குருவாயூர் கோயிலில் குண்டுவெடிக்க வாய்ப்பு - தேவபிரஸ்னத்தில் தகவல்

குருவாயூர் கோயிலில் குண்டுவெடிப்பு, தீவிபத்து மூலம் உயிர்ச்சேதம் ஏற் பட வாய்ப்பு இருப்பதாக நேற்று நடந்த தேவ பிரஸ் னத்தில் தெரிய வந்துள்ளது.

குருவாயூர் கோயிலில் அஷ்டமங்கள தேவ பிரஸ்னம் கடந்த 31ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. இந்த தேவ பிரஸ்னம் நடந்து கொண்டிருக்கும் போதே துக்க சம்பவங்கள் நடைபெறும் என தலைமை ஜோதிடர் கூறினார். இவ்வாறு கூறிய ஒரு மணி நேரத்தில் கோயில் வளாகத்தில் இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் கோயில் வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம் பவங்கள் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருவாயூர் கோயிலில் பிற மதத்தினரை அனுமதிக்கக்கூடாது என தேவ பிரஸ்னம் தெரிவித்தது. இந்நிலையில் நேற்று 3ம் நாள் நடந்த தேவ பிரஸ்னத்தில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியானது. கோயிலிலோ அல்லது கோயிலை ஒட்டியுள்ள பகுதியிலோ குண்டு வெடிப்பு மூலமும், தீ விபத்து மூலமும் உயிர் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என பிரஸ்னத்தில் செய்யப்பட்டது. இது கோயில் நிர்வாகிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

தேவபிரஸ்னம் தொடர்ந்த நாள் முதல் துக்க நிகழ்ச்சிகள் நடை பெற்று வருவதாலும், நேற்று நடந்த தேவ பிரஸ்னத்தில் உயிரிழப்பு ஏற்படுவது தெரியவந்ததாலும் அதற்கு பரிகாரமாக உடனடியாக கூட்டு பிரார்த்தனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோயில் தந்திரி, பூசாரிகள் அனைவரும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். தேவபிரஸ்னம் நடத்துவதற்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தலைமை ஜோதிடரை கோயில் நிர்வாகிகள் அழைக்க சென்றனர்.

அன்றைய தினம் மிக மோசமான நாள் என தலைமை ஜோதிடர் கூறினார். இதனால்தான் கோயிலில் துக்க சம்பவங்கள் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பரிகாரம் கடவுளை பிரார்த்திப்பதுதான் என தலைமை ஜோதிடர் கூறினார்.

மேலும் கோயில் வழிபாட்டில் எந்த மாற்றமும் ஏற்படுத்தக்கூடாது. கோயில் ஊழியர்கள் மோதலை நிறுத்திவிட்டு கடவுளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்றும் பிரஸ்னத்தில் தெரிய வந்ததாக தலைமை ஜோதிடர் கூறினார்.

0 comments: