அக்கிரகாரத்தின் சினம்

மனுதர்ம சாத்திரத்துக்கே வக்காலத்து வாங்கி எழுதும் திருவாளர் சோ ராமசாமி, செல்வி ஜெயலலிதாவுக்காக வக்காலத்து வாங்கி கலைஞரைப் பழி தூற்றுவதில் அதிசயம் இருக்க முடியாதுதான்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.என். அகர்வால் ஆணை, வாய் வார்த்தைகள் அனைத்துக்குமே சிவப்புக் கம்பள வரவேற்பினைத் தாராளமாக அளித்துள்ளார் அவர்.

நீதிமன்றங்கள் தங்கள் மனம்போன போக்கில் ஆணை பிறப்பிப்பதே முதல் தவறு. வேலை நிறுத்தம் கூடாது என்பதெல்லாம் நீதிபதிகளின் சொந்த அபிப்பிராயங்கள்தானே - அரசமைப்புச் சட்டத்தின் சரத்துக்களை எடுத்துக்காட்டியா ஆணைகளைப் பிறப்பிக்கிறார்கள்? உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு போராட்ட முறையை - உரிமைக்கான வெளிக்காட்டுதலை தடை செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

அதிகாரம் உள்ள பதவி நாற்காலியில் உட்கார வாய்ப்புக் கிடைத்ததற்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என்றால், அதன் எதிர் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியதுதான். `சோ போன்ற ஞாயிற்றுக்கிழமை வக்கீல்கள் (இனிமேல் இந்த வார்த்தையையும் கூற முடியாது - காரணம் நீதிபதியே ஞாயிறு அன்று நீதிமன்றத்தைத் திறக்கச் சொல்லி விசாரித்து இருக்கிறாரே!) தான் இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்.

வேலை நிறுத்தத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் வேலை நிறுத்தத்தை நடத்த முடிவு செய்து இருக்கலாமா என்ற வினாவைத் தொடுத்துள்ளார்.
நீதிமன்றத்தின் அத்தகு தடைகளுக்குப் பிறகும் நாடு தழுவிய அளவில் அத்தகைய போராட்டங்கள் நடக்கத்தான் செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில்கூட இவ்வாண்டு மார்ச் 31 ஆம் தேதி இதே தி.மு.க., தோழமைக் கட்சிகளின் சார்பில் நடத்தப்பட்டுள்ளதே - மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங் களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து அத்தகைய போராட்டம் நடத்தப்பட்டது. ஆந்திராவிலும்கூட நடத்தப் பட்டதுண்டு.

அதற்கு `சோ கூறும் சமாதானம் - அந்த வேலை நிறுத்தம்பற்றி (பந்த்) உச்சநீதிமன்றத்திற்கு யாரும் கொண்டு செல்லவில்லை என்கிறார் - எத்தனையோ வழக்குகளை நீதிமன்றங்கள் தாமாக விசாரிக்க முன்வந்துள்ளனவே - அதுபோலவே இதிலும் தலையிட்டு இருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

தி.மு.க., என்றால் மட்டும் ``இனந்தெரியாத எரிச்சலா? இன்னொன்றையும் வலிந்து வாதாடுகிறார். உச்சநீதிமன்றம் `பந்த்க்குத் தடை என்றவுடன் தி.மு.க., தோழமைக் கட்சிகள் போராட்ட வடிவத்தை மாற்றிவிட்டன. உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு `சோ எழுதுவது என்ன தெரியுமா? ``உண்ணாவிரதம் என்ற முகமூடி அணிந்து வந்த பந்த் என்று குறிப்பிட்டுள்ளார்.

பந்த் என்பது தடை செய்யப்பட்ட ஒன்று; உண்ணா விரதம் அப்படியல்லவே! மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும், முடிச்சுப் போடுவானேன்?

போராட்டமே நடத்தக்கூடாது என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடா? உச்சநீதிமன்ற வழக்குத் தொடர்பாக விலா வாரியாக தலையங்கம் தீட்டும் திரு. `சோ ஓர் இடத்தில் தலையில் துண்டு போட்டுக்கொண்டு தலைமறைவாகி விடுகிறார்.

வாதியைப் பார்த்து நீதிபதி, நீதிமன்ற அவதூறு மனு போடுங்கள் என்று கூறினாரே, அதுபற்றி ஏன் `சோவின் பேனா வாய் திறக்கவில்லை?சு.சாமி, சோ, ஜெயலலிதா என்ற ஒரு கோடு நீண்டு கொண்டே போகிறது - இதற்குள்ளிருக்கும் பந்த பாசம் நாடு அறிந்த ஒன்றாகும்.
கலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்று, சமூகநீதி உணர்வோடு செயல்பட்டுக் கொண்டு வருகிறார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் இறுதி ஆ(ச)ண நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். பெரியார் அரசு நடக்கிறது என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கிறது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மக்கள் மத்தியில் மேலும் செல் வாக்குப் பெருகும். பொறுக்குமா பூணூல் கூட்டத்துக்கு? எனவேதான் எது கிடைத்தாலும் அதனை தி.மு.க., ஆட்சிக்கு எதிராகப் பயன்படுத்தும் ஓர் அரட்டையில், ஆத்திரத்தோடு ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது அக்கிரகாரக் கூட்டம் - தமி ழர்கள் உன்னிப்பாக கவனிப்பார்களாக! புரிந்து கொள்வார்களாக!!

தரவு - விடுதலை

0 comments: