4 முறை காபி போடுவது கொடுமையா?

கணவர்கள் சங்கத்தில் பிரசாந்த் உருக்கம்!



வரதட்சணை தடுப்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டோர் இணைந்து, இந்திய குடும்பப் பாதுகாப்பு அமைப்பை நடத்தி வருகின்றனர். கண வர்களை உறுப்பினர் களாகக் கொண்ட இந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் பிரசாந்த் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:

நான் 17ஆண்டுகளாக திரைப்படத்துறையில் இருக்கிறேன். நல்ல மனைவி அமைய வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தேன். கிரகலட்சுமியுடன் எனக்கு திருமணமும் முடிந்தது. பிரசவத்துக்காக அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றவர் திரும்பவில்லை.
மனைவியை சேர்த்து வைக்கக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால், அவர் தப்பான முடிவை எடுத்து விட்டார்.

என் மீது வரதட்சணை புகார் கொடுத்தார். மாமியாரும், மாமனாரும் சிறைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர், புருஷனுடன் மட்டும் வாழ ஆசை என்கிறார். 3, 4 முறை காபி போட வைப்பதெல்லாம் கொடுமையாகுமா?

வரதட்சணை கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவே இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவு 498-ஏ கொண்டுவரப்பட்டது. ஆனால், அதை பல மனைவிகள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். சட்டத்தை கணவர்களுக்கு எதிராக பயன்படுத்துவதுடன் அவர்களின் குடும்பத்தினரையும் பழி வாங்குகிறார்கள். ஆண்கள் திருமணம் செய்யவே பயப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு பிரசாந்த் கூறினார்.

0 comments: