தொழிலதிபர்களை ஆபாச படமெடுத்து மிரட்டிய நடிகை....



நடிகையிடம் சிக்கிய தொழிலதிபர்கள்! ஆபாச படம் எடுத்து பிளாக் மெயில் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்



ஆபாச படம் எடுத்து தொழிலதிபரிடம் ரூ. 10 கோடி கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட நடிகை பத்மாவதி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது வலையில் பல பிரபல தொழிலதிபர்கள் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பத்மாவதியிடம் இருந்து 10 ஆபாச சி.டி.க்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் பல தொழிலதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் பிரதீப் கொனாரோ. தொழிலதிபரான இவர், 2005-ம் ஆண்டு பெங்களூர் சென்றார். அங்கு அழகி பத்மாவதியை சந்தித்தார். மாடலிங் அழகியான பத்மாவதி, "வீராசாமி" படத்தில் 2-வது ஹீரோயினாக நடித்தவர். மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார். பத்மாவின் அழகில் மயங்கிய கொனாரோ அவருடன் உல்லாசமாக இருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொனாரோவுக்கு திடீரென பத்மாவதியின் ஞாபகம் வந்தது. அவருடன் உல்லாசமாக இருக்க நினைத்தார். இதற்காக தனது நண்பரும் தொழிலதிபருமான நிர்மலுடன் விமான நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று அறை எடுத்து தங்கினார். அங்கிருந்து பத்மாவதிக்கு போன் செய்து வரவழைத்தார். பத்மாவுடன் அவரது கூட்டாளியும் நடிகருமான சஞ்சய் வந்தார். பின்னர் 4 பேரும் சேர்ந்து மது அருந்தினர்.
போதை ஏறியதும், பத்மாவதியுடன் கொனாரோ படுக்கைக்கு சென்றார். அவர்கள், இன்ப விளையாட்டை தொடங்கியதும் சஞ்சய், தான் வைத்திருந்த வீடியோவில் அதை படம் பிடித்தார்.

அரை போதையில் இருந்த கொனாரோ, இதைப் பார்த்ததும் எதிர்ப்பு தெரிவித்தார். "ஏதாவது பேசினால் என்னை கற்பழித்ததாக சத்தம் போடுவேன்" என அவரை பத்மாவதி மிரட்டினார். ஆனாலும், படம் எடுக்க கொனாரோ ஒப்புக் கொள்ளவில்லை.

அப்போது, சஞ்சய் திடீரென துப்பாக்கியை எடுத்துக் காட்டி மிரட்டினார். உயிருக்கு பயந்த கொனாரோ, பத்மாவதியுடன் நிர்வாண கோலத்தில் நடுநடுங்கியபடி நின்றார். அதை முழுவதையும் சஞ்சய் படம் பிடித்தார். பின்னர், நிர்மலையும் அதேபோல மிரட்டி உல்லாசமாக இருக்க வைத்து வீடியோ எடுத்தனர்.

ஆபாச படத்தை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டி, கொனாரோவிடம் பத்மாவதி ரூ.10 லட்சம் கேட்டார். ரூ.6 லட்சத்தை உடனடியாக பத்மாவதியிடம் கொனாரோ கொடுத்தார். மீதம் ரூ.4 லட்சத்துக்கு பதில் அவரது லேப் டாப் கம்ப்யூட்டர், 5 கிரெடிட் கார்டுகள், 3 செல்போன்களை பத்மாவதியும் சஞ்சயும் எடுத்துச் சென்றனர். கொனாரோவின் லேப் டாப்பை பார்த்தபோதுதான் அவருக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை வரவேண்டியிருந்தது தெரிந்தது.

இதனால் அவரிடம் மேலும் பணம் பறிக்க திட்டமிட்ட பத்மாவதி, ரூ.10 கோடி கேட்டு மிரட்டினார். விவகாரம் பெரிதாவதை உணர்ந்த கொனாரோ, உடனடியாக போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பத்மாவதி, சஞ்சய், அடியாட்கள் அமீர், சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

விசாரணை தொடங்கியதும், "என் அப்பா டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரி. நான் பெரிய கோடீஸ்வரி. என்னை விடுவித்தால் ரூ.2 கோடி தருகிறேன்" என்று போலீசாரிடமே பத்மாவதி கதை அளந்தார். ஆனால், போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை மேற்கொண்டதும் உண்மைகளை கொட்டத் தொடங்கினார்.

போலீசாரிடம் பத்மாவதி கூறியதாவது:

பி.எல். படித்துக் கொண்டிருந்தபோது மாடலிங் துறையில் நுழைந்தேன். இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். மாடலிங் துறையில் பணம், புகழ் கிடைத்தது. கோடீஸ்வரர்களுடன் நட்பும் கிடைத்தது. உல்லாச வாழ்க்கை, நினைத்த நேரத்தில் விமானத்தில் பறப்பது என்று ஜாலியாக இருந்தேன்.

அப்போதுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. பல டி.வி. சீரியல்களில் நடித்துள்ளேன். என் அழகில் மயங்கிய பல தொழிலதிபர்கள் பண ஆசை காட்டி என்னை அவர்களுக்கு விருந்தாக்கிக் கொண்டனர். வேறு வழி இல்லாததால் அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன்.
கொனாரோவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவருடன் 8 முறை உல்லாசமாக இருந்தேன்.

முதலில் அவர் மட்டுமே என்னிடம் வருவார். பிறகு தனது நண்பர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களின் ஆசைக்கும் இணங்கும்படி கூறினார். அவர் கூறியபடி எல்லாம் நடந்து கொண்டேன். இதற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் அவர் எனக்கு தரலாம். நான் அதற்கு தகுதியான ஆள்தான்.என்னை அனுபவிக்க ஆசைப்படும் பலரும் பணத்தை வாரி இறைக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், இவர்தான் போலீசில் சிக்க வைத்து விட்டார்.
இவ்வாறு போலீசாரிடம் நடிகை பத்மாவதி கூறியுள்ளார்.

பின்னர், பத்மாவதி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான ஆபாச படங்கள் சிக்கின. அந்த படங்கள் தெளிவாக இல்லை. தொழிலதிபர்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட சி.டி.க்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எல்லா சி.டி.க்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

பிரபல தொழிலதிபர்கள் பலரை தனது வலையில் விழ வைத்து, அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் நேரத்தில் ஆபாச படம் எடுத்துள்ளார் என்றும், அதைக் காட்டி லட்சக்கணக்கில் பணத்தை கறந்து உல்லாச வாழ்க்கை நடத்தி வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன்னுடைய புகைப்படங்களை ஏராளமாக இன்டர்நெட்டிலும் பத்மாவதி வெளியிட்டுள்ளார். அதில் தொழிலதிபர்களுடன் "கிக்" போஸில் நிற்கும் படங்களும் இடம்பெற்றுள்ளன. "இது சாம்பிள்தான். பணம் தராவிட்டால் முழு ஆபாச படத்தையும் வெளியிடுவேன்" என்று சொல்லியே பல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

நடிகையின் ஆபாச வலையில் சிக்கிய தொழிலதிபர்கள் யார், யார் என்பது குறித்து இணை கமிஷனர் துரைராஜ், துணை கமிஷனர் அருண், உதவி கமிஷனர் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். பல சி.டி.க்களை தனது நண்பர்களிடம் பத்மாவதி கொடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது. அவற்றை கைப்பற்றவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகையின் லீலைகள் அம்பலத்துக்கு வந்திருப்பதால் அவருடன் தொடர்பு வைத்திருந்த பல தொழிலதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தரவு - தமிழ்முரசு

0 comments: