வீட்டு சிறையில் இருந்து தப்பினார் இம்ரான்கான்

பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட உடன், முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான்,

சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் உள்ளிட்ட முக்கிய சீனியர் வக்கீல்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இம்ரான் கான் உள்ளிட்ட சிலர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டனர். ஆனால், வீட்டு சிறையில் இருந்து இம்ரான் கான் தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்ரான் கான், நீதிக்கட்சி பெயரில் கட்சி நடத்தி வருகிறார். அவசரநிலை அறிவிப்பு வெளியான உடன், பாகிஸ்தான் மக்கள் தெருக்களில் இறங்கி போராட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், உடனடியாக அவர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். சி.என்.என்., சூடிவி'க்கு இம்ரான்கான் அளித்த பேட்டியில், சூலாகூரில் உள்ள எனது வீட்டுக்கு போலீசார் வந்தனர். நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதற்கான உத்தரவு எதையும் அவர்கள் காட்டவில்லை. இதுநாள் வரை தன்னை கருணையுள்ள ஒரு சர்வாதிகாரியாக முஷாரப் வெளிப்படுத்தி வந்தார். தற்போது, அவரது உண்மையான நிறம் வெளிப்பட்டு விட்டது. அதிகார பசி கொண்ட அவர், அதற்காக எதையும் செய்வார்' என்றார்.

வீட்டு சிறையில் வைக்கப்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகு இம்ரான் கான் தப்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில்,சூ போலீசார் வந்த போது, வீட்டில் இம்ரான்கானும், எட்டு ஆதரவாளர்களும் இருந்தனர். அவர்களை வீட்டு சிறையில் வைப்பதாக கூறி விட்டு, வீட்டின் முன்பகுதிக்கு போலீசார் சென்று விட்டனர். வீட்டினுள் தற்போது எட்டு ஆதரவாளர்கள் மட்டுமே உள்ளனர். இம்ரான் கான் தப்பி விட்டார்' என்று கூறினார்.

இதற்கிடையில், தனக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் முஷாரப் தீவிரமாக இறங்கியுள்ளார். சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் அய்ட்சாஸ் அசான், முஷாரப்புக்கு எதிராக செயல்பட்டவர். அவரையும் வீட்டுச்சிறையில் வைத்து விட்டனர். அங்கிருந்தபடியே அவர் அளித்த பேட்டியில், சூஒரே ஒரு மனிதன் நாட்டையே சிறைப்படுத்தி வைத்து விட்டார். ஜெனரல் முஷாரப் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது' என்றார். முஷாரப்புக்கு எதிராக தீவிரமாக செயல்பட்ட சீனியர் வக்கீல் தாரிக் மெக்மூத் என்பவர் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், சூ1999ம் ஆண்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக முஷாரப் நாட்டை கைப்பற்றியுள்ளார். அவர், அவசரநிலையை பிரகடனம் செய்யவில்லை. ராணுவ ஆட்சியை தான் அறிவித்துள்ளார்' என்றார்.

பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் முன்னணி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கட்சியின் பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்த ஜாவித் அஸ்மியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், சூமுஷாரப்பின் நாட்கள் எண்ணப்படுகின்றன. ராணுவத்தை கொண்டு அரசியல் ஆட்சி நடத்தப்படுவதற்கு முடிவு நெருங்கி கொண்டு இருக்கிறது' என்றார். இது போல பல எதிர்க்கட்சிகளின் முன்னணி தலைவர்களும், சீனியர் வக்கீல்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

தரவு - தினமலர்

0 comments: