யுவன்-சுஜயா விவாகரத்து ஏன்? - -அதிர்ச்சியூட்டும் பின்னணி!

தமிழ்த்திரையுலகின் மற்றொரு ஜோடியும் "டமார்" ஆகிவிட்டது. வழக்கமாக நடிகைகள்தான் "பொசுக்"கென்று அவிழ்த்து போடுவார்கள் (தாலியைதான்) ஆனால் இந்த வகையில் சேராத, யுவன்சங்கர்ராஜா-சுஜயா தம்பதியின் விவாகரத்து, கேட்பவர்களின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.

2002-ல் இங்கிலாந்து சென்றபோது அங்கு சுஜயா என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்தார் யுவன். இருவரும் காதலித்தார்கள். 2003 செப்டம்பர் மாதம் 3-ந் தேதி இவர்களுக்கு லண்டனில் பதிவு திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் சென்னையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரிந்துவிடுவது என்று முடிவெடுத்த இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்து திருமண சட்டம் பிரிவு 13(பி) யின் கீழ் இருவரும் ஒரு மனதுடன் விவாகரத்து கேட்டிருப்பதால் சிக்கல் இல்லாமல் விவாகரத்து கிடைத்துவிடும் என்றே தெரிகிறது.

தம்பதிகள் பிரிந்தது ஏன்? இதுபற்றிய தகவல்களை அறிய கோலிவுட் ஆந்தைகள் சிலவற்றை பிடித்து அவர்களின் காதை கடித்தோம்.

பெயர் சொல்ல விரும்பாத அந்த ஆந்தைகள் கக்கிய செய்திகள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன.

கடந்த 9 மாதங்களாகவே இருவரும் பிரிந்திருக்கிறார்களாம். இளையராஜா குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் சுஜயாவை மிகவும் சிரமப்படுத்தியதாக தெரிகிறது. இதை பலமுறை யுவனிடம் எடுத்துச் சொல்லியும் அவர் காது கொடுத்து கேட்டதாக தெரியவில்லை என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல... திருமணம் ஆகிய சில மாதங்களுக்கு பிறகு நள்ளிரவில் வீடு திரும்புவதையும் சில நேரங்களில் அதுவும் இல்லாமல் வெளியில் தங்கிவிடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தாராம் யுவன். இதுவும் சுஜயாவை வருத்தமுற செய்திருக்கிறது. அடிக்கடி பாங்காங் பறந்துவிடும் யுவன், அங்குள்ள பாட்டயா, மற்றும் உல்லாச தீவுகளில் சுற்றி வேண்டாத சில பழக்கங்களை கற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில்தான் பிரிவது என்று முடிவெடுத்தாராம் சுஜயா. பரஸ்பரம் பிரிந்துவிடுவது என்ற முடிவை இருவரும் எடுத்தாலும், சுஜயாவுக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை எழுதி தர சம்மதித்திருக்கிறாராம் யுவன்சங்கராஜா.

ஆக, விவாகரத்துக்கு பின் சுஜயா, சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லப்போவதில்லை. இங்குதான் இருக்க போகிறார் என்பது மட்டும் இப்போதைக்கு தெரிகிறது. சங்கீதத்தை நேசிக்கிற யுவனுக்கு சம்சாரம் என்பதும் ஒரு சங்கீதம் என்பது இந்த வயசில் புரியாதோ?


தரவு - தமிழ்சினிமா

0 comments: