தயாநிதி மாறன் சிக்குவாரா...?

ரூ. 10 ஆயிரம் கோடி டெண்டர் முறைகேடுக்கு காரணம் யார்? விரிவான விசாரணைக்கு உத்தரவு முக்கிய புள்ளிகள் கதிகலக்கம்



மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது இறுதி செய்யப்பட்ட டெண்டரால் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட இருந்தது

அந்த டெண்டரை ரத்து செய்து 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சம் செய்து விட்டேன் என இப்போதைய அமைச்சர் ராஜா கூறியுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடுக்கு துணை போனது யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் அளவுக்கு பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப அடிப்படையிலான இணைப்புகளை அதிகரிக்க கடந்த ஆண்டு துவகத்தில் முடிவு செய்யப்பட்டது. மும்பை மற்றும் டில்லியில் சேவை செய்து வரும் எம்.டி.என்.எல்., நிறுவனத்தின் புதிய இணைப்புகளுக்கான 2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்ப கருவிகளை வழங்க மோட்டோரோலா நிறுவனம் முன் வந்துள்ளது. இதற்காக ஒரு இணைப்புக்கு ரூ.2,845 என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதே போல பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் புதிதாக 6.3 கோடி புதிய இணைப்புகள் ஏற்படுத்த திட்டமிட்டது. இதற்கு ஏற்றவாறு இரண்டாம் தலைமுறை(2ஜி) மற்றும் மூன்றாம் தலைமுறை(3ஜி) கருவிகள் தேவை.இதில் (3ஜி) கருவிகளின் பங்கு 25 சதவீதம். மொத்தமுள்ள 6.3 கோடி புதிய இணைப்புகளில் 1.8 கோடி இணைப்புகளுக்கு தேவையான கருவிகளை அரசுக்கு சொந்தமான ஐ.டி.ஐ., மற்றும் அல்காடெல் நிறுவனம் இணைந்து அளிக்க உள்ளன. இதுதவிர 4.5 கோடி புதிய இணைப்புகளுக்கான 2ஜி மற்றும் 3ஜி தொழில்நுட்ப கருவிகளை வழங்க கடந்த ஆண்டு மார்ச்சில் டெண்டர் விடப்பட்டது.

இந்த நேரத்தில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த தயாநிதி மாறன். இந்த டெண்டருக்கு மோட்டரோலா, இசட்.டி.இ., எரிக்சன், நோக்கியா, சிமென்ஸ் என ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்தன. டெண்டரின் இரண்டாவது கட்டத்தில் மோட்டரோலா, இசட்.டி.இ., ஆகிய நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டன. டெண்டர் நிபந்தனைகளின்படி மிகவும் குறைந்தபட்ச விலையை குறிப்பிடும் நிறுவனத்துக்கு 60 சதவீத கான்ட்ராக்ட்டும், அடுத்த இடத்தில் வரும் நிறுவனத்துக்கு 40 சதவீத கான்ட்ராக்ட்டும் அளிக்க வேண்டும். மிகவும் குறைந்தபட்ச விலையாக ஒரு இணைப்புக்கு எரிக்சன் நிறுவனம் 107 அமெரிக்க டாலரை குறிப்பிட்டு இருந்தது.

அதாவது ஒரு இணைப்புக்கு ரூ.4,940 செலுத்த வேண்டும். எனவே எரிக்சன் நிறுவனத்துக்கு 60 சதவீத கான்ட்ராக்ட்டும், அடுத்த விலையை குறிப்பிட்ட நோக்கியா நிறுவனத்துக்கு 40 சதவீத கான்ட்ராக்ட்டும் அளிக்கப்பட்டன. எரிக்சன் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், நோக்கியா நிறுவனத்தின் மொபைல்போன் உற்பத்தி நிறுவனமும் தமிழகத்தில் உள்ளன.

இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி விலகினார். புதிய தகவல் தொழில்நுட்ப அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த ராஜா பொறுப்பேற்றார். பி.எஸ்.என்.எல்., டெண்டரை நிறுத்தி வைக்கவும் ராஜா உத்தரவிட்டார். இதனால், மொபைல் போன் சந்தையில் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தள்ளாடி வருவதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து அமைச்சர் ராஜாவிடம் கேட்ட போது "எம்.டி.என்.எல்., நிறுவன டெண்டரை விட பி.எஸ்.என்.எல்., நிறுவன டெண்டர் இரண்டு மடங்கு கூடுதல் விலையை கொண்டுள்ளது.

இதனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். எனவே தான் டெண்டரை நிறுத்தி வைத்து மறு ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். அதே நேரத்தில் புதிய இணைப்புகளுக்கான கருவிகளை வாங்குவதற்கான டெண்டரை இறுதி செய்ய வேண்டும் என்று பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். எனவே இந்த டெண்டர் விஷயத்தில் பி.எஸ்.என்.எல்., நிறுவன உயர் அதிகாரிகள் விரைவில் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

எரிக்சன் நிறுவனம் குறிப்பிட்டுள்ள 107 அமெரிக்க டாலருக்கு பதிலாக 90 அமெரிக்க டாலருக்கு சப்ளை செய்யும்படி பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிவுறுத்த வாய்ப்பு உள்ளது.மேலும், செலவை குறைக்கும் பொருட்டு டெண்டர் ஒப்பந்தத்தில் இருந்து 3ஜி கருவிகளை சப்ளையும் செய்யும் திட்டம் நீக்கப்படலாம்.

ஆனால், ஏற்கனவே குறிப்பிட்ட விலையை குறைத்து கொள்ள எரிக்சன் நிறுவனம் சம்மதிக்காது. எனவே டெண்டரை பெற மிகவும் குறைந்தபட்ச விலையை குறிப்பிடும் நிறுவனமாக மோட்டரோலா அல்லது சிமென்ஸ் நிறுவனங்கள் உருவெடுக்கலாம். இரண்டாவது இடத்தில் நோக்கியா நிறுவனம் இடம் பெறலாம். பி.எஸ்.என்.எல்., இயக்குனர்கள் குழு கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. அப்போது புதிய டெண்டர் குறித்தும், எரிக்சன் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பது குறித்தும் முடிவெடுக்கப்படும்.

மேலும், ரூ.10 ஆயிரம் கோடி முறைகேடு குறித்து விரிவாக விசாரணை நடத்த உத்தரவிடுவது குறித்தும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆலோசனை செய்து வருகிறது. இதில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

July 12, 2007 at 2:47 AM Sridhar said...

þÐ ¾ÅÈ¡É «È¢Å¢ôÒ. þ¨¾ ÀüÈ¢ ¿¡ý þ½Â¾Çò¾¢ø ´Õ À¾¢× À¡÷ò§¾ý. ²ý ¿¢Ã¡¸Ã¢ì¸Àð¼Ð ¾¨¼ ¦ºöÂôÀð¼ º¢É ¸õ¦Àɢ¢ø þÕóÐ À¡¸õ ¾ÕÅ¢ì¸ þÕó¾ ¸õ¦ÀÉ¢ ±Ð. ±øÄ¡ Å¢ÅÃí¸Ùõ þÕó¾Ð. ¡ç¡ ¾¢Õô¾¢ ÀÎò¾ ºÃ¢Â¡É Å¢ÅÃõ À¡Ã¡Áø Åó¾ «È¢ì¨¸. ±ÉìÌ «ó¾ link ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ¬É¡ø þÐ §¾¨ÅÂüÈ «Ãº¢Âø ±ýÀÐ ÁðÎõ ¿¢¾÷ºÉõ

July 12, 2007 at 7:19 AM மிளகாய் said...

பதிவர் ராமசாமியின் பின்னூட்டம் யூனிக்கோடில்.....

இது தவறான அறிவிப்பு. இதை பற்றி நான் இணயதளத்தில் ஒரு பதிவு பார்த்தேன். ஏன் நிராகரிக்கபட்டது தடை செய்யப்பட்ட சின கம்பெனியில் இருந்து பாகம் தருவிக்க இருந்த கம்பெனி எது. எல்லா விவரங்களும் இருந்தது. யாரயோ திருப்தி படுத்த சரியான விவரம் பாராமல் வந்த அறிக்கை. எனக்கு அந்த link தெரியவில்லை. ஆனால் இது தேவையற்ற அரசியல் என்பது மட்டும் நிதர்சனம்
-ramaswamy