ரஜினி சொன்ன 3 தவளை கதை

"வெற்றி பெறுவது எப்படி? - ரஜினி"




""பேசுகிறவர்கள் பேசட்டும். வாழ்க்கை யில் சில மனிதர்கள் மத்தியில் செவிடாகி விட வேண்டும். அப்பதான் சாதிக்க முடியும். இல்லைன்னா வாழ்க்கை வீணாகப் போய் விடும்'' என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

"சந்திரமுகி' படத்தின் 804வது நாள் விழாவில் ரஜினிகாந்த், 3 தவளைகளின் கதையை சொன்னார். வெற்றியை தக்க வைத்துக் கொள்வது எப்படி? என்று அந்த கதையில் அவர் குறிப்பிட்டார். விழாவில், முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர் களுக்கு கேடயங்களை வழங்கினார்.

ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விஜயகுமார், நாசர், வினித், டி.பி.கஜேந்திரன், மனோ பாலா, தியாகு, மதன்பாப், நடிகை ஷீலா, இசையமைப்பாளர் வித்யாசாகர், டைரக்டர் பி.வாசு மற்றும் பலர் முதலமைச்சர் கருணாநிதி யிடம் இருந்து கேடயங்களை பெற்றார்கள்.

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய தாவது:

"சந்திரமுகி' இத்தனை நாட்கள் ஏன் ஓடியது? என்று எண்ணிப் பார்த்தேன். அந்த படத்தை, என் குருநாதர் பாலசந்தர் அருகில் அமர்ந்துதான் பார்த்தேன். படம் பார்க்கும் போது அவர் ஒன்றுமே சொல்லவில்லை. படம் முடிந்ததும் அவருடைய இரும்பு கையினால் என்னை தட்டிக்கொடுத்து, "பென்டாஸ்டிக்' என்றார். அப்போதே எனக்கு குளிர் விட்டுப்போச்சு.

"சந்திரமுகி' படத்தின் கதை புதுசாக இருந்தது. புது புது சீன்கள். புது சூழல். படத்தில் ஒரு புதுமை இருக்கணும்னு ஜனங்க விரும்பறாங்க. அது, சந்திரமுகியில் இருந்தது. காதல், நட்பு, குரோதம் என எல்லா அம்சங்களும் படத்தில் இருந்தது.

சந்திரமுகி படத்தை ஆரம்பித்தபோது, ரஜினி பாட்ஷா, முத்து, படையப்பான்னு படம் பண்ணிட்டு, அதென்ன சந்திர முகின்னு ஒரு படம் பண்றார். சரியா வராதுப்பா என்றார்கள். சிலர், அந்த படத்தின் மலையாள பதிப்பை பார்த்துவிட்டு, ஒண்ணுமே இல்லை என்றார்கள். சிலர், "ஆப்தமித்ரா' கன்னட படத்தை பார்த்து விட்டு, 4 வாரம்தான் என்றார்கள்.

ஒரு கதை உண்டு. ஒரு பெரிய மலை. அதில், மூன்று தவளைகள் ஏற முயன்றன. மலையின் வழி நெடுக பாம்பு, தேள்கள் இருக்கிறது... போகாதே என்று பயம் காட்டினார்கள். ஒரு தவளை 100 அடி ஏறியதும் கீழே விழுந்து விட்டது. இன்னொரு தவளை 300 அடி தூரம் ஏறியதும் கீழே விழுந்து விட்டது. இன்னொரு தவளை மட்டும் மலை உச்சியை தொட்டது.

அந்த தவளைக்கு காது கேட்காது. அது மாதிரிதான் ரஜினிக்கும் காது கேட்காது. இது சிவாஜி, என்.டி.ஆர்., கருணாநிதி போன்றவர்களிடம் நான் கற்றுக்கொண்டது.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

0 comments: