
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இந்து கடவுளான துர்கையாக சித்திரித்து உள்ளூர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓவியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது இந்த ஓவியம் வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து மாயாவதி தலைமையில் புதிய ஆட்சியும் அமைந்துவிட்டது. இருந்தபோதிலும் அந்த ஓவியம் இன்னும் அங்கிருந்து அகற்றப்படவில்லை.
இப்போதுதான் அந்த ஓவியம் குறித்த சர்ச்சையே எழுந்துள்ளது. கட்சித் தலைவர்களை கடவுளாக சித்திரிக்கும் கலாசாரம் நாடு முழுவதும் பரவிவருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று விமர்சகர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
மதச்சார்பற்ற கட்சி காங்கிரஸ். கட்சித் தலைவர்களை கடவுளாக சித்திரிக்கும் போக்கை நாங்களும் கண்டிக்கவே செய்கிறோம் என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஹபீஸ் சித்திக். இதே கருத்தை கட்சியின் நகரத் தலைவர் ஆஸôதும் ஏற்றுக்கொண்டார்.
0 comments:
Post a Comment