மதுரை - சில ஆன்மீக துணுக்க்குகள்

பிரியாணி பிரசாதம்!

மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் உள்ளது வடக்கம்பட்டி. ஆண்டுதோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை, முனியண்டி விலாஸ் ஓட்டல் காரர்கள் அனைவரும் கூடி இங்குள்ள முனியாண்டியை கும்பிடுகின்றனர். அப்போது வழங்கப்படும் பிரசாதம் எது தெரியுமா? மணமணக்கும் பிரியாணி!

***
முதல் மரியாதை!

மதுரை கீழமாசி வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் `மொட்டைப் பிள்ளையார்' என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள விநாயகருக்கு தலை இல்லை! கீழமாசி வீதி என்பது வணிகர்கள் நிறைந்த பகுதி. தினமும் காலையில் இந்தப் பிள்ளையார் முன் கடைச்சாவியை வைத்து, வணங்கிய பின்னரே, கடையை திறக்கின்றனர் வியாபாரிகள்!

***
உட்கார்ந்த நவக்கிரகங்கள்!

மதுரைக்கு அருகில் உள்ளது நத்தம் கைலாசநாதர் கோவில். இங்குள்ள நவக்கிரகங் கள் அனைத்தும் உட்கார்ந்த நிலையில் உள்ளன. இதுமாதிரி வேறுஎங்கும் இல்லை!

***
`ரிஷபாரூடர்!'

மதுரைக்கு அருகில் உள்ள விராதனூரில் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் `ரிஷபாரூடர்' வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இந்த உருவத்தில் வேறு எங்கும் சிவன் காட்சியளிப்பதில்லை!

***
வித்தியாசமான விரதம்!

மதுரை அருகே வெள்ளளூரில் `வல்லடிகாரர் கோவில்' உள்ளது. மாசி மாதத்தில் இங்கு கோவில் திருவிழா நடக்கும். இந்த விழாவுக்கு 15 நாட்களுக்கு முன்பே கோவிலை சுற்றியுள்ள ஊர்களில் உள்ளவர்கள் நான்வெஜ், எண்ணெய் பொருட்களைத் தொடக்கூட மாட்டார்கள்! இந்த பகுதியில் உள்ள ஓட்டல்களிலும் சாப்பாடு, இட்லியைத் தவிர வேறு எதுவும் விற்க மாட்டார்கள்! இதைவிட அதிசயம் அங்குள்ள முஸ்லீம் மக்களும் இந்த விரதத்தை கடைபிடிப்பதுதான்!

***
மணி மணியாய்...!

மதுரையில் தல்லாக் குளம் பகுதியில், அரிஹரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறினால் நேர்த்திக்கடனாக மணிகளை கட்டு கின்றனர்!

1 comments:

June 29, 2007 at 7:08 AM மங்கை said...

//பிரசாதம் எது தெரியுமா? மணமணக்கும் பிரியாணி!///

அதான் உங்களை அங்க அடிக்கடி பார்த்ததா சொன்னாங்களா...