து, குறைந்த விலைக்கு விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்னும் தனியார் நிறுவனங்கள் விலையை குறைக்க முன் வரவில்லை.

இந்நிலையில், சிமென்ட் விலையை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்க தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கனிம வளத் துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் திரிபாதி, நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் சண்முகம், தமிழ்நாடு சிமென்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் சத்யகோபால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பணீந்திர ரெட்டி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் கனிமப் பொருள் மற்றும் உலோகங்கள் வணிகக் கழகம் (எம்.எம்.டி.சி.) மூலம், அரசு நிறுவனமான டான்செம் நிறுவனம் உடனடியாக ஒரு லட்சம் டன் சிமென்ட் இறக்குமதி செய்வதற்கான ஆணையை உடனே பிறப்பிப்பது என்று முடிவு செய்யப் பட்டது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சிமென்டை, மாவட்ட மற்றும் வட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் 200க்கும் மேற்பட்ட கிடங்குகளில் இருப்பு வைத்து நேரடியாக நுகர்வோருக்கு அடக்க விலையில் லாபம் ஏதுமின்றி விற்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், டான்செம் தேவைக்கேற்ப நேரடி ஒப்பந்தப் புள்ளி மூலம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஏற்பாட்டினை விரைவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவைகளுக்கெல்லாம் பிறகும் தனியார் சிமென்ட் ஆலை அதிபர்கள் தங்கள் விலையைக் குறைத்துக் கொள்ள முன்வரவில்லை என்றால், பொது மக்கள் நலன் கருதி தமிழகத்திலே உள்ள தனியார் சிமென்ட் தொழிற்சாலைகளை அரசே நாட்டுடமையாக்கிட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.