BENAZIR BHUTTO DEAD: GEO TV

தர்மபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளுக்கு ஜன.10ல் தூக்கு!

தர்மபுரி அருகே வேளாண் பல்கலை மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் து£க்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட 3 பேரையும் வருகிற ஜனவரி 10-ம் தேதி தூக்கிலிடுமாறு நீதிபதி வாரன்ட் பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து மூன்று பேரையும் தூக்கிலிடுவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகள் கோவை சிறையில் துவங்கியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதை எதிர்த்து தர்மபுரியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில், மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் உடல் கருகி பலியாகினர்.

இதுதொடர்பாக நடந்த வழக்கில் அதிமுகவை சேர்ந்த நெடு (எ) நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு து£க்கு தண்டனையும், மற்ற 25 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கிலும், சேலம் நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதிபடுத்தி தீர்ப்பு கூறப்பட்டது. அதே நேரத்தில் 25 பேருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டு தண்டனையை குறைக்க வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, Ôஅறிவிக்கப்பட்ட தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி 25 பேரும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

அதையடுத்து சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய டி.கே.ராஜேந்திரன் உள்பட 25 பேரும் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சரணடைந்தனர். அவர்கள் அனைவரையும் கோவை சிறையில் அடைக்க நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் து£க்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் து£க்கிலிடும் தேதியை நீதிபதி மாணிக்கம் அறிவித்துள்ளார். வருகிற 10ம் தேதி காலை 6 மணிக்கு மூன்று பேரையும் கோவை மத்திய சிறையில் சாகும்வரை து£க்கிலிடுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான வாரன்ட் கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் தூக்கிலிடுவது தொடர்பான ஆரம்பகட்ட வேலைகள் கோவை சிறையில் துவங்கிவிட்டது.

எம்.எஸ்.வி. துப்பிய எச்சில்தான் இன்றைய இசை!

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி துப்பிய எச்சில்தான் இன்றைய சினிமா இசை என்று பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கோபமாக பேசினார்.

பிரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் மற்றும் மோசர்பேர் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் "வெள்ளித்திரை". இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி கேசட்டை வெளியிட மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி, பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அவர்களை பாராட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசியதாவது:

விஸ்வநாதன் ராமமூர்த்திதான் என் குரு. வாழ்வு கொடுத்தவர்கள். அவரை பற்றி ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது பேசாவிட்டால் அந்த நாள் எனக்கு நிறைவாக இருக்காது. அவர் அருகில் நிற்க முடியாதா? அவர் அமர்ந்திருக்கும் மேடையை தொட முடியாதா? என்று ஏங்கிய காலம் உண்டு. இன்று அவர்களால் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்து உலக சாதனை படைத்தவர்கள் அவர்கள். அவர்களது தாக்கம் இல்லாமல் இப்போதும் ஒரு பாட்டு வெளிவருவதில்லை. இன்னும் சொல்லப்போனால் இவர்கள் கடித்து துப்பிய எச்சிலைத்தான் இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் ஒரே டிராக்கில் அற்புதமான பாடல்களை கொடுத்தார்கள். இப்போது 200 டிராக் இருந்தாலும் அவரது தரத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை. நவீன இசையமைப்பில், உடன் பாடுபவர்கள் பாடுகிறார்களா என்று கூட தெரியவில்லை. டூயட் பாட்டு என்றால் கூட தனியாக உணர்ச்சியே இல்லாமல் பாட வேண்டியுள்ளது. கூட பாடுவது யார் என்று கேட்டால். Ôஇன்னும் முடிவு செய்யவில்லை. நீங்க உங்க டிராக்க மட்டும் பாடுங்கÕ என்று சொல்கிறார்கள். காலத்துக்கேற்ற மாற்றம் அவசியமாக இருந்தாலும் அது இசையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பேசினார்.

விழாவில் நடிகர் பிருத்விராஜ், இயக்குனர்கள் மணிரத்னம், விஜி, கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர்கள் வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், ஆகியோர் பேசினர். இயக்குனர் ஷங்கர், கே.பாக்யராஜ், எம்.ராஜா, சரண், நடிகர்கள் ஜெயம்ரவி, ஜீவா, அர்ஜுன், பிரசன்னா, நடிகை லட்சுமிராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மோசர்பேர் நிறுவன அதிகாரி தனஞ்செயன் வரவேற்றார். பிரகாஷ்ராஜ் நன்றி கூறினார்.

சூடான செய்திகள்...


இமாச்சல பிரதேசத்தில் இறுதி கட்ட ஓட்டுப்பதிவில் சுறுசுறுப்பு


சிம்லா : இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் இறுதி கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. 65 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவில், 5,946 மையங்களில் வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டு அளிக்கின்றனர். மாநிலத்திற்கு நவ. 14ம் தேதி முதல் கட்ட ஓட்டுப்பதிவுடன் துவங்கி, இறுதி கட்ட ஓட்டுப்பதிவு இன்றுடன் முடிவடைகிறது. 324 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் டிச. 28ம் தேதி வெளியிடப்படுகிறது. ஓட்டுப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை பம்பைக்கு சிறப்பு பஸ் : விரைவு போக்குவரத்து கழகம்

மதுரை : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து பம்பைக்கு தினமும் இரவு 10 மணிக்கு சிறப்பு பஸ் புறப்படுகிறது. பயணிகள் வருகையை பொறுத்து பம்பையில் இருந்து மதுரைக்கு பஸ் புறப்படும். மதுரை பம்பை இடையே டிக்கெட் ஒன்றுக்கு ரூ.250 கட்டணம். முன்பதிவுக்கு கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும். பக்தர்கள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விவரங்களுக்கு 0452 2585 838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளது: இலங்கை அகதிகள்


ராமேஸ்வரம்: உணவு பொருட்களின் விலை ஏற்றத்தால் அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளதாக ராமேஸ்வரம் வந்த அகதி கூறினார். இலங்கை கிளிநொச்சி மற்றும் மன்னாரை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் படகில் வந்திறங்கினர். தனுஷ்கோடி போலீசார் விசாரணை செய்து மண்டபம் முகாம் அனுப்பி வைத்தனர். அகதி கணேசன் கூறுகையில்,சூஇலங்கையில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பதால் அன்றாட சாப்பாட்டுக்கே கஷ்டமாக உள்ளது. வெளியில் நடமாடுவதும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் நகைகளை விற்று படகுக்கு தலா ரூ. 15 ஆயிரம் கட்டணம் செலுத்தி இங்கு வந்தோம். இரவில் வரும்போது நடுக்கடலில் பலத்த காற்று வீசியதால் இரண்டு முறை படகு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. அபாயத்திலிருந்து தப்பித்து தனுஷ்கோடி வந்து சேர்ந்தோம்' என்றார்.


மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் நி‌லச்சரிவு


மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பரலியாறு பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. மேட்டுப்பாளையத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் பரலியாறு பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ‌போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சரியான தகவல் இல்லை.

48 மணி நேரம் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்


சென்னை : வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை , திருவாரூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்ள் மற்றும் தமிழகம் முழுவதும் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு இன்று ( 19 ம் தேதி ) விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து 48 மணி நேரம் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தரவு - தினமலர்

மிருகம் - விமர்சனம்

வானத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து நிற்கிறார் சாமி. சாய்ந்து கொண்டிருக்கிற தமிழ்சினிமாவை, தான் வளர்த்த மிருகத்தின் கொம்புகளால் முட்டுக் கொடுத்திருக்கிறார். எண்பதுகளின் இறுதியில் வாழ்ந்த ஒரு மிருகத்தின் வாழ்க்கை, நரகத்திற்கு போன கதை இது. டாகுமென்டரி அபாயங்கள் இருந்தும், இந்த கதையை எடுக்க துணிந்ததற்காகவே, ஐயா... சாமி அள்ளிக் கொள்ளுங்கள் பாராட்டுகளை!

எண்ணிப்பார்த்தால் எண்பது குடிசைகள் தேறும் அந்த கிராமத்தில். அங்கே பொலிகாளையை தொழிலுக்கு அழைத்து போகும் இளைஞன் அய்யனார், அந்த காளைக்கே உரிய குணங்களோடு வளர்ந்து நிற்கிறான். ஆசைப்படுகிற பெண்களையெல்லாம் அள்ளி திணிப்பதே மற்றொரு வேலை இவனுக்கு. இந்த காளையை அடக்க எவளாவது வரமாட்டாளா என்று ஏங்கித்தவிக்கும் வயதான தாய். ஊரே அஞ்சி நிற்கும் இவனையும் திருமணம் செய்து கொள்கிறாள் ஒருத்தி. முதலிரவே கற்பழிப்பாக முடிந்து போக, யார் இவன்? இவனுக்குள் இந்த மிருகம் வந்து உட்கார்ந்து கொண்டது எப்படி? கேள்வி எழுகிறது. பிளாஷ்பேக்! இரண்டாம் பாதியில் இவன் புரண்டு படுத்த புழுதிகளே வியாதியாக வந்து நிற்க, அப்போதும் குறையாத வேகத்தோடு திரிகிறான் அவன். ஒருகட்டத்தில், வைரம் பாய்ஞ்ச கட்டைடா இது என்று மார்தட்டிய இவன், கரையான் அரித்த விறகாக உருக்குலைந்து போக, அச்சச்சோ என்று முணுமுணுக்க வைக்கிற க்ளைமாக்சோடு முடிகிறது படம்.

அய்யனராக ஆதி. இந்த கதைக்கென்றே பிறந்தவர் மாதிரி அத்தனை பொருத்தம். சுட்ட கருங்கல் மாதிரி நெட்ட நெடுந்தோற்றம். கண்களில் பீறிடும் ஆவேசம். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடக்கையில் அந்த எருது காளையையே மிரள வைக்கிறது தோற்றம். இந்த இளைஞர் தமிழ் சினிமாவின் கம்பீரமான வரவு. ஊரே சேர்ந்து தண்ணீர் பிரச்சனை பற்றி பேசிக்கொண்டிருக்க, எனக்கென்ன என்று அலட்சியமாக போகும் அய்யனார், இறுதியில் அந்த ஊர் தண்ணீர் பஞ்சத்தை போக்க நிலம் தருவதும், ஊர் மக்கள் அந்த தண்ணீரை குடிக்கிறார்களா என்று ஆவல் பொங்க கேட்பதும் கண்களை குளமாக்கும் காட்சி. அந்த க்ளைமாக்ஸ் எதிர்பாராத வலி.

பனைமரம் ஏறுவாள். ஆடுகளுக்கு காயடிப்பாள். எவன் மறுத்தால் என்ன? என் கணவனின் பிணத்தை நான் ஒருத்தியே சுமப்பேன் என்று பொங்கி எழுவாள்... பத்மபிரியாவின் கேரக்டரை எரிமலையும், பனிமலையும் கலந்து செய்த சிற்பம் போல் செதுக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி. மருத்துவமனையில் தான் பெற்ற பிள்ளையை தூக்கி எறிய முயலும் அய்யானரை ஓங்கி உதைக்கிறாரே... மெய் சிலிர்த்து போகிறது. சொந்தக்குரலில் பேசியிருந்தால் அவார்டு நிச்சயம்! ஐயோ பாவம்!

கருப்பா... என்று வானத்தை நோக்கி குரல் எழுப்பும் கஞ்சா கருப்பும் ரசிக்க வைத்திருக்கிறார். ஊரே தீண்ட மறுத்த அய்யனாரை வாஞ்சையோடு தன் திருமணத்திற்கு அழைக்கும் போது குணச்சித்திர நடிகராகவும் பிரமோஷன் ஆகிறார். அய்யனாரின் அம்மாவாக நடித்திருக்கும் அந்த மூதாட்டியின் நடிப்பும் அருமை.

பின்னணி இசையிலும், மனசை சுண்டும் பாடல்களிலும் மற்றொரு முறையும் தங்களை நிருபித்திருக்கிறார்கள் சபேஷ்-முரளி சகோதரர்கள். அதிகம் பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி.

எண்பதுகளில் விபச்சாரம் அங்கீகரிப்பட்ட தொழிலா? சோனாவின் வீடும், சுற்றி வரும் பைங்கிளிகளும், போலீஸ் பார்வையில் படாமலே போய்விட்டார்களா என்ன? அதேபோல், கற்பை உயிர் போல நேசிக்கும் கிராமத்து பெண்களா அய்யனாரின் ஒரு கண்ணசைவில் அத்தனையையும் பறி கொடுக்கிறார்கள்?

வேலி தாண்டி பயிரை மேய்ந்திருந்தாலும், மிருகம் என்பதால் மன்னிப்போம். மற்றபடி படையலே போடலாம் இந்த சாமிக்கு!

தரவு - தமிழ்சினிமா.காம்

நெல்லை திமுக மாநாடு படங்கள்







WE(A)eKEND

குட்டீஸ் இந்த பதிவினை தவிர்க்கவும்....