உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறார் பாரதிராஜா. கிராமங்களின் முகவரியை உலகமெல்லாம் கொண்டு சென்ற இந்த போஸ்ட்மேன், அறுபதை கடந்த பின்பும் ஃபாஸ்ட்மேனாக இருப்பது ஆச்சர்யம். ஒருவர், இருவரல்ல... தமிழ் திரையுலகில் இன்று கோலாச்சிக் கொண்டிருக்கும் அற்புதமான இயக்குனர்கள் பலரின் ஓப்பன் யுனிவர்சிடி இவர்! தான் இயக்கப் போகும் புதிய தொலைக்காட்சி தொடர் குறித்து பேச ஆரம்பிக்கிறார். பேச்சு மெல்ல திசை திரும்பி பயணிக்கிறது.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரை இயக்க சம்மதித்திருக்கிறார் பாரதிராஜா. வருகிற ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8.30 க்கு மண்வாசனையோடு ஒளிப்பரப்பாக இருக்கிறாள் தெக்கத்திப் பொண்ணு. நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா என்று மக்களால் அறியப்பட்ட நட்சத்திரங்களுடன், புதிய நடிகர்களையும் இணைத்துக் கொண்டு இந்த நெடுந்தொடரை தரவிருக்கிறார் பாரதிராஜா.
தனது அலுவலகத்தில் என்றும் மாறாத அவருக்கேயுரிய கம்பீரத்தோடு பேச ஆரம்பிக்கிறார். சின்னத்திரையாக இருந்தாலும், பெரிய திரையாக இருந்தாலும் உழைப்பு ஒன்றேதான். சினிமாவில் வாழ்க்கையை ரொம்ப வேகமாக சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் சின்னத்திரையில் அப்படியல்ல. இரண்டரை மணி நேரத்தில் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. கொஞ்சம் நிதானமாக சொல்லலாம். இந்த தொடரை என்னுடைய சினிமா பாணியிலேயே சொல்லியிருக்கிறேன். 16 வயதினிலே, கிழக்கு சீமையிலே படங்களையெல்லாம் பார்த்தால் என்ன ஃபீலிங் வருமோ, அதே உணர்வை இந்த சீரியலில் அனுபவிக்கலாம். பொதுவாக சீரியல் என்றாலே அழுகிற மாதிரி காட்சியமைப்புகள் இருக்கும். இதில் அப்படி கிடையாது. ஏன் அழுகிற மாதிரி காட்சிகளே இல்லை என்று கேட்கிற அளவுக்கு இருக்கும். கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன். இப்போதைக்கு சுமார் 300 எபிசோடுகள் கொண்டு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எங்கே சரக்கு குறைகிறதோ, அங்கே நிறுத்திக் கொள்வேன். ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்வேன். சின்னத்திரையிலும் மரபுகளை உடைப்பேன்.
ஏன் கலைஞர் டி.வி யை தேர்ந்தெடுத்தீர்கள்?
வேறு யாரும் என்னை அணுகி இப்படி ஒரு சீரியல் எடுத்து தரும்படி கேட்கவில்லை. என்னை நாடி வந்ததால் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்.
நீங்களே விரும்பிதான் சின்னத்திரைக்கு வந்தீர்களா?
விரும்பிதான் வந்தேன். என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தமிழ்சினிமாவில் இத்தனை ஆண்டுகாலம் இருக்கிறேன். நடிகர் திலகம் சிவாஜியையே இயக்கியிருக்கிறேன். நான் சொன்னதைதான் அவரே கேட்டார். என்னை இப்படி எடு என்றோ, இதைதான் தரவேண்டும் என்றோ யாரும் கட்டாயப்படுத்த முடியாது. சினிமா மாதிரி இதில் பயம் இல்லை. முக்கியமாக ரெவின்யூ என்ற விஷயம் இல்லை.
நீங்கள் சின்னத்திரைக்கு வந்துவிட்டதால் தொடர்ந்து படங்களை இயக்குவீர்களா?
நிச்சயமாக இயக்குவேன். பொம்மலாட்டம் படத்தின் வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டேதான் தெற்கத்தி பொண்ணையும் இயக்கி வந்தேன். இதே மாதிரி தொடர்ந்து படங்களை இயக்குவேன்.
குற்றப்பரம்பரை படத்தை இயக்கப் போவதாகவும், அதில் நீங்களே நடிக்கவிருப்பதாகவும் கூறினீர்களே?
என் வாழ்க்கையில் உச்சக்கட்ட காட்சியாக அந்த படம் இருக்கலாம்.
தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே? முன்பு கன்னடர்களுக்கு எதிரான நெய்வேலி போராட்டத்திற்கு நீங்கள்தானே தலைமை ஏற்றீர்கள்?
உண்மைதான். உணர்வை காட்ட வேண்டும் என்பதற்காக எல்லாரும் ஒன்றுபட்டு நெய்வேலி போனோம். ஆனால் மறுநாள் ஒரு உண்ணாவிரதம் தனிப்பட்ட முறையில் நடந்ததே? அது ஏன் நடத்தப்பட்டது என்று பத்திரிகைகள் கூட கேட்கவில்லை. அப்படி தனியாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதற்கு இவர்கள் பதில் கூறட்டும். பிறகு இந்த உண்ணாவிரதத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று என்னை கேட்கட்டும்.
உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்கிறார்களே?
எனக்கு இதுவரை வரவில்லை. அப்படி வந்தால், உங்களின் முந்தைய கேள்விக்கு என்ன பதிலோ? அதையே பதிலாக அனுப்புவேன்.
உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசியதற்கு பாராட்டு தெரிவித்தீர்களாமே?
டி.வி யில் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் பேச்சை கேட்டதும் கைதட்டினேன். உடனே போன் செய்து சில கருத்துக்களுக்காக பாராட்டினேன். அதே நேரத்தில் அவர் கூறிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். விமர்சனம் என்பது முறையாக இருக்க வேண்டும். சக தோழன் மேல் எச்சிலை காறி துப்பிவிடக் கூடாது. சொன்ன கருத்து நியாயமாக இருந்தாலும், அதை நாகரீகமாக சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார்.
காவிரி நீர் பிரச்சனையாக இருக்கட்டும். ஒகேனக்கல் பிரச்சனையாக இருக்கட்டும். அல்லது வேறு பிரச்சனையாக இருக்கட்டும், எந்த விஷயத்தை எடுத்தாலும் இங்கே ஒட்டு மொத்தமான உணர்வுகள் இல்லை. தமிழ்நாடு மட்டும்தான் கலப்படமாக இருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் தலை வணங்கி போகிறோம். இந்த மண்ணின் மைந்தன்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற உணர்வு இல்லை. இங்கே மக்கள் மழுங்கடிக்கப்பட்டு விட்டார்கள். அதற்கு சினிமாவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
பெர்லின் திரைப்பட விழாவில் பருத்தி வீரன் படத்திற்கு விருது வாங்கி வந்த டைரக்டர் அமீருக்கு எந்த அமைப்பும் பாராட்டு விழா நடத்தவில்லையே? குறிப்பாக இயக்குனர்கள் சங்கம் கூட...
இதை இயக்குனர்கள் சங்க தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்க வேண்டும். நான் அமீரை நேரில் அழைத்து பாராட்டினேன். என் இத்தனை வருட சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்கவில்லையே என்றேன். இதைவிட வேறென்ன பாராட்ட முடியும்?
பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து மூவரும் தனித்தனியாக பிரிந்து விட்டீர்கள்? மறுபடியும் சேரும் வாய்ப்புகள் இருக்கிறதா?
நாங்கள் தனித்தனியாக பிரிந்ததால்தான் இளையராஜா இந்தி படத்திற்கு இசையமைக்க முடிகிறது. பாரதிராஜா ஒரு நானா படேகரை வைத்து படம் எடுக்க முடிகிறது. வைரமுத்துவால் ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் படைக்க முடிகிறது. மூவரும் சேர்ந்திருந்தால் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருந்திருப்போம். மூவரும் சேரும் காலம் வருமா என்கிறீர்கள். வயது பக்குவத்தை கொடுத்திருக்கிறது. பார்ப்போம்... நீங்கள் கேட்டது நிறைவேறலாம்.
தரவு - தமிழ்சினிமா.காம்
Tuesday, April 8, 2008
1
Tuesday, March 18, 2008
3
நடிகர் ரகுவரன் மரணம்

பிரபல தமிழ் நடிகர் ரகுவரன் மருத்துவமனையில் காலாமானார். உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 49.இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுமென தெரிகிறது .
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திப்போம்.
Labels:
சூடான செய்திகள்
Monday, March 17, 2008
0
டெஸ்ட் அணியில் இருந்து இஷாந்த் சர்மா, கம்பீர் நீக்கம்...
தென் ஆப்ப்ரிக்காவிற்கு எதிராக எதிர்வரும் 26ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் மற்றும் உடல்தகுதி காரணமாக இஷாந்த் சர்மா, கவுதம் கம்பீர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
மார்ச் 21ம் தேதிக்குள் மஹேந்திரசிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் தங்களது உடல் தகுதியினை நிரூபிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
அணிவிவரம் வருமாறு....
Wasim Jaffer, Virender Sehwag Rahul Dravid Sachin Tendulkar Saurav Ganguly, Vangipurappu Laxman, Yuvraj Singh ,Mahendra Singh Dhoni (wicketkeeper), Irfan Pathan, Anil Kumble (captain), Harbhajan Singh, Murali Kartik, Shanthakumaran Sreesanth , Rudra Pratap Singh.
மார்ச் 21ம் தேதிக்குள் மஹேந்திரசிங் தோனி மற்றும் ஹர்பஜன் சிங் தங்களது உடல் தகுதியினை நிரூபிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
அணிவிவரம் வருமாறு....
Wasim Jaffer, Virender Sehwag Rahul Dravid Sachin Tendulkar Saurav Ganguly, Vangipurappu Laxman, Yuvraj Singh ,Mahendra Singh Dhoni (wicketkeeper), Irfan Pathan, Anil Kumble (captain), Harbhajan Singh, Murali Kartik, Shanthakumaran Sreesanth , Rudra Pratap Singh.
Labels:
விளையாட்டு
Saturday, March 15, 2008
0
கர்நாடக முன்னாள் முதல்வர் இன்று ஒகேனக்கல் வருகையால் பதற்றம் அதிகரிப்பு..
கர்நாடக அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி அத்துமீறி ஒகேனக்கல்லில் நுழைந்து ஆய்வு செய்வதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா 500 பேருடன் இன்று ஒகேனக்கல் வந்து ஆய்வு செய்யப்போவதாக கூறப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் பதற்றம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லை சொந்தம் கொண்டாட கன்னட அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் கருணாநிதி, தர்மபுரி வந்தபோது, 50க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் ஒகேனக்கல் பகுதியில் அத்துமீறி நுழைந்தனர்.
இதேபோல் கடந்த வாரம் கர்நாடக அமைப்பை சேர்ந்த சிலர் பரிசல் மூலம் ஒகேனக்கல் இடைத்திட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வரைபடத்தை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட வன அதிகாரிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் சோமசேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தமிழக போலீசுக்கோ, வனத்துறைக்கோ எந்தவித அறிவிப்பும் தராமல் ஒகேனக்கல் சினிபால்ஸ், தொங்குபாலம் ஆகிய இடங்களுக்கு சென்று வரைபடத்தை வைத்து ஆய்வு செய்து, கோஷம் போட்டனர். இந்த தொடர் சம்பவங்களால் ஒகேனக்கல்லில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில பா.ஜ. தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மாதேஸ்வரன் மலைக்கு வருகிறார். பின்னர், கர்நாடக மாநில பா.ஜ. நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான ஈஸ்வரப்பா, சாம்ராஜ் நகர் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவக்குமார், கொள்ளேகால் டி.எஸ்.பி. தரணிதேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, வன அலுவலர் நாகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் உட்பட சுமார் 500 பேருடன் பாலாறு வழியாக கோபிநத்தம் வருகிறார். பின்னர் மாறுகொட்டாய் வழியாக ஒகேனக்கல் வருகிறார். இருமாநில எல்லை பகுதிகளை ஆய்வு செய்கிறார். இத்தகவலை மாதேஸ்வரன்மலை போலீசார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவார்கள். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஒகேனக்கல் வருவதாக கூறப்படுவதால், ஒகேனக்கல்லில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லை சொந்தம் கொண்டாட கன்னட அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைக்க முதல்வர் கருணாநிதி, தர்மபுரி வந்தபோது, 50க்கும் மேற்பட்ட கன்னட அமைப்பினர் ஒகேனக்கல் பகுதியில் அத்துமீறி நுழைந்தனர்.
இதேபோல் கடந்த வாரம் கர்நாடக அமைப்பை சேர்ந்த சிலர் பரிசல் மூலம் ஒகேனக்கல் இடைத்திட்டு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வரைபடத்தை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட வன அதிகாரிகள் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் சோமசேகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் தமிழக போலீசுக்கோ, வனத்துறைக்கோ எந்தவித அறிவிப்பும் தராமல் ஒகேனக்கல் சினிபால்ஸ், தொங்குபாலம் ஆகிய இடங்களுக்கு சென்று வரைபடத்தை வைத்து ஆய்வு செய்து, கோஷம் போட்டனர். இந்த தொடர் சம்பவங்களால் ஒகேனக்கல்லில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில பா.ஜ. தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மாதேஸ்வரன் மலைக்கு வருகிறார். பின்னர், கர்நாடக மாநில பா.ஜ. நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான ஈஸ்வரப்பா, சாம்ராஜ் நகர் மாவட்ட பா.ஜ. தலைவர் சிவக்குமார், கொள்ளேகால் டி.எஸ்.பி. தரணிதேவி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்ட வனப்பாதுகாவலர் கீதாஞ்சலி, வன அலுவலர் நாகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் உட்பட சுமார் 500 பேருடன் பாலாறு வழியாக கோபிநத்தம் வருகிறார். பின்னர் மாறுகொட்டாய் வழியாக ஒகேனக்கல் வருகிறார். இருமாநில எல்லை பகுதிகளை ஆய்வு செய்கிறார். இத்தகவலை மாதேஸ்வரன்மலை போலீசார் தெரிவித்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வருவார்கள். இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஒகேனக்கல் வருவதாக கூறப்படுவதால், ஒகேனக்கல்லில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
Friday, March 7, 2008
1
ஆவின் பால் விலை உயர்வு
பால் கொள்முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாயில் இருந்து நான்கு ரூபாயாக உயர்ந்தது. பால் உற்பத்தியாளர்களில் பால் கொள்முதலை அதிகரிக்க அதன் விலையை உயர்ந்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சென்னையில் தமிழக அரசு விடுத்த அறிக்கையில் பால் கொள்முதல் லிட்டருக்கு இரண்டு ரூபாய் இருந்து 4 ரூபாயாக உயர்வு என அறிவித்தனர். மேலும், ஆவின் பால் லிட்டருக்கு குறைந்த பட்சம் இரண்டு ரூபாய் வரை உயரும் என்றும் அறிவிக்கப் பட்டது.
Labels:
சூடான செய்திகள்
Wednesday, March 5, 2008
0
சிதம்பரத்தில் திருவாசகம் ஒலித்தது!
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் இன்று காலை சென்ற குழுவினர் தேவாரம், திருவாசகம் பாடினர். இதையட்டி அங்கு டி.ஐ.ஜி. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் திருசிற்றம்பல மேடையில் அரசு உத்தரவின்படி கடந்த 1-ம் தேதி தேவாரம் பாடுவதற்காக சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட பக்தர்கள் சென்றனர். அப்போது நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசாரை தீட்சிதர்கள் தாக்கினர். அன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்திலும் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 10 தீட்சிதர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், சிதம்பரத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
இதையடுத்து நடராஜர் கோயிலில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என்றும், இதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை தலைமையில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புரட்சிகர மாணவர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும். நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். பாமக மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன், விடுதலை சிறுத்தை அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் காவியசெல்வன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் தேவாரம் பாடுவதற்காக நடராஜர் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடினர்.
30-க்கும் மேற்பட்டோர் தேவாரம் பாடியதால் கோயில் வளாகம் முழுவதும் அது எதிரொலித்தது.அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் தலைமையில் கடலூர் எஸ்.பி., பிரதீப்குமார், சிதம்பரம் ஏஎஸ்பி செந்தில்வேலன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோர்ட் புறக்கணிப்பு
சிதம்பரம் வக்கீல்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் நடனம் தலைமையில் நேற்று நடந்தது. தேவாரம் பாட ஆறுமுகசாமிக்கு ஆதரவாக சென்ற வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தடியடியைக் கண்டித்து 8-ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோர்ட் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் திருசிற்றம்பல மேடையில் அரசு உத்தரவின்படி கடந்த 1-ம் தேதி தேவாரம் பாடுவதற்காக சிவனடியார் ஆறுமுகசாமி உள்ளிட்ட பக்தர்கள் சென்றனர். அப்போது நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பாதுகாப்புக்கு வந்த போலீசாரை தீட்சிதர்கள் தாக்கினர். அன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்திலும் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக 10 தீட்சிதர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், சிதம்பரத்தில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
இதையடுத்து நடராஜர் கோயிலில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடலாம் என்றும், இதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பினர் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை தலைமையில் தெற்கு கோபுர வாசல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புரட்சிகர மாணவர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 30 பேர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். வழக்கை வாபஸ் பெற வேண்டும். நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். பாமக மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன், விடுதலை சிறுத்தை அமைப்பின் முன்னாள் மாவட்டச் செயலாளர் காவியசெல்வன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் தேவாரம் பாடுவதற்காக நடராஜர் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடினர்.
30-க்கும் மேற்பட்டோர் தேவாரம் பாடியதால் கோயில் வளாகம் முழுவதும் அது எதிரொலித்தது.அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. வன்னிய பெருமாள் தலைமையில் கடலூர் எஸ்.பி., பிரதீப்குமார், சிதம்பரம் ஏஎஸ்பி செந்தில்வேலன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோர்ட் புறக்கணிப்பு
சிதம்பரம் வக்கீல்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் நடனம் தலைமையில் நேற்று நடந்தது. தேவாரம் பாட ஆறுமுகசாமிக்கு ஆதரவாக சென்ற வக்கீல்கள் மீது போலீசார் நடத்திய தடியடியைக் கண்டித்து 8-ம் தேதி வரை கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோர்ட் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Labels:
அரசியல்







