குடியுரிமையை ரத்து செய்து வைகோவை நாடு கடத்த வேண்டும் - நடிகர் கார்த்திக் ஆவேசம்

வைகோவின் குடியுரிமை ரத்து செய்து அவரை நாடு கடத்த வேண்டும் என தேனியில் நடந்த கூட்டத்தில் நடிகர் கார்த்திக் பேசினார்.

தேனியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் பேசியதாவது:

தேனி தொகுதி வேட்பாளராக மாவட்ட செயலாளர் ரமேஷை நிறுத்துகிறேன். நான் போட்டியிடும் தொகுதி குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடுவேன். இலங்கை பிரச்னையை மையமாக வைத்து பேசிய தலைவர் ஒருவர் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்கிறார். இலங்கையில் நடக்கும் பிரச்னைக்கு தமிழகத்தில் ஏன் ரத்த ஆறு ஓட வேண்டும். நான் தமிழன் தான், இந்தியன் என்ற எண்ணம் இல்லை என்கிறார். அதுபோன்றவரின் குடியுரிமையை ரத்து செய்து இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும்கட்சியினருக்கும் தைரியம் இல்லை.

புதிய கட்சி தொடங்கியவர் தலைவர்களையும், முதல்வரையும் தரக்குறைவாக பேசி வருகிறார். ஒரு கட்சி கிழட்டு கட்சி என்று தேசிய கட்சியை விமர்சனம் செய்கிறது. அதற்கு மறுநாள் அக்கட்சியை சேர்ந்தவர் நான் கிழவியல்ல... குமரி தான் என விளக்கம் தருகிறார். ஒருவர் கிழவியா..குமரியா? என்பதா இப்போதுள்ள நாட்டின் பிரச்னை. அதனால் நாட்டின் எதிர்காலம்தான் பாதிக்கப்படுகிறது. அரசியல்வாதிகளின் சொத்தில் 3 ல் ஒரு பங்கை எடுத்தால் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.

முக்குலத்தோர் ஓட்டுவங்கியை பெறும் அரசியல் கட்சி, அந்த இனத்திற்கு எவ்வித நன்மையும் செய்தது கிடையாது. இப்போதுள்ள அரசியல்வாதிகளில் என்னை தவிர யாரும் உண்மை பேசுவதில்லை. அதனால் என்னை கூட்டணியில் சேர்க்க கட்சிகள் அஞ்சுகின்றன. பொய்களை மாறி, மாறி அறிக்கையாக கட்சிகள் வெளியிட்டு கொண்டிருக்கின்றன. நான் பதவிக்காக ஆசைப்படவில்லை. வரும் தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். வரும் 17ம் தேதிக்கு பிறகு நான் பேசப்போகும் உண்மைகளால் மற்ற அரசியல் கட்சிகள் கதிகலங்க போகின்றன.

இவ்வாறு கார்த்திக் பேசினார்.

தரவு - தினகரன்


Jade dies on Mother's Day

Jade Goody, the reality television star who was suffering from cervical cancer has died.

Jade Goody has died in her sleep aged 27 from cervical cancer
Jade Goody has died in her sleep aged 27 from cervical cancer Photo: MATRIX PHOTOS

Goody died in her sleep in the early hours of this morning, her publicist Max Clifford said.

She died at her home in Upshire, Essex, at 3.14am on Mother's Day.

Goody's mother Jackiey Budden said: "My beautiful daughter is at peace."

Mr Clifford said Goody's mother Jackiey and husband Jack Tweed were at her side. A family friend, Kevin Adams, was also there.

"I think she's going to be remembered as a young girl who has, and who will, save an awful lot of lives," he said, referring to how her public battle with cancer has raised awareness of the disease.

"She was a very, very brave girl," he said.

"And she faced her death in the way she faced her whole life - full on, with a lot of courage."

He said it was "ironic" that the 27-year-old - who had two young sons Bobby, five, and Freddie, four - had died on Mother's Day.

Mr Clifford said he hoped Goody's family would be left in peace to grieve.

News that Jade Goody was suffering from cervical cancer led thousands more women than usual to seek information about the disease.

On the day the reality TV star was diagnosed in August 2008, Cancer Research UK witnessed 10 times the usual number of hits to its website.

Before Jade was diagnosed, the cervical cancer section of the website received around 2,000 to 3,000 hits each day.

On the day of her diagnosis, this jumped to 32,000 and visitor numbers have been two to three times higher than usual ever since.

அண்மை செய்தி :சகஜ நிலைக்கு திரும்பியது!

கொழும்பு சகஜநிலைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இலங்கை வான்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், வான் படை தலைமையமே விடுதலை புலிகளின் தாக்குதல் இலக்காயிருந்திருக்க வேண்டுமென்றும்,ஆனால் அருகிலிருந்த வருவாய்துறை அலுவலகம் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்துள்ளார். உயிர் மட்டும் பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

இதற்க்கிடையில் சுட்டுவீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்களும், விமானியின் உடலும் தங்கள் வசம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

புலிகளின் விமானம் கொழும்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது!

இன்று இரவு 9.10 மணியளவில் விடுதலைபுலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பு நகருக்குள் ஊடுறுவியதாக தெரிகிறது. இலங்கை அரசின் ராணுவ தலைமையகம், கொழும்பு துறைமுகம் ஆகிய நிலைகளின் மீது தாக்குதல் நடந்ததாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கொழும்பு நகரம் முழுவதும் மின் தடைசெய்யப்பட்டு இருளில் மூழ்கியதாக தெரிகிறது, தொலை தொடர்பு வசதிகளும் செயலிழந்தன.

இந்த நிலையில் புலிகளின் விமானமொன்று கொழும்பு சர்வதேச விமான வளாகத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிசெய்யப் படாத தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

WE(A)eKEND





சிம்பு - நயன்தாரா மீண்டும் காதல்


இரண்டு வருட பிரிவுக்கு பிறகு சிம்பு - நயன்தாரா ஜோடி, நடிகையின் த்ரிஷாவின் முயற்சியால் ஒன்று சேர்ந்தது. இருவரும் அரை மணிநேரம் தனிமையில் சந்தித்து மனம் விட்டு பேசினர்.

நடிகர் சிம்புவும், நயன்தாராவும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு காதல் ஜோடியாக வலம் வந்தனர். "வல்லவன்" படத்தில் சிம்புவுடன் நெருக்கமாக நடித்தார் நயன்தாரா. இதையடுத்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகமானது. திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி பேட்டி அளித்தனர். இந்நிலையில் நயன்தாராவுடன் ஒரு அறையில் சிம்பு நெருக்கமாக இருப்பதுபோன்ற புகைப்படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. "இதை சிம்புதான் வெளியிட்டிருப்பார்" என்று நயன்தாரா தரப்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன், "இனிமேல் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐதராபாத்தில் "துளசி" என்ற படப்பிடிப்பில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்தார். அவரை சந்திக்க சிம்பு சென்றார். நீண்ட நேரம் காத்திருந்தும் சிம்புவை நயன்தாரா சந்திக்கவில்லை. சிம்பு ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார். மேலும் கடந்த ஒரு வருடமாக சென்னை பக்கமே தலை காட்டாமல் தெலுங்கு படங்களிலேயே நயன்தாரா கவனம் செலுத்தி வந்தார். சிம்புவின் போட்டியாளர் என்று திரையுலகினரால் கூறப்படும் தனுஷ் ஜோடியாக "யாரடி நீ மோகினி"யில் நயன்தாரா நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டனர் என்று திரையுலகினரும், அவர்களது நண்பர்களும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் சிம்பு விவகாரத்தில் தற்போது பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அஜீத் நடிக்கும் "ஏகன்" படத்தில் நவ்தீப்பும், "சத்யம்" படத்தில் விஷாலுடன் நயன்தாராவும் நடித்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்திப்பது வழக்கம். சமீபத்தில் இந்த நண்பர்கள் குழு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து சந்தித்தது. அதில் த்ரிஷாவும் கலந்துகொண்டார். பார்ட்டி ஆரம்பித்த அரை மணி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென்று சிம்பு அங்கு வந்தார். அவரை அங்கு வரவழைத்தது த்ரிஷாதான் என்று கூறப்படுகிறது.

சிம்புவைக் கண்டதும் விஷால், நவ்தீப், த்ரிஷா எல்லோரும் கைதட்டி, கரகோஷம் செய்து வரவேற்றனர். நண்பர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த நயன்தாராவை கண்டதும் சிம்பு இமைகொட்டாமல் பார்த்தார். நயன்தாராவும் அதை ஆமோதிக்கும் விதமாக இதமான புன்னகையுடன் பார்த்தார்.

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த நயன்தாராவை திடீரென்று சிம்பு கையைப் பிடித்து இழுத்து "உன்னிடம் தனியாக பேச வேண்டும் வா" என்று அழைத்தார். மறுப்பு சொல்லாமல் நயன்தாரா எழுந்து சிம்புவுடன் சென்றார். அங்கிருந்து மாயமான இருவரும் அரை மணி நேரத்துக்கு பிறகு சிரித்து பேசியபடியே திரும்பி வந்தனர். இருவரையும் மீண்டும் நண்பர்கள் குழு கைதட்டி கரகோஷத்துடன் வரவேற்றது. பிறகு சிம்பு அவர்களிடம் விடைபெற்று புறப்பட்டார். நயன்தாரா மட்டும் மவுனமாக அங்கே இருந்தார். இந்த திடீர் சந்திப்பு பற்றி கருத்து கூறிய ஒரு நடிகர், "சிம்பு, நயன்தாரா இடையேயான மனக்கசப்பு நீங்கி விட்டது. இருவருமே சேர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பிருக்கிறது" என்றார்.
இந்த சந்திப்பு கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரவு - தமிழ்முரசு

சத்யராஜ் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை! - பாரதிராஜா பரபரப்பு பேட்டி

உணர்ச்சிகளின் குவியலாக இருக்கிறார் பாரதிராஜா. கிராமங்களின் முகவரியை உலகமெல்லாம் கொண்டு சென்ற இந்த போஸ்ட்மேன், அறுபதை கடந்த பின்பும் ஃபாஸ்ட்மேனாக இருப்பது ஆச்சர்யம். ஒருவர், இருவரல்ல... தமிழ் திரையுலகில் இன்று கோலாச்சிக் கொண்டிருக்கும் அற்புதமான இயக்குனர்கள் பலரின் ஓப்பன் யுனிவர்சிடி இவர்! தான் இயக்கப் போகும் புதிய தொலைக்காட்சி தொடர் குறித்து பேச ஆரம்பிக்கிறார். பேச்சு மெல்ல திசை திரும்பி பயணிக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடரை இயக்க சம்மதித்திருக்கிறார் பாரதிராஜா. வருகிற ஏப்ரல் 14-ந் தேதி இரவு 8.30 க்கு மண்வாசனையோடு ஒளிப்பரப்பாக இருக்கிறாள் தெக்கத்திப் பொண்ணு. நெப்போலியன், வாகை சந்திரசேகர், ரஞ்சிதா, சொர்ணமால்யா என்று மக்களால் அறியப்பட்ட நட்சத்திரங்களுடன், புதிய நடிகர்களையும் இணைத்துக் கொண்டு இந்த நெடுந்தொடரை தரவிருக்கிறார் பாரதிராஜா.

தனது அலுவலகத்தில் என்றும் மாறாத அவருக்கேயுரிய கம்பீரத்தோடு பேச ஆரம்பிக்கிறார். சின்னத்திரையாக இருந்தாலும், பெரிய திரையாக இருந்தாலும் உழைப்பு ஒன்றேதான். சினிமாவில் வாழ்க்கையை ரொம்ப வேகமாக சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் சின்னத்திரையில் அப்படியல்ல. இரண்டரை மணி நேரத்தில் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. கொஞ்சம் நிதானமாக சொல்லலாம். இந்த தொடரை என்னுடைய சினிமா பாணியிலேயே சொல்லியிருக்கிறேன். 16 வயதினிலே, கிழக்கு சீமையிலே படங்களையெல்லாம் பார்த்தால் என்ன ஃபீலிங் வருமோ, அதே உணர்வை இந்த சீரியலில் அனுபவிக்கலாம். பொதுவாக சீரியல் என்றாலே அழுகிற மாதிரி காட்சியமைப்புகள் இருக்கும். இதில் அப்படி கிடையாது. ஏன் அழுகிற மாதிரி காட்சிகளே இல்லை என்று கேட்கிற அளவுக்கு இருக்கும். கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன். இப்போதைக்கு சுமார் 300 எபிசோடுகள் கொண்டு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எங்கே சரக்கு குறைகிறதோ, அங்கே நிறுத்திக் கொள்வேன். ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்வேன். சின்னத்திரையிலும் மரபுகளை உடைப்பேன்.

ஏன் கலைஞர் டி.வி யை தேர்ந்தெடுத்தீர்கள்?

வேறு யாரும் என்னை அணுகி இப்படி ஒரு சீரியல் எடுத்து தரும்படி கேட்கவில்லை. என்னை நாடி வந்ததால் செய்து கொடுக்க ஒப்புக் கொண்டேன்.

நீங்களே விரும்பிதான் சின்னத்திரைக்கு வந்தீர்களா?

விரும்பிதான் வந்தேன். என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தமிழ்சினிமாவில் இத்தனை ஆண்டுகாலம் இருக்கிறேன். நடிகர் திலகம் சிவாஜியையே இயக்கியிருக்கிறேன். நான் சொன்னதைதான் அவரே கேட்டார். என்னை இப்படி எடு என்றோ, இதைதான் தரவேண்டும் என்றோ யாரும் கட்டாயப்படுத்த முடியாது. சினிமா மாதிரி இதில் பயம் இல்லை. முக்கியமாக ரெவின்யூ என்ற விஷயம் இல்லை.

நீங்கள் சின்னத்திரைக்கு வந்துவிட்டதால் தொடர்ந்து படங்களை இயக்குவீர்களா?

நிச்சயமாக இயக்குவேன். பொம்மலாட்டம் படத்தின் வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டேதான் தெற்கத்தி பொண்ணையும் இயக்கி வந்தேன். இதே மாதிரி தொடர்ந்து படங்களை இயக்குவேன்.

குற்றப்பரம்பரை படத்தை இயக்கப் போவதாகவும், அதில் நீங்களே நடிக்கவிருப்பதாகவும் கூறினீர்களே?

என் வாழ்க்கையில் உச்சக்கட்ட காட்சியாக அந்த படம் இருக்கலாம்.

தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே? முன்பு கன்னடர்களுக்கு எதிரான நெய்வேலி போராட்டத்திற்கு நீங்கள்தானே தலைமை ஏற்றீர்கள்?

உண்மைதான். உணர்வை காட்ட வேண்டும் என்பதற்காக எல்லாரும் ஒன்றுபட்டு நெய்வேலி போனோம். ஆனால் மறுநாள் ஒரு உண்ணாவிரதம் தனிப்பட்ட முறையில் நடந்ததே? அது ஏன் நடத்தப்பட்டது என்று பத்திரிகைகள் கூட கேட்கவில்லை. அப்படி தனியாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதற்கு இவர்கள் பதில் கூறட்டும். பிறகு இந்த உண்ணாவிரதத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று என்னை கேட்கட்டும்.

உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்கிறார்களே?

எனக்கு இதுவரை வரவில்லை. அப்படி வந்தால், உங்களின் முந்தைய கேள்விக்கு என்ன பதிலோ? அதையே பதிலாக அனுப்புவேன்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசியதற்கு பாராட்டு தெரிவித்தீர்களாமே?

டி.வி யில் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் பேச்சை கேட்டதும் கைதட்டினேன். உடனே போன் செய்து சில கருத்துக்களுக்காக பாராட்டினேன். அதே நேரத்தில் அவர் கூறிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். விமர்சனம் என்பது முறையாக இருக்க வேண்டும். சக தோழன் மேல் எச்சிலை காறி துப்பிவிடக் கூடாது. சொன்ன கருத்து நியாயமாக இருந்தாலும், அதை நாகரீகமாக சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார்.

காவிரி நீர் பிரச்சனையாக இருக்கட்டும். ஒகேனக்கல் பிரச்சனையாக இருக்கட்டும். அல்லது வேறு பிரச்சனையாக இருக்கட்டும், எந்த விஷயத்தை எடுத்தாலும் இங்கே ஒட்டு மொத்தமான உணர்வுகள் இல்லை. தமிழ்நாடு மட்டும்தான் கலப்படமாக இருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் தலை வணங்கி போகிறோம். இந்த மண்ணின் மைந்தன்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்ற உணர்வு இல்லை. இங்கே மக்கள் மழுங்கடிக்கப்பட்டு விட்டார்கள். அதற்கு சினிமாவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

பெர்லின் திரைப்பட விழாவில் பருத்தி வீரன் படத்திற்கு விருது வாங்கி வந்த டைரக்டர் அமீருக்கு எந்த அமைப்பும் பாராட்டு விழா நடத்தவில்லையே? குறிப்பாக இயக்குனர்கள் சங்கம் கூட...

இதை இயக்குனர்கள் சங்க தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்க வேண்டும். நான் அமீரை நேரில் அழைத்து பாராட்டினேன். என் இத்தனை வருட சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்கவில்லையே என்றேன். இதைவிட வேறென்ன பாராட்ட முடியும்?

பாரதிராஜா-இளையராஜா-வைரமுத்து மூவரும் தனித்தனியாக பிரிந்து விட்டீர்கள்? மறுபடியும் சேரும் வாய்ப்புகள் இருக்கிறதா?

நாங்கள் தனித்தனியாக பிரிந்ததால்தான் இளையராஜா இந்தி படத்திற்கு இசையமைக்க முடிகிறது. பாரதிராஜா ஒரு நானா படேகரை வைத்து படம் எடுக்க முடிகிறது. வைரமுத்துவால் ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம் படைக்க முடிகிறது. மூவரும் சேர்ந்திருந்தால் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருந்திருப்போம். மூவரும் சேரும் காலம் வருமா என்கிறீர்கள். வயது பக்குவத்தை கொடுத்திருக்கிறது. பார்ப்போம்... நீங்கள் கேட்டது நிறைவேறலாம்.

தரவு - தமிழ்சினிமா.காம்