பிளாஸ்டிக் சர்ஜனை ஏமாற்றிய நடிகை பிபாசா


மார்பக சிகிச்சை செய்துகொண்டு ரூ.2 லட்சம் பீஸ் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் நடிகை பிபாஷா -பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் புகார்




மார்பக சிகிச்சை செய்த டாக்டருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பீஸ் தராமல் இந்தி நடிகை பிபாஷா பாசு ஏமாற்றிவிட்டார் என்ற பகீர் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இந்தியில் தூம்-2, அலக், கார்ப்பரேட், பிராடு, ஓம்காரா, பர்சாத் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை பிபாஷா பாசு. தமிழில் சச்சின் படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். பிலிம்பேர், ஜீ டிவி உள்பட பல நிறுவனங்களின் விருதுகளையும் பாலிவுட் விருதுகளையும் பெற்றவர். சர்வதேச அளவில் போர்ட் நிறுவனம் நடத்திய மாடல் அழகிகளுக்கான போட்டியில் வெற்றி பெற்று Ôசூப்பர் மாடல்Õ என்ற பட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றவர்.

ஆசிய கவர்ச்சிக் கன்னிகள் பட்டியலில் மல்லிகா ஷெராவத், ஐஸ்வர்யாராய் ஆகியோருடன் இவரும் தொடர்ந்து நீடிப்பவர்.இந்நிலையில், மல்லிகா ஷெராவத், ராக்கி சாவந்த் ஆகியோர் அதிக கவர்ச்சி காட்டி நடித்த படங்கள் சூப்பர்ட்டாக அமைந்ததால், மார்பகங்களை பெரிதாக்கிக் கொண்டு கூடுதல் கவர்ச்சி காட்ட பிபாஷா முடிவு செய்தார். தனக்கு ஏற்கனவே காதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மும்பை டாக்டர் அசோக் குப்தாவை தொடர்பு கொண்டார்.

வெளிநாட்டில் இருந்து சிலிகான் இறக்குமதி செய்து பிபாஷா பாசுவின் மார்பகத்தில் பொருத்தி 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி ஆபரேஷன் செய்தார் அசோக் குப்தா. 2 நாள் அங்கேயே தங்கியிருந்து ஓய்வு எடுத்தார் பிபாஷா. ஆபரேஷனுக்கு பிறகு, அவரது மார்பகத்தின் அளவு 3 இன்ச் அதிகரித்தது. மிகவும் குஷியான பிபாஷா, "வீட்டுக்கு போனதும் ரூ.2.5 லட்சம் பீஸ§க்கும் செக் அனுப்புகிறேன்" என்று கூறிச் சென்றார். போனவர் போனவர்தான். 5 ஆண்டுகள் ஆன பிறகும், பீஸ் வந்து சேரவில்லை என்று புலம்புகிறார் டாக்டர் அசோக் குப்தா.

"ஆபரேஷன் விவகாரம் கசிந்தால், பேர் கெட்டுப்போகும் என்பதால், சுசான் நூடா என்ற பெயரில் இங்கு பிபாஷா அட்மிட்டானார். ராக்கி சாவந்த் உள்பட பாலிவுட் நடிகைகள் பலருக்கும் ஆபரேஷன் செய்திருக்கிறேன். பிபாஷா போல வேறு யாரும் பீஸ் கொடுக்காமல் ஏமாற்றியதில்லை. கடைசியாக ஒரு முறை கேட்டுப் பார்க்கலாம் என 6 மாதம் முன்பு பிபாஷாவிடம் பேசினேன். அவரது காதலன் ஜான் ஆபிரகாமுடனும் பேசினேன். எந்த பயனும் இல்லை" என்கிறார் டாக்டர். இதுபற்றி போலீசில் புகார் செய்ய இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.

0 comments: