டூ பீஸ் உடையில் நயன்தாரா!


'நயன்தாராவை நேரில் பார்த்தா பேசுவேன்'-சிம்பு!



சிவாஜி படத்தில் நயன்தாராவை பார்த்தவர்கள் முடி கயிறு போட வேண்டிய அவசியத்துக்கு ஆளாகியிருப்பார்கள். அந்தளவுக்கு ஓடாக தேய்ந்து உருமாறி போயிருக்கிறார். "தள, தள" நயன், இப்படி "தொள, தொள" நயன் ஆனதற்கு என்ன காரணம்? காதல் தோல்வியா? கடின உழைப்பா? இப்படி பட்டிமன்றம் வைக்காத குறையாக பேசிக் கொண்டிருக்கிறது கோலிவுட்!

இதற்கிடையில் அஜீத் நடிக்கும் பில்லா படத்தில் டூ பீஸ் உடையில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம் நயன்தாரா. இந்த செய்தி வந்ததிலிருந்து கலக்கத்தில் இருக்கிறார்கள் சிவாஜி படம் பார்த்த பில்லா தொழிலாளர்கள்.

மேலும், தெலுங்கு படமான துபாய் சீனுவில் முடிந்தளவு ஆடை குறைப்பு செய்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் அந்த படத்திலும் கருவாட்டுக்கு கால்சட்டை போட்ட மாதிரிதான் இருக்கிறாராம்.

நயன்தாரா பற்றி இன்னொரு செய்தி. யாரடி நீ மோகினி படப்பிடிப்பில் கையோடு ஒரு வீடியோ கேமிரா எடுத்துவந்து எல்லாவற்றையும் ஷ§ட் பண்ணிக் கொள்கிறாராம். எதற்கு என்பதுதான் புரியவில்லை.

இதற்கிடையில்

நயன்தாராவை நேரில் பார்த்தா பேசுவீங்களா? சிம்புவிடம் கேட்டால், ஏன்? பேசக்கூடாதா, அதிலென்ன தப்பு? பேசுவேன்.. கண்டிப்பா பேசுவேன்! என்கிறார். நயன்தாராவும் தனுஷும் இணைந்து நடிக்கிறார்கள். சிம்புவை பழிவாங்கதான் அவர் தனுஷோடு ஜோடி சேர்கிறார் என்ற பரவலான பேச்சும் இருக்கிறது. இதுபற்றி சிம்புவிடம் கேட்டால், தனுஷ் ஒரு நடிகர், நயன்தாரா ஒரு நடிகை. இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க. இதைபற்றி ஏன் என்கிட்ட கேட்கிறீங்க? ஒருவேளை நயன்தாராவே என்னிடம், தனுஷோடு நடிக்கட்டுமா என்ற கேட்டால் நான் நடிக்கத்தான் சொல்லுவேன் என்கிறார் சிரித்துக் கொண்டே!

கமல் மாதிரி ஆகணும், ரஜினி மாதிரி ஆகணும்னு இப்போ உள்ள நடிகர்கள் சொல்றாங்க. எனக்கு பின்னாடி வர்ற நடிகர்கள் சிம்பு மாதிரி ஆகணும் என்று சொல்ற மாதிரி நான் சினிமாவில் பேர் எடுக்கணும் என்ற சிம்பு, அடுத்து கெட்டவன் என்ற படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார்.

இந்த டைட்டில் வச்சப்போ இது வேண்டாம்னு சொன்னவங்க பல பேர். ஆனா, இந்த டைட்டிலுக்காகவே இந்த படம் ஓடும் என்கிறார் நம்பிக்கையோடு! சிம்பு ஆசை சிம்பிள் ஆசையா போய்விட கூடாது!




0 comments: