தமிழனாக பிறந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் - கலைஞர்

தமிழனாக பிறந்தவர்கள் சேது சமுத்திர திட்டத்துக்காக இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தலைமைச்செயலகத்தில் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

உண்ணாவிரதம் இருக்க உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறதே?
நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம். அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்கவில்லை. அதற்கு எதிரான வழக்கு எதுவும் இல்லை. தமிழனாக பிறந்த எல்லோரும் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியதற்காக ஆட்சி கலைப்பு தொடர்பான கேள்வி உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ளதே?
அரசியல் அமைப்பு சட்டத்தை மீறியதாக உங்களுக்கு வேண்டுமானால் தெரியலாம்.

போக்குவரத்து பாதிப்பு, கடை அடைப¢பால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா?
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எந்த ஆட்சி வந்தால் எங்கு அடி விழும். எதால் அடிப்பார்கள். எங்கு அடைப்பார்கள் என்று உங்களுக்கே தெரியும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

0 comments: