டி.ராஜேந்தருக்கு அரசு பதவி !

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தனது கட்சிக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. இனி தனித்து செயல்படுவேன் என்றார்.

பின்னர் அவர், தங்களுக்கு தி.மு.க. கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டுள்ளது. விரைவில் முதல்-அமைச்சர் கருணா நிதியை சந்தித்துப் பேசுவேன் என்று கூறினார்.

இந்த நிலையில்ப டி.ராஜேந்தருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதா வது:-

விஜய டி.ராஜேந்தரை தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நியமனம் செய்து இன்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த பதவியை எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரகுமான்கான் ஆகியோர் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comments:

September 19, 2007 at 6:36 AM selventhiran said...

ஏய் டண்டணக்கா.... டணக்குணக்கா