பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார் - இலங்கை ராணுவம் அறிவிப்பு
பிரபாகரன் மகன் கொல்லப்பட்டார்...
http://www.defence.lk/new.asp?fname=20090518_03
விடுதலைப் புலிகள் சரண்? ராணுவ முகாமில் பிரபாகரன் உடல்?
விடுதலைப்புலிகள் தோல்வியடைந்து விட்டதாக இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே அறிவித்துள்ளார். ஜோர்டான் நாட்டில் ஜி-11 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது உரையாற்றிய ராஜபக்ஷே, விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவம் தோற்கடித்து விட்டதாக கூறினார். . இலங்கையில் பல ஆண்டு காலத்துக்கு பிறகு பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புலி தலைவர் பிரபாகரன் குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை . ராஜபக்ஷே ஜோர்டான் பயணத்தை பாதியில் முடித்துக்கு கொண்டு இலங்கை திரும்பினார். ராணுவ வெற்றியை தொடர்ந்து இலங்கை தமிழர்களின் பிரச்னையை தீர்க்க அரசியல் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கைக்கு திரும்பிய அதிபர் ராஜபக்ஷே , தாய் மண்ணுக்கு தலை வணங்கி, இலங்கையை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து விடுவித்து விட்டேன் என கூறினார். விமான நிலையத்தில் ராஜபக்ஷேவை வரவேற்க சர்வ சமய தலைவர்களும் வந்திருந்தனர்.ராணுவ அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் பால் சாதம் ஊட்டி மகிழ்ந்தனர். இலங்கை மக்கள் பட்டாசு வெடித்து விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை கொண்டாடினர்.
முல்லை தீவில் 150 உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா? அவரது நிலை என்ன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கைப்பற்றப்பட்ட உடல்களை அடையாளம் காணுப்பட்ட பிறகு தான் பிரபாகரன் இறந்துவிட்டது குறித்து உறுதி செய்யப்படும் என ராணுவ தரப்பு கூறுகிறது.
இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டிளித்த தகவல் துறை அமைச்சர் அணுரா பிரியதர்சன் கூறியதாவது : இலங்கையில் விடுதலைப்புலிகள் மிக குறுகிய பரப்பளவில் உள்ள இடத்துக்குள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் பிரபாகரன் நிலை என்பது குறித்து ராணுவ கேம்பில் இருந்து அதிகாரபூர்வ செய்தி வந்தவுடன் தான் உறுதி செய்ய முடியும் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தினமலர்
பிரபாகரன் வீரமரமடைந்தாரா ?

தமிழீழ விடுதலை புலிகளின் நிறுவனரும், தலைவருமான திரு।வேலுபிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசினை மேற்கோள் காட்டி சி।என்।என்। ஐ।பி।என் தொலைகாட்சி செய்தி வெளியிடுட்டு வருகிறது।
அவரின் உடல் ராணுவ முகாமொன்றில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த தொலைகாட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டு வருகிறது।
இந்த செய்தி பிற ஊடகங்களினால் உறுதி செய்யப்படவில்லை.....செய்திகள் மேம்படுத்தப்படும்....
------
என்।டி।டி।வி இந்த செய்தி உறுதிசெய்யப் படவில்லை என செய்தி வெளியிடுகிறது। சண்டை தொடர்வதாகவும் தமிழீழ விடுதலைபுலிகள் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரசாயன ஆயுதங்களை கொண்டு போரிடுவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன।
http://ibnlive.in.com/news/lankan-army-claims-prabhakaran-dead/92805-2.html
தேர்தல் திருவிழா - வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது.....
T20உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
கலைஞர் மருத்துவமனையில் அனுமதி !
கடுமையான முதுகுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பழம்பெரும் நடிகர் பாலாஜி காலமானார்

சென்னை, மே 2- பழம்பெரும் நடிகர் பாலாஜி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இவர் டயாலிஸிஸ் சிசிச்சை மேற்கொண்டு வந்தார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில், இன்று அவரது உயிர் பிரிந்தது.
இவருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
இவர் எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக இவர் திரைப்படங்களையும் தயாரித்து வந்தார். வசந்த மாளிகை, படித்தால் மட்டும் போதுமா, எங்க மாமா உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-தினமணி
சென்னை அருகே ரயில்கள் மோதல் : தீவிரவாதிகள் சதியா?
டேங்கர் ரயில் காலியாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ரயில்வே பொதுமேலாளர் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், பயணிகள் ரயிலை ஓட்டிச் சென்றவர் ரயில்வே ஊழியர் அல்ல என்றார். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற நிலையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் பயணிகள் ரயில் காலை 05.15 மணிக்கு புறப்படவேண்டிய ரயில் வழக்கத்திற்கு மாறாக அதிகாலை 04.50 புறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை 6 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவத்தைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
விபத்து குறித்து உடனடி தகவல்களைப் பெற உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார். அதற்கான தொலைபேசி இலக்கங்களை அவர் வெளியிட்டுள்ளார். அவையாவன : 044-25357386, 044--25357398.
via- Dinamalar
'Combat operations reach conclusion, priority to rescue hostages' - SL Government
இலங்கையில் போர் நிறுத்தம் - கலக்கிய கலைஞர்
இலங்கை அரசு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி செய்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இலங்கை ராணுவம் வலுதாக்குதல்களை நிறுத்திக் கொண்டு புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுமென தெரிகிறது.
Find some other place for Eelam: Lanka to Jaya
Sri Lanka on Sunday took strong objection to AIADMK chief J Jayalalithaa's remarks that Tamil Eelam was the only solution for the ethnic conflict, saying she should "find some other place to give Eelam" but not on the island.
"I don't know what these people are talking about. I think she must find some other place to give Eelam but not in Sri Lanka," said Defence Secretary Gotabhaya Rajapaksa.
He also took objection to Jayalalithaa's allegation that the video footage provided by spiritual guru Sri Sri Ravishankar, who recently visited the IDP centre in Wavuniya in eastern Sri Lanka, showed that the Tamils were being treated badly by the government.
The AIADMK chief made these comments at a public meeting in Tamil Nadu on Saturday.
"When Ravishankar met President (Mahinda Rajapaksa) after visiting the IDP camps he said it was one of the best camps he has ever seen in the world," the powerful official, who is the brother of the President, said.
Rajapaksa said he could understand the concern for the fate of civilians expressed by the international community and else where.
via- NDTV
நடிகர் ரகுவரன் மரணம்

பிரபல தமிழ் நடிகர் ரகுவரன் மருத்துவமனையில் காலாமானார். உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 49.இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுமென தெரிகிறது .
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திப்போம்.
ஆவின் பால் விலை உயர்வு
எழுத்தாளர் சுஜாதா உடல் தகனம்- முதல்வர் அஞ்சலி

எழுத்தாளர் சுஜாதாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் இன்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பிரபல எழுத்தாளர் சுஜாதா (73), உடல் நலம் பாதிக்கப்பட்டு சில நாட்களாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு சுஜாதா இறந்தார். அவரது உடல் மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பார்க் பின்புறம் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று காலை முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோர் சுஜாதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்தனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ. தலைவர் இல.கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சிவகுமார், பார்த்திபன், கார்த்தி, இயக்குனர்கள் மணிரத்னம், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், அமீர், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், நடிகைகள் சுகாசினி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன், கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோரும் சுஜாதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ரஜினிகாந்த் கூறும்போது, ‘ சுஜாதாவின் மறைவு, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இறுதிவரை தனக்கு பிடித்தமான தொழிலையே செய்து கொண்டிருந்தார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றார்.
பின்னர் சுஜாதாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
நாளை மறுநாள் (2-ம்தேதி) சென்னை நாரதகான சபாவில் இரங்கல் கூட்டம் நடை பெறுகிறது. சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
தரவு - தமிழ்முரசு
சுஜாதா காலமானார்....

பிரபல தமிழ் எழுத்தாளரும், திரைபட வசனகர்த்தாவுமான சுஜாத என்கிற ரங்கராஜன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திக்கிறோம்.
ராஜ் தாக்கரே பினையில் விடுவிக்கபட்டார்
பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்க கூடாது மற்றும் பொது இடங்களில் பேசக்கூடாது போன்ற நிபந்தைகளுடன் அவர் பினையில் விடப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக ராஜ் தாக்கரேயின் வழக்கறிஞர்கள் இத்தகைய நிபந்தனைகளள ஏற்கமறுத்து நீதிபதியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், நிபந்தனையை ஏற்காத பட்சத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்ன நீதிபதி திட்டவட்டமா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....
சற்றுமுன் நடந்த செய்திகளை முந்தித்தருவது மிளகாய் மட்டுமே.....
ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டார்....

பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிய குற்றத்திற்காக மஹாராஷ்ட்ர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சிறிது நேரத்திற்கு முன்னர் மஹாராஷ்ட்ர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மஹாராஷ்ட்டிர மாநில துனை முதல்வர் கூறும்போது யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என கூறினார்...
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...
பிற்சேர்க்கை...
இன்று மாலை 4.20 மணியளவில் ராஜ்தாக்கரே அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 153,153A,153D,117 கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இவை பினையில் வர இயலாத குற்றச்சாட்டுகளாகும்.
இதே சமயத்தில் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் அபு ஆஸ்மியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
செய்திகளை முந்தித் தருவது.....மிளகாய்....மட்டுமே
சிறுநீரக மோசடி டாக்டர் டெல்லி கொண்டுவரப்படார்...
300 க்கும் அதிகமான சிறுநீரக அறுவை சிகிச்சைகளை முறைகேடாக செய்ததாக அவர் மீது சி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...
செய்திகளை முந்தி தருவது....மிளகாய்....
