வி.ஐ.பி. லிஸ்ட் வெளியிடுவேன்! - நடிகை பத்மாவதி ஆவேசம்



"ஜாமீனில் வெளியே வந்ததும் என்னுடன் உல்லாசமாக இருந்த தொழிலதிபர்கள் மற்றும் வி.ஐ.பி.களின் பட்டியலை வெளியிடுவேன்" என்று ஆபாச படம் எடுத்து மிரட்டும் நடிகை பத்மாவதி கூறியுள்ளார்.

போலீசாரிடம் பத்மாவதி அளித்துள்ள வாக்குமூலத்தில் பிரபல தொழிலதிபர்களின் பெயர்களை கூறியுள்ளார். இதனால், கலக்கத்தில் இருக்கும் அவர்கள், தங்களது பெயரை வெளியிட வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சுகின்றனர்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரதீப் கொனாரோ, அவரது நண்பர் நிர்மல் ஆகியோர் நடிகை பத்மாவதியுடன் மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்தனர். அப்போது, துப்பாக்கி முனையில் தொழிலதிபர்களை மிரட்டி, படுக்கை அறை காட்சிகள் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்த நடிகையும் அவரது உதவியாளர் சஞ்சயும் ரூ.10 கோடி கேட்டு பிரதீப்பை மிரட்டினர்.

இதையடுத்து, பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் பத்மாவதி, சஞ்சய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.பத்மாவதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பிரபல தொழிலதிபர்கள் பலர், இவரது வலையில் சிக்கியிருப்பது தெரிந்தது. உல்லாசத்துக்கு வரும் தொழிலதிபர்களுக்கு மது ஊற்றிக் கொடுத்தும், மிரட்டியும் ஆபாச படம் எடுத்துள்ளனர். பின்னர், அதை இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி பத்மாவதியும் அவரது கூட்டாளிகளும் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், தன்னிடம் வந்த தொழிலதிபர்களின் பெயர்களை பத்மாவதி கூறியுள்ளார். இதனால், பல தொழிலதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர். அவர்கள், போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, என் பெயர் வெளியில் வராமல் காப்பாற்றுங்கள் என கெஞ்சி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சிறையில் உள்ள நடிகை பத்மாவதியை அவரது வக்கீலும் நண்பர்கள் சிலரும் சந்தித்து பேசினர். அவர்களிடம், "என்னை பலமுறை பயன்படுத்திவிட்டு, இப்போது பணம் கேட்டதற்காக புகார் கொடுத்து சிறையில் அடைத்துவிட்டனர். பணத்திமிரை அவர்கள் காட்டிவிட்டனர். என்னிடம் இருந்த முக்கிய சி.டி.க்களை 15 பேரிடம் கொடுத்து வைத்துள்ளேன். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்ததும் அந்த சி.டி.க்களை வெளியிடுவேன். என்னுடன் உல்லாசமாக இருந்த தொழிலதிபர்கள், வி.ஐ.பி.களின் முகத்திரையை கிழிப்பேன்" என்று பத்மா ஆவேசமாக கூறியுள்ளார். இந்தத் தகவலை போலீசாரிடம் பத்மாவதியின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே பத்மாவதியின் வீட்டில் இருந்து 15 ஆபாச சி.டி.க்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். செல்போன்கள் மூலம் எடுக்கப்பட்ட ஆபாச படங்களின் சிம்கார்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். அதில் சிக்கியுள்ள வி.ஐ.பி.க்கள் யார் என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக பிரபல தொழிலதிபர்களிடமும் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

பத்மாவதி கைது செய்யப்பட்டதும், பல வி.ஐ.பி.க்களும் தொழிலதிபர்களும் தங்களுக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தன் பெயரை பத்மாவதி கூறியுள்ளாரா என விசாரிக்கின்றனர். அப்படி, தன் பெயரை சொல்லியிருந்தால் அதை வெளியிட வேண்டாம்
என்றும் கெஞ்சுகின்றனர்.

பத்மாவதி பெரும்பாலும் நட்சத்திர ஓட்டல்களில்தான் தங்குவார். அங்கு உள்ள பார்களில் மது அருந்தி விட்டு வி.ஐ.பி.க்களுடன் உல்லாசமாக இருப்பார். சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களின் பார்களிலும் அவர் ரெகுலர் கஸ்டமராக உள்ளார். வாரத்தில் பாதி நாட்கள் வெளி மாநிலங்களுக்கு விமானத்தில் பறந்தபடியே இருப்பார். இதற்கான செலவுகளை குறிப்பிட்ட சில தொழிலதிபர்களே செய்வார்கள்.

சில நாட்களுக்கு முன் இவருக்கு விபசார தடுப்புப் பிரிவு போலீசார் குறி வைத்திருந்தனர். இது தெரிந்ததும் அவர் தனது உல்லாச இடத்தை மாற்றிவிட்டார். தன்னிடம் வரும் வி.ஐ.பி.க்களுடன் பெங்களூர் சென்று அங்கு உல்லாசமாக இருப்பார். விபசார தடுப்புப் பிரிவு போலீசாரின் வேகம் தணிந்ததும் கடந்த 2 மாதமாகத்தான் சென்னையில் தொழிலை நடத்தி வந்தார்.

இதற்கிடையே, நடிகை பத்மாவதியை போலீசில் சிக்க வைத்த தொழிலதிபர் கொனாரோவின் வீட்டில் புயல் அடிக்க ஆரம்பித்துள்ளது. பத்மாவதியின் தொடர்பால் கொனாரோவை வெறுத்த அவரது மனைவி, தனது சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அவரை சமாதானப்படுத்த கொனாரோவும் ஆந்திரா சென்றுள்ளார்.

தரவு- தமிழ்முரசு

0 comments: