வீட்டில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க விருப்பமா?

வீட்டில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சுற்றுலா துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

சுற்றுலா ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2007ல் தமிழகத்துக்கு 5 கோடியே 6 லட்சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இது இந்திய சுற்றுலா வளர்ச்சி விகிதத்தில் 29.2 சதவீதம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வீடுகளில் தங்க வைக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இதன்படி, தங்கள் வீட்டில் சுற்றுலா பயணியை தங்கவைக்க விரும்பும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் முழு முகவரியுடன் சுற்றுலா ஆணையர், தமிழ்நாடு சுற்றுலா வளாகம், வாலாஜா ரோடு, சென்னை-2 என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அறிக்கையில் சுற்றுலா ஆணையர் தெரிவித்துள்ளார்.

0 comments: