தமிழக அரசின் மீது ராமதாஸ் பாய்ச்சல்

"கருணாநிதி ஆட்சியில் காவல்துறைக்கு ஈரல் அடியோடு இல்லாமல் போய்விட்டது"




தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் "போலீஸ் துறைக்கு ஈரல் அடியோடு இல்லை' என்ற நிலை ஏற்பட்டு உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மதுரையில் அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மருத்துவம், மற்றும் பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்லூரிகளில் அதிக கட்டணமும், நன்கொடையும் வசூலிக்கப் படுகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை தடுக்க சட்டமும் உள்ளது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் 2 குழு அமைக்கப் பட்டது. ஆனால் அந்த குழுக்கள் ஏழை மாணவர்களுக்கு பாதகம் செய்துள்ளது. சுயநிதி கல்லூரிக்கு சாதகமாக செயல் பட்டார்கள்.

இதுகுறித்து உயர் கல்வித்துறை கண்டு கொள்வதில்லை. உயர் கல்வித்துறை தமிழகத் தில் இருக்கிறதா? அப்படி இருந்தால் செயல் பாட்டில் இருக்கிறதா என்று மாணவர்களின் பெற்றோர்கள் கேட்கிறார் கள்.

கோட்டையில் போராட்டம் உயர் கல்வித்துறை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக உள்ளது. அதிக கட்டணம், நன்கொடை வசூலிப்பதை தடுப்பதற்கு தீர்வு காணவில்லை என்றால் முதல்வரிடம் அனுமதி பெற்று சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் 25 பேருடன் கோட்டைக்குள் சென்று போராட்டம் நடத்துவேன். கிராமப்புற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு அமுல்படுத்த வேண்டும். அதற்கான சட்டத்தையும் அரசு கொண்டு வரவேண்டும்.

தமிழகத்தில் காவல்துறையில் முழுமை யாக சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும். கடந்த ஆட்சியைப் பற்றி முதல்வர் கருணாநிதி காவல்துறையை பற்றி பேசிய போது "ஈரல் கெட்டு விட்டது' என்று கூறினார். ஆனால் இன்று "காவல் துறைக்கு ஈரல் அடியோடு இல்லை'. இதற்கு காரணம் அரசியல் குறுக்கீடு தான்.

கிரிமினல்கள், போலீசார், அரசியல் வாதிகள் கைகோர்த்து வருகிறார்கள். இவர்களை பிடிக்க முடியவில்லை. நேர்மையான காவல்துறை அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டால் குற்றங்கள் குறையும். குற்றச் செயல்களை கிரிமினல் களை கண்டுபிடித்து அடக்கி ஒடுக்க போலீஸ் துறையில் ஒரு தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். அதற்கு புலனாய்வு பயிற்சி அவசியம்.

கிரிமினல் வழக்குகளை 3 மாதத்தில் முடித்து குற்றவாளிகளை சிறையில் தள்ள வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. இப்படி முனைப்பாக செயல்பட்டால் தான் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியும். நிகர் நிலை பல்கலைக்கழகம் என்பது ஒரு கொள்ளை கூடாரம் என்றும் அவர் கூறினார்.

0 comments: