செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரா டைரக்டர் சாமி?

செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்ற நடிகை பத்மப்ரியாவின் புகாரை டைரக்டர் சாமி மறுத்தார்.
மதுரை கொரண்டி கிராமத்தில் இருதினங்களுக்கு முன் 'மிருகம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து புறப்பட்ட பத்மப்ரியாவை, இயக்குனர் சாமி திரும்ப அழைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பத்மப்ரியா நேற்று அளித்த பேட்டியில், ‘படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்து 'பேக் அப்' சொன்னபிறகுதான் ஷ¨ட்டிங்கிலிருந்து புறப்பட்டேன்.

திடீரென்று க்ளோசப் காட்சி எடுக்க வேண்டும் என்று கூறி என் கன்னத்தில் டைரக்டர் அறைந்தார்' என்றார். ‘கதறி அழும் காட்சிக்காக அடித்தேன் என்று சாமி கூறி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் ஏன் அழ வேண்டும்? என்னை அவர் திட்டமிட்டே அடித்தார். படம் ஆரம்பத்திலிருந்தே சாமி என்னிடம் வரம்பு மீறி நடந்துகொண்டார். என்னை ரொம்ப மோசமாக நடத்தினார். செக்ஸ் டார்ச்சர் கொடுத்தாரா என்பதையெல்லாம் சொல்ல முடியாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்' என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இயக்குனர் சாமி இன்று கூறியதாவது:

இந்தப் படத்தில் பத்மப்ரியாவின் கேரக்டர் பெயர் அழகம்மாள். நந்திதா தாஸ் மாதிரி அவரை ஆக்க வேண்டும் என்பதற்காக என் படத்துக்கு அவரை தேர்ந்தெடுத்தேன். ஆனால் ரூ. 13 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இஷ்டத்துக்கு வருவார், போவார் என்றால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? அதையும் பொறுத்துக்கொண்டுதான் இவ்வளவுநாள் படமாக்கினோம். கிளைமாக்ஸ் காட்சி. கணவன் இறந்து கிடக்கிறான். மனைவி கண்ணீர் விட்டு கதற வேண்டும். சுடுகாட்டில் பிணம் கிடக்கும்போது ஷாம்பு போட்டு குளித்த தலை முடியுடன் மனைவி வந்தால் நன்றாக இருக்குமா? அதற்காக டல் மேக்கப் போடுங்கள் என்றேன். ‘நான் மும்பை செல்ல வேண்டும். சீக்கிரமா எடுங்கள். இதற்கு மேல் மேக்கப் போட்டால் நேரமாகிவிடும்' என்றார்.

இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதை பிரபல நடிகரும், எங்கள் படத்தின் எக்ஸ்சிகியூட்டிவ் புரொடியூசருமான சங்கிலி முருகனும் சொன்னார். அவரையும் எடுத்தெறிந்து பேசினார் பத்மப்ரியா. சரி அழுகையாவது நன்றாக வரவேண்டும் என்பதற்காக அடித்தேன். அவர் செய்த தவறை அப்படியே மாற்றி இப்போது செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்கிறார். இது, தவறான பெண்கள் தங்கள் தவறை மறைக்க ஆண்கள் மீது சுமத்தும் சீப்பான புகார்.

எனக்கும் அம்மா இருக்கிறார். குடும்பம் இருக்கிறது. இதை படித்துவிட்டு அவர்கள் எப்படி மன வேதனை அடைந்திருப்பார்கள்? அந்தளவுக்கு கீழ்த்தரமானவன் அல்ல நான். நிறைய விஷயங்களை பேச வேண்டாமென்றே இருக்கிறேன்.

இன்றும் எங்கள் படக்குழு மதுரையில்தான் இருக்கிறது. படப்பிடிப்பு நடக்கவில்லை. தயாரிப்பாளருக்கு ரூ. 3 லட்சம் நஷ்டம். இன்றிரவு சென்னை வருகிறோம். நாளை காலை நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவுன்சிலில் பேசுகிறோம். முடிவு தெரியவில்லை என்றால் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். எங்கு இருக்க போகிறோம் என்பதை நாளை சொல்கிறேன்.

இவ்வாறு சாமி சொன்னார்.

3 comments:

October 14, 2007 at 6:20 AM இலவசக்கொத்தனார் said...

அழுகை வேணுமுன்னா இவரு அடிக்கலாமா? என்ன நியாயம் இது?

October 14, 2007 at 6:37 AM கானா பிரபா said...

போன வாரம் சிம்பு, இந்த வாரம் பத்மபிரியாவா?

எத்தனை ட்ராமா தான் போடுவீங்க சாமிகளா

October 15, 2007 at 12:29 PM ரசிகன் said...

மிளக்காய் நண்பரே,தங்களது இந்த காரமான பதிவுக்கு எனது பதிவிலிருந்து லிங்க் கொடுத்துள்ளேன்.கமிஷனாக எனக்கு இரண்டு பின்னூட்டமிடுமாறு தமிழ் பதிவு சட்டப்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஹிஹி....
வாங்களேன் என் வீட்டுக்கு..நான் நாய்களிடம் த்னியா மாட்டின வீரக் கதையெல்லாம் சொல்லியிருக்கேன்.உங்க கருத்த சொல்லுங்களேன்