அமிதாப் - ரஜினி சந்திப்பு : பரபரப்பு பேட்டி

தமிழ்நாடு மட்டுமல்ல, உலக நாடுகளை யே பரபரப்பாக பேச வைத்திருக்கும் ஏவிஎம்மின் பிரம்மாண்ட தயாரிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மெகா டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "சிவாஜி' படத்தின் பிரத்யேக காட்சி இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக மும்பையில் நேற்று திரையிடப்பட்டது.

"சிவாஜி' படத்தை பார்த்து அமிதாப் பிரமித்தார். ரஜினியின் வித்யாசமான நடிப்பை ரசித்து பார்த்த அவர் ரஜினியை கட்டிப்பிடித்து மனம் திறந்து பாராட்டினார்."நான் நடிப்பில் மன்னன் என்றால், அமிதாப்பச்சன் நடிப்பில் சக்கரவர்த்தி' என்று நிருபர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

ரஜினி என்னை சக்கரவர்த்தி என்று விமர்சித்திருக்கிறார். அது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால் உள்ளபடியே சொல்ல வேண்டும் என்றால் ரஜினி மிகமிக சிறந்தவர் என்று அமிதாப் பாராட்டினார்.

ரஜினியும், நானும் பல படங்களில் ஒன்றாக பணியாற்றி இருக்கிறோம். அவர் என்னுடைய சிறந்த நண்பர். அவருடைய நல்ல குணம், தோற்றம், குணாதிசயம் ஆகிய வற்றை பார்க்கும்போது ஒரே வார்த்தையில் கூறுவதாக இருந்தால் அவர் ஒரு அபூர்வமான மனிதர்.
அவர் முதன் முதலாக தனது சம்பாத் தியத்தில் வாங்கிய "பியட்' காரைத்தான் இன்னமும் பயன் படுத்தி வருகிறார்.

சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்த உயர்ந்த நிலையை அவர் அடைந்துள்ளார். எனினும், அவர் தன்னுடைய பழக்க வழக்கங் களில் சிறு துளி அளவுக்கு கூட மாறவில்லை. ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் அவர் சிறந்த உதாரணம்.

"நம்பிக்கை, உறுதி, திறமை உங்களுக்கு இருந்தால் கடினமாக உழையுங்கள் வானத்தை தொடலாம்' என்பதே அவரது வாழ்க்கை உணர்த்தும் பாடம். எனவே அவரை அபூர்வமான மனிதர் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது.

மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இந்தி திரைப்படங்களுக்கு இணையாக ஹவுஸ்புல் காட்சிகளாக "சிவாஜி' ஓடிக் கொண்டு இருக்கிறது. இங்கிலாந்தில் "டாப் 10' பட வரிசையில் முதன் முதலாக ஒரு தமிழ் படத்தை இடம்பெற செய்த பெருமையையும் "சிவாஜி' தட்டிச் சென்றுள்ளது.

0 comments: