புலிகளின் விமானம் கொழும்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது!

இன்று இரவு 9.10 மணியளவில் விடுதலைபுலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பு நகருக்குள் ஊடுறுவியதாக தெரிகிறது. இலங்கை அரசின் ராணுவ தலைமையகம், கொழும்பு துறைமுகம் ஆகிய நிலைகளின் மீது தாக்குதல் நடந்ததாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கொழும்பு நகரம் முழுவதும் மின் தடைசெய்யப்பட்டு இருளில் மூழ்கியதாக தெரிகிறது, தொலை தொடர்பு வசதிகளும் செயலிழந்தன.

இந்த நிலையில் புலிகளின் விமானமொன்று கொழும்பு சர்வதேச விமான வளாகத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிசெய்யப் படாத தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments: