BENAZIR BHUTTO DEAD: GEO TV

தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளுக்கு ஜன.10ல் தூக்கு!

தர்மபுரி அருகே வேளாண் பல்கலை மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் து£க்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட 3 பேரையும் வருகிற ஜனவரி 10-ம் தேதி தூக்கிலிடுமாறு நீதிபதி வாரன்ட் பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து மூன்று பேரையும் தூக்கிலிடுவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகள் கோவை சிறையில் துவங்கியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதை எதிர்த்து தர்மபுரியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில், மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உடல் கருகி பலியாகினர்.

இதுதொடர்பாக நடந்த வழக்கில் அதிமுகவை சேர்ந்த நெடு (எ) நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு து£க்கு தண்டனையும், மற்ற 25 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும், சேலம் நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதிபடுத்தி தீர்ப்பு கூறப்பட்டது. அதே நேரத்தில் 25 பேருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு தண்டனையை குறைக்க வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, Ôஅறிவிக்கப்பட்ட தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி 25 பேரும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

அதையடுத்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய டி.கே.ராஜேந்திரன் உள்பட 25 பேரும் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். அவர்கள் அனைவரையும் கோவை சிறையில் அடைக்க நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் து£க்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் து£க்கிலிடும் தேதியை நீதிபதி மாணிக்கம் அறிவித்துள்ளார். வருகிற 10ம் தேதி காலை 6 மணிக்கு மூன்று பேரையும் கோவை மத்திய சிறையில் சாகும்வரை து£க்கிலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான வாரன்ட் கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் தூக்கிலிடுவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகள் கோவை சிறையில் துவங்கிவிட்டது.

எம்.எஸ்.வி. துப்பிய எச்சில்தான் இன்றைய இசை!

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி துப்பிய எச்சில்தான் இன்றைய சினிமா இசை என்று பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கோபமாக பேசினார்.

பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் மற்றும் மோசர்பேர் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் "வெள்ளித்திரை". இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி கேசட்டை வெளியிட மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி, பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களை பாராட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது:

விஸ்வநாதன் ராமமூர்த்திதான் என் குரு. வாழ்வு கொடுத்தவர்கள். அவரை பற்றி ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது பேசாவிட்டால் அந்த நாள் எனக்கு நிறைவாக இருக்காது. அவர் அருகில் நிற்க முடியாதா? அவர் அமர்ந்திருக்கும் மேடையை தொட முடியாதா? என்று ஏங்கிய காலம் உண்டு. இன்று அவர்களால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்து உலக சாதனை படைத்தவர்கள் அவர்கள். அவர்களது தாக்கம் இல்லாமல் இப்போதும் ஒரு பாட்டு வெளிவருவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் கடித்து துப்பிய எச்சிலைத்தான் இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஒரே டிராக்கில் அற்புதமான பாடல்களை கொடுத்தார்கள். இப்போது 200 டிராக் இருந்தாலும் அவரது தரத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை. நவீன இசையமைப்பில், உடன் பாடுபவர்கள் பாடுகிறார்களா என்று கூட தெரியவில்லை. டூயட் பாட்டு என்றால் கூட தனியாக உணர்ச்சியே இல்லாமல் பாட வேண்டியுள்ளது. கூட பாடுவது யார் என்று கேட்டால். Ôஇன்னும் முடிவு செய்யவில்லை. நீங்க உங்க டிராக்க மட்டும் பாடுங்கÕ என்று சொல்கிறார்கள். காலத்துக்கேற்ற மாற்றம் அவசியமாக இருந்தாலும் அது இசையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசினார்.

விழாவில் நடிகர் பிருத்விராஜ், இயக்குனர்கள் மணிரத்னம், விஜி, கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர்கள் வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், ஆகியோர் பேசினர். இயக்குனர் ஷங்கர், கே.பாக்யராஜ், எம்.ராஜா, சரண், நடிகர்கள் ஜெயம்ரவி, ஜீவா, அர்ஜுன், பிரசன்னா, நடிகை லட்சுமிராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மோசர்பேர் நிறுவன அதிகாரி தனஞ்செயன் வரவேற்றார். பிரகாஷ்ராஜ் நன்றி கூறினார்.

சூடான செய்திகள்...


இமாச்சல பிரதேசத்தில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவில் சுறுசுறுப்பு


சிம்லா : இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. 65 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவில், 5,946 மையங்களில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு அளிக்கின்றனர். மாநிலத்திற்கு நவ. 14ம் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவுடன் துவங்கி, இறுதி கட்ட ஓட்டுப்பதிவு இன்றுடன் முடிவடைகிறது. 324 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் டிச. 28ம் தேதி வெளியிடப்படுகிறது. ஓட்டுப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை பம்பைக்கு சிறப்பு பஸ் : விரைவு போக்குவரத்து கழகம்

மதுரை : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து பம்பைக்கு தினமும் இரவு 10 மணிக்கு சிறப்பு பஸ் புறப்படுகிறது. பயணிகள் வருகையை பொறுத்து பம்பையில் இருந்து மதுரைக்கு பஸ் புறப்படும். மதுரை பம்பை இடையே டிக்கெட் ஒன்றுக்கு ரூ.250 கட்டணம். முன்பதிவுக்கு கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும். பக்தர்கள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விவரங்களுக்கு 0452 2585 838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளது: இலங்கை அகதிகள்


ராமேஸ்வரம்: உணவு பொருட்களின் விலை ஏற்றத்தால் அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளதாக ராமேஸ்வரம் வந்த அகதி கூறினார். இலங்கை கிளிநொச்சி மற்றும் மன்னாரை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் படகில் வந்திறங்கினர். தனுஷ்கோடி போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி கணேசன் கூறுகையில்,சூஇலங்கையில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பதால் அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளது. வெளியில் நடமாடுவதும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் நகைகளை விற்று படகுக்கு தலா ரூ. 15 ஆயிரம் கட்டணம் செலுத்தி இங்கு வந்தோம். இரவில் வரும்போது நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால் இரண்டு முறை படகு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. அபாயத்திலிருந்து தப்பித்து தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம்' என்றார்.


மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் நி‌லச்சரிவு


மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரலியாறு பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பரலியாறு பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ‌போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சரியான தகவல் இல்லை.

48 மணி நேரம் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்


சென்னை : வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை , திருவாரூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்ள் மற்றும் தமிழகம் முழுவதும் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று ( 19 ம் தேதி ) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 48 மணி நேரம் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரவு - தினமலர்

மிருகம் - விமர்சனம்

வானத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து நிற்கிறார் சாமி. சாய்ந்து கொண்டிருக்கிற தமிழ்சினிமாவை, தான் வளர்த்த மிருகத்தின் கொம்புகளால் முட்டுக் கொடுத்திருக்கிறார். எண்பதுகளின் இறுதியில் வாழ்ந்த ஒரு மிருகத்தின் வாழ்க்கை, நரகத்திற்கு போன கதை இது. டாகுமென்டரி அபாயங்கள் இருந்தும், இந்த கதையை எடுக்க துணிந்ததற்காகவே, ஐயா... சாமி அள்ளிக் கொள்ளுங்கள் பாராட்டுகளை!

எண்ணிப்பார்த்தால் எண்பது குடிசைகள் தேறும் அந்த கிராமத்தில். அங்கே பொலிகாளையை தொழிலுக்கு அழைத்து போகும் இளைஞன் அய்யனார், அந்த காளைக்கே உரிய குணங்களோடு வளர்ந்து நிற்கிறான். ஆசைப்படுகிற பெண்களையெல்லாம் அள்ளி திணிப்பதே மற்றொரு வேலை இவனுக்கு. இந்த காளையை அடக்க எவளாவது வரமாட்டாளா என்று ஏங்கித்தவிக்கும் வயதான தாய். ஊரே அஞ்சி நிற்கும் இவனையும் திருமணம் செய்து கொள்கிறாள் ஒருத்தி. முதலிரவே கற்பழிப்பாக முடிந்து போக, யார் இவன்? இவனுக்குள் இந்த மிருகம் வந்து உட்கார்ந்து கொண்டது எப்படி? கேள்வி எழுகிறது. பிளாஷ்பேக்! இரண்டாம் பாதியில் இவன் புரண்டு படுத்த புழுதிகளே வியாதியாக வந்து நிற்க, அப்போதும் குறையாத வேகத்தோடு திரிகிறான் அவன். ஒருகட்டத்தில், வைரம் பாய்ஞ்ச கட்டைடா இது என்று மார்தட்டிய இவன், கரையான் அரித்த விறகாக உருக்குலைந்து போக, அச்சச்சோ என்று முணுமுணுக்க வைக்கிற க்ளைமாக்சோடு முடிகிறது படம்.

அய்யனராக ஆதி. இந்த கதைக்கென்றே பிறந்தவர் மாதிரி அத்தனை பொருத்தம். சுட்ட கருங்கல் மாதிரி நெட்ட நெடுந்தோற்றம். கண்களில் பீறிடும் ஆவேசம். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கையில் அந்த எருது காளையையே மிரள வைக்கிறது தோற்றம். இந்த இளைஞர் தமிழ் சினிமாவின் கம்பீரமான வரவு. ஊரே சேர்ந்து தண்ணீர் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருக்க, எனக்கென்ன என்று அலட்சியமாக போகும் அய்யனார், இறுதியில் அந்த ஊர் தண்ணீர் பஞ்சத்தை போக்க நிலம் தருவதும், ஊர் மக்கள் அந்த தண்ணீரை குடிக்கிறார்களா என்று ஆவல் பொங்க கேட்பதும் கண்களை குளமாக்கும் காட்சி. அந்த க்ளைமாக்ஸ் எதிர்பாராத வலி.

பனைமரம் ஏறுவாள். ஆடுகளுக்கு காயடிப்பாள். எவன் மறுத்தால் என்ன? என் கணவனின் பிணத்தை நான் ஒருத்தியே சுமப்பேன் என்று பொங்கி எழுவாள்... பத்மபிரியாவின் கேரக்டரை எரிமலையும், பனிமலையும் கலந்து செய்த சிற்பம் போல் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. மருத்துவமனையில் தான் பெற்ற பிள்ளையை தூக்கி எறிய முயலும் அய்யானரை ஓங்கி உதைக்கிறாரே... மெய் சிலிர்த்து போகிறது. சொந்தக்குரலில் பேசியிருந்தால் அவார்டு நிச்சயம்! ஐயோ பாவம்!

கருப்பா... என்று வானத்தை நோக்கி குரல் எழுப்பும் கஞ்சா கருப்பும் ரசிக்க வைத்திருக்கிறார். ஊரே தீண்ட மறுத்த அய்யனாரை வாஞ்சையோடு தன் திருமணத்திற்கு அழைக்கும் போது குணச்சித்திர நடிகராகவும் பிரமோஷன் ஆகிறார். அய்யனாரின் அம்மாவாக நடித்திருக்கும் அந்த மூதாட்டியின் நடிப்பும் அருமை.

பின்னணி இசையிலும், மனசை சுண்டும் பாடல்களிலும் மற்றொரு முறையும் தங்களை நிருபித்திருக்கிறார்கள் சபேஷ்-முரளி சகோதரர்கள். அதிகம் பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி.

எண்பதுகளில் விபச்சாரம் அங்கீகரிப்பட்ட தொழிலா? சோனாவின் வீடும், சுற்றி வரும் பைங்கிளிகளும், போலீஸ் பார்வையில் படாமலே போய்விட்டார்களா என்ன? அதேபோல், கற்பை உயிர் போல நேசிக்கும் கிராமத்து பெண்களா அய்யனாரின் ஒரு கண்ணசைவில் அத்தனையையும் பறி கொடுக்கிறார்கள்?

வேலி தாண்டி பயிரை மேய்ந்திருந்தாலும், மிருகம் என்பதால் மன்னிப்போம். மற்றபடி படையலே போடலாம் இந்த சாமிக்கு!

தரவு - தமிழ்சினிமா.காம்

நெல்லை திமுக மாநாடு படங்கள்







WE(A)eKEND

குட்டீஸ் இந்த பதிவினை தவிர்க்கவும்....





















இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் புதன்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெங்களூரு நகரின் தென்மேற்கே சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரவு - தினமணி

தீ பரவட்டும்!

பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால், அந்த ஆட்சியின் கொள்கை குலதர்மமாகத்தானிருக்கும் என்பதற்கு அடையாளம்தான், குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியால் எழுதப்பட்ட (கர்மயோக்) நூலின் சாரமாகும்.

ஆர்.எஸ்.எஸின் அடிப்படைக் கொள்கையில் வருணாசிரமப் பாதுகாப்பு கெட்டியாக இருக்கிறது. வர்ணவியா வஸ்தா என்பது ஓர் சமூக அமைப்பு என்றும், அதில் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸின் குருநாதரான கோல்வால்கர் கூறுகிறார்.

இன்னும் பச்சையாக அனைவருக்கும் புரியும்படி ஜாதியை ஆதரித்து வெளிப்படையாகவே எழுதுகிறார்.

நீண்ட காலமாகவே சிலர் ஜாதி அமைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த ஜாதி அமைப்பு நமது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்து வந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது; உண்மையில் ஜாதி அமைப்பு சமூக ஒற்றுமைக்கு உதவுகிறது என்று ஆர்.எஸ்.எஸின் வேத நூல் என்று போற்றப்படும் நூலில் (Bunch of Thoughts) பச்சையாகவே ஜாதியை, அதன் குலத்தொழில் நிலையை நியாயப்படுத்தி எழுதியுள்ளார்.

அவரைக் குருநாதராகக் கொண்டு வழிபடும் பச்சை ஆர்.எஸ்.எஸ்.,காரரான குஜராத் முதலமைச்சர் திருவாளர் நரேந்திரமோடி குப்பை அள்ளும் தொழிலையும், மலம் எடுக்கும் தொழிலையும், சாக்கடையைச் சுத்தப்படுத்தும் தொழிலையும் ஆதரித்து, அதில் ஈடுபடுகிறவர்கள் மோட்சம் போவர் என்று பேசுவதில் ஆச்சரியம் என்ன?

இந்த 2007 ஆம் ஆண்டிலும் இத்தகைய கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகள் இருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டு அத்தகைய மனித வெறுப்பாளர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டியதுதான் மனித நேயக்காரர்களின் முதலாவதும், முக்கியமானதுமான கடமையாகும். இத்தகைய பிற்போக்கு வாதிகள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டால், மனித குலம் கற்காலத் திற்குத்தான் தள்ளப்பட நேரும் என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் திட்டமிட்டுச் செய்யவேண்டும்.

நேற்று (11.12.2007) சென்னையில் - மோடியின் கூற்றை எதிர்த்து திராவிடர் கழகமும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் இணைந்து நடத்திய போராட்டத்தில் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் இதுதான் மிளிர்கிறது.
ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் எரித்தனர் என்பதையும் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியதை, மீண்டும் மக்களின் சிந்தனைப் பார்வைக்கு வெளிச்சமாகக் கொண்டு வந்து காட்டவேண்டும். விழிப்புணர்வு என்பதே சரியான பரிகாரமும், ஆயுதமும் ஆகும்.

இந்தியா முழுமையும் மலத்தை அள்ளித் தலையில் சுமக்கும் எங்கள் சகோதரர்கள் 6 லட்சத்து ஆயிரம் பேர் உள்ளனர் என்கிற புள்ளி விவரத்தை திராவிடர் கழகத் தலைவர் எடுத்து விளக்கினார் - பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்பொழுது விஷ வாயு தாக்கி மரணமடைந்தவர்கள் 22,327 பேர்கள் என்றும், இவர்கள் அத்தனைப் பேரும் சேரிவாழ் மக்களாக, தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பதை அவர் எடுத்துரைத்ததை நாகரிகம் உள்ள ஒரு சமுதாயம் எண்ணிப் பார்க்கவேண்டாமா? பரிகாரம் தேடிட முனைய வேண்டாமா?

தாழ்த்தப்பட்ட தோழர்கள் இத்தகைய தொழில்களைச் செய்கிறார்கள் என்பதற்காகக் கூட அல்ல - மனிதநேய அடிப் படையில் பார்ப்பனர்கள்கூட இந்தத் தொழிலைச் செய்யக் கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்னதை பார்ப்பனர்களும், மோடி போன்ற பார்ப்பனத் தொங்கு சதைகளும் எண்ணிப் பார்க்கவேண்டும். நாங்கள் போராட வந்த நோக்கத்தையும் சிந்திக்கவேண்டும்.

இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரத்தில் நேற்று நடத்தப்பட்ட குலதர்ம எதிர்ப்புப் போராட்டத்தின் வீச்சினை - சாரத்தினை காஷ்மீர் பனிமலை வரை கொண்டு செலுத்தவேண்டியது மிகவும் அவசியமாகும்.

இது ஒரு தீப்பொறிதான் - இது இந்தியாவின் நாலாத் திசை களிலும் பரவட்டும்! பரவட்டும்!!
குஜராத் முதலமைச்சர் எழுதியுள்ள கருத்துக்கூட ஒரு வகை யில் தீண்டாமைக்கான குற்றம்தான். அந்தக் கண்ணோட்டத்திலும் மத்திய அரசு அதனைப் பார்க்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தரவு - விடுதலை

அஸ்த்ரேலியா செல்லும் இந்திய டெஸ்ட் அணி

India's Test squad for Australia

Wasim Jaffer, Virender Sehwag, Dinesh Karthik, Rahul Dravid, Sachin Tendulkar, Sourav Ganguly, VVS Laxman, Yuvraj Singh, Mahendra Singh Dhoni (wk), Anil Kumble (capt), Harbhajan Singh, Zaheer Khan, RP Singh, Irfan Pathan, Ishant Sharma, Pankaj Singh.

குஜராத் சட்டசபை தேர்தலில் 60 சதவீத ஓட்டுப்பதிவு

குஜராத் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. . குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, 87 தொகுதிகளுக்கு இன்று காலை முதல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வந்தது. இதிதேர்தலில் 60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களை அதிகளவில் ஓட்டளித்துள்ளனர். இரண்டாம் கட்டமாக 92 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.


தரவு-தினமலர்

அய்.அய்.டி.,யா- அக்கிரகாரமா?

அய்.அய்.டி.,களில் (IIT) இட ஒதுக்கீடு என்பதைப்பற்றித் தெரிந்துகொள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த பிஎச்.டி., பட்டம் பெற்ற எத்திராஜ் முரளிதரன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்தார். அய்.அய்.டி.,களில் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை என்கிற தகவல் கிடைத்திருக்கிறது.

அய்.அய்.டி.,களில் தகுதி அடிப்படையில்தான் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கான ஆணையிருக்கிறது என்றும் அய்.அய்.டி., தரப்பில் கூறப்பட்டாலும், அத்தகு ஆணை எதுவும் கிடையாது என்று மனித வள மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளதாக தினமலர் ஏடே கூறுகிறது.

அப்படியானால், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக அய்.அய்.டி., செயல்பட்டு வருகிறது என்றுதானே பொருள்?

இதன்மீது மனித வள மேம்பாட்டுத் துறை அய்.அய்.டி., இயக்குநர் மற்றும் நிருவாகத்தின்மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவேண்டாமா? இந்தப் பிரச்சினையில் மனித வள மேம்பாட்டுத் துறை ஏன் தயக்கம் காட்டுகிறது?

சென்னை - அய்.அய்.டி.,யை எடுத்துக்கொண்டால் ஆசிரியர்களில் பார்ப்பனர்களின் எண்ணிக்கை 282 (70 சதவிகிதம்), முன்னேறிய ஜாதியினர் 40 (10 சதவிகிதம்), பிற்படுத்தப்பட்டோர் 57 (14 சதவிகிதம்), தாழ்த்தப்பட்டோர் 3 (0.75 சதவிகிதம்), கிருத்தவர் 15 (3 சதவிகிதம்), சமணர்கள் 3 (0.75 சதவிகிதம்), முசுலிம்கள் பூச்சியம்.

இந்தியா முழுமையும் அநேகமாக இந்த நிலைதான்.

நூற்றுக்கு மூன்று சதவிகித எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர்கள் இப்படி முழுச்சுளையையும் விழுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். உயர்தரக் கல்வி நிறுவனம் என்று சொல்லப்படுகின்ற கல்வி நிறுவனங்களில் இந் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் புறக்கணிக்கப் படுகின்றனர் என்றால், இந்தக் கொடுமையை அனு மதிக்கலாமா? ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்ச்சி இல்லை என்று இதற்குப் பொருளா?

சென்னை - அய்.அய்.டி.,யில் உள்ள இயக்குநர் ஆனந்த் என்ற பார்ப்பனருக்குப் பதவி நீட்டிப்பு அளிக்கப் பட்டுள்ளது. இந்த ஆசாமி பொறுப்பேற்ற காலந்தொட்டு பச்சை அக்கிரகாரத்தனம் தலை கொழுத்துத் தாண்டவமாடுகிறது.

பல்வேறு குளறுபடிகளைச் செய்துகொண்டு இருக்கும் இவரை எதிர்த்து ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன் றத்தில் நிலுவையிலும் உள்ளன. போராட்டங்களும் நடைபெற்று இருக்கின்றன. என்ன நடந்தாலும், எதுவும் நடக்காததுபோல, கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ராஜ நடைபோட்டுத் திரிகிறார் இவர் என்றால், இதனை அனுமதிக்கலாமா?

டில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இப்படித்தான் வேணுகோபால் என்ற பார்ப்பனர் திமிர் முறித்துக் கொண்டு இருந்தார். உச்சநீதிமன்றம் வரை அவருக்கு முட்டுக் கொடுத்துப் பார்த்தது; இப்பொழுது வெளி யேற்றப்பட்டுவிட்டார் - ஒரு சட்டத்தின்மூலம். அதைவிட மோசமான பரிபாலனம் சென்னை - அய்.அய்.டி.,யில் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கு எப்பொழுதுதான் முடிவு?

பல ஆண்டுக்காலமாக இட ஒதுக்கீடு புறக்கணிக்கப் பட்டதால், நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்படவில்லையா? அந்த இழப்புக்கு என்ன பரிகாரம்?
இனிமேலும் இந்த அநீதி தொடரலாமா?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் - குறிப்பாக தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் அக்கறை காட்டுமாறு வலியுறுத்துகிறோம்.


தரவு - விடுதலை

எவனோ ஒருவன் - திரை விமர்சனம்

பிளாட்பார கடைகளை விடவும் மலிவான சரக்குகள் விற்கப்படும் கோலிவுட்டில், எப்போதாவது ஐ.எஸ்.ஐ சரக்குகளும் எட்டிப்பார்க்கும். இந்த படம் அந்த வரிசையில் சேர்த்தி. முதல் காட்சியே இயக்குனர் நிஷிகாந்தின் கௌரவத்தை சொல்லும் அசத்தலான தோரணவாயில்! வேலைக்கு கிளம்பும் மாதவன், மகளுக்கு முத்தம் கொடுக்கிற நேரத்தில் பின்னணியில் ஒலிக்கும் ரயிலின் சப்தமும், திரும்ப திரும்ப வரும் ஒரே காட்சியில் ஒரே மாதிரியான வாழ்க்கை சுழற்சியால் சலிப்புக்குள்ளாகி கிடக்கும் ஹீரோவின் மனசையும் அழகாக வெளிப்படுத்தி விடுகிறார். அந்த மனசுக்குள் இராணுவ கம்பீரத்தோடு ஒரு அகிம்சை அரசன் புகுந்துவிட, நடக்கிற களேபரங்கள்தான் கதை.

வங்கியில் வேலை பார்க்கும் மாதவனுக்கு ரயிலில் ஜன்னலோர சீட்டை பிடித்து அலுவலகத்திற்கு போய் சேருவதே பெரிய சவால். தன்னை சுற்றி நடக்கிற சின்ன சின்ன அநியாயங்களை தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு சூழ்நிலை சோகங்கள். தண்ணீர் லாரிக்காரனை கூட கண்டிக்க முடியாத அளவுக்கு வேகத்தடை வாழ்க்கை. நல்ல ஸ்கூலில் பிள்ளையை சேர்க்க வேண்டும் என்றால், டொனேஷன் நிர்பந்தங்கள். மனைவி சங்கீதாவின் ஒருசொல் மாதவனுக்கு மதம் பிடிக்க வைக்கிறது. பிறகென்ன, வெண்கலக்கடைக்குள் புகுந்து துவம்சம் செய்வது மாதிரி செய்கிறார் சுற்றி நடக்கிற அவலங்களை. கணவனுக்கு மனநோய். கலங்கிப் போகிற மனைவியால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில், தீவிரவாதியாக கருதப்படும் அவனை என்ன செய்கிறது போலீஸ்? பல இடங்களில் பின்னணி இசையே மௌனமாகி போகிற அளவுக்கு, மனசை பிசைந்து வணக்கம் போடுகிறார்கள்.

இரண்டு ரூபாய் அதிகம் வாங்கும் கூல் டிரிங்ஸ் கடைக்காரனையும், அவன் கடையையும் துவம்சமாக்கும் மாதவனின் ஆக்ரோஷம், மெல்ல மெல்ல துப்பாக்கி லெவலுக்கு உயர்வது எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. சிறிய பிரச்சனைதான் என்றாலும் தண்ணீர் லாரிக்காரனின் அலட்சியத்திற்கு அவர் கொடுக்கிற தண்டனை நரம்பை முறுக்கேற்றுகிறது. மருத்துவமனையில் அவர் கேட்கிற கேள்விகளில் இருக்கிற நியாயம் சாமானிய மக்களின் அன்றாட அறிக்கை! கையில் கிரிக்கெட் பேட் ஒன்றை எடுத்துக் கொண்டு அவர் நடக்கிற ராஜநடை பயங்கரம்.

பட்டுப்புடவையின் சரிகை மாதிரி மாதவனின் கேரக்டர் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டு ரூபாய்க்கு சண்டை போடுகிற கஞ்சன் அல்ல என்பதை, பிளாட்பார சிறுவனிடம் அவர் காட்டுகிற தாராளம் உணர்த்துகிறது. நட்ட நடுநிசியில், அதுவும் நடுரோட்டில் நின்று கொண்டு அண்ணாந்து பார்த்தபடி, இறைவனுக்கு கடிதம் எழுதும் மாதவனின் நடிப்பிற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல அவரே எழுதியிருக்கும் வசனங்கள். மகளின் புகைப்படத்தை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு வருகிறாரே மாதவன், அங்கேதான் க்ளைமாக்சில் நடக்கும் விபரீதத்தை இன்னும் அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார்கள்.

மனைவியாக உயிர் சங்கீதா. இந்த பத்து வருடத்தில் என்ன சுகத்தை கண்டேன்? என்று புலம்பும் லட்சத்து ஓராவது மனைவி. அவரை தடுத்து நிறுத்தியிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது என்று அழுது புலம்பி பரிதாபத்தை சேர்த்துக் கொள்கிறார்.

காவல் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கம்பீரமாக உணர்த்தியிருக்கிறார் சீமான். பெண்களிடம் போலீஸ் விசாரணை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு அவர் சங்கீதாவிடம் நடத்தும் விசாரணை உதாரணம். பேசாம என்னுடைய காக்கி சட்டையை கழற்றி அவனை போட்டுக்க சொல்லலாம்னு தோணுது என்கிறபோது கைத்தட்டல்களில் அதிர்கிறது தியேட்டர். தன்னுடைய தமிழ் பற்றை தூய தமிழ் வசனங்களாலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பல காட்சிகளில் மௌனத்தையே இசையாக்கி அழகு சேர்த்திருக்கிறார் பி.சமீர். பின்னணி இசையோடு ஒளிப்பதிவும் கைகோர்த்து கொள்ள... நடுநிசியும், அரையிருட்டும் சொல்கிற சங்கதிகள் அநேகம். ஒளிப்பதிவாளர் சஞ்சய் யாதவ் பிரமிக்க வைத்திருக்கிறார். ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்திருக்கிறார் ஜி.பி.பிரகாஷ். பெரிதாக ஒன்றுமில்லை.

மீடியாவின் அவசியங்களை சொல்கிற அதே நேரத்தில், அவைகளின் அவசரங்களையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஒரே நேரத்தில் பல சேனல்காரர்களின் அறிவிப்புகள் மக்களுக்கு தலைச்சுற்றலையே ஏற்படுத்தும் என்பதையும் ஒரே பிரேமில் வெளிப்படுத்துகிறார். இப்படி சின்ன சின்ன நகாசு வேலைகள் இயக்குனரின் புத்திகூர்மைக்கு வெளிச்சம் போடுகிறது.

தமிழ்சினிமாவை தூர்வார, 'எவனோ வருவான்' என்று நம்பியிருந்தோமல்லவா?அவன்,

வந்துட்டான்...!

-ஆர்.எஸ்,அந்தணன்

புதிய கட்சி தொடங்க நடிகர் சிரஞ்சீவி முடிவு

ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். வரும் புத்தாண்டு தினத்தில் இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் தனிப்பெரும் சக்திகளாக உள்ளன. தேர்தல் சமயத்தில் இவைகளுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளாக பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. இதற்கு மாற்றாக 3-வது பெரும் சக்தியாக உருவெடுக்க நடிகர் சிரஞ்சீவி முடிவு செய்திருப்பதாகவும், இதன் பொருட்டு புதிய கட்சியை தொடங்கும் முடிவுக்கு அவர் வந்திருப்பதாகவும் அவரது நெருங்கிய நண்பர் வட்டாரங்கள் தெரிவித்தன.

நடிகர் சிரஞ்சீவி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். உ.பி.யிலும், பீகாரிலும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பிற்படுத்தப்பட்ட யாதவர்களுக்கு ஆதரவாக தொடங்கப்பட்ட சமாஜ்வாடியும், ராஷ்டிரிய ஜனதாதளமும் எப்படி மக்களின் அமோக ஆதரவை பெற்று ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்ததோ அதே போல் சிரஞ்சீவியின் கட்சியும் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக சிரஞ்சீவி தனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்கள் மற்றும் அறிவு ஜீவிகளிடம் ஆலோசனை செய்ததாகவும், அவரது மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் தற்போது விலகி விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர் என கருதப்பட்ட சிரஞ்சீவி தற்போது அரசியலில் குதிக்க முடிவு செய்திருப்பது தெலுங்கு தேசம் வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் லேடி சூப்பர் ஸ்டாராக கருதப்படும் விஜயசாந்தி ஆரம்பித்துள்ள கட்சி எவ்வித தாக்கத்தையும் ஆந்திர அரசியலில் ஏற்படுத்தாத நிலையில் சிரஞ்சீவி எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது அடுத்த தேர்தலில் தான் தெரியும் என ஐதராபாத் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

"ராமேஸ்வரம்" - விமர்சனம்


ராமேஸ்வரத்துக்கு வரும் இலங்கை அகதிகளுக்கு இடம் தந்து உதவுகிறார் உள்ளூர் பெரும்புள்ளி லால். சொந்த நாட்டுக்கு திரும்பும் முயற்சியில் இருக்கும் அகதி ஜீவாவை, காதலிக்கிறார் அவர் மகள் பாவனா. இதை லாலும் பாவனாவின் முறைமாமன் போஸ் வெங்கட்டும் எதிர்க்கிறார்கள். முடிவில் காதல் ஜெயித்ததா என்பது க்ளைமாக்ஸ்.

வழக்கமான காதல் எதிர்ப்புதான் கதை. இலங்கை அகதியின் பின்னணியில் அதை சொல்லியிருப்பதும், அவர்களின் வலிகளை இன்னொரு பரிமாணத்தில் காட்டியிருப்பதும் புதிது.

அகதிகளாக ராமேஸ்வரத்துக்கு கூட்டம் வரும்போது, இலங்கை பிரச்னையை இயக்குனர் தொடப்போகிறார் என நினைத்தால் புஸ். அடுத்தடுத்து வரும் காட்சிகள் காதலை மட்டுமே மையப்படுத்தி செல்கிறது. ஜீவாவை கண்டதுமே காதல் வயப்படும் பாவனா, துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

"இலங்கைக்கு போனால் ஒரு நாள்கூட உன்னால வாழ முடியாது" என ஜீவா கூற, "சாகவும் தயார்" என்கிறார் பாவ்ஸ். அந்த அளவுக்கு பாவனாவின் காதல் வலுவானது எனக்கூறும் இயக்குனர் அதை காட்சிகளில் விளக்கத் தவறியிருக்கிறார். கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொள்ளும் ஜீவாவா இது? ஒரே காட்சியில் இலங்கை தமிழையும் லோக்கல் தமிழையும் கலந்து பேசுகிறார். ஒரு காட்சியில் பாவனா காதலை ஏற்றுக்கொள்வதும் இன்னொரு காட்சியில் அவரிடமிருந்து ஒதுங்கிப்போவதும் கிளைமாக்சில் "காதலுக்காக வரல. உன் உயிரை காப்பாத்ததான் வந்தேன்" எனச்சொல்லும்போதும் ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் அவர் தவிப்பது அழகான கவிதை.

படம் முழுவதும் வந்தாலும் பாவனாவின் நடிப்பை தேட வேண்டியிருக்கிறது. சொந்த மண்ணில் சொந்தங்களை இழந்த மணிவண்ணன், ‘மிஞ்சியிருப்பது பேரன் ஜீவாதான்; அவனை இலங்கைக்கு அனுப்ப மாட்டேன்’ என உருகும் போது மனதில் ஆணியடிக்கிறார். "தீபாவளி"யில் பார்த்த அதே வேடத்தில் லால். பாவனாவின் முறைமாமன் வெங்கட்டின் வில்லத்தனம் ரசிக்கலாம். ஜீவாவை வெங்கட் கைது செய்யும்போது, "நீங்க சொல்லும் நேரத்துல ஜீவா என்கூடத்தான் படுத்திருந்தார்" என பாவனா சொல்வது காட்சிக்கு கனம்.

வெங்கட்- ஜீவா மோதும் அந்த சண்டைக் காட்சி, மினி த்ரில். குருதேவ், வெற்றியின் ஒளிப்பதிவு கச்சிதம். நிருவின் இசையில் கபிலன் எழுதிய "எல்லோரையும் ஏற்றிப் போக கப்பல் வருமா" பாடலில் ஆழம். பின்னணி இசையில் இளையராஜாவின் பழைய படங்களை ஞாபகப்படுத்துகிறார். பாவனாவின் போட்டோவுக்கு பின்னால் கல்யாண தேதியை எழுதியிருக்க, அதை பார்க்கும் போலீசார் அன்றைய தினம் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என கணிக்கிறார்கள். இந்த மாதிரி படத்த¤ல் வரும் பல சீரியஸ் காட்சிகள் காமெடியாக தெரிகிறது.

தரவு - தமிழ்முரசு

குண்டர்களூக்கு தடை....!

வங்கி கடன் பாக்கி வசூல் செய்ய குண்டர்களுக்கு தடை! ரிசர்வ் வங்கி அடுக்கடுக்கான உத்தரவு



வங்கிகள் கடன் பாக்கி வசூல் செய்ய குண்டர்களை அனுப்பும் நடைமுறைக்கு ரிசர்வ் வங்கி முடிவு கட்டியுள்ளது.

இது தொடர்பாக அடுக்கடுக்கான பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதை பின்பற்றாவிடில் சம்பந்தப்பட்ட வங்கியின் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் செயல்பாடு அதிகரித்துள்ளது. தனி நபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட பல வகை கடன்கள் அளிக்கப்படுகின்றன. கிரெடிட் கார்டுகள் பயன்பாடும் அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கி, பின்னர் அத்தொகையை வங்கிகளுக்கு செலுத்தும் நடைமுறையும் செயல்பாட்டில் உள்ளது. கடன் மற்றும் கிரெடிட் கார்டுகளை பெறும் நடைமுறைகளும் எளிதாகப்பட்டுள்ளன. இதன் காரணமாக வங்கிகளில் கடன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், கடன் தொகையை திரும்பி செலுத்துவதில் சிக்கல் எழும் போது பிரச்னை அதிகரிக்கிறது.பெரிய அளவிலான தனியார் வங்கிகள் கடன் வசூல் செய்வதில் புதுவிதமான நடைமுறையை அவர்கள் பின்பற்றுகின்றனர். `ரெக்கவரி ஏஜென்ட்' என்ற பெயரில் குண்டர்களை பணியமர்த்தி கடன் தொகையை வசூல் செய்கின்றனர். இந்த கடன் வசூல் ஏஜென்ட்கள் வங்கி வாடிக்கையாளர்களிடம் முரட்டுதனமாக நடந்து கொள்கின்றனர். தினமும் பல முறை போனில் அடாவடியாக பேசுவது, ஒழுங்கீனமாக நடந்து கொள்வது, வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை மிரட்டுவது போன்ற செயல்கள் நடக்கின்றன. இதனால் கடன் பெற்ற சிலர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை என்ற முடிவுக்கு சென்று விடுகின்றனர். இது போன்று தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வங்கிகள் கடன் வசூலுக்கு குண்டர்களை பயன்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் சென்றதோடு, இப்பிரச்னை குறித்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கலானது. அதிரடி குண்டர்கள் மூலம் வசூலிப்பதை சுப்ரீம் கோர்ட் கடுமையாக தன் தீர்ப்பில் சாடியுள்ளது. அந்த அடிப்படையில் ரிசர்வ் வங்கி தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளது. கடன் தொகையை வசூலிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுகுறிப்புகள் என்ற பெயரில் அடுத்தடுத்து பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகள் வருமாறு:

வங்கிகளால் நியமிக்கப்படும் கடன் வசூல் ஏஜென்ட்கள், வாடிக்கையாளர்களை வார்த்தைகள் அல்லது செயல் மூலம் மிரட்டுவதோ, கொடுமைப்படுத்துவதோ கூடாது.

ஏஜென்ட்கள் வசூல் தொகையை நிர்ணயித்தும், அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு மூலம் கெடுபிடித்திட்டங்களை அமல்படுத்த வங்கிகள் அனுமதிக்கின்றன. இதன் காரணமாக, ஏஜென்ட்கள் மிரட்டல் முறையிலும், கேள்விக்குள்ளாகும் நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர். இந்த நடைமுறையை இனி பின்பற்றகூடாது.

கடன் தொகையை வாடிக்கையாளர் திருப்பி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டால், கடன் வசூல் ஏஜென்ட்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்ற தகவலையும், அந்த ஏஜென்ட்கள் குறித்த முழு விவரங்களையும் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கடன் வழங்கும் போது தெரிவிக்கப்பட்ட போன் எண்களில் இருந்து தான் வாடிக்கையாளர்களுடன் ஏஜென்ட்கள் பேச வேண்டும். இரவு நேரங்களில் மிரட்டல் கூடாது. மற்ற எண்கள் மூலம் மிரட்டும் முறை கூடாது. அப்படிப் பணியாற்றும் ஏஜன்டுகளுக்கு 100 மணிநேர முறையான பயிற்சி தேவை.

கடன் தரும் போது நிலுவை வந்தால் ஈடான சொத்து பறிமுதல் செய்யப்படும் என்ற ஷரத்து தெளிவாக குறிப்பிட வேண்டும். கடனை திருப்பி செலுத்தாத வாடிக்கையாளரிடம் அதுகுறித்து முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதே போல, ஏலம் விடும் போது முன்னறிவுப்புத் தகவலும் தேவை.

ரூ. 10 லட்சத்துக்கு குறைவான கடன் தொகை செலுத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டால், `லோக் அதாலத்'தை அணுகி, கடன் தொகையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல உத்தரவுகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை மீறும் வங்கிகளை குறுகிய காலத்துக்கு தடை செய்யவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன் பிறகு வங்கி சம்பந்தப்பட்ட நடைமுறையில் மாற்றம் இல்லை என்றால் தடை காலம் நீடிக்கவும் முடிவு செய்துள்ளது.

தரவு - தினமலர்

இனி ஒரு விதி செய்வோம்....

ஒன்பது ரூபாய் நோட்டு் - விமர்சனம்



மண்ணையும் மனசையும் பின்னி பிசைந்து படம் எடுப்பதில் தங்கருக்கு நிகர் அவரே! இந்த ஒன்பது ரூபாய் நோட்டும் அப்படிப்பட்ட கதைதான். பண்ருட்டி பக்கத்தில் அமைந்திருக்கும் பத்திரக்கோட்டை கிராமம். அங்கே வாழ்ந்த மாதவர் படையாட்சி, வேலாயி, அவர்கள் சார்ந்த வாழ்க்கை என்று நகரும் கதையில் பிழிய பிழிய அழுகையும், கவலையும் ஒட்டிக்கொள்ள, இந்த இரண்டரை மணி நேர செலுலாய்ட் சிற்பத்திற்கு அடிமையாகி போகிறது மனசு. (உள்ளே போகிறவர்களுக்கு கர்சீப் அவசியம்)

திருட்டு மாங்காய் பறிக்கும் சிறுசுகள், சாயங்கால சந்தையில் ஏலம் கேட்கும் பெருசுகள், சந்தடி சாக்கில் காதல் வளர்க்கும் இளசுகள் என்று தங்கரின் கண்கள் கிராமத்து நிஜங்களை உள்வாங்கியிருக்கிறது. இந்த நிஜங்களையெல்லாம் விஞ்சி நிற்கிறது சத்யராஜ் என்ற மஹா கலைஞனின் நடிப்பு.

கிராமத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் மாதவர் படையாட்சி, தன் பிள்ளைகள் துணையோடு வயலில் பாடுபடுகிறார். இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆனபிறகும் பணத்தையும், பட்டுவாடாவையும் அப்பா மாதவரே பார்க்க, பெண்டாட்டிகளின் துணையோடு அப்பாவை கேள்வி கேட்கிற துணிச்சல் பிறக்கிறது மகன்களுக்கு. எதிர் வீட்டு பங்காளியின் தூண்டுதல் வேறு! இந்த லட்சணத்தில் கடைக்குட்டி மகனுக்கு அந்த ஊர் வண்ணானின் மகள் மேல் காதல்! கண்டிக்கிற அம்மாவிடம், அவள் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்று போராடுகிறான். அவமானத்தால் கூனிக்குறுகி போகும் முதியவர்கள் இருவரும் பிள்ளைகளிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் பக்கத்தில் குடியேறுகிறார்கள். ஆறு வருடங்கள் போயே போய்விடுகிறது. போன இடத்தில் பெண்டாட்டியை பறிகொடுக்கிற மாதவர் திரும்பி ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில்...?

கிராமத்து மனிதர்களுக்கேயுரிய ரோசத்தோடும், பெருந்தன்மையோடும், மாதவர் படையாட்சியாகவே உருமாறிவிட்டார் சத்யராஜ். கோவிலில் மனைவிக்கும் மகனுக்கும் நடக்கும் விவாதத்தை கேட்டு அப்படியே உறைந்து போகிற காட்சியிலாகட்டும், பல வருடங்கள் கழித்து மகனை பார்த்து வேதனையில் துடிப்பதாகட்டும், மனைவியை பாம்பு தீண்டிவிட, ஐயோ என்று அலறித் துடிப்பதாகட்டும், கடைசி கடைசியாக பேரனை கொஞ்சிவிட்டு, வேறெதுவும் தர இயலாமல் இறுகிப் போவதாகட்டும், இனிமேல் நடிக்க எதை மிச்சம் வைத்திருக்கிறார் சத்யராஜ்? விருதுக்கமிட்டிகளுக்கு சத்யராஜின் விலாசம் பழகிவிடும் போலிருக்கிறது.

சத்யராஜுக்கு சமமான போட்டி என்றால் அது அர்ச்சனாவுக்குதான். அடித்தொண்டை கிழிய 'வாழும் முனியே... இப்படி பண்ணிட்டியே...' என்று அவர் அலறும் காட்சிகளில் மெய்சிலிர்த்து போகிறது. வா என்ற ஒருவார்த்தைக்காக கணவனின் கைபிடித்து நடக்கும் இந்த காதல் கிழவி கண்கலங்க வைத்திருக்கிறார்.

இந்து முஸ்லீம் உணர்வுக்கு எடுத்துக்காட்டாக மட்டுமல்ல, இதுவல்லவோ நட்பு என்று சிலாகிக்கவும் வைக்கிறார் நாசர். அதே நேரத்தில், தான் வளர்த்த ஆடுகள், சேமித்த பணம் எல்லாவற்றையும் கொடுத்த மாதவரை, எப்போதாவது வந்து பார்த்திருக்கலாமே இந்த காஜாபாய் என்ற கேள்வியும் எழும்புகிறது நாசரை பார்க்கும்போது.

கிராமத்து வண்ணான் வீட்டு பெண்ணுக்கு பெரியய்யா வீட்டு பையன் மேல் காதல். கூனிக்குறுகி அவர் வீட்டில் சோறு கேட்கும் அவலத்தை படித்த பெண்ணான அவளால் தாங்க முடியுமா? அந்த தவிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் புதுமுகம் இன்பநிலா. (நிறம் என்னவோ அமாவாசை?)

அந்த கோவணத்து ஆசாமி, நம்ப டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரல்லவா? ரொம்ப பழசாக இருந்தாலும் நம்பிக்கை அளிக்கும் புதுவரவு.

மனசு பொங்கி கண்ணீருக்கு வழிவிடுகிற நேரத்தில் எல்லாம் அதை விரைவாக செய்துவிட வைக்கிறது இசை. அற்புதம் பரத்வாஜ். மார்கழியில் குளிச்சு பாரு...வேலாயி... போன்ற பாடல்கள் உள்ளிட்ட எல்லா பாடல்களிலும் இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் பரத்வாஜ்.

அந்த ஊருக்கே அழைத்து போன உணர்வை அளிக்கிறது ஒளிப்பதிவு.

எல்லாம் கச்சிதமாக இருந்தும், திருஷ்டி பொம்மை போல் தலைநீட்டும் சில இடைச்செறுகல்களை தவிர்த்திருக்கலாம். (உ.தா- இப்பல்லாம் இந்த கொடிதான் நம்ப ஊர்ல அதிகம் பறக்குது. அவங்களுக்குதான் செல்வாக்கும் அதிகம்).

விலை மதிப்பற்ற நோட்டு

தரவு - தமிழ்சினிமா.காம்

WE(A)eKEND





புலிகளின் செயற்கைகோள் மையம் தகர்ப்பு: 3 பேர் பலி

இலங்கையில் புலிகளின் ரகசிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை போர் விமானங்கள் இன்று காலை குண்டுவீசி தகர்த்தன. இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாய மடைந்தனர்.

விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் புலிகள் தரப்புக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு முன் இலங்கை ராணுவம் நடத்திய விமான தாக்குதலில், புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் உட்பட முக்கிய தலைவர்கள் பலர் பலியாயினர். இச்சம்பவம் புலிகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. அதன்பின் இலங்கை ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. "புலிகளின் ரகசிய இடங்கள் எல்லாம் குண்டுபிடிக்கப்பட்டு விட்டது. முக்கியத் தலைவர்களை ஒவ்வொருவராக கொல்வோம்" என இலங்கை விமானப்படை தளபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், "கிளிநொச்சி பகுதியில் உள்ள தர்மாபுரம் கிராமத்தில் ஒரு ரகசிய இடத்தில் அமைந்துள்ள புலிகளின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையத்தை இலங்கை போர் விமானங்கள் இன்று காலை குண்டு வீசி தகர்த்தன. இதனால் புலிகள் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது" என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி புலிகள் தரப்பில், "இலங்கை விமானப்படை 8 குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

WE(A)eKEND






கமல் மகள் கதாநாயகியாகிறார்....


கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி, மாதவன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
நடிகர் கமல்ஹாசன், சரிகாவுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரு மகள்கள் உள்ளனர். கமலிடம் விவாகரத்து பெற்று சரிகா பிரிந்து வாழ்கிறார். இதனால் இரு மகள்களும் சென்னையில் கமலுடன் வசித்து வருகின்றனர். மூத்த மகள் ஸ்ருதிக்கு இசையில் ஆர்வம் அதிகம். சினிமாவில் பாட ஆசைப்பட்ட அவர், கமல் நடித்த "தசாவதாரம்" படத்தில் மல்லிகா ஷெராவத் ஆட்டத்துக்கு பாடியுள்ளார். இதையடுத்து தனி இசை ஆல்பம் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ருதியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. நிறைய அழைப்புகள் வந்தும் அவர் நிராகரித்து விட்டார். வெங்கட் பிரபு இயக்கும் ‘ஏழு’ படத்தில் அவரை நடிக்க கேட்டபோது, மறுத்துவிட்டார்.

இந்நிலையில், மாதவன் ஜோடியாக தமிழ்ப் படத்தில் நடிக்க ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சேரன், சினேகா ஜோடி சேரும் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தை தயாரிக்கும் ஞானம் பிலிம்ஸ், அடுத்து மாதவன் ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை மும்பையைச் சேர்ந்த நிஷிகாந்த் காமத் டைரக்ட் செய்கிறார்.

தற்போது அவர் இயக்கிய ‘எவனோ ஒருவன்’ படத்தில் மாதவன், சங்கீதா நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது.

இதைத் தொடர்ந்து ஜனவரியில் மாதவன், ஸ்ருதி நடிக்கும் படம் தொடங்குகிறது. படத்துக்கு பெயர் சூட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தரவு - தமிழ்முரசு

WE(A)eKEND

திமுக மாவட்ட செயலாளர் குண்டு வீசி படுகொலை

பத்திரிகை கொடுப்பதுபோல் நடித்து கைவரிசை திருவாரூரில் பதற்றம்; கடைகள் அடைப்பு, திமுக மாவட்ட செயலாளர் குண்டு வீசி படுகொலை!



திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைச்செல்வனை இன்று காலை ஒரு கும்பல் குண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தது. திருமண பத்திரிகை கொடுப்பதுபோல வந்த 4 பேர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராகவும், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராகவும் இருந்தவர் பூண்டி கலைச்செல்வன் (47). இவரது வீடு கொரடாச்சேரியில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு இவரது வீட்டுக்கு 4 பேர் வந்தனர். வீட்டில் இருந்தவர்கள் விசாரித்தபோது, திருமண பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக கூறினர்.

இதனால், அவர்களை கலைச்செல்வனை பார்க்க அனுமதித்தனர். அப்போது அந்த 4 பேரும் திடீரென பையில் வைத்திருந்த வெடிகுண்டை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது வீசினர். குண்டு சத்தம் கேட்டதும் கலைச்செல்வன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அப்போது அந்த கும்பல் தயாராக வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் கலைச்செல்வன் சரிந்து விழுந்ததும் நான்கு பேரும் அங்கிருந்த பைக்கில் ஏறி தப்பிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலைச்செல்வனை உடனடியாக திருவாரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்தார்.

கலைச்செல்வன் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருவாரூர் மாவட்ட திமுகவினர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர், கொரடாச்சேரி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. கொரடாச்சேரியில் ஒரு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. பல பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் திருவாரூரில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள்தான் கலைச்செல்வனை கொலை செய்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்டவர்கள், கடந்த ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மணல்மேடு சங்கர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

திருச்சி சரக ஐ.ஜி. ராஜா, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாஷ்குமார் ஆகியோர் திருவாரூர் விரைந்துள்ளனர்.

தரவு- தமிழ்முரசு

தி.நகரில் போக்குவரத்து மாற்றம்




தி.நகர் உஸ்மான் சாலை, துரைசாமி சாலை சந்திப்பில் நடக்கும் மேம்பாலப் பணியையட்டி, இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுனில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாகேஸ்வரா சாலை - உஸ்மான் சாலை சந்திப்பு முதல் பிரகாசம் சாலை - உஸ்மான் சாலை சந்திப்பு வரை உள்ள உஸ்மான் சாலையின் ஒரு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

துரைசாமி சாலையிலிருந்து உஸ்மான் சாலை மற்றும் பிரகாசம் சாலை வழியாக, இதுவரை ஜி.என்.சாலை, தியாகராயா சாலை, வெங்கட்நாராயணன் சாலைக்கு சென்ற வாகனங்கள் இனிமேல் துரைசாமி சாலை, உஸ்மான் சாலை, நாகேஸ்வரா சாலை, பாஷ்யம் சாலை (இதுவரை வாகனங்கள் நிறுத்தப்பட் டிருந்த பகுதி) வழியாகச் செல்லலாம்.

பாஷ்யம் சாலை வந்தடைந்த வாகனங்கள் தியாகராயா சாலைக்கு செல்ல பாஷ்யம் சாலை மற்றும் தியாகராயா சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி செல்லலாம். அதேபோல், வெங்கட்நாராயணா சாலைக்கு செல்லும் வாகனங்கள் மேற்படி சந்திப்பில் ‘யூ’ திருப்பம் திரும்பி செல்லலாம். மேலும் அத்தகைய வாகனங்கள் ஜி.என்.சாலைக்கு செல்ல பாஷ்யம் சாலை மற்றும் பிரகாசம் சாலை சந்திப்பு வரை சென்று அச்சந்திப்பில் வலது புறமாக திரும்பி ஜி.என்.சாலைக்கு செல்லலாம்.

வெங்கட்நாராயணா சாலையிலிருந்து ஜி.என். சாலை மற்றும் தியாகராயா சாலைக்கு இதுவரை நாகேஸ்வரா சாலை, உஸ்மான் சாலை மற்றும் பிரகாசம் சாலை வழியாக சென்ற வாகனங்கள், இனிமேல் பாஷ்யம் சாலை வழியாக வந்து பாஷ்யம் சாலை மற்றம் தியாகராயா சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி தியாகராய சாலைக்கு செல்லலாம். ஜி.என்.சாலைக்கு செல்ல பிரகாசம் சாலை மற்றம் பாஷ்யம் சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி ஜி.என்.சாலை செல்லலாம். தியாகராயா சாலையிலிருந்து ஜி.என்.சாலைக்கு இதுவரை நாகேஸ்வரா சாலை, உஸ்மான் சாலை, பிரகாசம் சாலை வழியாக சென்ற வாகனங்கள், இனிமேல் தியாகராயா சாலையிலிருந்து பாஷ்யம் சாலைக்கு இடது புறமாக திரும்பி பாஷ்யம் சாலை மற்றும் நாகேஸ்வரன் சாலை சந்திப்பில் ‘யூ’ திருப்பம் திரும்பி பாஷ்யம் சாலை (இதுவரை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதி) வழியாக வந்து பிரகாசம் சாலை மற்றும் பாஷ்யம் சாலை சந்திப்பில் வலது புறமாக திரும்பி ஜி.என்.சாலைக்கு செல்லலாம்.

மேலும், நாகேஸ்வரா மற்றும் பாஷ்யம் சாலைகளில் வாகனங்கள் நிரந்தரமாக நிறுத்துவதும், பயணி களை இறக்கிவிட தற்காலிகமாக நிறுத்துவதும் அனுமதி இல்லை. ஜி.என்.சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று ஒதுக்கப்பட்ட மேற்படி சாலையின் பாதி பகுதியில் நிறுத்தலாம்.

தரவு-தமிழ்முரசு

நடிகர் கமலிடம் விசாரணை! உதவி இயக்குனருக்கு கொலை மிரட்டல்

சினிமா உதவி இயக்குனரின் வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்த வழக்கு தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், அவரது மேனேஜர்கள், சினிமா பி.ஆர்.ஓ. உள்ளிட்டவர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருக்கின்றனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தனுஷ்", "அப்படியா" ஆகிய படங்களின் உதவி இயக்குனர் செந்தில்குமார் (32). சென்னை மேற்கு தாம்பரம் பூர்ண திலகம் குறுக்குத் தெருவில் வசிக்கிறார். தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர் ஒரு மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

"அர்த்தநாரி என்ற குளோனிங்" என்ற பெயரில் ஒரு கதை தயார் செய்து நடிகர் கமல்ஹாசனிடம் கூறினேன். கதை வித்தியாசமாக இருப்பதாக கூறி கமல்ஹாசனும் அவரது மேனேஜர் முரளியும் என்னை வரச்சொன்னார்கள். நண்பர் பாலாவுடன் சென்றேன். கமல்ஹாசன், மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் ஆகியோரிடம் கதையை கூறினேன்.

சூப்பராக இருப்பதாக கூறி ரூ.501 அட்வான்ஸ் கொடுத்தனர். ரூ.25 லட்சம் தந்து, படத்தில் இணை இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு தருவதாக கூறினர். அதற்குப் பிறகு, அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. சில நாட்களுக்கு பிறகு, ஒரு படத்தில் 10 வேடங்களில் கமல் நடிக்கப்போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வந்தது. நான் சொன்ன கதைதான் அது. மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களிடம் கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டனர்.

இதையடுத்து, தசாவதாரம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பிறகு, தடை நீக்கப்பட்டது. ஐகோர்ட்டில் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. படத்துக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டிலும் மனு செய்தேன்.

இது கமல்ஹாசனுக்கு தெரியவந்ததும், அவரது மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் மற்றும் 10 பேர் என் வீட்டுக்கு வந்தார்கள். "சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் வாங்கு. இல்லாவிட்டால் உன்னை கொலை செய்து விடுவோம். உன் குடும்பத்தினரை ஒழித்துக்கட்டி விடுவோம்" என்று மிரட்டினர். இதுகுறித்து மாநகர காவல் துறையிடம் புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

என் கதையை வாங்கி ஏமாற்றியதுடன், எனக்கும் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் செந்தில்குமார் கூறியிருந்தார்.

அவரது சார்பில் மனுவை வக்கீல் சாமி வெங்கடேசன் தாக்கல் செய்திருந்தார். வழக்கு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு வக்கீல் ஆறுமுகம் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் போலீசார் ஆலோசனை செய்தனர். இதையடுத்து கமல்ஹாசன், மேனேஜர்கள் முரளி, கார்த்திக், பி.ஆர்.ஓ. நிகில்முருகன் மற்றும் 7 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 451 (அத்துமீறி வீட்டில் நுழைதல்), 506/2 (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்தார்.

கமல்ஹாசன் உள்பட அனைவர் மீதும் விரைவில் விசாரணை நடத்தப்படும். விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட உள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு கமல்ஹாசன் உள்பட அனைவருக்கும் விரைவில் உத்தரவிடப்பட உள்ளது என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோடம்பாக்க வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொல்லாதவன் - விமர்சனம்


தினமும் ஐந்து லட்சம் பேருக்கு மேல் சென்னைக்கு வந்திறங்குகிறார்களாம். இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ, குலை நடுங்கவைக்கும் கொலைகார சென்னையை காட்டியிருக்கிறார்கள். 'மளுக் மளுக்'கென்று வெண்டைக்காயை முறிப்பதுபோல் முறித்துப் போடுகிறார்கள் மனிதர்களை. இந்த இரத்த பிசையலுக்கு நடுவில், காதல் என்ற நிலாச்சோறும் இருக்கிறது. நிம்மதி!

ஒரு பைக்கிற்கு ஆசைப்பட்ட தனுஷின் வாழ்க்கை, தாறுமாறாக ஓடி கடைசியில் முட்டு சந்தில் நிற்பதுதான் கதை. வாரத்திற்கு ஒருமுறை ஷோரூமிற்கு வந்து 'பல்சர்' விலையை கேட்டுவிட்டு போகும் தனுஷ், கடைசியில் அதை வாங்கியே விடுகிறார். ஒரு காதலியை போல நேசிக்கும் அவர், ஒரு சந்தர்பத்தில் அதை தொலைத்துவிட்டு நிற்க, திருடிய கோஷ்டி அதில் பிரவுன் சுகர் கடத்துகிறது. எப்படியாவது பைக்கை அடைந்துவிட தவிக்கும் தனுஷ், அந்த போராட்டத்தில் செய்யும் கொலைகள்தான் முடிவு.

தறுதலை பிள்ளைகளின் ஜெராக்ஸ் ஆகவே மாறியிருக்கிறார் தனுஷ். நண்பர்களுடன் குடித்துவிட்டு, நள்ளிரவில் வீடு திரும்பி, அப்பா கொடுக்கிற அறையையும் வாங்கிக் கொண்டு, சிரிப்பு சிரிப்பா வருதுப்பா என்கிறாரே... அது தந்தைகுலங்களுக்கு கொடுக்கிற எனிமா. தூறல் புயலானது மாதிரி, மெல்ல துவங்குகிற சண்டை, நான் திருப்பி அடிச்சா நல்லாயிருக்காது என்று முடிவது பயங்கரம். குடும்ப சென்டிமென்ட்டை விடுங்கள். அந்த காதல் எபிசோட் பிரமாதம். தயங்கி தயங்கி காதலை சொல்லப் போகும்போதெல்லாம் தனுஷ§க்கு நெகட்டிவ் சிக்னல் காட்டும் திவ்யா, திடீரென்று ஒருநாள் என்னை காலேஜில் விட்டுடறியா? என்று பைக்கில் ஏறிக் கொள்வது 'நல்ல பொண்ணுங்கடா' என்று வாய்விட்டு முணுமுணுக்க வைக்கிறது.

தனுஷின் அப்பாவாக மலையாள முரளி. தேறவே மாட்டான் என்று நினைக்கிற பிள்ளை, வேலைக்கு போக ஆரம்பித்ததும் ரகசியமாக சந்தோஷப்படுகிறாரே அங்கேயும், மருத்துவமனையில் அரிவாள் தூக்கப்போகும் தனுஷை, அருகே அழைத்து தனக்கு பிறகு குடும்பத்தை சுமக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்கிறாரே அங்கேயும், தானொரு அவார்டு வின்னர் என்பதை நினைவுபடுத்துகிறார்.

கலகலப்புக்கு கருணாசும், சந்தானமும். முதன்முதலாக பைக் வாங்கிய நண்பன் ஆசையோடு அழைப்பதாக நினைத்துக் கொண்டு போகிற சந்தானம், அழைக்கப்பட்டது எதற்காக என்பது தெரிந்ததும் வெகுண்டு எழுவது வெடிச்சிரிப்பு. டெலிபோன் டைரக்டரியை, ஏதோ ஆங்கில நாவல் மாதிரி விரித்து வைத்துக் கொண்டு ஃபிகர் தேற்றும் கருணாசும் நகைக்க வைக்கிறார்.

டேனியல் பாலாஜி, பவன், கிஷோர்குமார் என்று பதைபதைக்க வைக்கிறார்கள் வில்லன்கள். அதிலும் சொந்த அண்ணனையே போட்டுத்தள்ளும் பாலாஜியின் முகுத்தில் குரூரம் கொப்பளிக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் இசையில் ரீமிக்ஸ் பாடலான 'எங்கேயும் எப்போதும்' எவர்கிரீன். மற்றவை பிரகாஷின் இமேஜை பல படிகள் கீழே தள்ளும். குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் சந்து பொந்துகளிலும், கொலை நடக்கும் அரையிருட்டுகளிலும் ஒளிப்பதிவாளரின் திறமை வெளிச்சம் போட்டிருக்கிறது.

அருவாள காட்டி ரவுடிகளை விரட்டலாம். ரசிகர்களை விரட்டலாமா?

-ஆர்.எஸ்.அந்தணன்



தரவு - தமிழ்மணம்.காம்

ஆக்ரா - விமர்சனம்

தீபாவளி திரைப்படங்களின் விமர்சனங்கள்...சுடச்சுட உங்களின் பார்வைக்கு


'பொளேர்' என்று கன்னத்தில் அறைகிற வசனங்கள், அங்கங்கே எட்டிப்பார்க்கும் 'பார்த்திப' கிறுக்குகள், காதலர்கள் இருவர் ஒதுங்குகிற நேரம் க்ளோஸ்-ஷாட்டில் 'ஆட்கள் வேலை செய்கிறார்கள்' என்ற போர்டு! இப்படி முதல் பாதி ஆக்ரா, முழுக்க முழுக்க வயாக்ரா! இரண்டாம் பாதி நிஜமாலுமே ஆக்ராவுக்கு பயணமாகி காதலில் கரைகிறது. தண்ணீருக்காக பல மைல் தூரம் பானை சுமக்கிற ஹீரோயினுக்கு, தண்ணீருக்கு நடுவிலேயே வீடு கட்டி வாழ வேண்டும் என்ற ஆசை! இதுபோல் படம் முழுக்க மனசை கொள்ளையடிப்பதற்கென்றே நிறைய விஷயங்கள்.

காதலை பற்றி ஆராய்ச்சி கட்டுரை எழுதுவதற்காக அமெரிக்காவிலிருந்து ஆலப்புழாவுக்கு வருகிறார் எமிமோகன். அங்கே அப்பாவின் நண்பர் நாசர், நாற்பது வருடங்களாக ஒரு கடிதத்திற்காக காத்திருக்கிறார். அது...? பிளாஷ்பேக் விரிகிறது. வயலின் கலைஞரான கண்ணன் ஆக்ராவில் சந்திக்கிறார் பொம்மை விற்கும் அஞ்சலியை! பார்த்தவுடனே பற்றிக் கொள்கிறது காதல். காதலுக்கு எதிரியான அந்த பூமி, அக்கினியாய் மாறி ஆக்ஷன் எடுப்பதற்கு முன்பே கண்ணனை தமிழ்நாட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறாள் அஞ்சலி. வருகிறபோது தன் முகவரியிட்ட கடிதம் ஒன்றை கொடுக்கிறான் கண்ணன். எப்போது நான் வந்து அழைக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்போது இதை அனுப்பு. வருகிறேன். இதுதான் கடிதத்திற்கான பின்னணி. நாற்பது வருடங்கள் கழித்து கடிதம் வர, மகிழ்ச்சியோடு ஆக்ரா செல்லும் காதலனுக்கு அங்கு கிடைத்தது என்ன? க்ளைமாக்ஸ்!

நாசரின் பார்வையில் பார்க்கிற எல்லாமே பிளாக் அண் ஒயிட்டாக தெரிவதையும், அதை வசனங்களால் கூட குறிப்பிடாமல், கடைசியில் விளக்குவதும் இயக்குனரின் சாமர்த்தியம். ஆபரேஷனுக்கு பிறகு கண்களை அவிழ்த்து, இமைகளை படபடத்து நீட்டி முழக்காமல், நாசரின் கண்ணுக்கு தபால்காரரையே கலர்புல்லாக காட்டி காட்சியை சுருக்கியிருக்கிறார் எடிட்டர். பலே! புதுமுகம் அஞ்சலியும், விகாஷ§ம் ஒன்றி நடித்திருக்கிறார்கள். ஆங்கில படமே தோற்றுப்போகிற அளவுக்கு லிப் டு லிப் காட்சிகளை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.

பீச்சில் சுண்டல் விற்கிற பையன், 'பேசாம சுண்டல் விக்கறதுக்கு பதிலா நிரோத் வித்திருக்கலாம் சார்' என்று போகிற போக்கில் காதல் பற்றி, கமெண்ட் அடிக்கிற போது பகீர் என்கிறது. அடிக்கடி காதல் பற்றி விவாதித்துக் கொண்டேயிருக்கிறார்கள். இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால், காதல்ங்கிறது... என்று ஆரம்பித்து குட்டியாக லெக்சர் கொடுப்பதுதான் போர்ர்ர்ர்! போதும் போதாதற்கு காயத்ரி என்ற பெண்ணை உருட்டி விளையாடியிருக்கிறார்கள். 'பிட்' படமோ என்ற அச்சமே வந்துவிடுகிறது.

டி.ராஜேந்தர் போல் உருவத்தோற்றமுள்ள அந்த புதுமுகம் கவனத்தை ஈர்க்கிறார்.

ஆக்ராவின் அழகையும், அவலத்தையும் ஒரேநேரத்தில் உள்வாங்கியிருக்கிறது பி.செல்வகுமாரின் கேமிரா. மதுரா, சிரபுஞ்சி, ஆலப்புழா என்று பசுமையை பந்தி வைத்திருக்கிற கேமிராமேனுக்கு முதல் சபாஷ்! நான் மட்டும் சளைத்தவனா என்கிறார் புதுமுக இசையமைப்பாளர் சி.எஸ்.பாலு. பின்னணி இசை மனசை அள்ளிக் கொண்டு போகிறது.

விருந்தா? விஷமா? சின்ன குழப்பத்தோடுதான் வெளியேற வேண்டியிருக்கிறது!

-ஆர்.எஸ்.அந்தணன்

தரவு - தமிழ்சினிமா.காம்

கண்ணாமூச்சி ஏனடா - விமர்சனம்

தீபாவளி படங்களின் விமர்சனம் சுடச்சுட...உங்களின் பார்வைக்கு



மலேசியாவில் துவங்கி, சென்னைக்கு நகர்ந்து, பிறகு அங்கிருந்து ஊட்டிக்கு நகர்ந்து, அதே வேகத்தில் மறுபடியும் சென்னைக்கு நகரும் படம்! (கதை நகரவே மாட்டேங்குது என்று யாரும் குறை சொல்ல முடியாதல்லவா?)

மலேசியாவில் சந்தியாவை பார்க்கும் ப்ருத்திவிராஜ், கண்டவுடன் காதல் கொள்கிறார். தன் குண்டு மூக்கின் மேல் கோபத்தை வரவழைத்துக் கொள்ளும் சந்தியாவும், முதலில் முரண்டு பிடித்து, பிறகு பிருத்திவிராஜ் மேல் காதல் கொள்ள, இந்தியாவுக்கு வருகிறார்கள் இருவரும். சென்னையில் போலீஸ் கமிஷனராக இருக்கும் சத்யராஜ், தன் மகள் சந்தியாவின் காதலனை சந்தேகத்தோடு பார்க்க, அம்மா ராதிகாவுக்கு வருங்கால மருமகன் மேல் நம்பிக்கை! விசில் வரும் நேரத்தில் குக்கர் வெடித்த கதையாக சத்யராஜும், ராதிகாவுமே பிரிய நேர்கிறது. வீட்டை விட்டு வெளியேறிய ராதிகாவை மறுபடியும் சத்யராஜுடன் இணைத்து வைக்க போராடுகிறார் பிருத்திவிராஜ். இதற்கிடையில் மாப்பிள்ளை நல்லவர்தான் என்று மாமனாரும் உணர, இறுதியில், சின்ன சூயிங்க இழுவலோடு சுபம்!

சைக்காலஜி படிப்பதற்காக மலேசியா வந்த சந்தியாவின் நடிப்பு தூள்! சைக்காலஜி பாடத்தை ரோட்டிலேயே மனப்பாடம் செய்து கொண்டே நடக்கிற அழகும், ஏய்...ஏய் என்று கண்களும், உதடுகளும், அவருக்கே ஸ்பெஷலான அந்த மூக்கும் துடிக்க, கோபப்படுவதும் அழகோ அழகு.

சென்னைக்கு வரும் பிருத்திவிராஜை போலீஸ் கமிஷனர் சத்யராஜ் வரவேற்பது அமர்க்களம்! வயர்லெசில் கைதியின் விசாரணை லைவ்வாக வந்து கொண்டேயிருக்க, அதையும் காதில் வாங்கிக் கொண்டே பிருத்திவி பதில் சொல்லி சமாளிக்கிறாரே...சூப்பர். பிருத்திவி அறையிலேயே சத்யராஜ் தங்கி அவரை அவஸ்தைப்படுத்துவது இன்னொரு பகீர் சிரிப்பு. அவரது ஓயாத குறட்டையையும், கட்டில் ஆக்ரமிப்பையும் சின்ன புன்னகையோடு சகித்துக் கொள்ளும் பிருத்திவிராஜின் பொறுமை அலாதி நகைச்சுவை. மெல்ல, மெல்ல, சத்யராஜ் பாணியிலேயே போய் அவரை கலவரப்படுத்துவதும் சுவாரஸ்யம்.

பல படங்களுக்கு பிறகு தனக்கேயுரிய ஸ்பெஷல் ஐட்டங்களுடன் ரகளை கட்டியிருக்கிறார் சத்யராஜ். மனைவி ராதிகாவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க தயங்கி, பின்பு உடைந்து நொறுங்குகிறபோது சென்ட்டிமென்ட் சிகரமாகிறார். 'நீ இல்லாம என்னால சாகக்கூட தெரியாது' என்று அவர் கதறுகிற போது, சிவக்குமாரின் வசனங்களுக்கும் கிரீடம் முளைக்கிறது.

ஓடிப்போன அக்கா(வா?)வாக ஸ்ரீபிரியா. வனத்துறை அதிகாரியாம். அறிமுகமே அசத்தல். இந்த பொறியிடம் சத்யராஜ் என்ற சிங்கமே மாட்டிக் கொண்டு அல்லல் பட்டிருக்கிறது. பல வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்கிற இந்த இரட்டையர்கள், அந்த நெகிழ்வான நிகழ்ச்சியையும் காமெடியாக்கிவிடுவதுதான் உறுத்தல்!

மலேசியா, ஊட்டி என்று அகோரப் பசியோடு மேய்ந்திருக்கிறது ப்ரிதாவின் கேமிரா! யுவன்சங்கர்ராஜா இசையில் பாடல்கள் பரவசம். குறிப்பாக மேகம் மேகம்... பாடல்! அன்று வந்ததும் அதே நிலா ரீமிக்சில் யுவனின் இசையும், சத்யராஜ்-ராதிகா ஜோடியும் ஆட்டமும் போட்டி போட்டிருக்கிறது.

கலகலப்பான கண்ணாமூச்சி ஆட்டம்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

தரவு - தமிழ்மணம்.காம்

செய்திகளை முந்தித்தருவது மிளகாய்....

காவிரி - வைகை நதிகளை இணைக்க திட்டம்

கரூர் கட்டளையில் இருந்து குண்டாறு வரை ரூ.1,000 கோடியில் முதல் கட்டப் பணி


வறட்சி பாதித்த மாவட்டங்களை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது பற்றி ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக தென்னிந்தியாவில் ஓடும் நதிகளையாவது இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யோசனை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலத்தில் ஓடும் நதிகளை இணைத்து வறட்சி பாதித்த பகுதிகளை மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளிலிருந்து உபரி தண்ணீரை, வறட்சி பாதித்த பகுதிகளுக்கு திருப்பிவிடுவது குறித்து மாநில பொதுப்பணித் துறை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

முதல் கட்டமாக காவிரியையும் வைகையையும் இணைப்பது பற்றி ஆய்வு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

காவிரி படுகை பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுவ தோடு, வறட்சி பகுதிகளான புதுக்கோட்டை, சிவகங்கை, ராமனாதபுரம், விருதுநகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கவும் முடியும் என்கின்றனர் பொதுப்பணித் துறை பொறியாளர்கள்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கட்டளையில் காவிரி ஆற்றின் குறுக்கே மதகு அணை கட்டப்பட்டுள்ளது. இதை வெள்ள நீரை தேக்கி வைக்கும் அணையாகவும், தண்ணீர் மேலாண்மையை சிறப்பாக நிர்வகிக்கும் இடமாகவும் மாற்றப்படும்.

பின்னர், அங்கிருந்து குண்டாறு வரை வாய்க்கால் வெட்டப்படும். இந்த வாய்க்கால், அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, வைகை, ஆகிய ஆறுகளையும் இணைக்கும். இந்த கால்வாயின் மொத்தம் நீளம் 255 கி.மீ.

கடந்த 1975ம் ஆண்டு முதல் மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது பற்றிய கணக்கெடுத்தில் மேட்டூர் அணைக்கு 15 ஆண்டுகளில் 5 முதல் 81 நாட்கள் கூடுதல் தண்ணீர் வந்துள்ளது. மேலும் காவரி பாசன பகுதிகளில் அதிகளவில் மழை பெய்யும் போதும், கட்டளையில் உள்ள தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கால்வாய்க்கு திருப்பி விடப்படும்.

காவிரி வெள்ள நீரை மட்டுமின்றி, அரியாறு, கோரையாறு ஆகியவற்றில் மழை காலங்களில் ஓடும் வெள்ள நீரையும் இந்த கால்வாய் மூலம் திருப்பிவிடப்படும்.

இந்த இணைப்பு மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் நல்ல பலனையடையும்.

இந்த திட்டத்துக்கு மொத்தம் 3 ஆயிரத்து 684 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதனால் 2 ஆயிரத்து 228 ஹெக்டேர் பட்டா நிலமாகவும், ஆயிரத்து 416 ஹெக்டேர் புறம்போக்கு நிலமாகவும் மீதி வனத் துறைக்கு சொந்தமான நிலமாகவும் உள்ளது.

இதற்கான ஆய்வு பணி இரண்டு கட்டமாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தடுப்பு அணை மற்றும் கால்வாய் கட்டுவது சம்பந்தமான பணிகள், மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்படும்.

இப்போது நடந்து வரும் இந்தப் பணி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடியும், அடுத்த கட்ட பணியில், வாய்க்காலை நீட்டிப்பது பற்றி ஆய்வு செய்யப்படும்.

முதல் கட்ட பணிக்கே ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். இந்த தகவல்கள் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடன் வசூலிக்க குண்டர்களை அனுப்பிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம்

கடன் தவணையை வசூலிக்க குண்டர்களை அனுப்பிய ஐசிஐசிஐ வங்கிக்கு டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றம் ரூ.55 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனியார் வங்கிகளில் இந்தியாவின் 2-வது மிகப் பெரிய வங்கியாக திகழும் ஐசிஐசிஐக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது வங்கிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த தபான் போஸ் என்பவர் ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று கார் வாங்கினார். தவணையை அவர் சரியாக கட்டவில்லை என வங்கி தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் போஸின் நண்பர் மகன் வினோத் போஸின் காரை ஓட்டிச் சென்ற போது ஐசிஐசிஐ வங்கியிலிருந்து வருவதாக கூறிய அடியாட்கள் சிலர் காரை வழிமறித்து வினோத்தை அடித்து உதைத்து காரை பிடுங்கிச் சென்றனர்.

இதை எதிர்த்து டெல்லி மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் போஸ் வழக்கு தொடர்ந்தார். டெல்லி நுகர்வோர் மன்றத்தின் தலைவரும் நீதிபதியுமான ஜேடி.கபூர் விசாரித்து, கடன் வசூலிக்க குண்டர்களை அனுப்பிய ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பது:

கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்பி வைக்கும் வங்கிகள் செயலை சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் எந்த ஒரு நாகரிக சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது. இது மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயல். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் வங்கிகள் மீது புகார்கள் வந்தால் அவற்றின் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய காவல்நிலைய பொறுப்பாளர்களுக்கு டெல்லி மாநில போலீஸ் கமிஷனர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தரவு - தமிழ்முரசு

நாளைய பொழுதும் உன்னோடு் - விமர்சனம்


பால்ய காலத்து நட்பு, பருவ வயதில் காதலாகிறது. வழக்கம்போல் பெற்றோர்களின் எதிர்ப்பு. வலுக்கட்டாயமாக பிரிக்கப்படும் ஜோடிகள் மீண்டும் சந்திக்கும்போது என்னாகிறது? ஹைக்கூவின் கடைசி வரி மாதிரி அழுத்தமான க்ளைமாக்ஸ்!

சிறுவயது சந்தோஷங்களை மார்கழி மாதத்து கோலம் மாதிரி குளிர குளிர வரைந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் மூர்த்தி கண்ணன். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போதுதான் வழக்கமான சினிமா வந்து ஒட்டிக் கொள்கிறது.

கோட்டை பிள்ளைமார் குடும்பத்து பெண்ணை காதலிக்கும் சேட்டை பிள்ளையாக பிருத்வி. நங்கை...நங்கை.. என்று அவர் பிதற்றி திரிவது அழகு என்றால், தைரியமாக கார்த்திகாவின் வீட்டுக்கே போய் நெல் கொட்டி வைக்கும் பத்தாயத்தில் இறங்கி காதல் மொழி பேசுவது குறும்பு. கார்த்திகாவை பிரிந்தபின் சாப்பிட கூட மனமில்லாமல் கையை அறுத்துக் கொண்டு சுய வேதனை செய்து கொள்ளும் நேரங்களில் பரிதாபப்பட வைக்கிறார். கிராமத்து இளைஞர்களுக்கேயுரிய துடுக்கும் இயல்பாகவே வருகிறது அவருக்கு.

பயமோ, பதட்டமோ இல்லாமல் ப்ருத்வியை வீட்டுக்கே அழைத்து கருவாட்டு விருந்து வைக்கும் கார்த்திகா, அநேக காட்சிகளில் தன் அழகான சிரிப்பை பந்தி வைக்கிறார். இறுதி ரீல்களில் கார்த்திகாவின் சிரிப்பு காணாமல் போய்விட, அவரின் நிலைமை பகீர்! நள்ளிரவில் ப்ருத்வியின் வீட்டுக்கே போய் கதவில் தொங்கும் பூட்டை பார்த்துவிட்டு கதறி அழும் அவர், எனக்கு அவன் வேணும்மா என்று கதறி அழுவது பரிதாபம்.

நாமெல்லாம் கோட்டை பிள்ளைமார் பரம்பரை என்று கர்ஜித்தபடி கிராமத்து நீலாம்பரியாக வரும் கௌரி, பேச்சில்தான் சூறாவளி. முகம் என்னவோ, தென்றல்! ஒட்டவேயில்லை அந்த ஆக்ரோஷம்! எவ்வளவு நேரம்தான் கிராமத்தையே காட்டுவது? சென்னைக்கு பஸ் ஏறுகிறது திரைக்கதை. இங்கே டிஸ்கோதேவில் ஒரு ஆட்டம். ஸ்லீவ்லெஸ் பனியன்களுக்கு க்ளோஸ்-அப் என்று விநியோகஸ்தர்களின் பசிக்கும் ஸ்னாக்ஸ் கொடுக்கிறார் இயக்குனர்.

ரோஹிணி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். ஊறுகாய் அளவுக்கு கவர்ச்சியும் காட்டுகிறார்.

மொத்த கதையையும் தன் வாயால் சொல்கிறார் வேலுபிரபாகரன். மிகப்பெரிய எழுத்தாளரான அவர் யார் என்பதை இறுதிகாட்சியில் சொல்லும் போதுதான் சபாஷ் என்று சத்தம் போட்டு பாராட்ட வைக்கிறார் இயக்குனர். அந்த நொடியில் சின்ன சிலிர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. வி.ஏ.ஓ லிவிங்ஸ்டன், பத்திரிகை ஆசிரியர் வேணுஅரவிந்த், நகைச்சுவை கறிவேப்பிலை கோவை குணா என்று சின்ன சின்ன நடிகர்கள் கூட ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை பல காட்சிகளில் மௌனம் காத்து, மேலும் கனமாக்குகிறது! 'பேச பேராச...' என்ற பாடலில் பவதாரிணியின் குரல் மந்திரம் போல் கட்டி வைக்கிறது மனசை!


சற்றே வேகத்தை கூட்டியிருந்தால் நாளைய பொழுதிலும் பேசப்பட்டிருக்கும் படமாகியிருக்கும்!

-ஆர்.எஸ்.அந்தணன்



தரவு - தமிழ்சினிமா.காம்

வீட்டுக்காவலில் முஷாரப்? பாக்கிஸ்தான் அரசு மறுப்பு



அதிபர் முஷாரப் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளை பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை மறுத்துள்ளது.

முஷாரபை வீட்டுக்காவலில் ராணுவத் துணைத் தளபதி வைத்திருப்பதாக நாடு முழுவதும் பரபரப்பாக வதந்தி பரவியது.

"அது உண்மையில்லை. அந்தச் செய்தியில் துளியும் உண்மை இல்லை. அவர் (முஷாரப்) அதிபர் மாளிகையில் இருக்கிறார்; வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்' என்றும் அரசின் உயர் நிலைச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தரவு - தினமணி

வீட்டு சிறையில் இருந்து தப்பினார் இம்ரான்கான்

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட உடன், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான்,

சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் உள்ளிட்ட முக்கிய சீனியர் வக்கீல்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இம்ரான் கான் உள்ளிட்ட சிலர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். ஆனால், வீட்டு சிறையில் இருந்து இம்ரான் கான் தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான் கான், நீதிக்கட்சி பெயரில் கட்சி நடத்தி வருகிறார். அவசரநிலை அறிவிப்பு வெளியான உடன், பாகிஸ்தான் மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், உடனடியாக அவர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். சி.என்.என்., சூடிவி'க்கு இம்ரான்கான் அளித்த பேட்டியில், சூலாகூரில் உள்ள எனது வீட்டுக்கு போலீசார் வந்தனர். நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதற்கான உத்தரவு எதையும் அவர்கள் காட்டவில்லை. இதுநாள் வரை தன்னை கருணையுள்ள ஒரு சர்வாதிகாரியாக முஷாரப் வெளிப்படுத்தி வந்தார். தற்போது, அவரது உண்மையான நிறம் வெளிப்பட்டு விட்டது. அதிகார பசி கொண்ட அவர், அதற்காக எதையும் செய்வார்' என்றார்.

வீட்டு சிறையில் வைக்கப்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகு இம்ரான் கான் தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில்,சூ போலீசார் வந்த போது, வீட்டில் இம்ரான்கானும், எட்டு ஆதரவாளர்களும் இருந்தனர். அவர்களை வீட்டு சிறையில் வைப்பதாக கூறி விட்டு, வீட்டின் முன்பகுதிக்கு போலீசார் சென்று விட்டனர். வீட்டினுள் தற்போது எட்டு ஆதரவாளர்கள் மட்டுமே உள்ளனர். இம்ரான் கான் தப்பி விட்டார்' என்று கூறினார்.

இதற்கிடையில், தனக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் முஷாரப் தீவிரமாக இறங்கியுள்ளார். சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் அய்ட்சாஸ் அசான், முஷாரப்புக்கு எதிராக செயல்பட்டவர். அவரையும் வீட்டுச்சிறையில் வைத்து விட்டனர். அங்கிருந்தபடியே அவர் அளித்த பேட்டியில், சூஒரே ஒரு மனிதன் நாட்டையே சிறைப்படுத்தி வைத்து விட்டார். ஜெனரல் முஷாரப் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது' என்றார். முஷாரப்புக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட சீனியர் வக்கீல் தாரிக் மெக்மூத் என்பவர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், சூ1999ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக முஷாரப் நாட்டை கைப்பற்றியுள்ளார். அவர், அவசரநிலையை பிரகடனம் செய்யவில்லை. ராணுவ ஆட்சியை தான் அறிவித்துள்ளார்' என்றார்.

பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் முன்னணி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கட்சியின் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த ஜாவித் அஸ்மியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், சூமுஷாரப்பின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ராணுவத்தை கொண்டு அரசியல் ஆட்சி நடத்தப்படுவதற்கு முடிவு நெருங்கி கொண்டு இருக்கிறது' என்றார். இது போல பல எதிர்க்கட்சிகளின் முன்னணி தலைவர்களும், சீனியர் வக்கீல்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

தரவு - தினமலர்

மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. ஆனால், காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்ததால் மழை குறைந்தது.

இந்நிலையில், வங்கங்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் கருமேகங்கள் திரண்டு இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு: ஜெயலலிதா பகிரங்க குற்றச்சாட்டு

தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதியதை அடுத்து முதல்வர் கருணாநிதிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ரகசியத் தொடர்பு இருப்பது வெளிப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.

இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெüனம் சாதித்தார்.

அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.

இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார் ஜெயலலிதா.

தரவு - தினமணி

தம்பி தமிழ்ச்செல்வா: பாரதிராஜா கண்ணீர்


விடுதலைப்புலியின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு டைரக்டர் பாரதிராஜா கண்ணீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

ஒரு விடிவெள்ளியை கொன்று புலர்ந்த இந்த வெள்ளி விடியாமலே இருந்தி ருக்கலாம்.

ஒரு அட்சய பாத்திரத்தை பிச்சைக்காரர்கள் தின்று தீர்த்த இந்த நாள் விழிக்காமலே இருந்திருக்கலாம்.

மரணத்தை கண்டு அஞ்சியதில்லை தம்பிகள்!

அதுதான் அவர்களுக்கு முகவரி.

வலிகளும் அவர்களுக்கு புதிதல்ல!

அவர்கள் ரணங்கள் சாதாரணம்!!

தழும்புகளை நெஞ்சில் சுமந்த வீர மறவர்கள் அவர்கள்.

என்றாலும் அவர்கள் கண்ணீரில் நனையும் போது இங்கே கரிக்கிறது.

அங்கே அவர்கள் காயப்படும் போது இங்கே குருதி கொதிக்கிறது.

வெடி அல்ல, இடி

வான் வழியே விழுந்தது வெடியல்ல!

எங்கள் நெஞ்சில் விழுந்த இடி!!

தம்பி தமிழ்ச்செல்வா! நீ மாபெரும் இயக்கத்தின் அரசியல் வழிகாட்டி மட்டுமல்ல.

தம்பி பிரபாகரனைக் காண வீரமண்ணிற்கு எமையழைத்துச் சென்று விருந்தோம்பி உபசரித்து மறத் தமிழ் மக்களின் மற்றோர் உலகை எனக்கு காட்டியவனும் நீதான்.

அதனால்தான் அன்றே என் அரசியல் காவியத்திற்கு உன் பெயரிட்டேனோ?

ஈழத்திற்கான அமைதிப் பேச்சு வார்த்தையை, சமாதானப்பாதை நோக்கிய பய ணத்தை உலகெங்கிலுமுள்ள அரசியல் அரங்கங்களில் ஓங்கி ஒலிக்கச் செய்த தம்பியே!

உமது இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலக உருண்டையில் மூலை முடுக்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்தமிழர்கள் எல்லோருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் அந்தோ.

தங்கத்தை இழந்தோம் அன்று சிங்கத்தை இழந்தோம்

இன்று தங்கத்தை இழந்து விட்டோம்!!

அஹிம்சை வழியில் அறத்தை கையிலேந்திய திலீபனை கொன்ற கைகள் தான் இன்று உன்னையும் தின்றது.

திலீபன் இறந்தபோது அவன் தாய் கூறினாள்.

"திலீபனை புதைக்க வில்லை. விதைத்திருக்கிறோம்''

தம்பி தமிழ்ச்செல்வா!

"உன்னை எரிக்கவில்லை...

ஏற்றியிருக்கிறோம்''

இவ்வாறு டைரக்டர் பாரதிராஜா கூறியுள்ளார்.

தரவு - தமிழ்சினிமா.காம்

புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக நடேசன் நியமனம்




தமிழ்ச்செல்வன் மறைவையடுத்து, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு புதிய தலைவராக நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிளிநொச்சி பகுதியில் இரனமேடு என்ற இடத்தில் உள்ள புலிகளின் ரகசியத் தளம் மீது விமானப்படை விமானங்கள் நேற்று குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
நார்வே குழுவினருடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தைகளில் தமிழ்ச் செல்வன் முக்கிய பங்காற்றினார்.

இவரின் மறைவையடுத்து, புலிகளின் போலீஸ் பிரிவு தலைவராக இருந்த நடேசன், அரசியல் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தரவு - தினகரன்

குருவாயூர் கோயிலில் குண்டுவெடிக்க வாய்ப்பு - தேவபிரஸ்னத்தில் தகவல்

குருவாயூர் கோயிலில் குண்டுவெடிப்பு, தீவிபத்து மூலம் உயிர்ச்சேதம் ஏற் பட வாய்ப்பு இருப்பதாக நேற்று நடந்த தேவ பிரஸ் னத்தில் தெரிய வந்துள்ளது.

குருவாயூர் கோயிலில் அஷ்டமங்கள தேவ பிரஸ்னம் கடந்த 31ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இந்த தேவ பிரஸ்னம் நடந்து கொண்டிருக்கும் போதே துக்க சம்பவங்கள் நடைபெறும் என தலைமை ஜோதிடர் கூறினார். இவ்வாறு கூறிய ஒரு மணி நேரத்தில் கோயில் வளாகத்தில் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோயில் வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம் பவங்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருவாயூர் கோயிலில் பிற மதத்தினரை அனுமதிக்கக்கூடாது என தேவ பிரஸ்னம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று 3ம் நாள் நடந்த தேவ பிரஸ்னத்தில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியானது. கோயிலிலோ அல்லது கோயிலை ஒட்டியுள்ள பகுதியிலோ குண்டு வெடிப்பு மூலமும், தீ விபத்து மூலமும் உயிர் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என பிரஸ்னத்தில் செய்யப்பட்டது. இது கோயில் நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

தேவபிரஸ்னம் தொடர்ந்த நாள் முதல் துக்க நிகழ்ச்சிகள் நடை பெற்று வருவதாலும், நேற்று நடந்த தேவ பிரஸ்னத்தில் உயிரிழப்பு ஏற்படுவது தெரியவந்ததாலும் அதற்கு பரிகாரமாக உடனடியாக கூட்டு பிரார்த்தனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோயில் தந்திரி, பூசாரிகள் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். தேவபிரஸ்னம் நடத்துவதற்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தலைமை ஜோதிடரை கோயில் நிர்வாகிகள் அழைக்க சென்றனர்.

அன்றைய தினம் மிக மோசமான நாள் என தலைமை ஜோதிடர் கூறினார். இதனால்தான் கோயிலில் துக்க சம்பவங்கள் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பரிகாரம் கடவுளை பிரார்த்திப்பதுதான் என தலைமை ஜோதிடர் கூறினார்.

மேலும் கோயில் வழிபாட்டில் எந்த மாற்றமும் ஏற்படுத்தக்கூடாது. கோயில் ஊழியர்கள் மோதலை நிறுத்திவிட்டு கடவுளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்றும் பிரஸ்னத்தில் தெரிய வந்ததாக தலைமை ஜோதிடர் கூறினார்.

WE(A)eKEND






சிவாஜி மனைவி காலமானார்

நடிகர் சிவாஜி கணேசன் மனைவி கமலா அம்மாள் (72) இன்று மாரடைப்பால் காலமானார்.
சில நாட்களாகவே உடல் நலமில்லாமல் இருந்தார் கமலா அம்மாள். நேற்று நெஞ்சில் சளி அதிகமாகி மூச்சு விட சிரமப்பட்டார். உடனடியாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து கவனித்துக்கொண்டனர். கமலா அம்மாளை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். தாயார் இறந்த தகவல் கேட்டவுடன் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் தி.நகரில் உள்ள சிவாஜி வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். நாளை காலை அவரது உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

tharavu - tamilmurasu

பழ.நெடுமாறன் பிரத்யேக பேட்டி

ஈழப்பிரச்சனை: இந்திராகாந்திக்கு புரிந்தது...இப்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை!



மாநிலத்திலேயே முதலிடத்தில் வந்த மாநகராட்சி பள்ளி மாணவன் மாதிரி, எளிமையும் பெருமையாக நிற்கிறது அந்த வீடு! கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறோம்... குரல்வளைக்கு குறிவைக்கும் டாபர்மேன்கள் இல்லை. யாரது? போன்ற தோரணையான கேள்விகள் இல்லை. 'உள்ளே வாங்க' என்று அழைத்தது பழ.நெடுமாறனின் குரலேதான். அறையெங்கும் கலைந்து கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவில் பேட்டி துவங்குகிறது.

மதுரையில் இந்திராகாந்தி மீது தி.மு.க வினர் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது அவரை காப்பாற்றியது நீங்கள்தான். அந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே தி.மு.கவும் காங்கிரசும் கூட்டணி வைத்துக் கொண்டன. 'நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று கலைஞர் அழைத்தார். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

இந்திராகாந்தி தாக்கப்பட்ட நிகழ்ச்சி 1978-ல் நடந்தது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தேன். அதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் நானும், ஆர்.வி.சாமிநாதனும் டெல்லி சென்று இந்திராகாந்தியை சந்தித்து அரசியல் நிலைமைகள் குறித்து பேசினோம். என்னுடைய நிலைப்பாடு என்பது, தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும். டெல்லியில் முடிவு செய்து எங்கள் மீது அந்த முடிவை திணிக்க முடியாது. அதனால் கட்சி பலவீனப்படும். எங்கள் முடிவு தவறாக இருந்தால் கட்சி மேலிடம் தலையிட்டு அதற்கான காரணங்களை கேட்டு மாற்றும்படி சொல்லலாம். முடிவையே டெல்லி எடுக்குமானால் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்படுவதில் அர்த்தம் இருக்க முடியாது. இதற்கு இந்திராகாந்தி ஒப்புக் கொண்டார். கூட்டணி பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோடு கலந்து பேசிதான் முடிவெடுப்போம் என்றார். நாங்களும் மகிழ்ச்சியோடு திரும்பினோம்.

வந்து சில மாதங்களுக்குள்ளாகவே டெல்லியிலிருந்து செய்தி வருகிறது. கலைஞர் கருணாநிதியும், முரசொலி மாறனும், இந்திராகாந்தியை சந்தித்து பேசி கூட்டணி பற்றி முடிவு செய்துவிட்டார்கள் என்று. அதற்கு பிறகு நாங்கள் திரும்பவும் டெல்லி சென்று இந்திராவை சந்தித்தோம். எங்களிடம் ஒன்று சொல்லிவிட்டு அதற்கு மாறாக செய்துவிட்டீர்களே, இதனால் கட்சி பலவீனப்படுமே? நாம் தனியாக நின்றிருந்தாலே குறைந்த பட்சம் 15 இடங்களை கைப்பற்றி இருக்கலாமே? கூட்டணி சேர்ந்து அதே 15 தொகுதியை வாங்கி என்ன பயன்? இப்படி எவ்வளவோ வாதாடி பார்த்தும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவு செய்தால், செய்ததுதான். அதை மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு நான் என்னுடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை அன்றைய தினமே ராஜினாமா செய்தேன். இதுதான் நடந்தது. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்று என்னுடைய முடிவை எதிர்த்து என்னுடைய நண்பர் மூப்பனாரும், ப.சிதம்பரமும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி எடுக்கிற முடிவுகளை எதிர்ப்பவர்கள் உண்மை காங்கிரஸ்காரர்களாக இருக்க முடியாது என்று சொன்னார்கள்.

ஆனால் அதே மூப்பனார் 16 வருடம் கழித்து நான் என்ன காரணத்தை சொல்லிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினேனோ அதே காரணத்தை சொல்லிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறினார். நரசிம்மராவ் எங்களை கேட்காமல் அ.தி.மு.க வுடன் உறவு வைத்துக் கொண்டதாக காரணம் சொன்னார். அவர் இந்த சிந்தனைக்கு வருவதற்கு 16 வருடங்கள் ஆனது.

இந்திராகாந்தியை காப்பாற்றியவர் என்ற முறையிலும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்ற முறையிலும் சோனியாவை சந்தித்து இலங்கை பிரச்சனை குறித்து நீங்கள் பேசியிருக்கலாமே?

அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கருதுகிறேன். உண்மையில் ஈழப் பிரச்சனையில் இந்திராகாந்தி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தார். அதற்கு நேர்மாறாக இப்போது என்னென்ன முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் காரர்களே புரிந்து கொண்டார்களா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. 1977-ல் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக அமிர்தலிங்கம் இருந்தார். அவரும் அவருடைய துணைவியாரும் சென்னைக்கு வந்தார்கள். அப்போது நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். இங்கு எல்லா தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது அவரை நானே நேரில் சென்று சந்தித்து, 'நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தமிழர்கள் என்ற முறையில் எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு' என்று தெரிவித்தேன். 'நீங்கள் டெல்லியிலே சென்று இதற்கான லாபியை நடத்துங்கள். அப்போதுதான் இந்திய அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்றேன். அவர், 'டெல்லியில் யாரையும் தெரியாது' என்று சொன்னதற்கு, 'நானே டெல்லியில் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன்' என்றேன். அதற்கு அவரும் ஒப்புக் கொண்டபின் டெல்லி சென்றோம்.

அப்போது மொரார்ஜிதேசாய் பிரதமராக இருந்தார். நான், ஜனார்த்தனம், அமிர்தலிங்கம், அவரது துணைவியார் நான்கு பேரும் இந்திராவை சந்தித்தோம். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவர் அமிதலிங்கத்திடம், 'முதலில் இந்த பிரச்சனையை நீங்கள் சர்வதேச அளவில் விளக்க வேண்டும்' என்றார். 'வெளிநாடுகளில் யாரையும் தெரியாதே' என்று கூறிய அமிர்தலிங்கத்துக்கு ஒரு பள்ளி ஆசிரியை போல பாடம் எடுத்த இந்திராகாந்தி, வெளிநாடுகளில் யார், யாரை சந்திக்க வேண்டும், எதைப்பற்றி எப்படியெல்லாம் பேச வேண்டும், என்பதையெல்லாம் சுமார் ஒரு மணிநேரம் விளக்கமாக எடுத்துக் கூறினார். பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ஏ.ஆர்.அந்துலேவை அழைத்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட செய்து அதில் அமிர்தலிங்கத்தை பேச வைத்தார். சுமார் ஒரு மணிநேரம் ஈழப்பிரச்சனை குறித்து ஆங்கிலத்தில் அருமையாக விளக்கினார் அமிர்தலிங்கம். முடிந்ததும் கட்சி தலைவர்கள் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்று கூறப்பட்டது. அப்போது, காங்கிரசின் எதிர்கட்சி தலைவராக இருந்தவர் எஸ்.பி.சவான். அவர் ஒரு கேள்வி கேட்டார். 'நீங்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து அங்கு போனவர்கள்தானே? அங்கு போய் தனிநாடு கேட்டால் என்ன நியாயம்?' என்று அவர் கேட்டபோது, நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் அவர் மூன்றாண்டு காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர். இலங்கை பக்கத்து நாடு. அங்கு ஈழத்தமிழர்கள் பூர்விக குடிகள் என்பது கூட அவருக்கு தெரியவில்லை.

அமிர்தலிங்கம் சவானின் கேள்விக்கு விளக்கமாக பதில் சொன்னார். இந்த கூட்டத்தை பற்றி நான் இந்திராகாந்தியிடம் விளக்கமாக சொன்னேன். யார் யார் என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பது பற்றி சொல்லிவிட்டு சவான் கேட்ட கேள்வியையும் சொன்னேன். 'மூன்றாண்டு காலம் வெளிநாட்டு அமைச்சராக இருந்தவர் இந்த உண்மையை கூட தெரிந்து வைத்திருக்கவில்லையே, மிகவும் வருத்தமாக இருக்கிறது' என்று நான் சொன்னபோது இந்திராகாந்தி விழுந்து விழுந்து சிரித்தார். 'என்ன செய்வது? இப்படிப்பட்ட ஆட்களை வைத்துக் கொண்டுதான் நாமும் அரசியல் பண்ண வேண்டியிருக்கிறது' என்று சொன்னார். அன்று தொடங்கி நான் பார்க்கிறேன். இந்திராகாந்தி இந்த பிரச்சனையில் தெளிவாக இருந்தார்.

1983-ம் ஆண்டு ஜுலை மாதம் கொழும்பிலே கலவரம் ஏற்பட்டு அங்கு மூவாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, அன்று வெளிநாட்டு அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவையும், ராஜாங்க அமைச்சர் ஜி.பார்த்தசாரதியையும் அனுப்பி வைத்தார். இலங்கை ஒரு சின்ன நாடு. அங்கு நடந்த பிரச்சனைக்கு அவர் அனுப்பி வைத்த இருவரும் அன்றைக்கு இந்தியாவின் மிக முக்கியமான அமைச்சர்கள். இதன்மூலம் அவர் ஜெயவர்த்தனாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கு உணர்த்திய விஷயம் என்னவென்றால், ஈழத்தமிழர் பிரச்சனையை இந்தியா முக்கியமான பிரச்சனையாக கருதுகிறது என்பதுதான்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்துவிட்டு பிரதமர் இந்திராகாந்தி ஆற்றிய உரையில், 'இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலை நடக்கிறது' என்றார். அதன்பின் இந்திராகாந்தியின் ஆலோசைனை பேரில், பார்த்தசாரதி பல முறை இலங்கை அரசோடு பேசினார். இலங்கை தமிழர்களுக்கும் அரசுக்கும் இடையில் வட்டமேஜை மாநாடு நடந்தது. அனெக்ஸ் சி என்ற ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஜெயவர்த்தனா அதை ஒப்புக் கொள்ள தயங்கினார். பிறகு இந்திராகாந்தியின் நிர்பந்தத்தின் பேரில் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்தார். ஆனால் அதை அவர் நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை.

உடனே இந்திராகாந்தி, அனைத்து தமிழ் போராளி குழுக்களையும் அழைத்து அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்க செய்தார். இந்திய ராணுவம்தான் அந்த பயிற்சியை அளித்தது. அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை வருதற்குள்ளாகவே இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். அதற்கு பிறகு ராஜீவ்காந்தி பிரதமராக வந்தார். அவருக்கு இந்த பிரச்சனை பற்றி மட்டும் அல்ல, அரசியலை பற்றியும் எதுவும் தெரியாது. இந்த பிரச்சனை பற்றி எல்லாம் தெரிந்த பார்த்தசாரதி ராஜினாமா செய்துவிட்டு போகும்படி செய்யப்பட்டார். வெளியுறவு அதிகாரியாக இருந்த ஏ.பி வெங்கடேஸ்வரன் பற்றி வெளிப்படையாக செய்தியாளர்கள் கூட்டத்தில் ராஜீவ்காந்தி விமர்சனம் செய்ய, அவரும் பதவி விலகி போய்விட்டார். ஆக இந்த பிரச்சனையை தெளிவாக புரிந்து வைத்திருந்த ஆலோசகர்கள் அவருக்கு அருகில் இல்லை.

அதற்கு பிறகு வெளியுறவு செயலாளர் பதவியேற்ற பண்டாரி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பேச்சு வார்த்தைக்கு. இந்த வேறுபாட்டை நீங்கள் நன்கு அறிய வேண்டும். இந்திராகாந்தி காலத்தில் இரண்டு சீனியர் டிப்ளோமேட் அனுப்பி வைக்கப்பட்டார்கள். ராஜீவ் காலத்தில் ஒரு அதிகாரி அனுப்பி வைக்கப்பட்டார். இப்படி செய்ததன் மூலம் இந்த பிரச்சனைக்கு உள்ள முக்கியத்துவத்தை தெரிந்தோ தெரியாமலோ குறைத்துவிட்டார். அன்றிலிருந்து இன்று வரை அதிகாரிகளை வைத்துதான் பேசுகிறார்கள். இன்னமும் சிவசங்கரமேனமும், எம்.கே.நாராயணனும்தான் அனுப்பப்படுகிறார்கள். இந்திய அரசில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் யாரும் அங்கு அனுப்பப்படவில்லை. ஆக, இந்தியா இந்த பிரச்சனையை முக்கியமான பிரச்சனையாக கருதவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்கள். இப்போது ஏற்பட்டுள்ள அவ்வளவு குழப்பங்களுக்கும் இதுவும் ஒரு காரணம்.

ஈழத்தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக மருந்து பொருட்கள் அனுப்புவது குறித்து உண்ணாவிரதம் இருந்தீர்கள். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கலைஞர் கேட்டுக் கொண்டும் அதற்கு ஒப்புக்கொள்ளாத நீங்கள், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டதும் ஒப்புக் கொண்டது ஏன்?

இந்த பிரச்சனை சென்ற ஆண்டு ஜனவரியில் இருந்து நடந்து வருகிறது. ஏழு மாத காலமாக நாங்கள் சேகரித்த உணவுப் பொருட்களையும், மருந்து பொருட்களையும் ஈழத்தமிழர்களுக்கு அனுப்ப அனுமதி கேட்டு வருகிறோம். அதற்கு எந்த வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. நாங்கள் அரும்பாடு பட்டு சேகரித்த பொருட்களை வைக்க கூட இடமில்லாமல் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் அவற்றை நாங்களே எடுத்துச் செல்வது என்று முடிவு செய்தோம். நாங்கள் அங்கு சென்றபோது எங்களுக்கு படகுகள் கொடுக்கக்கூடாது என்று மீனவர்கள் தடுக்கப்பட்டார்கள். யாரும் எங்களுக்கு படகு கொடுக்க முன்வராத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை கைது செய்யவும் உத்தரவிடாமல், எங்களை அவமானப்படுத்தியது இந்த அரசு. நான் உடனே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டேன். அதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் சென்னை கோயம்பேட்டில் எங்களுக்கு சொந்தமான இடத்தில் உண்ணாவிரதம் இருக்க முற்பட்டேன். அப்போது உண்ணாவிரதத்தை தடுக்க முயன்ற காவல்துறை என்னை கைது செய்ய முயன்றது. 'இது எங்களுக்கு சொந்தமான இடம். பொது இடத்தில் உண்ணாவிரதம் இருந்தால்தான் என்னை கைது செய்ய முடியும்' என்று நான் வாதிட்டேன். அதற்குள் விஷயத்தை கேள்விப்பட்ட பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, வைகோ, திருமாவளவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் என்னை கைது செய்யாமல் திரும்பி போனது காவல்துறை. இல்லையென்றால் அந்த உண்ணாவிரதம் தடுக்கப்பட்டிருக்கும். அதன்பின் எனக்கு கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, உண்ணாவிரதத்தை கைவிடும்படியும், நேரில் இதுகுறித்து பேசலாம் என்றும் கூறியிருந்தார். அதன்பின் ராமதாஸ், வைகோ போன்றவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உண்ணாவிரதத்தை கைவிட்டேன். ஆனால், இன்றுவரை என்னை அழைத்து பேசுவதாக வாக்குறுதியளித்த தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் இன்னும் அழைக்கவில்லை. நானும் அவரை சந்திக்க முறைப்படி நேரம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இதோடு இந்த பிரச்சனையை நாங்கள் விடப்போவதில்லை. எப்படியும் நாங்கள் சேகரித்த பொருட்களை ஈழத்தமிழர்களுக்கு அனுப்பியே தீருவோம்.

அனுமதியில்லாமல் இந்த பொருட்களை எடுத்துக் கொண்டு உங்களால் இலங்கைக்கு சென்றிருக்க முடியும். அந்த துணிச்சல் உங்களிடம் இருக்கும்போது அரசிடம் அனுமதி கேட்காமலே அவற்றை இலங்கைக்கு கொண்டு சென்றிருக்கலாமே?

நிச்சயமாக முடிந்திருக்கும். இதற்கு முன்பு பலமுறை இலங்கைக்கு அனுமதியில்லாமல் சென்றிருக்கிறேன். நான் வந்தபிறகு பத்திரிகைகளுக்கு அளிக்கிற பேட்டிகளை வைத்துதான் நான் இலங்கை சென்ற தகவலே போலீசுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இது எனக்கு பெரிய விஷயமல்ல. ஆனால், ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களும், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் படுகிற வேதனைகளையும் மக்களுக்கு புரியவைக்கவும், ஈழப்பிரச்சனை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும்தான் இந்த போராட்டம்.

கலைஞர் தலைமையிலான தி.மு.க, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.முக இரண்டுமே ஈழத்தமிழர்கள் விஷயத்தில் ஆதரவாக இல்லை என்று சொல்கிறீர்கள். தி.மு.க-அ.தி.மு.க வை விட்டால் வேறு கட்சிகள் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத சூழ்நிலையில், ஈழப்பிரச்சனையில் எதிர்காலத்தில் தமிழக அரசின் ஆதரவை எப்படி பெறுவீர்கள்?

அதற்கு ஒரு மாற்று வேண்டும் என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம். தொடர்ந்து பேசி வருகிறோம்.

உங்கள் இயக்கமும் தேர்தலில் நின்று அதிகாரத்தை கைப்பற்றினால் இன்னும் அழுத்தமாக உரிமைக்குரல் எழுப்பலாமே?

தமிழர் தேசிய இயக்கம் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், தி.மு.க, அ.தி.மு.க வுடன் சேர்ந்து நிற்க விரும்பவில்லை. நாங்கள் வலிமையடையும் வரை பொறுமையாக இருப்போம். அல்லது மூன்றாவது அணியை உருவாக்குவது பற்றி யோசிப்போம். தமிழர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் இந்த இரண்டு இயக்கங்களும்தான். சட்டமன்றத்தில் மக்கள் பிரந்ச்சனையை பற்றியா இவர்கள் பேசுகிறார்கள். இந்த அம்மா வீட்டில் யாரோ நுழைந்து விட்டானாம். அதை பற்றி பேசி இருவரும் அடித்துக் கொள்ளத்தான் நேரம் ஒதுக்குகிறார்கள். நாங்கள் மக்கள் பிரச்சனைகளை மையமாக வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம். எல்லா கட்சிகளையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் சட்டமன்றத்துக்கு போனால் கூட எங்கள் கருத்துக்களை முன் எடுத்து செல்ல அந்த மன்றத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவோமே தவிர, பதவி சுகத்துக்காக அங்கே செல்ல வேண்டும் என்று நினைக்க மாட்டோம்.

வைகோ, ராமதாஸ், திருமாவளவன், இவர்களை தொடர்ந்து தற்போது புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாரே?

நல்லதுதானே? ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்போம்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த வன்னி அரசு என்பவர் மீது விடுதலைபுலிகளுக்கு ஆயுதங்கள் கடத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டாரே?

மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. பால்ரஸ் கடத்தினார்கள், 500 சி.சி என்ஜினை கடத்தினார்கள் என்று சிலர் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இன்றைக்கு கவனித்தீர்களா? அநுராதபுரத்தில் இலங்கை விமான படையினர் மீது வான் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் புலிகள். அவர்களா 500 சிசி என்ஜினையும், பால்ரஸ் குண்டுகளையும் கடத்திவர சொல்லியிருப்பார்கள்? உண்மையில் நடப்பது வேறு. புலிகளுக்கு எதிரான தடை சட்டம் விரைவில் காலாவதியாக இருக்கிறது. அந்த நேரத்தில் இதுபோன்ற சில பொய் வழக்குகளை போட்டு, அந்த சட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வைப்பதற்காக புனையப்படுகிற சம்பவங்கள்தான் இவைகள்.

சிங்களப்படம் எடுப்பேன் என்று நடிகை ராதிகா சொல்லியிருக்கிறாரே?

சினிமாக்காரர்களை பற்றி நான் என்ன கருத்து சொல்வது? வேண்டாம், விடுங்கள்...

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு பாதுகாப்பு இருக்காது என்று அந்நாட்டு அரசு கருதுகிறது. தற்போது எழுப்பப்படும் பிரச்சனைகளில் இலங்கை அரசின் மறைமுக பங்கு இருக்கும் என்று கருதுகிறீர்களா?

ஆங்கிலேயர்கள் காலத்திலேயே பேசப்பட்ட திட்டம் இது. பின்பு நேரு தலைமையில் மந்திரி சபை கூடி ஒப்புக் கொண்ட முடிவு இது. அப்போது சிறிமாவோ பண்டாரநாயகா அங்கே பிரதமராக இருந்தார்கள். அவர்கள் உடனே நேருவுக்கு கடிதம் எழுதினார்கள். 'இந்த கால்வாய் திட்டம் வந்தால் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவமே போய்விடும். எங்கள் பொருளாதாரமே அழிந்து போய்விடும். ஒரு சின்ன நாட்டினுடைய பொருளாதாரத்தை நீங்கள் அழிக்கலாமா?' என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த திட்டத்தை தொடராமலே விட்டுவிட்டார் நேரு. பிறகு நான் அப்போது சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்று பேசினேன். அதன்பிறகும் இலங்கையின் நெருக்கடி காரணமாக சேது கால்வாய் திட்டத்தை அப்படியே விட்டுவிட்டார்கள்.

இந்த திட்டம் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம். சேது கால்வாய் திட்டம், ஈஸ்ட் கோஸ்ட் ரோடு திட்டம், அகல ரயில்பாதை திட்டம், இவை தென்மாவட்டங்களில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட திட்டங்கள். இதில் சேது கால்வாய் திட்டத்தை தவிர, மற்றவை நிறைவேற்றப்பட்டு விட்டன. சேது கால்வாய் திட்டமும் நிறைவேறினால்தான் தென் மாவட்டங்களில் நாம் நினைக்கிற வளர்ச்சியை அடைய முடியும். இலங்கை அரசின் தூண்டுதலின் பேரில் இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். சில பத்திரிகைகள் கூட இந்த திட்டத்திற்கு எதிராக எழுதுகின்றன. இலங்கை அரசின் பின்னணி இல்லாமல் இந்த செயல்கள் இல்லை. இப்போது மதரீதியாக இந்த திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். இராமர் பாலம் என்பதெல்லாம் அந்த வகையில் கிளப்பப்படுகிற விஷயங்கள்தான்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் சுனாமி வந்ததனால் புலிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டு அதனால் சில பின்னடைவுகள் ஏற்பட்டுவிட்டதா? சுனாமி வராமல் இருந்திருந்தால் இலங்கை ராணுவத்தை இன்னும் பலமாக தாக்கியிருப்பார்களா?

இதுபோன்ற இயற்கை பேரழிவுகள் மட்டுமல்ல... இந்திய ராணுவம் அங்கு போயிருக்காவிட்டால் கூட எப்போதோ ஈழப்பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும். இந்திய ராணுவத்தையும், இலங்கை ராணுவத்தையும் ஒரே நேரத்தில் அவர்கள் சமாளிக்க வேண்டியதாகிவிட்டது. எல்லாவற்றையும் மக்கள் துணையோடு தடுத்து இன்னமும் புலிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பொடா சட்டம் திரும்ப பெறப்பட்டு விட்டது. சிறையில் நீங்கள் சந்தித்த அனுபவங்களை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

பொடாவின் போது சிறையில் இருந்த அனுபவங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன். பல உண்மைகளை அது உலகுக்கு சொல்லும்.

இலங்கை பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரச்சனை மட்டுமல்ல இது. இந்தியாவின் பாதுகாப்பையும் பொறுத்த பிரச்சனை இது. இந்திரா காந்திக்கு புரிந்தது. தற்போது உள்ளவர்களுக்கு புரியவில்லை. பாகிஸ்தான், சீன அரசுகளோடு இந்தியாவுக்கு சண்டை வந்தபோது நேரு காலத்திலேயே ஒரு முடிவு எடுத்தார்கள். பெரிய கனரக தொழிற்சாலைகள், குறிப்பாக ராணுவ ஆயுத தொழிற்சாலைகளை வட இந்தியாவில் அமைக்கக்கூடாது. பாதுகாப்பாக இருக்காது. ஒருபக்கம் பாகிஸ்தான் தாக்கலாம். அல்லது சீனா தாக்கலாம். அதை தென்னிந்தியாவில் அமைப்பதுதான் பாதுகாப்பானது என்று கருதி விமான உற்பத்தி தொழிற்சாலையை பெங்களுரிலும், ஆவடி டாங்கி தொழிற்சாலையை சென்னையிலும், ஹெவி பாய்லர்ஸ் தொழிற்சாலையை திருச்சியிலும், அமைத்தார்கள்.

இப்படி பாதுகாப்பு கருதி அனைத்தும் இங்கே அமைக்கப்பட்டது. தற்போது இலங்கையில் சீனாக்காரனும், பாகிஸ்தான்காரனும் ஊடுருவி நிற்கிறானே? தென்னிந்தியாவில் பாதுகாப்பற்ற சூழ்நிலை வந்ததற்கு யார் காரணம்? சென்னையிலோ, பெங்களுரிலோ, கல்கத்தாவிலோ சில நாடுகளின் துணை தூதரகங்களை அமைக்க அனுமதி கொடுத்திருக்கிறது இந்தியா. பாகிஸ்தான் தூதரகத்தை மட்டும் சென்னையில் வைப்பதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. பிடிவாதமாக மறுத்தது. ஏனென்றால் தென்பகுதியில் பாகிஸ்தானின் ஊடுருவல் வந்துவிடக்கூடாது என்பதால்தான்.

இந்திராகாந்தி இருக்கும்போது திரிகோணமலையில் அமெரிக்காவின் கடற்படை தளம் அமைக்கும் முயற்சி நடந்தது. 'இந்துமாக்கடல் பகுதியில் எந்த வல்லரசாவது ராணுவ தளம் அமைக்க முற்பட்டால், அது இந்தியாவுக்கு எதிரான செயல். இதை அனுமதிக்க முடியாது' என்று இந்திராகாந்தி எச்சரித்தார்கள். ஜெயவர்த்தனா அடங்கிவிட்டார். அது மாதிரியல்லவா இப்போது இந்தியா எச்சரிக்க வேண்டும்? 'நீ பாகிஸ்தானில் ஆயுதம் வாங்கிவிடுவாயா?' என்று எச்சரித்தால் இலங்கை அடங்கிவிடுமே. இலங்கை ஏன் இவ்வளவு ஆயுதங்களை வாங்குகிறது. பல கோணத்தில் ஏன் இந்தியா பார்க்கவில்லை. இதன் விளைவு மிக மோசமாக இந்தியாவை தாக்கும். பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கவியரசு கண்ணதாசனோடு நெருங்கி பழகியவர் நீங்கள். அவரைப்பற்றிய நினைவுகளில் ஏதாவதொன்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்?.

கண்ணதாசன் என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்ல. என்னை தன் சொந்த சகோதரன் போல் வைத்திருந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்திரா காங்கிரசிற்கு அவர் போனபிறகு, நான் காமராஜரோடு இருந்த போதிலும் எங்கள் நட்பு அப்படியே இருந்தது. பல நேரங்களில் அரசியலில் எனக்கு பெருந்துணையாக இருந்தார். இறுதிகாலத்தில் நடந்த சம்பவம் மறக்க முடியாது. அவருக்கு உடம்பு சரியில்லாமல் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்கிற நேரம். நான் ஈரோட்டில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு திரும்ப தாமதாமாகிவிட்டது. தொலைபேசியில் அவரிடம் வழியனுப்ப வர முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தேன்.

'பரவாயில்லை. வரும்போது உனக்கு என்ன வாங்கி வரவேண்டும்?' என்று கேட்டார். 'ஒன்றும் வேண்டாம். நீங்கள் நல்லபடியாக போய் வாருங்கள்' என்றேன். 'சொல்லுங்க ஏதாவது?' என்றார் பிடிவாதமாக. 'சொல்லட்டுமா?' என்றேன். 'சொல்லுங்க!' என்றார். 'நீங்க வரும்போது ஏதாவது அமெரிக்க பொண்ஜாதியோடு வந்திடாதீங்க' என்றேன். தொலைபேசியில் அவர் சிரித்த சிரிப்பு இருக்கிறதே... இன்னும் கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

சந்திப்பு- ஆர்.எஸ்.அந்தணன்
படங்கள்- பிரகதீஷ்வரன்.
தரவு - தமிழ்சினிமா.காம்