எழுத்தாளர் சுஜாதா உடல் தகனம்- முதல்வர் அஞ்சலி


எழுத்தாளர் சுஜாதாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் இன்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, கட்சித் தலைவர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்பட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா (73), உடல் நலம் பாதிக்கப்பட்டு சில நாட்களாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு சுஜாதா இறந்தார். அவரது உடல் மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பார்க் பின்புறம் உள்ள வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இன்று காலை முதல்வர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோர் சுஜாதாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செய்தனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ. தலைவர் இல.கணேசன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சிவகுமார், பார்த்திபன், கார்த்தி, இயக்குனர்கள் மணிரத்னம், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், அமீர், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், நடிகைகள் சுகாசினி மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன், கார்ட்டூனிஸ்ட் மதன் ஆகியோரும் சுஜாதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ரஜினிகாந்த் கூறும்போது, ‘ சுஜாதாவின் மறைவு, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இறுதிவரை தனக்கு பிடித்தமான தொழிலையே செய்து கொண்டிருந்தார். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" என்றார்.

பின்னர் சுஜாதாவின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

நாளை மறுநாள் (2-ம்தேதி) சென்னை நாரதகான சபாவில் இரங்கல் கூட்டம் நடை பெறுகிறது. சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.


தரவு - தமிழ்முரசு

சுஜாதா காலமானார்....


பிரபல தமிழ் எழுத்தாளரும், திரைபட வசனகர்த்தாவுமான சுஜாத என்கிற ரங்கராஜன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறையிடம் பிரார்த்திக்கிறோம்.

திரை விமர்சனம் - நெஞ்சத்தை கிள்ளாதே

தேடி தேடி அனுபவத்தை சம்பாதித்துக் கொள்கிற ஒருவன், தன்னை தேடி ஒரு காதல் அனுபவம் வரும்போது என்ன செய்கிறான்? இதுதான் நெஞ்சத்தை கிள்ளாதே. நினைத்தால், அந்த ஸ்டார் ஹோட்டலையே விலைக்கு வாங்கிவிடலாம். ஆனால், அங்கு வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் ஜெயிலுக்கு போகிறார் விக்ராந்த். பதினைந்தாயிரம் கொடுத்து விலைமாதுவை அழைத்துச் சென்று அவளை நிம்மதியாக உறங்க வைத்து அனுப்புகிறார். இப்படியெல்லாம் செய்யும் ஒரு பணக்காரனை பார்த்தால் என்ன வரும்? காதல் வருகிறது பாரதிக்கு. இவர் உருகி உருகி காதலை சொல்ல, அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் விக்ராந்த்.

அதன்பின் நிஜமாகவே பாரதி மேல் காதல் வருகிறது விக்ராந்துக்கு. இது பாரதியின் முறை. விக்ராந்த் செய்த அத்தனை அவமானங்களையும் இவரும் செய்ய, சேர்வார்களா? மாட்டார்களா? என்ற கேள்வியோடு நகர்கிறது படம். இடையில் பாரதிக்கும் விக்ரமாதித்யாவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. தாலி கட்டுகிற கடைசி வினாடி வரைக்கும் தனக்கு வாய்ப்பிருக்கும் என்று நம்புகிற விக்ராந்த் மணமேடைக்கு எதிரிலேயே நிற்கிறார். கடைசியில் அதுவும் கிட்டாமல் இரண்டு சொட்டு கண்ணீர் சிந்த, 'உணர்வும் ஆக்கமும் அகத்தியன்!' நல்லவேளையாக தமிழ்சினிமா சம்பிரதாயங்களை உடைத்து, இந்த படத்திலாவது இடையில் வந்த மாப்பிள்ளையோடு ஹீரோயினை அனுப்ப சம்மதித்தார்களே!

விக்ராந்த் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, நகர விடாமல் நங்கூரம் பாய்ச்சுகிறது விதி! நக்கல், நையாண்டி, காதல், சோகம் என்று நாலாபுறமும் கவனிக்க வைக்கிற நடிப்பு இருக்கிறது அவரிடம். ஒவ்வொரு முறையும் பாரதி அவமானப்படுத்தும் போதெல்லாம், கவலையும் புன்சிரிப்புமாக அவர் ஏற்றுக் கொள்வது பரிதாபம்.

சில காட்சிகளில் ஆச்சர்யப்படுத்துகிறது அகத்தியன் பிராண்ட்! தன்னுடைய அப்பாவிற்கு இன்னொரு மனைவி இருப்பது தெரியவர, அதை டீசண்டாக அணுகுவது... தங்கையின் காதலனை வரவழைத்து பேசுவது... ஒரே ரூமில் ஒரே பெட்டில் கண்ணியமாக இருப்பது சாத்தியமா? இப்படி நிறைய! விபசாரத்திற்கு சப்போர்ட் பண்ணுகிற வசனங்களிலும் முற்போக்கு சிந்தனை!

அம்முவில் பார்த்த பாரதியா இது? சில கோணங்களில் அழகு. பல கோணங்களில் பகீர். நடிப்பை பற்றி கவலைப்படுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அவருக்கு தேவை, அவசரமாக ஒரு ஜிம்!

கேரளாவின் படகு வீடும், அதையட்டிய காட்சிகளும், அழகாக இருந்தாலும் நீளமாக தொடர்வது ஆயாசம்...

பின்னணி இசையில் படுத்தியிருக்கிறார் யுகேந்திரன். ஒரே ரீரெக்கார்டிங் ஒலியை வைத்துக் கொண்டு எல்லா ரீல்களையும் ஒப்பேற்றுவதை எதில் சேர்ப்பது? நல்லவேளையாக நேரே வரட்டுமா என்ற பாடல் இனிமை.

வலிக்கிற மாதிரி கிள்ளியிருக்கிறார்கள்!

WE(A)eKEND



ராஜ் தாக்கரே பினையில் விடுவிக்கபட்டார்

மும்பையில் இன்று மாலை கைது செய்யபட்ட மஹாராஷ்ட்ர நவநிர்மான் சேனா வின் தனனவரான ராஜ் தாக்கரே தன் சொந்த பினையில் நீதிமன்றத்தால் விடுவிக்கபட்டார்.

பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்க கூடாது மற்றும் பொது இடங்களில் பேசக்கூடாது போன்ற நிபந்தைகளுடன் அவர் பினையில் விடப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக ராஜ் தாக்கரேயின் வழக்கறிஞர்கள் இத்தகைய நிபந்தனைகளள ஏற்கமறுத்து நீதிபதியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், நிபந்தனையை ஏற்காத பட்சத்தில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்ன நீதிபதி திட்டவட்டமா கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன....





சற்றுமுன் நடந்த செய்திகளை முந்தித்தருவது மிளகாய் மட்டுமே.....

ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டார்....


பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிய குற்றத்திற்காக மஹாராஷ்ட்ர நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சிறிது நேரத்திற்கு முன்னர் மஹாராஷ்ட்ர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மஹாராஷ்ட்டிர மாநில துனை முதல்வர் கூறும்போது யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என கூறினார்...

மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன...

பிற்சேர்க்கை...

இன்று மாலை 4.20 மணியளவில் ராஜ்தாக்கரே அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் மீது இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 153,153A,153D,117 கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இவை பினையில் வர இயலாத குற்றச்சாட்டுகளாகும்.

இதே சமயத்தில் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் அபு ஆஸ்மியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.




செய்திகளை முந்தித் தருவது.....மிளகாய்....மட்டுமே

சஞ்சய் தத் திருமணம்.....




பிரபல ஹிந்தி நடிகரும், புகழ்பெற்ற சுனில் தத் - நர்கீஸ் தத் தம்பதியரின் மகனுமான சஞ்சய்தத் தனது நெடுநாள் காதலியான மான்யதா வை இன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய குடும்ப நண்பர்கள் மட்டும் பங்கேற்ற இந்த திருமண நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை.

இது சஞ்சய் தத்துக்கு மூன்றாவது திருமணம். முதல் மனைவி ரிச்சா புற்று நோயால் காலமானார். இரண்டாவது மனைவியான மாடல் அழகி ரேகா பிள்ளையிடமிருந்து கடந்த மாதம்தான் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.