கலைஞர் கவிதை...

காந்தியடிகளின் கணக்கைத் தீர்த்தவர்களுக்கு
இடுகாட்டிலும் இடம் அளிக்கலாமா?



கலைஞர் கவிதை காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி (2.10.2007) கலைஞர் தொலைக்காட்சியில் ``காந்தியடிகள் என்ற சிறப்பு கவியரங்கத்திற்குத் தலைமை வகித்த முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கிய கவிதையிலிருந்து....


இன்று இந்தியா சுதந்திர பூமி -
இல்லாதவன்; வரிகட்ட வக்கு வகை இல்லாதவன்; அவனே
காந்தி கணக்கு வைக்கத் தகுதியானவன் - இதில்
இரு வேறு கருத்துக்கு இடமில்லை - ஆனால்
காந்தியின் கணக்கையே தீர்த்த கும்பலுக்கு
இடுகாடு, சுடுகாட்டில் கூட இம்மண்ணில் இடமளிக்கலாமா?

மதவெறியரால் மகாத்மா நீ மாய்க்கப்பட்டபோது
இதற்கு `காந்தி தேசம் என்று பெயர் வைப்போம் என்றார் பெரியார்!
எதிர்ப்புக்கிடையிலேயும் வேலை மாநகரில் உன் சிலையைத்
திறந்தார் அண்ணா!
இவ்விரு தலைவர் வழிவந்த நான் இக்கவியரங்கை
உமக்குக் காணிக்கை ஆக்குகிறேன்

ஒரு மனிதர் அறிவித்த உண்ணா நோன்பு; இந்த உலகையே
உலுக்கிற்று - அந்த
உத்தமரின் வழி நின்று அறப்போர் தொடுத்தோம்;
அது அநீதியாளர் வயிற்றைக் கலக்கிற்று

0 comments: