பாகம் 1
காலால் நடந்துதான் செல்லவேண்டும் என்ற சூழலில், காட்டில் திரிந்த இராமன், இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை.
மேலும், இந்தியாவில் பல அரசுகள், பல மன்னர்களால் ஒவ்வொரு பகுதியும் ஆளப்பட்டு அந்தக் காலத்தில், ஒரு நாட்டைவிட்டு, மற்றொரு நாட்டிற்கு இராமன் முதலானோர் வர வாய்ப்பும் இல்லை; வரவேண்டிய கட்டாயமும் இல்லை; வருவதும் கடினம். எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருந்த காட்டில்தான் அவர்கள் வாழ்ந்திருக்க முடியும்.
5. பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்துவிட்டு வா! என்பதுதான் தசரதனின் கட்டளை. ஒரு அரசன் காட்டுக்குப் போ என்று கட்டளை யிட்டால் என்ன அர்த்தம்? அவனது ஆளுகைக்கு உட்பட்ட காட்டுக்குப் போ என்பதுதானே? ஒரு அரசு - நாடு, காடு என்ற இருபெரும் பகுதிகளை உடையது. மன்னர்கள் காடுகளுக்குச் சென்று வேட்டையாடுவர். முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் மேற்கொள்வர் என்பதே மரபாகச் சொல்லப்படும் செய்தி. அதன் வழி நோக்கின், தசரதனின் ஆளுகைக்கு உட்பட்ட, அவனது நாட்டை ஒட்டியுள்ள காட்டிற்கு மரவுரி போன்ற தவக்கோலத்துடன் இராமன் சென்றான் என்பதுதானே பொருள். அப்படியாயின் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழகத்திற்கு எப்படி வரமுடியும்? ஏன் வரவேண்டும்? எனவே, இராமாயணத்தில் சொல்லப்படும் இலங்கை தென்னிலங்கை அல்ல அது வடக்கேயுள்ள இலங்கை என்பது உறுதி செய்யப்படுகிறது.
6. இராமாயணத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்களாகச் சொல்லப்படும் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், மண்டோதரி, இந்திரஜித், சூர்ப்பநகா போன்ற பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல. வட இலங்கையில் வாழ்ந்தவர்கள் என்பதாலே அவர்களுக்கு இப் பெயர்கள் இருந்தன. தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாயின் அவர்கள் பெயர் தமிழில் இருந்திருக்கும். இதன் வழி நோக்கினும் இந்த இலங்கையல்ல என்பது உறுதி.
7. காட்டில் இராமன் இருக்கும் இடத்திற்கு சூர்ப்பநகா சென்றாள், என்று இராமாயணத்தில் கூறப்படுகிறது. தென்னிலங்கையிலிருந்த சூர்ப்பநகா வடநாட்டிலுள்ள இராமனை எவ்வாறு அறிந்தாள்? எதற்காக வடநாட்டிற்குச் சென்றாள்? காரணமே இல்லை. அப்படியிருக்க தென் னிலங்கையிலிருந்து சூர்ப்பநகா சென்றதாகக் கூறுவது முற்றிலும் தவறு.
மேலும், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் பேசிய மொழி தமிழ். அப்படியிருக்க இவள் எப்படி வடநாட்டு இராமனுடன், லட்சுமணனு டன் பேசியிருக்க முடியும்? சவால் விட்டு வந்திருக்க முடியும்? இராமன் லட்சுமணன் தமிழ் தெரியாதவர்களாயிற்றே! சுருக்கமாகச் சொன்னால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இராமனைப் பற்றி சூர்ப்பநகா கேள்விப்பட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை!
8. வடநாட்டில் உள்ள காட்டில் மூக்கறு பட்டு மார்பறு பட்டு மீண்டும் தென்னிலங்கைக்கு வர எத்தனை மாதங்கள் ஆகும். தன் அண்ணன் இராவணனிடம் நடந்ததைச் சொல்லி, இராவணன் சீதையைக் கவர்ந்து வர வடநாட்டிற்குச் செல்ல எத்தனை மாதங்கள் ஆகியிருக்கும். பல மாதங்களுக்குப் பிறகே இராவணன் வடநாட்டைச் சென்றடைந்திருக்க முடியும். அந்த கால இடைவெளியில் இராமன், இலட்சுமணன், சீதை ஆகிய மூவரும் காட்டில் வேறு பகுதிக்குச் சென்றிருப்பர். அப்படியிருக்கையில் இராவணன் சீதையைக் கண்டு பிடித்து எப்படி தூக்கி வந்திருக்க முடியும்?
இவ்வளவும் நடக்க வேண்டும் என்றால், அயோத்திக்கு அருகில் அயல்நாடாயிருந்த வட இலங்கையில்தான் இவை நடந்திருக்க முடியும்.
சூர்ப்பநகை ராமனை அறியவும், அவள் அவமானப்படவும், அண்ணனிடம் உடனே வந்து சொல்லவும், அண்ணன் இராவணன் உடனே புறப்பட்டு போய் சீதையைக் கொண்டு வரவும், இராமன் உடனே தூது அனுப்பி விடுவிக்கக் கேட்டுக் கொள்ளவும் அருகிலுள்ள இலங்கையாய் இருந்தால் மட்டுமே சாத்தியம். தென்னிலங்கையிலிருந்து இத்தனை முறை போய்வர வாய்ப்பே இல்லை. எனவே, இராமாயணத்தில் சொல்லப் படுவது தென்னிலங்கையல்ல. என்பது உறுதியாகிறது.
9. சீதையைத் தூக்கிச் சென்ற இராவணன் வான்வழியாகச் சென்றான், ஜடாயு எதிர்த்துப் போரிட்டது என்றெல்லாம் இராமாயணத்தில் சொல்லப்படுகிறது. அப்படியாயின் அந்தக் காலத்திலே விமானம் இருந்திருந்தால், இராமன் இலங்கைக்குச் செல்லுகையில் விமானத்திலே சென்றிருக்கலாமே. ஏன் பாலம் கட்ட வேண்டும்?
அதுமட்டுமல்ல, இலங்கையில் போர் முடிந்து இராமன் திரும்பும்போது அயோத்தியில் விமானத்தில் வந்தான் என்று சொல்லப்படுகிறது. அப்படியாயின் போகும் போது விமா னத்தில்தானே போயிருக்க வேண்டும்? ஏன் பாலம் கட்ட வேண்டும்? அப்படியாயின் இராமர் பாலம் என்பதே கட்டுக்கதை அல்லவா?
10. சஞ்சீவி மலையையே தூக்கி வரக்கூடிய வலுப் படைத்த அனுமான் இருக்கும் போது இவர்கள் ஏன் பாலம் கட்ட வேண்டும்? இராமன், இலட்சுமணன் இவர்களை பல்லக்கில் அமரச் செய்து அப்படியே அலேக்காசு தூக்கிச் சென்று அனுமார் இலங்கையில் விட்டிருப்பாரே. அப்படியிருக்க பாலம் கட்டினார்கள் என்றால், முட்டாளைத் தவிர எவன் நம்புவான்?
11. இராமர் பாலங்கட்டிய போது குரங்குகள் மலைகளைச் சுமந்து சென்று போட்டதாக இராமாயணம் சொல்கிறது. அப்படியாயின் இலங்கைக்கு எதிரிலுள்ள தமிழகக் கடலோரப் பகுதியில் அதாவது இராமேஸ்வரம் பகுதியில் மலைகள் இருக்க வேண்டும். ஆனால் இல் லையே! அப்படியிருக்க எப்படி மலைகளை பாறைகளை எடுத்துச் சென்று போட்டிருக்க முடியும்?
எனவே, மலை சூழ்ந்த வட இந்தியாவிலுள்ள இலங்கையில்தான் அது சாத்தியம். எனவே இராமாயணத்தில் குறிக்கப்படுவது இந்த இலங்கை அல்ல!
12. இராவணன் கைலாய மலையைத் தூக்கினான் என்று அவனது வல்லமையைப் பற்றிச் சொல்லப்படுகிறது. அப்படியாயின் இராவணன் வட இந்தியாவில் வாழ்ந்தவன் என்பது உறுதியாகிறது. அப்படியாயின் இராமாயணத்தில் வருவது வட இந்தியாவிலுள்ள இலங்கை யேயன்றி தென்னிலங்கையல்ல!
13. மேலும் சேதுக் கால்வாய்ப் பகுதியிலுள்ள மணல் திட்டை தோண்டிப் பார்த்தால் 20 மீட்டர்களுக்கு மேல் மணலே செல்கிறது. பாறைகளைக் கொண்டு பாலம் அமைந்திருந்தால் பாறைகள் அல்லவா வரவேண்டும். எனவே, இது இயற்கையான மணல் மேடு என்பது மலை மேல் விளக்காக விளங்குகிறது.
14. வால்மீகி இராமாயணத்தில், இலங்கையில் போர் முடிந்த பின் நாடு திரும்பிய இராமன், தான் கட்டிய (பாலத்தை) அணையைத் தானே அழித்துவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இராமன் கட்டிய பாலம் இன்னமும் இருக்கிறது என்பது மோசடியல்லவா?
இராமாயணத்தையும், இராமனையும் மக்கள் நம்புகிறார்கள் என்றால், இராமர் பாலமும் இன்னமும் இருக்கிறது என்று கூறுவது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது அல்லவா? அப்படியாயின் இராமர் பாலம் இருக்கிறது; அதை இடிக்கக்கூடாது என்பவர்கள் தானே இராமனுக்கு எதிரானவர்கள்? விந்திய மலைப் பகுதி அல்லது மஹாநதிப் பகுதிகளை ஆய்வு செய்தால், இராமாயணத்தில் குறிக்கப் படும் இலங்கையை அடையாளங்காண முடியும். அமர்க் கண்ட் அல்லது சோட்டா நாக் பூர் பகுதியில்தான் இலங்கை இருந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் பலன் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்ல, கடல் பகுதியில் இராமர் பாலம் அமைக்கப்பட்டதாக இராமாயணம் அறிவிக்கவில்லை. கடல் பகுதியில் பாலம் அமைக்கவும் இயலாது.
எனவே, அயோத்தியின் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டின் அண்டை நாடாகவே இலங்கை இருந்திருக்க முடியும். மாறாக, இந்தியாவின் தென்கோடியில் உள்ள தென் இலங்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.
மேற்கண்ட தடயங்களை ஒரு முறைக்கு பல முறை படித்தால் யாரும் இவ்வுண்மையை அய்யமற அறிந்து தெளிய முடியும்.
அப்படியிருக்க சம்பந்தமில்லாத தென் இலங்கையோடு இராமாயணத்தை முடிச்சுப் போட்டு, இயற்கையான மணல் திட்டை இராமர் பாலம் என்று வீண்சிக்கலை உருவாக்குவது, சுயநலமிகள் மற்றும் மத வெறியை ஊட்டி, மக்களை உசுப்பி, அதை வாக்காக மாற்றி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அலையும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடாவடிச் செயல்பாடாகும். இதற்கு உச்ச நீதிமன்றம் உடந்தையாகக் கூடாது என்பதே நீதியாளர்களின் எண்ணம். நாட்டின் நலன் விரும்புவோரின் நாட்ட மும் அதுவேயாகும்.
இல்லாத ஒரு கற்பனைக் காரணத்திற்காக ஒரு இணையற்ற திட்டத்தை முடக்காமல், தடை ஆணை விரைவில் நீக்கப்பட்டு, திட்டம் விரைந்து நிறைவேற்றப்பட அனைத்து மக்களும் துணை நிற்க வேண்டும். அதற்கு இக்கருத்துகள் தீவிரமாகப் பரப்பட்டு மக்களுக்கு தெளிவு உண்டாக்கப்பட வேண்டும்; உண்மை விளக்கப் பட வேண்டும்.
(நிறைவு)
மஞ்சை வசந்தன்
தரவு - விடுதலை
Thursday, October 25, 2007
1
Wednesday, October 24, 2007
1
இராமாயணத்தில் கூறப்படுவது இந்த இலங்கை அல்ல
சேதுக் கால்வாய்த் திட்டம் நீண்ட நாளைய முயற்சி. செயல் திட்டம் கூடிவரும் வேளையில் மதவெறிக்கூட்டமும், சுயநலக் கூட்டமும் எதையெதையோ சொல்லி, எப்படியெப்படியோ எதிர்த்து, இறுதியில் அவர் களின் கடைசிப் புகலிடமாக உச்சநீதிமன்றத்தில் நின்று உருக்குலைக்கப்பார்க்கிறார்கள்.
இதற்கு, இராமர் பாலம் என்ற இல்லாத கற்பனை அவர்களின் கையாயுதம்; இராமாயணம் அவர்களின் கவசம்; நம்பிக்கை என்று வாதிடுவது அவர்களின் வலிமை.
நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்டக் கருத்து; அது உண்மையை உறுதி செய்ய உதவாது. அவன்தான் கொலை செய்தான் என்று ஒருவருக்கு நம்பிக்கையிருக்கலாம். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்க முடியுமா? என்று கேட்டால்,பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள் - என்ற வாடிக்கையான வாதத்தை வைப்பார் கள்.
நாவரசு என்ற, அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவ மாணவரை, ஜான் டேவிட் என்பவன்தான் கொலை செய்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை அனைவரும் நம்பினர். ஆனால், ஆதாரம் இல்லையென்று நீதி மன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்துவிட்டதே!
அப்படியென்றால் நீதிமன்றத்திற்குத் தேவை ஆதாரமேயன்றி, நம்பிக்கையல்ல.
ஆனால் அவாள் வழக்கு என்று வந்துவிட்டால், ஆதாரம் எதுவும் தேவையில்லை சட்டம், நடைமுறை, விதிமுறை எதுவும் வேண்டாம்! மனுதர்ம காலந்தொட்டு, மக்களாட்சிக் காலம் வரை இதுதான் நிலை!
செத்துப்போன பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (பெரியவாள்) கோமா நிலையில் இருந்தபோது நடந்த கனகாபிஷேகத்திற்கு வெளி நாட்டிலிருந்து தங்கம் வந்த போது அப்பெட்டியை எச் சோதனையும் செய்யாமல் அப்படியே அனுப்ப வேண்டுமென்று சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றளவும் அத்தங்கத்திற்கு கணக்கில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு இது தெரிந்தாலும் அது கண்டு கொள்ளாது. காரணம் இது அவாள் சமாச்சாரம்!
ஆனால், குப்பனும் சுப்பனும் அரை பவுன் எடுத்து வந்தால், சுங்கத் துறை சுற்றி வளைத்து அவனைப் பங்கம் செய்து பத்திப் பத்தியாய் செய்தி வெளியிட்டு விடும்.
மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்த இடம் இருக்கிறது என்பர். ஆதாரம் என்னவென்று கேட்டால், அது இந்துக்களின் நம்பிக்கை என்பர்.மதுராவில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்பர். ஏன் என்று கேட்டால், கண்ணன் பிறந்த சரியான இடம் மசூதிக் குள்தான் உள்ளது என்று காரணம் கூறுவார்கள். ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆதாரம் எல்லாம் எதுவும் இல்லை, எங்கள் நம்பிக்கை என்பர்.
பாமர மனிதன்கூடப் பட்டென்று சொல்வான். இது பச்சை அயோக்கியத்தனம் என்று. ஆனால், நீதிமன்றங்களுக்கு மட்டும் அது நியாயமாகவே படுகிறது!
சிவபெருமான் தலையில் நிலவு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. சிவன் இந்திய நாட்டுக் கடவுள், எனவே, நிலவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினால், அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?
இந்திய நாட்டுக் கடவுள் திருமால், பூமியை ஒரு காலால் அளந்து தனக்கு உரிமையாக்கிக் கொண்டார். ஆகாயத்தை இன்னொரு காலால் அளந்து உரிமையாக்கிக் கொண்டார். எனவே, ஆகாயம், பூமி இரண்டுமே இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தம், அதுவும் வைணவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடினால், உலக நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?
குறிப்பாக சிவனை வணங்குகிறவர்கள் ஒத்துக் கொள்வார்களா
பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக் கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த்துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்!
பூமாதேவி கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட்டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?
இவையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றால், இராமர் பாலம் என்பது வெறும் நம்பிக் கையின் அடிப்படையிலானது, அதுவும், புதிதாய்ப்புனையப் பட்ட நம்பிக்கையிலானது என்னும் போது, அதற்கு மட்டும் என்ன தடையாணை? எந்த அடிப்படையில் தடையாணை வழங்கப்படுகிறது?
அப்படியே நம்பிக்கையென்று கொண்டாலும், இராமர் பாலம் என்பதும் இலங்கையென்பதும் வடஇந்தியாவிலுள்ளதா? தென்னிந்தியாவிலுள்ளதா? அதையே விளங்கிக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் அன்றாடம் அரங்கேற்றுவது அசல் மோசடித்தனமல்லவா?
இந்த இலங்கையா?
1. வடபுலத்தில் உள்ளது போலவே தென்புலத்திலும் (தமிழகத்திலும்) நகரங்கள் உண்டு.
வடக்கே காசி - தெற் கேயுள்ளது தென்காசி
வடக்கேயுள்ளது மதுரை - தெற்கேயுள்ளது தென்மதுரை.
வடக்கேயுள்ளது தான் இலங்கை- தெற்கேயுள்ளது தென்னிலங்கை.
தற்போது ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் பகுதிக்கு, தென்னிலங்கை என்றுதான் பெயரேதவிர இலங்கை என்பது அல்ல.
தமிழகத்தில் உள்ள மதுரை தென்மதுரைதான். மதுரை என்பது கண்ணன் பிறந்த பகுதிதான்.
தெற்கத்திக் கள்ளனடா தென்மதுரைப் பாண்டியன்டா என்ற திரைப்படப் பாடல் கூட இவ்வழக்கத்தை; இவ்வுண்மையை உறுதி செய்யப் போதிய சான்றாகும்.
அதுபோல்தான், நமக்கு அருகிலுள்ள இலங்கை தென்னிலங்கை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.
இது தென்னிலங்கை என்றால், வடக்கேயுள்ளது இலங்கை என்பது உறுதியாகிறது.
எனவே, இராமாயணத்தில் சொல்லப்படுவது வட இந்தியாவில் உள்ள இலங்கையே தவிர, இந்த இலங்கை இல்லை.
2. இலங்கைத் தீவு பின்னால் உருவானது.இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கை தனித்தீவாக இல்லை. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது.
தாமிரபரணி ஆறு தென்னிலங்கை வரை ஓடியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இந்த இலங்கையின் பழைய பெயர் தாமிரபரணி என்பதேயாகும். அசோகர் கல்வெட்டில் இந்த இலங்கையானது தாமிரபரணி என்றே குறிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் அதை தாப்ரோபேன் என்று அழைத்தனர்.
ஆறு எங்குச் சென்று முடிகிறதோ அந்த இடத்தை வைத்து அந்த ஆற்றை அழைப்பது வழக்கில் உள்ளது. சிதம்பரம் வட்டத்தில், ஒரு வாய்க்கால் உடையூர் என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு உடையூர் வாய்க்கால் என்றே பெயர் வழங்குகிறது.
அதைப்போல், மற்றொரு வாய்க்கால் அரியகோஷ்டி என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு அரிய கோஷ்டி வாய்க்கால் என்று பெயர் வழங்குகிறது.
அவ்வாறுதான், தாமிர பரணி என்ற பகுதியில் சென்று முடிவடைந்ததால் அந்த ஆறு தாமிரபரணி ஆறு என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் பழைய பெயர், தாமிர பரணி என்பதுதான் - என்பதை தாமிரபரணி ஆற்றின் பெயரே அய்யமின்றி விளக்கிக் கொண்டு இருக்கிறது. இலங்கை அப்போது தனித்தீவாக இல்லையென்பதற்கும் இது அசைக்க முடியாத சான்றாகும்.
3. இராமாயணம் நடந்த தாகக் கூறப்படும் காலத்தில் இலங்கை, தமிழகத்தோடுதான் சேர்ந்திருந்தது என்கின்ற போது, குறுக்கே கடல் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அணைகட்ட (பாலங்கட்ட) வேண்டிய அவசியம் இல்லை. அணை கட்டியதாக இராமாயணம் கூறுவதால், இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இதுவல்ல; வடக்கே அணை கட்ட வேண்டிய அவசியச் சூழலில் இருந்த, வட இந்தியாவில் உள்ளது இலங்கை தான் என்பது உறுதியாகிறது.
4. இராமன் பிறந்த இடம் வடநாட்டில் உள்ள அயோத்தி என்னும்போது, இராமன் பாலம் அமைத்ததாகக் கூறப் படும் இலங்கை, வட இந்தியாவில் உள்ள இலங்கைதான் என்பது உறுதியாகிறது.
-தொடரும்
தரவு -விடுதலை
கட்டுரையாளர் - மஞ்சை வசந்தன்
இதற்கு, இராமர் பாலம் என்ற இல்லாத கற்பனை அவர்களின் கையாயுதம்; இராமாயணம் அவர்களின் கவசம்; நம்பிக்கை என்று வாதிடுவது அவர்களின் வலிமை.
நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்டக் கருத்து; அது உண்மையை உறுதி செய்ய உதவாது. அவன்தான் கொலை செய்தான் என்று ஒருவருக்கு நம்பிக்கையிருக்கலாம். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்க முடியுமா? என்று கேட்டால்,பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள் - என்ற வாடிக்கையான வாதத்தை வைப்பார் கள்.
நாவரசு என்ற, அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவ மாணவரை, ஜான் டேவிட் என்பவன்தான் கொலை செய்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதை அனைவரும் நம்பினர். ஆனால், ஆதாரம் இல்லையென்று நீதி மன்றம் ஜான் டேவிட்டை விடுதலை செய்துவிட்டதே!
அப்படியென்றால் நீதிமன்றத்திற்குத் தேவை ஆதாரமேயன்றி, நம்பிக்கையல்ல.
ஆனால் அவாள் வழக்கு என்று வந்துவிட்டால், ஆதாரம் எதுவும் தேவையில்லை சட்டம், நடைமுறை, விதிமுறை எதுவும் வேண்டாம்! மனுதர்ம காலந்தொட்டு, மக்களாட்சிக் காலம் வரை இதுதான் நிலை!
செத்துப்போன பெரிய சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (பெரியவாள்) கோமா நிலையில் இருந்தபோது நடந்த கனகாபிஷேகத்திற்கு வெளி நாட்டிலிருந்து தங்கம் வந்த போது அப்பெட்டியை எச் சோதனையும் செய்யாமல் அப்படியே அனுப்ப வேண்டுமென்று சுங்கத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இன்றளவும் அத்தங்கத்திற்கு கணக்கில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு இது தெரிந்தாலும் அது கண்டு கொள்ளாது. காரணம் இது அவாள் சமாச்சாரம்!
ஆனால், குப்பனும் சுப்பனும் அரை பவுன் எடுத்து வந்தால், சுங்கத் துறை சுற்றி வளைத்து அவனைப் பங்கம் செய்து பத்திப் பத்தியாய் செய்தி வெளியிட்டு விடும்.
மசூதி இருக்கும் இடத்தில் தான் இராமர் பிறந்த இடம் இருக்கிறது என்பர். ஆதாரம் என்னவென்று கேட்டால், அது இந்துக்களின் நம்பிக்கை என்பர்.மதுராவில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் என்பர். ஏன் என்று கேட்டால், கண்ணன் பிறந்த சரியான இடம் மசூதிக் குள்தான் உள்ளது என்று காரணம் கூறுவார்கள். ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆதாரம் எல்லாம் எதுவும் இல்லை, எங்கள் நம்பிக்கை என்பர்.
பாமர மனிதன்கூடப் பட்டென்று சொல்வான். இது பச்சை அயோக்கியத்தனம் என்று. ஆனால், நீதிமன்றங்களுக்கு மட்டும் அது நியாயமாகவே படுகிறது!
சிவபெருமான் தலையில் நிலவு இருக்கிறது என்பது எங்கள் நம்பிக்கை. சிவன் இந்திய நாட்டுக் கடவுள், எனவே, நிலவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினால், அமெரிக்கா, இரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?
இந்திய நாட்டுக் கடவுள் திருமால், பூமியை ஒரு காலால் அளந்து தனக்கு உரிமையாக்கிக் கொண்டார். ஆகாயத்தை இன்னொரு காலால் அளந்து உரிமையாக்கிக் கொண்டார். எனவே, ஆகாயம், பூமி இரண்டுமே இந்தியர்களுக்கு மட்டுமே சொந்தம், அதுவும் வைணவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடினால், உலக நாடுகள் ஒத்துக் கொள்ளுமா?
குறிப்பாக சிவனை வணங்குகிறவர்கள் ஒத்துக் கொள்வார்களா
பூமாதேவி என்பது கோடானுகோடி மக்களின் நம்பிக்கை. எனவே, அதில் துளைபோட்டு குழாயை விடக் கூடாது என்று கூறமுடியுமா? அந்த நம்பிக்கையைத் தகர்த்துத்தானே பூமாதேவியைக் குடைகிறார்கள்!
பூமாதேவி கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை. அது பூமி தெய்வம். எனவே, அதில் ஓட்டை போடக்கூடாது என்று ஒருவர் வழக்குப் போட்டால், உச்ச நீதிமன்றம் தடை கொடுக்குமா?
இவையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றால், இராமர் பாலம் என்பது வெறும் நம்பிக் கையின் அடிப்படையிலானது, அதுவும், புதிதாய்ப்புனையப் பட்ட நம்பிக்கையிலானது என்னும் போது, அதற்கு மட்டும் என்ன தடையாணை? எந்த அடிப்படையில் தடையாணை வழங்கப்படுகிறது?
அப்படியே நம்பிக்கையென்று கொண்டாலும், இராமர் பாலம் என்பதும் இலங்கையென்பதும் வடஇந்தியாவிலுள்ளதா? தென்னிந்தியாவிலுள்ளதா? அதையே விளங்கிக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் அன்றாடம் அரங்கேற்றுவது அசல் மோசடித்தனமல்லவா?
இந்த இலங்கையா?
1. வடபுலத்தில் உள்ளது போலவே தென்புலத்திலும் (தமிழகத்திலும்) நகரங்கள் உண்டு.
வடக்கே காசி - தெற் கேயுள்ளது தென்காசி
வடக்கேயுள்ளது மதுரை - தெற்கேயுள்ளது தென்மதுரை.
வடக்கேயுள்ளது தான் இலங்கை- தெற்கேயுள்ளது தென்னிலங்கை.
தற்போது ஸ்ரீலங்கா என்று அழைக்கப்படும் பகுதிக்கு, தென்னிலங்கை என்றுதான் பெயரேதவிர இலங்கை என்பது அல்ல.
தமிழகத்தில் உள்ள மதுரை தென்மதுரைதான். மதுரை என்பது கண்ணன் பிறந்த பகுதிதான்.
தெற்கத்திக் கள்ளனடா தென்மதுரைப் பாண்டியன்டா என்ற திரைப்படப் பாடல் கூட இவ்வழக்கத்தை; இவ்வுண்மையை உறுதி செய்யப் போதிய சான்றாகும்.
அதுபோல்தான், நமக்கு அருகிலுள்ள இலங்கை தென்னிலங்கை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வருகிறது.
இது தென்னிலங்கை என்றால், வடக்கேயுள்ளது இலங்கை என்பது உறுதியாகிறது.
எனவே, இராமாயணத்தில் சொல்லப்படுவது வட இந்தியாவில் உள்ள இலங்கையே தவிர, இந்த இலங்கை இல்லை.
2. இலங்கைத் தீவு பின்னால் உருவானது.இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் இலங்கை தனித்தீவாக இல்லை. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது.
தாமிரபரணி ஆறு தென்னிலங்கை வரை ஓடியதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. இந்த இலங்கையின் பழைய பெயர் தாமிரபரணி என்பதேயாகும். அசோகர் கல்வெட்டில் இந்த இலங்கையானது தாமிரபரணி என்றே குறிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் அதை தாப்ரோபேன் என்று அழைத்தனர்.
ஆறு எங்குச் சென்று முடிகிறதோ அந்த இடத்தை வைத்து அந்த ஆற்றை அழைப்பது வழக்கில் உள்ளது. சிதம்பரம் வட்டத்தில், ஒரு வாய்க்கால் உடையூர் என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு உடையூர் வாய்க்கால் என்றே பெயர் வழங்குகிறது.
அதைப்போல், மற்றொரு வாய்க்கால் அரியகோஷ்டி என்ற ஊரில் சென்று முடிவடைவதால் அதற்கு அரிய கோஷ்டி வாய்க்கால் என்று பெயர் வழங்குகிறது.
அவ்வாறுதான், தாமிர பரணி என்ற பகுதியில் சென்று முடிவடைந்ததால் அந்த ஆறு தாமிரபரணி ஆறு என்று அழைக்கப்பட்டது. இலங்கையின் பழைய பெயர், தாமிர பரணி என்பதுதான் - என்பதை தாமிரபரணி ஆற்றின் பெயரே அய்யமின்றி விளக்கிக் கொண்டு இருக்கிறது. இலங்கை அப்போது தனித்தீவாக இல்லையென்பதற்கும் இது அசைக்க முடியாத சான்றாகும்.
3. இராமாயணம் நடந்த தாகக் கூறப்படும் காலத்தில் இலங்கை, தமிழகத்தோடுதான் சேர்ந்திருந்தது என்கின்ற போது, குறுக்கே கடல் இருக்க வாய்ப்பில்லை. அதனால், அணைகட்ட (பாலங்கட்ட) வேண்டிய அவசியம் இல்லை. அணை கட்டியதாக இராமாயணம் கூறுவதால், இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இதுவல்ல; வடக்கே அணை கட்ட வேண்டிய அவசியச் சூழலில் இருந்த, வட இந்தியாவில் உள்ளது இலங்கை தான் என்பது உறுதியாகிறது.
4. இராமன் பிறந்த இடம் வடநாட்டில் உள்ள அயோத்தி என்னும்போது, இராமன் பாலம் அமைத்ததாகக் கூறப் படும் இலங்கை, வட இந்தியாவில் உள்ள இலங்கைதான் என்பது உறுதியாகிறது.
-தொடரும்
தரவு -விடுதலை
கட்டுரையாளர் - மஞ்சை வசந்தன்
Labels:
செய்தி விமர்சனம்
Tuesday, October 23, 2007
2
இந்திய ஜனநாயகம் சிறப்பாக உள்ளது- பாக். சுப்ரீம் கோர்ட் பாராட்டு
இந்திய ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அதிபர் பெர்வஸ் முஷாரப் ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யாமல் மீண்டும் அதிபராக பதவியேற்றுக் கொள்வதை எதிர்த்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஜாவேத் இக்பால் உட்பட 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள நீதிபதி அஜாஸ் அகமது வழக்கு விசாரணையின் போது இந்தியா குறித்து தெரிவித்த கருத்துகள்:
இந்திய அரசியலுக்கும் பாகிஸ்தான் அரசியலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்திய அரசியல் தலைவர்களுக்கு சகிப்புதன்மை உள்ளது. பாகிஸ்தான் தலைவர்களிடம் இது இல்லை. ஜனநாயக நாட்டுக்கு இந்தியா மிகச்சிறந்த உதாரணமாகும். அதிகாரப் பரவல் மற்றும் பகிர்வுக்கு உதாரணமாக இந்திய ஜனநாயகம் விளங்குகிறது. அங்கு நடைபெறும் தேர்தல்களில் உளவுத்துறையின் தலையீடுகள் கிடையாது.
ராணுவ தளபதிகளுக்கு இந்திய அரசியல்வாதிகள் விருந்துகள் வைப்பதில்லை.
தரவு - தமிழ்முரசு
பாகிஸ்தான் அதிபர் பெர்வஸ் முஷாரப் ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்யாமல் மீண்டும் அதிபராக பதவியேற்றுக் கொள்வதை எதிர்த்து அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஜாவேத் இக்பால் உட்பட 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள நீதிபதி அஜாஸ் அகமது வழக்கு விசாரணையின் போது இந்தியா குறித்து தெரிவித்த கருத்துகள்:
இந்திய அரசியலுக்கும் பாகிஸ்தான் அரசியலுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்திய அரசியல் தலைவர்களுக்கு சகிப்புதன்மை உள்ளது. பாகிஸ்தான் தலைவர்களிடம் இது இல்லை. ஜனநாயக நாட்டுக்கு இந்தியா மிகச்சிறந்த உதாரணமாகும். அதிகாரப் பரவல் மற்றும் பகிர்வுக்கு உதாரணமாக இந்திய ஜனநாயகம் விளங்குகிறது. அங்கு நடைபெறும் தேர்தல்களில் உளவுத்துறையின் தலையீடுகள் கிடையாது.
ராணுவ தளபதிகளுக்கு இந்திய அரசியல்வாதிகள் விருந்துகள் வைப்பதில்லை.
தரவு - தமிழ்முரசு
Saturday, October 20, 2007
0
பாதியில் ஓடிய மோடி...!
CNNIBN தொலைகாட்சியில் பிரபலமான நேர்காணல் நிகழ்ச்சியான Devils Advocate நிகழ்ச்சிக்காக குஜராத் முதலவ்ர் திரு.மோடியின் பேட்டி நிகழ்ச்சியின் ஒளிப்பதிவின் போது பேட்டிகண்ட கரண் தாப்பரின் கேள்விகளால் எரிச்சலான மோடி பாதியில் பேட்டியை முடித்துக் கொண்டு வெளியேறினார்.
Labels:
அரசியல்
Sunday, October 14, 2007
0
இயக்குனர் சாமி ஒரு சைக்கோ!-பத்மபிரியாவின் அழுகை பேட்டி!

டைரக்டர் சாமியிடம் அறைவாங்கிய பத்மப்ரியா, பத்திரிகையாளர்களை சந்தித்தார். நடந்த சம்பவம் குறித்து படபடப்புடன் பேச ஆரம்பித்தார்.
படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறப்போன என்னை அழைத்த சாமி, அத்தனை பேர் முன்னிலையிலும் பளார் என்று கன்னத்தில் அறைந்தார். அவரின் இந்த செயல், பல நாட்களாக பிளான் பண்ணி செய்தது போல் இருந்தது. நான் ஒரு மிடில்கிளாஸ் பொண்ணு. அப்படியே நடுங்கி போய்விட்டேன். நானும் 21 படங்களில் நடிச்சு முடிச்சுட்டேன். பல விருதுகள் வாங்கியிருக்கேன். இப்படி ஒரு மோசமான அனுபவம் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை. எனக்கு அழுகை சரியா வரலை. அழ வைக்கதான் அடித்தேன் என்று பத்திரிகைகளில் சொல்லியிருக்கிறார். என்னை அறையும்போது எந்த கேமிராவும் ஓடவில்லை. எந்த லைட்டுகளும் ஆன் செய்யப்பட்டிருக்கவில்லை. நான் டைரக்டரிடம் அடிவாங்கிதான் அழ வேண்டும் என்ற அவசியமும் இல்லை. என்னை வைத்து படம் எடுத்த டைரக்டர் சேரனிடம் கேட்டுப்பாருங்கள். அவர் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்திற்கு 8 மாதங்கள் கால்ஷீட் கொடுத்தவள் நான். அந்த படத்தில் நான் அழாத அழுகையா? பல டைரக்டர்களிடம் வொர்க் பண்ணியிருக்கேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். எல்லா டைரக்டர்களுக்கும் வொர்க் நேரத்தில் கோபம் வரும். ஆனால், இப்படி ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை. இது திட்டமிட்ட தாக்குதல். அவர் ஒரு சைக்கோ. மூச்சுவிடாமல் பேசுகிறார் பத்மபிரியா. தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும்-
இப்படி திட்டமிட்டு அவர் உங்களை தாக்குவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டுமே? வேறு ஏதாவது செக்சுவல் டார்ச்சர் கொடுத்து அது நிறைவேறவில்லை என்பதால் இப்படி செய்தாரா?
அதை எப்படி நான் வெளிப்படையா சொல்லமுடியும். நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அவர் எனக்கு டார்ச்சர் கொடுத்தார். திரும்ப திரும்ப டார்ச்சர் கொடுத்தார். படப்பிடிப்பில் என்னுடைய அம்மா அப்பாவை கூட என்னோடு வரக் கூடாது என்றார். ஏன் அப்படி சொல்லணும்? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
உங்களை அடித்ததற்காக போலீசில் புகார் செய்வீர்களா?
இல்லை. நான் நடிகர் சங்கத்திலும், பெப்சியிலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கேன். அவங்க என்ன சொல்றாங்களோ, அதுக்கு கட்டுப்படுவேன். இந்த விஷயத்தில் அவங்க நிச்சயமா நல்ல முடிவை எடுப்பாங்கன்னு நம்புகிறேன்.
ஒரு பெண்ணாகிய உங்களை கைநீட்டி அடிச்சிருக்காரு? மாதர் சங்கம், பெண்ணுரிமை சங்கம் போன்ற அமைப்புகளின் உதவியை நாடுவீர்களா?
இது முழுக்க முழுக்க ஒரு நடிகைக்கும், டைரக்டருக்கும் உள்ள பிரச்சனை. இதை எதுக்கு அங்கெல்லாம் கொண்டு போகணும்? நான் பெண்ணியவாதி இல்லை. இந்த விஷயத்தை திசை திருப்பாதீங்க. ப்ளீஸ்...
முடிவா என்ன சொல்றீங்க?
அந்த டைரக்டருக்கு எல்லார் கூடவும் பிரச்சனை இருக்கு. அந்த படத்தின் புரடக்ஷன் மேனேஜரை கேளுங்க, அவர் கூடவும் பிரச்சனை. மறுபடியும் சொல்றேன் அவர் ஒரு சைக்கோ. இந்த படத்திற்கு இதுவரைக்கும் 67 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கேன். என்னுடைய போர்ஷன் எல்லாத்தையும் எடுத்து முடிச்சதுக்கு பிறகுதான் என் மீது கைநீட்டியிருக்கார். இன்னும் என்னுடைய போர்ஷன் பாக்கியிருக்கிறதா பேட்டியிலே சொல்லியிருக்காரு. மறுபடியும் படப்பிடிப்புக்கு அழைச்சா போய் நடிச்சு கொடுப்பேன். என்னால படம் நிற்க கூடாது. ஆனா, படப்பிடிப்புக்கு நான் திரும்பவும் போகிற பட்சத்தில் என் உயிருக்கு பாதுகாப்பு வேணும்!
மறுபடியும் ஒருமுறை கண்களை துடைத்துக் கொள்கிறார் பத்மபிரியா. பேட்டியின்போது நடிகர் சங்க பொருளாளர் கே.என்.காளை மற்றும் பெப்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தரவு - தமிழ்சினிமா.காம்
Labels:
திரையுலகம்




