மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது. ஆனால், காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்ததால் மழை குறைந்தது.

இந்நிலையில், வங்கங்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் கருமேகங்கள் திரண்டு இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

0 comments: