

தமிழ்ச்செல்வன் மறைவையடுத்து, விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு புதிய தலைவராக நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிளிநொச்சி பகுதியில் இரனமேடு என்ற இடத்தில் உள்ள புலிகளின் ரகசியத் தளம் மீது விமானப்படை விமானங்கள் நேற்று குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது. இதில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப. தமிழ்ச்செல்வன் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர்.
நார்வே குழுவினருடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தைகளில் தமிழ்ச் செல்வன் முக்கிய பங்காற்றினார்.
இவரின் மறைவையடுத்து, புலிகளின் போலீஸ் பிரிவு தலைவராக இருந்த நடேசன், அரசியல் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தரவு - தினகரன்
0 comments:
Post a Comment